என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநாட்டு திடலை சுற்றி பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
    • மாநாட்டிற்கு சுமார் 3 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திரையுலக உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி, முதல் மாநாட்டை அறிவித்துள்ளார்.

    அதன்படி, அந்த மாநாடு கொள்கை விளக்கத் திருவிழா என்று குறிப்பிட்டு பிரமாண்டமாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை நடைபெறுகிறது.

    விஜய் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப்போகிறார் என்று பலரும் கேள்விகளை அவரை நோக்கி வீசி வந்த சூழலில், மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் இடம் பெற்றுள்ளது. அவர்களுக்கு பின்னால் தலைமைச்செயலகம் இடம் பெற்றுள்ளது.

     

    இதில் பெண்களுக்கு என்று முதல் முறையாக தனி அங்கீகாரத்தை இந்த மாநாடு அளித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது. மேலும் மேடையின் வலதுபுறம் தமிழ் அன்னை, சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் விஜய் நிற்பது போன்ற கட்-அவுட்களும் மாநாட்டு திடலில் கம்பீரமாக காட்சி தருகின்றன. மாநாட்டு திடலில் நுழைவாயில் இரு புறமும் விஜய் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டு திடலில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நேற்று காலை நடப்பட்டது. இந்த கம்பத்தில் 20 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட கொடி பறக்க விடப்படுகிறது. கயிறு வைத்து இழுத்தும், ரிமோட் மூலமாகவும் இந்த கம்பத்தில் கொடியை ஏற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டில் அதிகளவு தொண்டர்கள் கூடுவதால் தொழில்நுட்ப சாதனங்கள் இயங்குவதற்கு ஏற்ற வகையில் தற்காலிக செல்போன் டவர் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, வெகுதொலைவில் இருந்து மாநாட்டை பார்க்கும் வகையில் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கும் பணி, 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 350 நடமாடும் கழிவறைகள் அமைப்பது என்று அனைத்து வித பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

    மாநாட்டு திடலில் காவல் துறை அளிக்கும் பாதுகாப்புடன் 150-க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் படை, துபாயில் இருந்து 1000 பவுன்சர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். பவுன்சர்களிடம் அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விஜய் வலியுறுத்தி உள்ளார்.

    மாநாட்டு திடலை சுற்றி பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டு திடலில் தற்போது வரை பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கும் இன்று மாநாட்டு திடலில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திரை பிரபலங்கள் அதிகம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாநாட்டு திடலில் கேரவன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டிற்கு சுமார் 3 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

    மாநாடு நடைபெறும் இடத்திற்கு போலீசார் ஜீப்கள், பஸ்கள் மூலம் வரத்தொடங்கி உள்ளனர்.

    • மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
    • மாநாட்டு திடலில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நேற்று காலை நடப்பட்டது.

    திரையுலக உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி, முதல் மாநாட்டை அறிவித்துள்ளார்.

    அதன்படி, அந்த மாநாடு கொள்கை விளக்கத் திருவிழா என்று குறிப்பிட்டு பிரமாண்டமாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை நடைபெறுகிறது.

    விஜய் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப்போகிறார் என்று பலரும் கேள்விகளை அவரை நோக்கி வீசி வந்த சூழலில், மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

     

    மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் இடம் பெற்றுள்ளது.

    இதில் பெண்களுக்கு என்று முதல் முறையாக தனி அங்கீகாரத்தை இந்த மாநாடு அளித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது. மேலும் மேடையின் வலதுபுறம் தமிழ் அன்னை, சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் விஜய் நிற்பது போன்ற கட்-அவுட்களும் மாநாட்டு திடலில் கம்பீரமாக காட்சி தருகின்றன. மாநாட்டு திடலில் நுழைவாயில் இரு புறமும் விஜய் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டு திடலில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நேற்று காலை நடப்பட்டது. ராட்சத கிரேன் மூலமாக, தொழிலாளர்கள் இதை அங்கு நிறுவினர்.

