search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Syllabus Competition"

    • சிங்கப்பூரில் சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் முதலிடம் பிடித்த திருமங்கலம் மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • இந்த போட்டிக்கு தமிழகத்தில் இருந்து தேர்வான 8 பேர்களில் மதுரை மாவட்டத்தில் இவரும் ஒருவர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் சியோன் நகரை சேர்ந்த ராஜசேகரன் மகன் கேரிகிப்ட்சன் சாம்(வயது10). மறவன்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். சிலம்பாட்டத்தில் ஆர்வமுடைய இவர், சிங்கப்பூரில் நடந்த சர்வதேச போட்டிக்கு தேர்வானார். இந்த போட்டிக்கு தமிழகத்தில் இருந்து தேர்வான 8 பேர்களில் மதுரை மாவட்டத்தில் இவரும் ஒருவர். தாயார் ரூபி, சிலம்ப மாஸ்டர் பொன்னுசாமி ஆகியோருடன் சிங்கப்பூர் சென்ற கேரி கிப்ட்சன் சாம் 10 வயதுக்குட்பட்டோருக்கான சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தார்.

    இவருக்கு உலக சிலம்பாட்ட தலைவர் டென்னிசன், சிங்கப்பூர் சிலம்பாட்ட தலைவர் சந்திரபிரபு ஆகியோர் பதக்கமும், சான்றிதழும் வழங்கினர். திருமங்கலம் திரும்பிய மாணவர் கேரிகிப்ட்சனை பொதுமக்கள் பாராட்டினர்.

    • சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற சிவகாசி சகோதரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • கடந்த வாரம் நேபாளத்தில் நடந்த சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் இந்தியா சார்பில் இந்த சகோதரிகள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்த சரவணன். அச்சகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திலகவதி. பட்டாசு ஆலையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள்கள் அஸ்வினிபிரியா 11-ம் வகுப்பும், ஹேமலதா 10-ம் வகுப்பும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த வாரம் நேபாளத்தில் நடந்த சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் இந்தியா சார்பில் இந்த சகோதரிகள் பங்கேற்றனர்.

    இதில் 16 வயதிற்குட்பட்ட பிரிவில் அஸ்வினிபிரியாவும், 15 வயதுக்குட்பட்ட பிரிவில் ஹேமலதாவும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இந்த சகோதரிகளின் சாதனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் வெற்றிபெற்ற திருத்தங்கல் சகோதரிகளை பள்ளி தாளாளர் கணேசன் மற்றும் தலைைமை ஆசிரியர் ஆகியோரும் பாராட்டினர்.

    ×