என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • முதலமைச்சரின் உணர்வோடு நீங்கள் செயல்பட வேண்டும்.
    • யார் எதிர்த்து நின்றாலும் திமுக தான் வெற்றி பெறும் என்ற நிலையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.

    விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் அறிவாலயத்தில் அம்மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமையில், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது, வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

    வரும் 2026 சட்டசபை தேர்தலில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், ஏன் தனக்கே கூட இடம் இல்லாமல் போகலாம்.. அதனால், யார் நிறுத்தபட்டாலும் யார் எதிர்த்து நின்றாலும் திமுக தான் வெற்றி பெறும் என்ற நிலையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.

    சட்டசபை தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடுவார்கள் என்பதை யார் நிறுத்தினாலும் வெற்றி பெற செய்யவேண்டு

    தலைவர் யாரை கழக வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவர்தான் நம் கண் முன் தெரிய வேண்டுமே தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது.

    முதலமைச்சரின் உணர்வோடு நீங்கள் செயல்பட வேண்டும். கழகத்திற்காக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையின் பல இடங்களில் இன்னமும் வெள்ளம் வடியவில்லை.
    • கள்ளச்சாராய விற்பனையை தடுக்க டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக கூறுவது அரசின் தோல்வியை காட்டுகிறது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு முதன்மை வாக்குறுதியாக அளித்த ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் மத்திய அரசு நிதி வழங்காததால் ஆசிரியர்களுக்கு செம்பம்பர் மாதம் 10 நாட்களுக்கு பின் சம்பளம் வழங்கியது. கல்வி, சுகாதாரத்தை செயல்படுத்த நிதி ஒரு தடையில்லை. மொத்த உற்பத்தியில் கல்வி, சுகாதாரத்திற்கு 3 மடங்கு நிதி ஒதுக்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியது. 2030 ஆண்டு பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு 4,15 லட்சம் கோடியாகவும், சுகாதாரத்துறைக்கு 1.61 லட்சம் கோடியாகவும் இருக்கும். தற்போது 1.56 லட்சம் கோடியாகவும், சுகாதாரத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி இருக்க வேண்டும்.

    ஆனால் தற்போது கல்வித்துறைக்கு ரூ.44 ஆயிரம் கோடியாகவும், சுகாதாரத்துறைக்கு ரூ.20,198 கோடியாகவும் உள்ளது. பள்ளிகல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை சீரழிய போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததே காரணம். எனவே ஆசிரியர்களை நியமிக்கவில்லை. முதன்மை மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 1 லட்சம் கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ. 50 ஆயிரம் கோடியாக வரும் ஆண்டில் உயர்த்தவேண்டும்.

    சென்னையின் பல இடங்களில் இன்னமும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளத்தடுப்பு நடவடிக்கையில் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்து விட்டது. வெள்ளதடுப்பு பணிகளை முடிக்காததால் மழையினால் மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்க வேண்டும்.

    விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் 195 டாஸ்மாக் கடைகள் உள்ளது. விழுப்புரத்தில் 109, கள்ளகுறிச்சியில் 86 கடைகள் உள்ளது. தற்போது கொந்தமூர், நல்லாவூர், வெள்ளிமலை ஆகிய இடங்களில் 3 மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது கண்டிக்கதக்கது. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறும் அரசு புதிய கடைகளை திறக்கப்பட உள்ளதை ஏற்க முடியாது. இது அரசின் தோல்வியை காட்டுகிறது. வெள்ளிமலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக கூறுவது அரசின் தோல்வியை காட்டுகிறது. அப்படியும் இக்கடைகள் திறந்தால் நானே அக்கடைகளுக்கு பூட்டு போடுவேன்.

    முல்லை பெரியாறு அணையை வலுப்படுத்தி 152 அடியாக உயர்த்தலாம் என்று 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும் இன்னமும் உயர்த்தப்படாமல் இருக்க கேரள அரசு ஒத்துழைக்காததுதான் காரணமாகும்.