    இந்த கம்பத்தில் 20 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட கொடி பறக்க விடப்படுகிறது. கயிறு வைத்து இழுத்தும், ரிமோட் மூலமாகவும் இந்த கம்பத்தில் கொடியை ஏற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் தற்போது விஜய், ரிமோட் மூலம் கொடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொடியேற்றினாலே, அந்த கொடி உச்சத்தை தொடுவதற்கு குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும். இடி தாங்கி வசதியுடன் இந்த கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

    நாளை ஏற்றப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அந்த இடத்தில் 5 வருடங்களுக்கு பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டில் அதிகளவு தொண்டர்கள் கூடுவதால் தொழில்நுட்ப சாதனங்கள் இயங்குவதற்கு ஏற்ற வகையில் தற்காலிக செல்போன் டவர் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, வெகுதொலைவில் இருந்து மாநாட்டை பார்க்கும் வகையில் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கும் பணி, 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 350 நடமாடும் கழிவறைகள் அமைப்பது என்று அனைத்து வித பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

    இன்று மாலையுடன் அத்தனை பணிகளையும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் முடித்து, தமிழக வெற்றிக் கழகத்தினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

    இதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை மாலை 4 மணியளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக மாநாட்டு மேடைக்கு வரும் விஜய் அங்கிருந்தபடி, ரிமோட் மூலமாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.

    கொடியேற்றிய பின், மாநாட்டு மேடையில் இருந்து தொண்டர்களை சந்திக்க, அங்கு சுமார் 600 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள 'ரேம்ப்'(நடைபாதை) மீது நடிகர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்திய பிறகே மாநாட்டு மேடைக்கு வர உள்ளார்.

    மாநாட்டின் தொடக்கமாக பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும், மாநாட்டுக்காக நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் மாநாட்டு பணிகளுக்கு உதவி செய்தவர்களுக்கு விஜய் சால்வை அணிவித்து கவுரவிக்கிறார்.

    • சென்னையில் இருந்து செல்லும் வாகனங்கள் திண்டிவனத்தில் மாற்றி விடப்படுகின்றன.
    • ஜிஎஸ்டி சாலையில் பொது போக்குவரத்தை தவிர்க்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    தமிழக வெற்றிக் கழகம் மாநாடு வரும் 27ம் தேதி விழுப்புரம் வி.சாலையில் நடைபெறுகிறது.

    தமிழக வெற்றிக் கழக மாநாட்டையொட்டி, சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்களுக்கு பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து செல்லும் வாகனங்கள் திண்டிவனத்தில் மாற்றி விடப்படுகின்றன.

    திருச்சியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் செஞ்சி அருகே மாற்றிவிடப்பட உள்ளன.

    போக்குவரத்து மாற்றம் காரணமாக 15 முதல் 20 கி.மீ தூரம் வரை பயண நேரம் அதிகமாகலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், மாநாட்டு மேடை பகுதி முக்கிய சாலையை ஒட்டி அமைந்து இருப்பதால் போக்குவரத்து நெரில் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதனால், ஜிஎஸ்டி சாலையில் பொது போக்குவரத்தை தவிர்க்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    மாநாட்டுக்கு இரண்டு லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 50 ஆயிரம் நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, தவெக மாநாட்டில் முன்னெச்சரிக்கைக்காக 17 மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள், 100 சுகாதார பணியாளர்கள், 22 ஆம்புலன்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநாட்டிற்கு நாளை ஒரு நாளே உள்ள நிலையில் மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • மாநாடு திடலினுள் பார்வையாளர்கள் வசதிக்காக 300 மொபைல் கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    விழுப்புரம்:

    தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். இந்த கட்சியின் முதல் மாநாடு 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. விறுவிறுப்பான ஏற்பாடுகள், தமிழகம் முழுவதும் இருந்து திரளும் தொண்டர்கள் என தமிழக வெற்றிக்கழகம் அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கி வருகிறது.

