என் மலர்
நீங்கள் தேடியது "bus stops"
- வழக்கறிஞர் சசிபாலன் தேசிய நெடுஞ்சாலைத் துறை செயற் பொறியாளரிடம் மனு
- நிழற்குடை ஏதும் இல்லாமல் பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் வாடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை உழவர்கரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெளியூர் மற்றும் பல ஊர்களுக்கு செல்ல பஸ் நிறுத்தங்கள் உள்ளன.
ஆனால் அங்கு நிழற்குடை ஏதும் இல்லாமல் பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் வாடி வருகின்றனர். சில பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தாலும் அது சரியாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எனவே இதனை உடனடியாக சரி செய்து தரக்கோரி வழக்கறிஞரும் சமூக சேவகருமான சசிபாலன் தலைமையில் சமூக அமைப்பு நிர்வாகிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது கலாம் விதைகளின் விருட்சம் இயக்க நிறுவனர் ராஜா உட்பட சமூக அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அந்த மனுவில் கூறியி ருப்பதாவது:-
உழவர்கரை தொகுதியில் மூலக்குளம் அரும்பார்த்தபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் பஸ் நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்ட நிழற்குடைகளை உடனடியாக புதுப்பித்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கலாம் விதைகளின் விருட்சம் இயக்க நிறுவனர் ராஜா உட்பட சமூக அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சிக்னல் மற்றும் மேம்பாலங்களுக்கு அருகே உள்ள பஸ் நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளது.
- அனைத்து வழித்தடங்களிலும் ஆய்வு செய்து, பஸ் நிறுத்தங்களை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது.
சென்னையில் நூற்றுக்கணக்கான பஸ் நிறுத்தங்களை இடமாற்றம் செய்ய போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் சிக்னல் மற்றும் மேம்பாலங்களுக்கு அருகே உள்ள பஸ் நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளது.
அனைத்து வழித்தடங்களிலும் ஆய்வு செய்து, பஸ் நிறுத்தங்களை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக பாரிமுனை - முகப்பேர், வடபழனி, தரமணி வழித்தடங்களில் ஆய்வு செய்து மாநகராட்சியிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
- பயணிகளின் இருக்கைகள் சுத்தம் செய்யப்பட்டது.
- பஸ் நிழற்குடைகள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பழுதுகள் சரி செய்யும் பணி நடைபெறும்.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் மக்களின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து தூய்மை பணிகள் நடந்து வருகிறது. பயணிகளின் வசதிக்காக அனைத்து பஸ் நிலையங்களிலும் கடந்த ஆகஸ்டு மாதம் தீவிர தூய்மை பணிகள் நடந்தது.
அப்போது, குப்பைகள், கட்டிடக்கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டது. பயணிகளின் இருக்கைகள் சுத்தம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2-வது கட்டமாக 1,363 பஸ் நிலையங்களில் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தீவிர தூய்மை பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்படும். பஸ் நிழற்குடைகள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பழுதுகள் சரி செய்யும் பணி நடைபெறும் என சென்னை மாநகராட்சி தெரிவித்து இருந்தது.
அன்படி, இன்று காலை முதல் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் 2-ம் கட்டமாகத் தூய்மைப் பணிகள் நடைபெற்றது. இப்பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூரில் இருந்து ஓவேலி, தேவர்சோலை, பாட்டவயல், பந்தலூர், சேரம்பாடி, ஊட்டி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர கேரள-கர்நாடகா பஸ்களும் வந்து செல்கிறது. இதேபோல் ஓவேலி, பந்தலூர் பகுதியை சேர்ந்தவர்கள் வேலைநிமித்தம் காரணமாக கூடலூருக்கு தினமும் வந்து செல்கின்றனர். இதனால் கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஓவேலிக்கு செல்லும் பஸ்கள் சக்தி விநாயகர் கோவில் அருகே உள்ள நிறுத்தத்தில் நின்று பயணிகளை அழைத்து செல்வது வழக்கம்.
இதேபோல் ஊட்டியில் இருந்து வரும் பஸ்கள் கோவிலின் எதிர்புறம் பயணிகளை இறக்கி விட்டு செல்வது வாடிக்கை. மேலும் அதே பகுதியில் சாலையோரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எந்தவித சிரமம் இன்றி பயன் அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் வரிசையாக இரும்பு தடுப்பு கம்பிகளை வைத்தனர். இதனால் கூடலூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைதொடர்ந்து இருசக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதற்கு போலீசார் தடை விதித்தனர். ஆனால் ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் நிறுத்தி கொள்ள போலீசார் அனுமதி வழங்கினர். இருசக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்த அனுமதிக்காததால் நகராட்சி வணிக வளாகத்தில் நிறுத்தப்பட்டன. ஆனால் வியாபாரிகள் எதிர்ப்பு காரணமாக நகராட்சி வணிக வளாகத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.
இதனால் கூடலூர் கடைசி பகுதியான ராஜகோபாலபுரத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த போலீசார் அனுமதித்தனர். இதனிடையே அரசு பஸ்கள் நிறுத்தும் இடத்தை போக்குவரத்து போலீசார் மாற்றி உள்ளனர். இதனால் கிராம மக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். ஏற்கனவே பயன்படுத்தி வந்த பஸ் நிறுத்தத்தில் ஆட்டோ, ஜீப் மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து இருசக்கர வாகன ஓட்டிகள், கிராம மக்கள் கூறியதாவது-
கூடலூரில் போக்குவரத்து போலீசாரின் குளறுபடியால் வாகன நிறுத்தும் இடங்கள் அடிக்கடி மாற்றி அமைக்கப்படுகிறது. மேலும் நாளுக்குநாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளால் தேசிய நெடுஞ்சாலை குறுகலாகி வருகிறது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே வாகனங்கள் நிறுத்த போதிய இடம் கிடைக்கும். இல்லை எனில் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