    மத்திய அரசு பணியாளர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசும் 3 விழுக்காடு அகவிலைப்படி வழங்கி, பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    • மாநாட்டு பந்தல் அமைக்கும் இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எஸ்.பி. நேரில் ஆய்வு செய்தார்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டிற்கு மிக பிரமாண்டமான மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இந்நிலையில் வி.சாலையில் உள்ள மாநாட்டு திடலில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் ஆய்வு மேற்கொண்டார். மாநாட்டு பந்தல் அமைக்கும் இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் நேரில் ஆய்வு செய்தார்.

    தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

    • த.வெ.கவிற்கு 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    • வாகன நிறுத்துமிடத்தை இதுவரை நீங்கள் உறுதி செய்து தரவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டிற்கு மிக பிரமாண்டமான மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

    கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    வரும் 27ம் தேதி மாநாடு நடக்கும்போது மழை பெய்தால் லட்சக்கணக்கில் வரும் தொண்டர்களுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் ?

    வாகன நிறுத்துமிடத்தை இதுவரை நீங்கள் உறுதி செய்து தரவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். தொண்டர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை உடனடியாக தேர்வு செய்து, அதற்கான வரைபடங்களை ஒப்படைக்க வேண்டும்.

    மாவட்ட வாரியாக எத்தனை வாகனங்கள், எந்த வகையான வாகனங்கள் வரும் என்ற பட்டியலை முன்கூட்டியே காவல்துறைக்கு தர வேண்டும்.

    ஏற்கனவே 33 நிபந்தனைகளில், 17ஐ கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்திய போலீசார், மீண்டும் 5 கேள்விகள் எழுப்பி நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தவெக முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.
    • தொகுதிக்கு 2 பெண்கள் உட்பட 7 பேர் தற்காலிக பொறுப்பாளர்களாக நியமனம்.

    தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.

    ஒரு சட்டசபை தொகுதிக்கு 2 பெண்கள் உட்பட 7 பேர் தற்காலிக பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    சட்டசபை தொகுதி அளவில் மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்களுடன் தற்காலிக பொறுப்பாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • மாநாட்டு திடல் முழுவதும் மின் விளக்குகள் அமைப்பதற்காக 3 ஆயிரம் கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
    • மாநாட்டின் நுழைவு வாயில் முன்பு 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்ற உள்ளார்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டியில் விஜய் கட்சியின் மாநாட்டில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கொடியை நிரந்தரமாக பறக்கவிட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து உள்ளார். இதற்கான கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்சியின் முதல் மாநாடு வருகிற 27-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் மேற்பார்வையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    தற்போது மேடை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளதையடுத்து அதன் உள்புறம் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. நேற்று மாநாட்டு திடலில் முளைத்துள்ள செடிகள் மீண்டும் முளைக்காத வகையில் அவற்றின் மீது களைக்கொல்லி மருந்துகள் அடிக்கப்பட்டன. மாநாட்டு திடல் முழுவதும் மின் விளக்குகள் அமைப்பதற்காக 3 ஆயிரம் கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்கள் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு செல்லாத வகையில் அங்கு இரும்பு தகடுகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரில் அங்குள்ள திறந்த நிலையில் உள்ள கிணற்றின் மேல் பகுதியில் பெரிய இரும்பு கர்டர்கள் அமைத்து அதை முழுமையாக மூடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் முகப்பு வாயில் ஜார்ஜ் கோட்டை போன்று பிரமாண்ட வடிவில் அமைக்கப்பட உள்ளது.



    மாநாட்டில் வாகனம் நிறுத்தும் இடத்தை உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரகுமார் குப்தா ஆய்வு செய்த காட்சி.


    அவ்வப்போது மழை பெய்து இடையூறு ஏற்படுத்தினாலும் மாநாட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மாநாட்டின் நுழைவு வாயில் முன்பு 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்ற உள்ளார். இதற்காக கொடிக்கம்பம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    மாநாடு முடிந்தாலும் அந்த கம்பத்தில் கொடி நிரந்தரமாக பறந்திட வி.சாலையை சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான அந்த நிலம் 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த தனியாருக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்தும் இடத்தை விழுப்புரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திர குமார் குப்தா ஆய்வு செய்தார். கார், வேன், பஸ் போன்ற வாகனங்கள் எந்த இடத்தின் வழியாக உள்ளே நுழைந்து, எங்கே எந்தெந்த வாகனங்கள் நிற்கிறது என்ற விவரத்தை கட்சியின் வக்கீல் அரவிந்தனிடம் கேட்டறிந்தார்.