    இந்த அரசியல் மாநாட்டில் தான் விஜய் தனது கட்சியின் கொள்கை குறித்து பேச இருக்கிறார். தான் அறிமுகப்படுத்திய மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நட்சத்திரங்கள், யானை குறியீடுடன் கூடிய கொடி குறித்த விளக்கத்தையும் இந்த மாநாட்டில் தான் விஜய் பேச இருக்கிறார். 2026-ம் ஆண்டு தனது அரசியல் பாதை என்ன? கூட்டணியா, தனித்தா? என்பது குறித்தெல்லாம் இந்த மாநாட்டில் தான் விஜய் தெளிவுபடுத்த இருக்கிறார்.

    ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் இன்றைக்கு விக்கிரவாண்டி நோக்கியே திரும்பி நிற்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் விஜய்யின் அரசியல் நடவடிக்கையை உற்று நோக்கியே வருகிறார்கள்.

    மாநாட்டிற்கு நாளை ஒரு நாளே உள்ள நிலையில் மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திடலில் தொண்டர்கள் அமர்வதற்கு 75 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. 4 பகுதியாக பிரிக்கப்பட்டு இந்த இருக்கைகள் போடப்பட்டுள்ளது.

    மாநாடு திடலினுள் பார்வையாளர்கள் வசதிக்காக 300 மொபைல் கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாற்றுதிறனாளிகளுக்காக தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    மாநாடு மைதானத்தில் தமிழன்னை, சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள் மற்றும் சேரன், சோழன், பாண்டிய மன்னர்கள், அரசியல் தலைவர்கள் காமராஜர், பெரியார் மற்றும் அம்பேத்கர், கட்சித் தலைவர் விஜய் ஆகியோரது கட் அவுட்கள் மேடையின் இருபுறமும் வைக்கப்பட்டு உள்ளன.

    மாநாட்டிற்கு வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் விஜய் ரசிகர்கள் 10 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை மாநாடு திடலில் நடைபெறும் பணிகளை பார்வையிட்ட மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறுகையில், 'தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டில் பங்கேற்பவர்கள் நலனுக்காக கண்காணிப்பு கேமரா, குடிநீர், கழிப்பிடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. மாநாடு சிறப்பாக நடைபெறும் என்றார்.

    • மக்கள்தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை ஆபத்தானது.
    • முதல்வர் தலையிட்டு ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகள் 500 ஆக இருந்தாலும் கடந்த 3 ½ ஆண்டுகளில் 600 மன மகிழ் மன்றங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. எப்.எல்.2 என்ற பெயரில் அரசின் உரிமம் பெற்றால் யார் வேண்டுமென்றாலும் மது விற்பனை செய்யலாம். இதற்கு தி.மு.க. அரசு பல சலுகைகள் வழங்குகிறது. மனமகிழ் மன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே மது விநியோகிக்க வேண்டும் என்ற விதி தற்போது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. பெட்டிக்கடைகள் வைக்கக்கூட வசதி இல்லாத இடத்திலும் மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளது.

    முந்தையை ஆட்சியோடு சேர்த்து தற்போது 1500 மனமகிழ் மன்றங்கள் திறந்து வைத்துக்கொண்டு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது ஏமாற்றுவேலை. கடந்த தீபாவளிக்கு 467 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் கூடுதலாக தற்போது கடந்த ஆண்டைவிட 20 விழுக்காடு வைக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

    தீபாவளிக்கு முன்னும் பின்னும் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூடவேண்டும். 1500 மனமகிழ் மன்றங்களின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும். மக்கள்தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை ஆபத்தானது. ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி 31 ஆக குறைக்கப்பட உள்ளதை எதிர்த்து மத்திய அரசிடம் போராட வேண்டும். இப்போதே தரமான கல்வி, மருத்துவம் வழங்க இயலவில்லை. தமிழகத்தில் மக்கள்தொகை கட்டுப்பாட்டுப்பணிகள் இப்போது உள்ளபடியே இருக்க வேண்டும்.

