என் மலர்
விழுப்புரம்
- அன்றாட பூஜைக்காக இன்று காலை பூசாரி விஜயன் கோவிலை திறந்து உள்ளே சென்றார்.
- பணம் திருடு போய் இருந்ததை பார்த்த பூசாரி, கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் நகர மையத்தில் கீழ்பெரும் பாக்கம் பகுதியில் 475 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் தீமிதி விழா கடந்த பங்குனி மாதம் நடைபெற்றது. இந்நிலையில் கோவிலில் நடைபெறும் அன்றாட பூஜைக்காக இன்று காலை பூசாரி விஜயன் கோவிலை திறந்து உள்ளே சென்றார். அப்போது கோவில் உள்ளே இருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடு போய் இருந்தது. இதை பார்த்த பூசாரி, கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், விழுப்புரம் டவுன் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த விழுப்புரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு நடந்த கோவிலில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பணம், நகை திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி திருடி வருகின்றனர்.
- 3,4 ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்
- நியாய விலை அங்காடி பணியாளர்கள் மூலம் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
விழுப்புரம்:
விழுப்புர மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் பயனாளிகள் விண்ணப்பம் அளிப்பதற்கு ஒவ்வொரு நியாயவிலை அங்காடியினையும் ஒரு அலகாக கொண்டு சிறப்பு முகாம்கள் முதற்கட்டமாக 24.07.2023 முதல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் சுமார் 1027 முகாம்கள் நடத்தப்பட்டது. முதற்கட்ட சிறப்பு முகாமில் கலந்துக்கொள்ள இயலாமல் விடுபட்ட பயனாளிகள் தங்களின் விண்ணப்பங்களை அளித்திட ஏதுவாக 03.08.2023 மற்றும் 04.08.2023 ஆகிய இரு தினங்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. மேலும் 2வது கட்டமாக வரும் 05.08.2023 முதல் 16.08.2023 வரை (சனி மற்றும் ஞாயிறு கிழமைகள் உட்பட) தொடர்ந்து சுமார் 2,77,315 குடும்ப அட்டைதாரர்களுக்கு 690 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு 01.08.2023 முதல் விண்ணப்பங்கள் ஒவ்வொரு தெருவாரியாக நியாய விலை அங்காடி பணியாளர்கள் மூலம் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நவீன் தந்திராயன்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் பணி செய்து வந்தார்.
- சந்தே கமடைந்த ஊழியர்கள், விடுதி உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோவில், கோட்டக்குப்பம், பொம்மையார்பாளையம் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளிவில் வந்து செல்வார்கள். இவர்கள் தங்கி இப்பகுதியை சுற்றிப்பார்ப்பதற்காக இங்கு தனியார் தங்கும் விடுதிகள் அதிகளவில் உள்ளது. நேபாள நாட்டைச் சேர்ந்த நவீன் (வயது 20) என்பவர் தந்திராயன்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் பணி செய்து வந்தார். இவர் அங்குள்ள அறையிலேேய தங்கி பணியாற்றினார். இந்நிலையில் நேற்று முன்தினம் பணிகளை முடித்துவிட்டு அவரது அறைக்கு சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும், அவர் வெளியில் வரவில்லை.
இதனால் சந்தே கமடைந்த ஊழியர்கள், விடுதி உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்த ர்ராஜன் தலைமையிலான போலீசார், விடுதி அறைக்குள் சென்றனர். அங்கு நவீன் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் தொங்கினார்.நேபாள இளைஞர் நவீனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுவை கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நேபாளத்தில் வசிக்கும் நவீனின் பெற்றோருக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதணி விழா நடந்த முருகனும், அவரது மனைவி நந்தினியும் திட்டமிட்டனர்.
- மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த விநாயகம், முருகனின் மார்பில் குத்தினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 36) சலூன் கடை நடத்திவந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண்குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். ஆடி மாதம் பிறந்ததால், குழந்தைகளுக்கு காதணி விழா நடந்த முருகனும், அவரது மனைவி நந்தினியும் திட்டமிட்டனர். இதற்காக குலதெய்வம் கோவிலுக்கு இன்று சென்று வழிபாடு நடத்தி மொட்டையடிக்க திட்டமிட்டனர். இதற்காக உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து வந்தனர்.
