search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slander"

    • 40 ஆண்டுகள் முடிவு பெற்ற பிறகு இந்து சமய அறநிலை துறை வசம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
    • இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் வட கைலாசம், காமராஜர் நகரில் உள்ள குருலட்சுமி அறக்க ட்டளைக்கு சொந்தமான இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் ரூ100கோடி மதிப்பிலா ன 1 ஏக்கர் 80 சென்ட் இடத்தை ராமச்சந்திரன் ,ரேவதி ,அன்பு ஆகியோர்களின் உறவினர்கள் 40 ஆண்டு குத்தகைக்கு வைத்திருந்து 40 ஆண்டுகள் முடிவு பெற்ற பிறகு இந்து சமய அறநிலை துறை வசம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

    கோர்ட்டு உத்தரவுப்படி இந்த இடத்தை கடந்த19-ந் தேதி இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கையகப்படுத்திய போது ராமச்சந்திரன், ரேவதி, அன்பு ஆகியோர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் தூண்டுதலின் பேரில் தான் நீங்கள் இடத்தை கையகப்படுத்துகிறீர்கள். நாங்கள் உங்களை சும்மா விடமாட்டோம் என்று ராமச்சந்திரன், ரேவதி, அன்பு ஆகியோர்கள் மிரட்டியதாக ராமச்சந்திரன், ரேவதி, அன்பு ஆகியோர் மீது வேல்முருகன் எம்.எல்.ஏ. உதவியாளர் ராஜசேகர் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில்எம்.எல்.ஏ உதவியாளர் புகார்மனு கொடுத்துள்ளார். அதில்பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வேல்முருகன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் இவர்கள் பேசி வருகிறார்கள். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த புகார் குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆபாசமாகவும் பேசி ஆடியோ அனுப்பியதாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
    • முதல்நிலை காவலர் சிவசங்கரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா உட்பட்ட நல்லான்பிள்ளைபெற்றால் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரியும் சிவசங்கரன் என்பவர், வாட்சப் குழுவில் என்.எல்.சி வன்முறை தொடர்பாக வழக்கறிஞர்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி ஆடியோ அனுப்பியதாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் முதல்நிலை காவலர் சிவசங்கரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்ததின்பேரில் முதல்நிலை காவலர் சிவசங்கரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    • மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • விவசாய அணி நிர்வாகி ரா மகிருஷ்ணன், சேத்தியாத்தோப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

    கடலூர்:

    என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்கத்திற்காக வாய்க்கால் வெட்டும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை அழித்து இப்பணி நடைபெறுவதை கண்டித்தும், நிலம் கொடுத்தவர் வீட்டில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்க கோரியும், இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க கோரியும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக சேத்தியா த்தோப்பு அருகேயுள்ள மேல்வ ளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த சாந்தி (வயது 55) என்பவர் பேட்டியளித்தார். இதில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடர்பாக அவதூறாகவும், ஆபாசமா கவும் பேசினார். இது தொலைக்கா ட்சிகள் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.

    இதனையடுத்து அதே கிராமத்தை சேர்ந்த தி.மு.க. விவசாய அணி நிர்வாகி ரா மகிருஷ்ணன், சேத்தியாத்தோப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், தி.மு.க. தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அருளரசி, மலர்விழி, சுதாசம்பத் ஆகியோர் சேத்தியாத்தோப்பு போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

