என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilaga Vetri Kazhaga Conference"

    • வாகனங்கள் விக்கிரவாண்டியை நோக்கி படையெடுத்து செல்கின்றது.
    • இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டன.

    விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று பிரமாண்டமாக நடைபெறும் விஜய் கட்சி மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தமிழக வெற்றிக்கழக கட்சி தொண்டர்கள் அதிகாலை முதல் வாகனங்களில் அணிவகுத்த வண்ணம் உள்ளனர்.

    சென்னை- விக்கிரவாண்டி ஜி.எஸ்.டி ரோட்டில் விஜய் கட்சி கொடி கட்டிய கார்கள், பஸ்கள், வேன்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் விக்கிரவாண்டியை நோக்கி படையெடுத்து செல்கின்றது.

    இதன் காரணமாக விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, ஓங்கூர் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்படலாம் என கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டன.

    விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் த.வெ.க. கட்சி வாகனங்கள் செல்ல தடுப்புகளை அகற்றி தனி வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் சென்று வருகின்றன.

    • வாகனங்களை நிறுத்தி செல்பி எடுத்து செல்கின்றனர்.
    • குழந்தைகளுடன் ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து பார்வையிட்டனர்.

    மாநாடு நடைபெறும் வி சாலை பகுதி தமிழகம் முழுவதும் பிரபலமான இடமாக தற்போது உருவெடுத் துள்ளது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் பலர் மாநாடு திடல் அருகே வாகனங்களை நிறுத்தி சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு செல்பி எடுத்து செல்கின்றனர்.

    இதுபோன்று நேற்று இரவு மின் ஒளியில் ஜொலித்த மாநாடு திடலை பார்ப்பதற்காக குடும்பத்துடன் குழந்தைகளுடன் ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து பார்வையிட்டனர்.

    சொகுசு வாகனங்களிலும் மோட்டார் சைக்கிளிலும் மேலும் அருகில் உள்ள கிராம வாசிகள் சைக்கிள்களிலும் வந்து மாநாட்டு திடலை பார்த்து சென்றதால் சுற்றுலா தலம் போல் காட்சியளித்தது விக்கிரவாண்டி சாலை.

    • கையேந்தி பவன் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • ஓட்டல்களில் உணவு வகைகளும் சீக்கிரமாகவே விற்று தீர்ந்தன.

    விக்கிரவாண்டியில் நடைபெறும் த.வெ.க. மாநாட்டுக்கு வந்த தொண் டர்கள் மற்றும் நிர்வாகி களால் திண்டிவனத்தில் இருந்து விக்கிரவாண்டி சாலை வரையில் உள்ள அனைத்து ஓட்டல்களும் நிரம்பி வழிந்தன.

    மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி உள்ள பெரிய ஓட்டல்கள் முதல் சிறிய ஓட்டல்கள் வரை அனைத்திலுமே கட்சி தொண்டர்கள் காலை, மதியம் என உணவை சாப்பிடுவதற்கு அலைமோதினார்கள். இதன் காரணமாக சாலை யோரம் உள்ள கையேந்தி பவன் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    காலை உணவாக இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளை தொண்டர்கள் வாங்கி சாப்பிட்டதால் ஓட்டல்களில் உணவு வகைகளும் சீக்கிரமாகவே விற்று தீர்ந்தன.

    மேலும் பலர் உணவுகள் கிடைக்காமல் திணறிவந்தனர். ஆனால் மாநாட்டில் இரவுநேர உணவுகளுக்கு மட்டுமே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    த.வெ.க. மாநாட்டுக்கு வந்திருப்பவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற் காக 4 இடங்களில் பார்க் கிங் வசதி செய்யப்பட்டு இருந்தது.

    மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள கீரைக் கொண்டை என்ற இடத்தில் 120 ஏக்கர் நிலப்பரப்பில் வாகனங்களை நிறுத்த பெரிய பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது.

    இது தவிர 80 ஏக்கரில் ஒரு இடம், 37 ஏக்கரில் ஒரு இடம், 40 ஏக்கரில் இன்னொரு இடம் என மொத் தம் 4 இடங்களில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த வாகன நிறுத்தும் இடங்கள் அனைத்தும் கார், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களால் நிரம்பி வழிந்தது.

    வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களில் டயர் பஞ்சரானால் அதனை சரி செய்வதற்காக மெக்கானிக்குகளும் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

    ×