    விக்கிரவாண்டி டி.எஸ்.பி. நந்தகுமார், இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், த.வெ.க. மாவட்டத் துணைத் தலைவர் வடிவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று மாலை 4 மணிக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொடிக்கம்ப பூஜை நடைபெறுகிறது.
    • மணி என்பவருக்கு சொந்தமான இடத்தை 5 ஆண்டுகளுக்கு தவெக குத்தகைக்கு எடுத்துள்ளது.

    த.வெ.க முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இன்று மாலை 4 மணிக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொடிக்கம்ப பூஜை நடைபெறுகிறது.

    மணி என்பவருக்கு சொந்தமான இடத்தை 5 ஆண்டுகளுக்கு தவெக குத்தகைக்கு எடுத்துள்ளது.

    முதல் மாநாடு நினைவாக, 100 அடி உயரத்தில் நிரந்தர கொடிக்கம்பம் நட திட்டமிடப்பட்டுள்ளது. புயல், மழையை தாங்கும் வகையில் விண்ட் வெலாசிட்டிக்கு ஏற்ப கொடிக்கம்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    8 அடி ஆழத்தில் கொடிக்கம்பத்தின் அஸ்திவாரம் அமைக்கப்படுகிறது. கொடியின் பீடம் 120 சதுர அடி அளவில் அமைக்கப்படுகிறது.

    தொடர்ந்து, வரும் 27ம் தேதி மாநாடு தொடங்கும் முன், திடலின் எதிரே 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கொடி ஏற்றுகிறார்.

    • நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது.
    • ஆக பல கோவில்களில் இந்த விளையாட்டு நடைபெற வாய்ப்பு உள்ளது.

    திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது.

    அதை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அதற்கு காரணமானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனி மைதானத்தை அரசு ஏற்பாடு செய்யலாம். தீட்சிதர்கள் மட்டுமே இங்கு விளையாட முடியும் என்று விளம்பர பலகையை வைக்கலாம். ஆக பல கோவில்களில் இந்த விளையாட்டு நடைபெற வாய்ப்பு உள்ளது.

    கோவில் கிரிக்கெட் விளையாட்டு மைதானமாக மாறக்கூடிய பேராபத்தும் ஏற்படலாம் என்று கூறினார்.

    • 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் அமைந்துள்ள 'சாம்சங்' நிறுவனத்தில் தொழிலாளர்கள் 1,200 பேர் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அமைப்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை சுங்குவார்சத்திரத்தில் 'சாம்சங்' நிறுவன அதிகாரிகள், தொழிலாளர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை தலைமைச்செயலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


    ஆனால், நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார், 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.


    மேலும் போராட்டத் திடல்களில் இருந்த பந்தல்களையும் பிரித்துள்ளனர். செல்வப்பெருந்தகை, முத்தரசன், பாலகிருஷ்ணன், வேல்முருகன் என அனைத்து கட்சித் தலைவர்களும் போராடும் தொழிலாளர்களை நேரடியாக சந்திக்க இருந்த நிலையில், காவல்துறை இந்த நகர்வை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே, சாம்சங் தொழிலாளர்களை நள்ளிரவில் வீடு புகுந்து போலீசார் கைது செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.


    • தொண்டர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள்.
    • பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின் பற்ற வேண்டும்.

    விழுப்புரம்:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து உள்ளார். இதற்கான கொடி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி. சாலையில் நடைபெற உள்ளது. இதற்காக இடங்கள் கையகப்படுத்த ப்பட்டுள்ளது.

    அந்த இடத்தில் மாநாடு பணிகள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று கட்சியின் உயர் மட்டக் குழு நிர்வாகிகள், மாநில பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் மாநாடு பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட்டனர்.

    பந்தல் அமைப்பாளர், பாதுகாவலர்கள், ஒளி, ஒலி அமைப்பாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

    மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    தமிழக வெற்றிக் கழக பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று இரவு விழுப்புரத்தில் டி.ஐ.ஜி. திஷாமித்தல், போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோரை சந்தித்தார்.