இதையடுத்து தனது சகோதரரான விநாயகத்தை (40) அழைப்பதற்காக அவரது வீட்டிற்கு முருகன் நேற்று சென்றார். அவரும் சலூன் கடை நடத்தி வருகிறார். சலூன் கடைகள் பெரும்பாலும் செவ்வாய்கிழமைகளில் இயங்காது. இதனால் விநாயகம் நன்கு குடித்துவிட்டு வீட்டிலிருந்தார். அப்போது முருகனு க்கும், விநாயகத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறியது. இதில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த விநாயகம், முருகனின் மார்பில் குத்தினார். இதில் சம்பவ இடத்தி லேயே முருகன் துடிதுடித்து இறந்துபோனார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முருகனின் அண்ணன் விநாயகம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். குழந்தைகளின் காதணி விழாவிற்கு அழைக்க வந்த தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி யையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- மாரி நடந்து செல்லும் போது எதிரே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மாரி மீது மோதியது.
- டிராக்டர் சக்கரம் தலையின் மேல் ஏறியதில்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அருகே கரும்புடிராக்டர்மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி(70) விவசாயி.இவர் நேற்று இரவு ஒரத்தூர் மெயின் ரோட்டில் நடந்து செல்லும் போது எதிரே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மாரி மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர்மீது டிராக்டர் சக்கரம் தலையின் மேல் ஏறியதில்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் பலியான மாரி உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை க்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .
- உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
- காலை 10மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
விழுப்புரம்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம். துணை மின்நிலையத்தில் இருந்து பள்ளித்தென்னல் செல்லும் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (வியாழக்கிழமை )காலை 10மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கண்டமங்கலம், பள்ளித்தெ ன்னல், நவமால்மருதூர், நவமால்கா ப்பேரிஉள்ளிட்ட 4 கிராமங்களுக்கும் மின்சாரம் நிறுத்தப்படும்.
இதேப்போல சொர்ணாவூர் துணை நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் பரசுரெட்டிபாளையம் உயர ழுத்த மின்பாதை களில் பராமரிப்பு பணி கள் மேற்கொள்ள இரு ப்பதால் ராம்பாக்கம், கொங்கம்பட்டு, ஆர்.ஆர்.பாளையம், சொக்க ம்பட்டு, மேட்டு ப்பாளையம், குச்சிபாளையம், பரசுரெட்டி பாளையம் ஆகிய 7 கிராமங்க ளுக்கும் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- பாபு கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
- 3 பவுன் நகை திருடப்பட்டிருந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள கோனேரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 40). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த 2 தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களிலும் அனல் காற்று வீசுகிறது. இதனால் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் வெளியில் படுத்து உறங்கினார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் பாபு கண் விழித்தார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக பாபு அளித்த புகாரின் பேரில் ஓலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது.
- காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
விழுப்புரம்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின்நிலையத்தில் இருந்து கெங்கராம்பாளையம் செல்லும் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (2-ந் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இதனால் ஆழியூர், பள்ளிநேலியனூர், பள்ளிச் சேரி, எல்.ஆர்.பாளையம், கெங்கராம்பாளையம், மல்ராஜன் குப்பம், கரைமேடு, பூசாரிபாளையம், வி.பூதூர், பள்ளி கொண்டாபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு அறிவித்துள்ளார்.
- கடந்த 2 மாதங்களுக்கு முன் எக்கியார் குப்பம் மற்றும் மரக்காணம் பகுதிகளை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்.
- விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ சசாங்சாய் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார் .
விழுப்புரம்:
மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் கடற்கரையோரம் விற்ற விஷ சாராயத்தை குடித்துவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன் எக்கியார் குப்பம் மற்றும் மரக்காணம் பகுதிகளை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். இதேபோல் 50-க்கும் மேற்பட்டோர் விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நபர்களில் ஒருவர் கடந்த வாரம் இறந்து விட்டார். இந்நிலையில் எக்கியார் குப்பம் பகுதி கடற்கரை ஓரம் இருப்பதால் ஒரு சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தொடர்ந்து ரகசிய தகவல்கள் கிடைத்து வருகின்றது.