    தனியார் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்பை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றவேண்டும். ஓசூரில் டாடா நிறுவனத்தில் பணியாற்றிய 800 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. தி.மு.க. அளித்த 75 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இச்சட்டத்தை நிறைவேற்றவேண்டும்.

    தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது புதிய ஊழலுக்கு வழிவகுக்கும். ஒரு தனியார் பேருந்து நாளொன்றுக்கு 600 கி.மீ. இயக்கப்பட்டால் 1000 பேருந்து இயக்கப்பட்டால் ரூ 1. 14 கோடி இழப்பு ஏற்படும். மின்வாரியம் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதில் கமிஷன் கிடைப்பது போல தனியார் பேருந்து இயக்கப்படுவதால் மின் கட்டணம் போல பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

    அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டபோதிலும் 17 முதல் 30 மாதங்களுக்கு நிலுவை தொகை வழங்கப்படவில்லை. முதல்வர் தலையிட்டு ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்கவேண்டும். கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிக, பகுதி நேர, ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒரு வாரம் முன்பாக இன்றோ, நாளையோ முன்கூட்டியே ஊதியம் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதில்லை. வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட மருதுபாண்டியர்களின் 223-ம் ஆண்டு நினைவு நாளை போற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்

    பேட்டியின்போது பா.ம.க. பொருளாளர் திலகபாமா, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கட்சி தொடர்பான அறிவிப்புகளை நடிகர் விஜய் அடிக்கடி வெளியிட்டார்.
    • மாநாட்டு திடல் பகுதி முழுவதும் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிகள் பறக்கவிடப்பட்டது.

    விக்கிரவாண்டி:

    நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சி கொடியை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்தார்.

    கட்சி தொடர்பான அறிவிப்புகளை நடிகர் விஜய் அடிக்கடி வெளியிட்டார். இவை அனைத்தும் தமிழக மக்களிடம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த மாநிலம் தழுவிய முதல் அரசியல் மாநாட்டை நடத்த நடிகர் விஜய் முடிவு செய்தார். அதன்படி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.

    மாநாட்டுக்காக நூற்றுக்கணக்கான ஏக்கரில் பார்வையாளர்கள் அமர தனி இடம், வாகனங்கள் நிற்க தனி இடம் என்று அனைத்து வசதிகளும் செய்யும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது. மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    தினசரி அங்கு நடைபெறும் ஒவ்வொரு பணிகளும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த விதத்தில் நேற்று முன்தினம் மாநாட்டு திடல் பகுதி முழுவதும் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிகள் பறக்கவிடப்பட்டது.

    இந்த சூழலில் நேற்று மாநாட்டு திடலில் மேடை வடிவமைப்பு மற்றும் நுழைவு வாயில் பகுதிகள் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதுவும் வழக்கம் போல் பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தது. மேடை பணிகள் முழுமையாக முடிவடையாவிட்டாலும், அதன் முன்பகுதியில் கட்சியின் கொடி இரு யானைகளுடன் வரையப்பட்டு, அதற்கு கீழே 'வெற்றிக் கொள்கை திருவிழா' என்று குறிப்பிட்டுள்ளனர்.

    இதுதவிர இன்னும் மேடையில் என்னவெல்லாம் இடம்பெற்று கவனம் பெற போகிறதோ என்ற எதிர்பார்ப்பில் தொண்டர்கள் உள்ளனர். இதேபோன்று, மற்றொரு பணியாக மாநாட்டு திடல் நுழைவு பகுதி கோட்டை மதில் சுவர் போல் அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டுக்கு உள்ளே நுழையும் பாதையில் இரு புறங்களிலும் பிளிறும் இரு யானைகள் இடம் பெற்று இருக்கிறது.