    அப்போது மாநாட்டுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பிற்காக காவல் துறையினர் குறிப்பிட்டிருந்த முக்கிய நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதா, மாநாட்டிற்கான வரை படம் போன்றவற்றை அளிக்குமாறு போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கேட்டுள்ளனர்.

    பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின் பற்ற வேண்டும் என டி.ஐ.ஜி. அறிவுறுத்தியதாக த.வெ.க.நிர்வாகிகள் தரப்பினர் தெரிவித்தனர்.

    • கட்சி தலைவர் விஜய் தங்க தனி அறைகளும், வி.ஐ.பி.,கள் தங்க தனி அறைகள் ஏற்பாடு செய்யப்படஉள்ளது.
    • இடை இடையே மழை பெய்து வருவதால் பணியில் சற்று தாமதம் ஏற்படுகிறது.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு மிக பிரமாண்டமான மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு வருகிற 27 -ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக கடந்த 4-ந் தேதி பந்தக்கால் நடும் விழா நடந்தது.

    மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிக்கு சென்னை திருவேற்காடு ஜே.பி., பந்தல் அமைப்பாளர் விஸ்வநாதன் ஒப்பந்தம் செய்து பணியை தொடங்கியுள்ளனர். மாநாட்டு திடலில், மாநாட்டு மேடை கிழக்கு நோக்கி, ரெயில்வே தண்டவாளத்திலிருந்து 200 மீட்டர் தள்ளி, இரும்பு பைப்புகளை இறக்கி பணியை தொடங்கி உள்ளனர்.

    ரெயில்வே பாதையின் அருகே கட்சியினர் யாரும் செல்லாத வகையில் தடுப்பு வேலி அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மேடை 60 அடி அகலத்தில், 170 அடி நீளத்திற்கு அமைகிறது.

    மேடையில் கட்சி தலைவர் விஜய் தங்க தனி அறைகளும், வி.ஐ.பி.,கள் தங்க தனி அறைகள் ஏற்பாடு செய்யப்படஉள்ளது. தற்பொழுது பந்தல் அமைக்கும் பணியாளர்கள் தங்க தனி ஷெட் அமைத்துள்ளனர்.

    அவர்கள் சமைக்க தனியாக ஷெட் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு வருகின்ற தொண்டர்கள் நினைக்கும் சமயத்தில் உணவருந்த மாநாட்டு திடல் முழுவதும் ஆங்காங்கே ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளது. திடலினுள் இருக்கும் கிணறுகளை சுற்றி பாதுகாப்பாக வேலி அமைத்ததுடன் முழுவதையும் இரும்பு தகரம் கொண்டு மறைக்க உள்ளனர் . திறந்த வெளியில் மாநாடு நடத்த முடிவு செய்து பணிகள் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. இடை இடையே மழை பெய்து வருவதால் பணியில் சற்று தாமதம் ஏற்படுகிறது. ஆனாலும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    • தமிழக வெற்றிக் கழக மாநாடு 27-ந்தேதி நடைபெறுகிறது.
    • பந்தல் அமைக்கும் பணி இன்று முதல் நடைபெற இருக்கிறது.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் இம்மாதம் 27-ந்தேதி நடைபெறுகிறது.

    மாநாட்டுக்கான வேலைகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மாநாட்டுக்காக பிரமாண்ட பந்தல் போடப்பட இருக்கிறது. இதற்கான பந்தல் கால் நடும் விழா இன்று காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் மாநில செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் கட்சியினர் மாநாட்டு திடலில் பூமி பூஜையை செய்தனர். பின்னர் மாநாட்டுக்கான பந்தக்கால் நடப்பட்டது.

    பந்தக்கால் நட்பபட்ட போது தளபதி, தளபதி என கட்சி நிர்வாகிகள் முழக்கமிட்டனர். பந்தக்கால் நடப்பட்ட விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தின் முக்கிய கோவில்கள், தேவாலயம், மசூதி ஆகிவற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இதில் த.வெ.க. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    பூமி பூஜை மற்றும்டி பந்தக்கால் நடும் விழாவிற்கு வந்தவர்களுக்கு இட்லி, பொங்கல், பூரி, வடை ஆகியவை காலை உணவாக வழங்கப்பட்டது.

    மாநாடு நடைபெறும் இடத்திற்கு புஸ்சி ஆனந்த் வந்ததும், அவருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.

    ×