    இம்மனுக்களில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறித்து அவதூறாகவும், ஆபாச மாகவும் பேசிய சாந்தி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • அனுமதியின்றி சவடு மண் விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • தினமும் ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பெரிய கண்மாயில் 3 இடங்களில் ஒரே நபர் சவடு மண் எடுத்து 1 டிராக்டர் ரூ.600க்கு விற்பனை செய்து வருகிறார். அங்கு தினமும் ரூ.5 லட்சத்திற்கு சவடு மண் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    முதுகுளத்தூர் கண்மாயில் இருந்து அரசு அனுமதி இல்லாமல் சவடு மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஈடுபடும் நபருக்கு பல லட்சம் அபராதம் விதிக்கப்பட்டும் அதனை கட்டவில்லை. கடந்த 6 மாதத்திற்கு முன்பு முதுகுளத்தூர் கண்மாயில் விதிமுறையை மீறி ரூ.50 லட்சத்திற்கு சவடு மண் எடுத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    முதுகுளத்தூர் பெரிய கண்மாயில் ஜே.சி.பி. மூலம் சவடு மண் எடுத்து தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். கடலாடி மலட்டாற்றில் மணல் ஆட்கள் மூலமே மண் எடுக்கப்பட்டு அரசு மணல் குவாரியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் முதுகுளத்தூர் பெரிய கண்மாயில் அனுமதியின்றி சவடு மண் எடுத்து தினமும் ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை பற்றி வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்
    • போலீஸ் நிலையம் எதிரில் சத்திய சீலனுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.

    விழுப்புரம்:

    வாட்ஸ் அப் குரூப்பில் சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சத்தியசீலன். வக்கீல். அவர் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து அவர் தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை பற்றி வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார். இதை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் செஞ்சியை சேர்ந்த வக்கீல்கள் செஞ்சி போலீஸ் நிலையம் மற்றும் துணை போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் புகார் மனு அளித்தனர்.

    மேலும் அவர்கள் போலீஸ் நிலையம் எதிரில் சத்திய சீலனுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இதில் வக்கீல்கள் கிருஷ்ணன், சக்தி ராஜன், புண்ணியகோட்டி, எவான்ஸ், மணிகண்டன், பிரவீன், சக்திவேல்,பாலசுப்ரமணியன், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சேலம் அருகே வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியது தொடர்பாக விடுதலை சிறுத்தை தொண்டரை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தரக்குறைவாக பேசி விமர்சித்த வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த 20-ந் தேதி வெளியானது.

    ஏற்கனவே ஒரு சமூகத்தை இழிவாக பேசி சமூக வலை தளங்களில் தகவல் பரப்பியதால் பொன்னமராவதியில் கலவரம் ஏற்பட்டது. இதற்கிடையே கெங்கவல்லியிலும் ஒரு சமூகத்தை இழிவாக பேசி சமூக வலை தளங்களில் பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்த சேலம் மாவட்ட எஸ்.பி. தீபா கானிகேர், ஆத்தூர் டி.எஸ்.பி. ராஜூ, இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல், கேசவன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மற்றொரு சமூகத்தினரை இழிவாக பேசி சமூக வலை தளங்களில் வெளியிட்டது கெங்கவல்லி அருகே உள்ள புனல் வாசல் கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தை தொண்டரான மகாலிங்கம் (37) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை பிடித்து சென்ற போலீசார் கெங்கவல்லி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தகவல் அறிந்த சேலம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் நடராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கெங்கவல்லி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    அப்போது தங்கள் சமூகம் தொடர்பாக அவதூறு பரப்பிய மகாலிங்கத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் கோ‌ஷம் எழுப்பினர். இதனால் கெங்கவல்லியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

    பின்னர் ஆத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று மகாலிங்கத்திடம் விசாரித்த போது, பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை கண்டித்து அந்த சமூகத்தினரை இழிவாக பேசி சமூக வலைதளங்களில வெளியிட்டது தெரியவந்தது.

    இதற்கிடையே சேலம் கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் பிரபு கொடுத்த புகாரின் பேரில் மகாலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் சேலம் ஜே.எம்.5 கோர்ட் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆத்தூர் ஒன்றிய இணைச் செயலாளர் தங்கவளவன் உள்பட பலர் ஒரு புகார் கொடுத்தனர். அதில் மகாலிங்கம் மீது நடவடிக்கை எடுத்தது போல பொன்பரப்பியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    இதனை அம்மாவட்ட போலீசாருக்கு அனுப்பி வைத்து பரிந்துரை செய்யப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து கெங்கவல்லி சுற்று வட்டார பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அந்த பகுதியில் கூடுதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    ×