இதனால் அப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட எந்தவித போதைப் பொருட்களை விற்பனை செய்வதையும் முழுமையாக தடை செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ சசாங்சாய் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார் . இதனை தொடர்ந்து கோட்டகுப்பம் டிஎஸ்பி சுனில் மேற்பார்வையில் மரக்காணம் காவல்து றை ஆய்வாளர் பாபு தலைமையில் மரக்கா ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, திவாகர் மற்றும் போலீசார் எக்கியார் குப்பம் மீனவர் பகுதிக்கு அந்த பகுதி பொதும க்களிடம் இந்தப் பகுதியில் யாராவது போதை பொருட்கள் விற்பனை செய்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். பொது மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்ய முடியும் என கோரி விழிப்புணர்வு அளித்தனர். மேலும் இப்பகுதியில் ஆள் நடமா ட்டம் இல்லாத இடத்தில் கள்ளச்சாரா யம் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை ரகசியமாக கண்காணித்து கைது செய்யும் வகையில் டிரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கார்த்தி மரக்காணம் பகுதியில் தங்கி, சவுண்டு சர்வீஸ் வேலை செய்து வந்தார்.
- மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த கார்த்திக் மயங்கி விழுந்தார்.
விழுப்புரம்:
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 42). இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் தங்கி, சவுண்டு சர்வீஸ் வேலை செய்து வந்தார். இவர் மரக்காணம் அருகேயுளள கோமுட்டி சாவடிகுப்பத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு ஒலி, ஒளி அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி, மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கார்த்திக் சென்றார். அப்போது மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த கார்த்திக் மயங்கி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசாரின் தொடர் நடவடிக்கையால் இங்கு சாராயம் காய்ச்சுவதும், விற்கப்படுவதும் முற்றிலும் ஒழிக்கப்பட்டது.
- போலீசார் போத்துவாய் மலைப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட செஞ்சியில் உள்ள போத்துவாய் மலைப்பகுதியில் கடந்த காலங்களில் சாராயம் காய்ச்சி விற்கப்பட்டு வந்தது. போலீசாரின் தொடர் நடவடிக்கையால் இங்கு சாராயம் காய்ச்சுவதும், விற்கப்படுவதும் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இந்நிலையில் போத்துவாய் மலைப் பகுதியில் சாராய ஊறல் உள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னாவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அவரது மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் போத்துவாய் மலைப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த சாராய ஊறலை போலீசார் கைப்பற்றியனர். அதிலிருந்த 100 லிட்டர் சாராயத்தை தரையில் கொட்டி அழித்தனர். இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா கூறுகையில், தற்போது அழிக்கப்பட்டுள்ள சாராய ஊறல் மிகவும் பழைய ஊரலாகும். நாங்கள் தொடர்ந்து இப்பகுதியை கண்காணித்து வருகிறோம். இதனால் இங்கு சாராயம் காய்ச்சுவது ஒழிக்கப்பட்டுளளது. யாரேனும் சாராயம் காய்ச்சினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்தார்.
- உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று திரும்பிய 2 மளிகை கடைக்காரர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி:
புதுவை மாநிலம் ஏம்பலம் பகுதி நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 50). மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவர் கடலூர் மாவட்டம் செல்லஞ்சேரியை சேர்ந்த மதியழகன் (60) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள ராதாபுரத்திற்கு நேற்று மாலை சென்றார். அங்கு நடந்த உறவினர் விழாவில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு வீடு திரும்பினர்.
திருக்கனூர் அருகேயுள்ள எம்.குச்சிபாளையம் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரில் வந்த காரின் முன்பக்க டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து வந்த மதியழகன் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயங்களுடன் தண்டபாணி சாலையில் துடித்துக் கொண்டிருந்தார். அவ்வழியே சென்றவர்கள், தண்டபாணியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை தண்டபாணி உயிரிழந்தார். இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று திரும்பிய 2 மளிகை கடைக்காரர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் செல்லஞ்சேரி, நத்தமேடு கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