    மழையால் பாதிக்காமல் இருக்க மாநாட்டு திடல் அமைந்துள்ள 85 ஏக்கர் பரப்பளவுக்கும் பச்சை நிறத்தில் தரைவிரிப்பு போடும் பணிகள் நேற்று தொடங்கியது. தரைவிரிப்புக்கு மேல் இருக்கைகள் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். தரைவிரிப்பு, அதற்கு மேல் பறக்கும் கட்சி கொடிகள் என்று அந்த பகுதியே வண்ணமயமாக மிளிருகிறது.

    மாநாட்டுக்காக திடல் எந்தஅளவில் தயாராகி வருகிறதோ, அதேபோன்று அங்கு வருகை தரும் தொண்டா்கள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.


    அதன் ஒருபகுதியாக குடிநீர் வசதிகள், தற்காலிக கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் மற்றும் 350 நடமாடும் கழிவறைகள் வந்திறங்கின. அவற்றை மாநாட்டு திடலின் முக்கிய பகுதிகளிலும், மாநாட்டு திடலுக்கு வெளியே பிரதான இடங்களிலும் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

    மேலும் 700 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் நேற்று முதல் தொடங்கியது. மாநாட்டு திடலில் 1500 பேர் அமரும் வீதம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் இருந்து தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்சி கொடிகள், சீரியல் விளக்குகள், சாலை நடுவே உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் விஜய் மட்டும் நேரடியாக மேடைக்கு செல்ல தனிவழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாநாட்டின் போது போக்குவரத்தை சீரமைப்பதற்காக கட்சி சார்பில் போலீசாருக்கு 100 பேரிகார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதனிடையே விஜய்யின் கொள்கை என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதுபோன்ற சூழலில் நேற்று மாலையில் மாநாட்டு திடலில் பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோரது கட்-அவுட்கள் வைக்கப்பட்டு, அவர்களுடன் விஜய் இருப்பது போன்ற கட்-அவுட் அமைக்கப்பட்டது. பலரது கவனத்தையும் பெற்றது.

    மேலும் 2 ஆயிரம் வாழை மரங்கள், 5 ஆயிரம் கரும்புகள் என்று வரவேற்புக்கு தேவையான அலங்கார பொருட்களும் பெருமளவில் அமைக்கதிட்டமிட்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த பொருட்கள் அனைத்தும் இயற்கையை சார்ந்தே அமைக்கவேண்டும் என்று கட்சியினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    பணிகள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) அல்லது நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) முடிக்கப்படும் என்று அக்கட்சியினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து விஜய் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விக்கிரவாண்டியை நோக்கி புறப்படுவதற்கு தயாராகி வருகிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வருவதற்கு தனித்தனி குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநாட்டுக்குள் வரும்போது மற்றும் மாநாடு முடிந்து திரும்பி செல்லும்போது நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக பிரத்யேக குழு உருவாக்கப்பட்டுள்ளது.

    தொலை தூரங்களில் இருந்து வரும் வெளி மாவட்ட நிர்வாகிகள் ஒரு நாளைக்கு முன்பே நாளை மறுநாள் விக்கிரவாண்டிக்கு புறப்பட வேண்டும் என்பதால் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை விக்கிரவாண்டி வந்ததும் குளித்து தயாராக ஆங்காங்கே மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் காலையில் மாநாட்டு அரங்கு பகுதிக்கு வந்து உணவு அருந்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாநாட்டு அரங்கு பகுதியில் பல்வேறு நுழை வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அனைத்து வாயில்களும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் தொண்டர்கள் காலை மற்றும் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மாநாட்டு அரங்கில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் தொண்டர்கள் ஞாயிற்றுக் கிழமை காலை முதல் புறப்பட்டு வருவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு காலை உணவு அவர்களது வாகனங்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாகனங்களில் தொண்டர்களை அழைத்து வருவதற்கும், உணவு வழங்குவதற்கும் தனித்தனி குழுக்கள் பணியாற்றத் தொடங்கி உள்ளன.

    தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் அனைவரும் மதியம் 2 மணிக்குள் மாநாட்டு பந்தலுக்குள் வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் அனைவரும் விஜய் படம் போட்ட டிஷர்ட் மற்றும் தொப்பி அணிந்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பெண்கள் சீருடைகளில் வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பெண்கள் பாதுகாப்புக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

    தொண்டர்கள் 2 மணிக்கு அமர்ந்ததும் அந்தந்த பொறுப்பாளர்கள் மூலம் கண்காணிக்க கேட்டுக் கொள்ளப்படும். பிற்பகல் 4 மணிக்கு சரியாக மாநாடு தொடங்கும். முதலில் சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்றுவார்கள். இதைத் தொடர்ந்து கட்சி தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கொள்கை அறிக்கையாக வெளியிடப்படும். இதையடுத்து நடிகர் விஜய் சிறப்புரையாற்றுவார். இரவு 8 மணி அளவில் அவர் தனது பேச்சை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9 அல்லது 9.30 மணிக்கு மாநாடு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வெளியூர் தொண்டர்கள் அன்று இரவே பாதுகாப்புடன் ஊர் திரும்ப பொறுப்பாளர்கள் முன் நின்று பணிகளை கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் விஜய் பேச்சை கேட்பதற்காக கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமூகவலை தளங்களில் விஜய் கட்சி மாநாடு பற்றிய தகவல்கள் வைரலாக பரவி டிரெண்டிங்காக உள்ளது. அரசியல் கட்சி தொடங்கி விஜய் நடத்தும் முதல் அரசியல் மாநாடு அனைத்து தரப்பினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    • மயிலம் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • மறியல் போராட்டம் காரணமாக அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே அவ்வையார்குப்பம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் முறையாக வழங்காததால் இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக திண்டிவனத்திற்கு சென்றுக் கொண்டிருந்த அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைப்பிடித்து பஸ் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது மயிலம் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணமாக அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் பல்வேறு பணிகளுக்காக சென்ற பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பஸ்சில் சிக்கி தவித்தனர். 

    • மாநாட்டு திடலில் 900 கொடி கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
    • போலீசார் மட்டும் அவ்வப்போது மாநாட்டு திடலினுள் சென்று பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது

    மாநாட்டிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாடுகளில் ஒப்பந்ததாரர்கள் பம்பரமாக சுழன்று இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். நேற்று மாநாட்டு முகப்பு வாயிலில் இருந்து மாநாட்டு திடல் வரை வழியில் இருபுறமும் 35 அடி உயரத்தில் 500 கொடி கம்பங்கள் நட்டு அதில் 15 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட வெல்வெட் துணியிலான கட்சி கொடியை பறக்க விட்டுள்ளனர்.

    இதேபோன்று, மாநாட்டு திடலில் 900 கொடி கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. மாநாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். மாநாட்டு பணிகளை பார்வையிட வரும் கட்சி மற்றும் தொண்டர்கள் பொதுமக்களை நுழைவு வாயிலில் உள்ள தனியார் நிறுவன பவுன்சர்கள், உள்ளே விட மறுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். போலீசார் மட்டும் அவ்வப்போது மாநாட்டு திடலினுள் சென்று பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையோரம் மாநாடு நடத்த அனுமதியும், சாலை பாதுகாப்பு மேம்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்க வேண்டி கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், 'நகாய்' திட்ட இயக்குனர் வரதராஜனிடம் கேட்டுக் கொண்டார். அதன்பேரில், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை டோல்பிளாசா மேலாளர் சதீஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தண்டபாணி, பாதுகாப்பு மேலாளர் மனோஜ்குமார் ஆகியோர் நேற்று மாநாட்டு திடலை பார்வையிட்டு சென்றனர்.

