search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது
    X

    திண்டிவனம் பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது

    • மர்ம நபர்கள் 31/2 பவுன் தங்க நகை 1/2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
    • தடாவிற்கு சென்று மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஒலக்கூர் போலீஸ் நிலைய எல்லைக் குட்பட்ட பல்வேறு பகுதி களில் தொடர்ந்து வீட்டில் வெளியே தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களை குறி வைத்து அவர்கள் வீடுகளுக்கு சென்று நகை, பணத்தை கொள்ளை யடிப்பது தொடர்கதை யாகவே இருந்து வந்தது. கடந்த 1-ந் தேதி கோனேரி குப்பம் பகுதியைச் சேர்ந்த பாபு வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் 31/2 பவுன் தங்க நகை 1/2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

    அதேபோல அன்னம் பாக்கம் கலையரசி, கம்பூர் வேலு, பாதிரி முரளி ஆகி யோர் வீட்டில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மர்ம நபர்கள் கொள்ளை யடித்துச் சென்றனர். இது குறித்து ஒலக்கூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கைரேகை மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்ப முறையில் குற்றவாளி களை போலீசார் தேடிய நிலையில் இந்த 4 பேர் வீட்டிலும் கொள்ளை அடித்த நபர்கள் ஆந்திர மாநிலம் தடாவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இைதயடுத்து ஒலக்கூர் சப் -இன்ஸ்பெக்டர் ஆன தனாசன், தலைமை காவலர் கணேசன் ஆகியோர் ஆந்திரா மாநிலம் தடாவில் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதி யைச் சேர்ந்த சாரதி (20)மற்றும் வாழப்பட்டு பல்ல நிமிலி செய்யூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (20) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடித்த பணத்தில் தடாவிற்கு சென்று மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட 2 பேரையும் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சூர்யா மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.சாரதி செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ்படிப்பை2 ஆண்டு வரை படித்துவிட்டு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சூர்யாவிடம் சேர்ந்து குடித்துவிட்டு உல்லாசமாக ஆடம்பரமாக இருப்பதற் காக திருடியதும் விசார ணையில் தெரியவந்தது.

    Next Story
    ×