    இந்நிலையில், நேற்று இரவு விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க், டி.ஐ.ஜி., திஷா மித்தல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு தீபக்சிவாச், கடலுார் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி, விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி.க்கள் திருமால், தினகரன் மற்றும் டி.எஸ்.பி.க்கள் பங்கேற்றனர். த.வெ.க., மாநாட்டிற்கான இடவசதிகள், பார்க்கிங் வசதிகள், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில், கூட்டத்தை கண்காணித்தல், நெரிசல் ஏற்பட்டால், மாநாடு தொடங்கியதும் தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம், திண்டிவனத்தில் வாகனங்களை திருப்பி, மாற்று சாலையில் அனுப்புவது போன்றவை குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார்.
    • சீமான் என்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக பூபாலன் கூறியிருந்தார்

    நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினர்.

    நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார்.

    நாம் தமிழரில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. என்னுடைய இஷ்டப்படித்தான் நான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என சீமான் என்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக பூபாலன் கூறியிருந்தார்

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் விலகுவதாக அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 2 மாவட்ட பொறுப்பாளர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாநாட்டு திடலை முழுமையாக கண்காணிக்க 500-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
    • வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை மாநாட்டு திடலுக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.

    விக்கிரவாண்டி:

    திரைப்பட முன்னணி நடிகர் விஜய், அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயரிட்டுள்ள அவர், தனது முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் வருகிற 27-ந்தேதி பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    85 ஏக்கர் மாநாட்டு திடலில் மேடை 60 அடி அகலத்திலும், 170 அடி நீளத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டிற்கு வரும் கட்சி தலைவர் விஜய், முதலில் 100 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றுகிறார். பின்னர் அவர், அங்கிருந்து மாநாட்டு மேடைக்கு செல்லும் வகையில் 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களை விஜய் சந்திப்பதற்காக 800 மீட்டர் நீளத்திற்கு ரேம்ப் வாக் செல்கிறார். இதற்காக ரேம்ப் வாக் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மாநாடு நடைபெறும் இடத்தை இரவிலும் பகல்போல் காட்சி அளிக்கும் வகையில் 937 கம்பங்கள் நடப்பட்டு, அதில் 15 ஆயிரம் மின்விளக்குகள் அமைக்கப்படுகிறது. இந்த மின் விளக்குகள் ஒரே நேரத்தில் ஒளிரும் பட்சத்தில் மாநாட்டு திடலை இரவு நேரத்திலும் பகலாக்கி விடும்.

    மாநாட்டு திடலை முழுமையாக கண்காணிக்க 500-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்படுகிறது. மாநாட்டுக்குள் நுழைய 5 வழிகளும், மாநாட்டில் இருந்து வெளியேறுவதற்கு 15 வழிகளும் அமைக்கப்படுகிறது. தொண்டர்களின் வசதிக்காக 350 மொபைல் கழிவறைகள் அமைக்க எற்பாடு நடைபெற்று வருகிறது.

    மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள், தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக 207 ஏக்கர் இடம் தயார் நிலையில் இருக்கிறது. மாநாட்டு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

    வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை மாநாட்டு திடலுக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.

    • அரசு பள்ளிகளுக்கு வார விடுமுறை விடுக்கப்பட்ட நிலையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கனமழை பெய்து வருவதை அடுத்து புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 2 நாளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு பள்ளிகளுக்கு வார விடுமுறை விடுக்கப்பட்ட நிலையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழை பெய்து வருவதை அடுத்து புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தி பேசியதாக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது.
    • விக்கிரவாண்டி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    விக்கிரவாண்டி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விக்கிரவாண்டி கோர்ட்டில் சீமான் இன்று ஆஜரானார்.

    கடந்த 2019-ம்ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர்போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தி பேசியதாக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து சீமான் நீதிமன்றத்தில் ஆஜரானார். 

    ×