என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • ரெயில் வழித்தடத்தில், ரெயில் மெதுவாக சென்றபோது இளைஞர்கள் கீழே குதித்துள்ளனர்.
    • இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், த.வெ.க மாநாட்டு மேடையின் பின்புறம் ரெயில் வழித்தடத்தில், ரெயில் மெதுவாக சென்றபோது இளைஞர்கள் கீழே குதித்துள்ளனர்.

    இளைஞர்கள், தவெக மாநாட்டு பந்தலை பார்த்த உற்சாகத்தில் கீழே குதித்தாக தகவல் வெளியானது. மேலும், இவர்களில் மாநாட்டுக்காக சென்ற நிதிஷ்குமார் என்பவர் உயிரிழந்ததாகவும், மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

    ஆனால், புதுக்கோட்டையை சேர்ந்த நித்திஷ் என்பவர் சொந்த ஊருக்கு சென்றுக் கொண்டிருந்தபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார் என்றும் அவர் உயிரிழக்கவில்லை, தற்போது முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.

    • விஐபி சேர்கள், மகளிருக்கான இருக்கைகளையும் ஆண் தொண்டர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    மாநாட்டு திடலில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால், 10 மணிக்கு மேல் திடலுக்குள் அனுமதிக்கப்பட இருந்த நிலையில், முன்கூட்டியே தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    அப்போது, தவெக திடலில் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். இதில், கடைசி 4 வரிசையில் இருந்த சேர்கள் உடைக்கப்பட்டுள்ளன.

    விஐபி சேர்கள், மகளிருக்கான இருக்கைகளையும் ஆண் தொண்டர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

    இந்நிலையில் தவெக மாநாட்டில் அனுமதியின்றி நுழைந்த தொண்டர்களை பவுன்சர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

    • மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
    • டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    இந்நிலையில், த.வெ.க மாநாட்டையொட்டி, விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பல்லாயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    வழக்கமாக 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில், இன்று திறக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

    • ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கொள்கைரீதியான அரசியல் களத்தில் முக்கிய பங்காற்றிட விஜய்யின் இந்த மாநாடு வெற்றி பெற வேண்டும்.

    பெரியார், காமராஜர் வேலுநாச்சியார் உள்ளிட்டோரின் படங்களை வைத்து தமிழ் மக்களின் பொது மனநிலையை விஜய் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் என்று அவர் கூறினார்.

    • மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
    • மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாயைில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

    இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது.

    மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் இடம் பெற்றுள்ளது. அவர்களுக்கு பின்னால் தலைமைச்செயலகம் இடம் பெற்றுள்ளது.

    விஜய் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப்போகிறார் என்று பலரும் கேள்விகளை அவரை நோக்கி வீசி வந்த சூழலில், மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

    மாநாட்டு திடலில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால், 10 மணிக்கு மேல் திடலுக்குள் அனுமதிக்கப்பட இருந்த நிலையில், முன்கூட்டியே தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • நாளை காலை 11 மணி முதல் மாநாட்டு திடலுக்குள் பொது மக்களுக்கு அனுமதி.
    • தவெக மாநாட்டுத் திடலில் ஆங்காங்கே QR CODE வைக்கப்படுகிறது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டு திடலுக்கு கட்சியின் தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.

    விஜய், இன்று மாலை 6 மணியளவில் விஜய் மாநாட்டு திடலுக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    மாநாடு திடல் பகுதியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடு குறித்து விஜய் ஆய்வு செய்துள்ளார்.

    கேரவனில் பொதுச் செயலாளர் ஆனந்துடன் மற்றும் மாநாடு குழுவினருடன் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், நாளை காலை 11 மணி முதல் மாநாட்டு திடலுக்குள் பொது மக்களுக்கு அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தவெக மாநாட்டில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் என்பதை கண்டறிய விஜய் புது வியூகம் வகுத்துள்ளார்.

    தவெக மாநாட்டுத் திடலில் ஆங்காங்கே QR CODE வைக்கப்படுகிறது.

    மாநாட்டிற்கு வரும் தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் அதனை ஸ்கேன் செய்து, வருகை பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை விக்கிரவாண்டியில் நடக்கிறது.
    • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்காக இன்று இரவே விக்கிரவாண்டிக்கு கட்சி தலைவர் விஜய் வருகிறார்.

    நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடக்கிறது.

    இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு திடல் முன்பு சாலையோரம் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்காக இன்று இரவே விக்கிரவாண்டிக்கு கட்சி தலைவர் விஜய் வருகிறார்.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு வருகை தருவோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டிற்கு வருவோர், மற்ற அரசியல் கட்சிகளின் கொடிகள், பேனர்களை எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளது.

    செல்பி ஸ்டிக் பயன்படுத்த கூடாது. வீடியோ, பிளாஷ் பயன்படுத்தி போட்டோ எடுக்க அனுமதி இல்லை.

    தொண்டர்கள் மது அருந்திவிட்டு வருகை தரக்கூடாது, சட்டவிரோத பொருட்களை கொண்டு வரக் கூடாது.

    • சென்னையில் இருந்து செல்லும் வாகனங்கள் திண்டிவனத்தில் மாற்றி விடப்படுகின்றன.
    • திருச்சியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் செஞ்சி அருகே மாற்றிவிடப்பட உள்ளன.

    தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நாளை விழுப்புரம் வி.சாலையில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டையொட்டி, சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்களுக்கு பாதை மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம், வி.சாலை நெடுஞ்சாலையில் சாதாரணமாகவே லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மாநாடு முன்னிட்டு கூடுதலாக 3 லட்சத்திற்கும் மேல் வாகனங்கள் வரும் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட  வாய்ப்பு உள்ளது.

    மாநாட்டு மேடை பகுதி முக்கிய சாலையை ஒட்டி அமைந்து இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால், மாநாடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஜீரோ டிராபிக் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஜீரோ டிராபிக் என்றால் வெளி வாகனங்களுக்கு அனுமதி இல்லை. தவெக மாநாட்டிற்கு தொடர்புடைய வாகனங்களுக்கு மட்டுமே அனுமது வழங்கப்படும்.

    மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை- திருச்சி செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து செல்லும் வாகனங்கள் திண்டிவனத்தில் மாற்றிவிடப்படுகின்றன.

    திருச்சியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் செஞ்சி அருகே மாற்றிவிடப்பட உள்ளன. போக்குவரத்து மாற்றம் காரணமாக 15 முதல் 20 கி.மீ தூரம் வரை பயண நேரம் அதிகமாகலாம் எனவும் கூறப்படுகிறது.

    • 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடக்கிறது.

    இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கான இறுதிக்கட்ட பணி விக்கிரவாண்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மாநாட்டிற்கு வரும்போது ரோடு ஷோ நடத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் ரோடு ஷோ நடத்த வேண்டாம் என தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத.

    மேலும், தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி சென்றுவிட்டு அங்கிருந்து மாநாட்டு வர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    • தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • விஜய் தங்குவதற்கு ஏற்ப விஐபி ரூம் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடக்கிறது.

    இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கான இறுதிக்கட்ட பணி விக்கிரவாண்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    முதல் முறையாக மக்கள் மத்தியில் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு மக்கள் மத்தியில் நேரடியாக அவரை பார்க்கும் ஆர்வமும், அவரது பேச்சை கேட்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு திடலுக்கு இன்றுரவு கட்சி தலைவர் விஜய் வர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் வாடகை வீட்டில் தங்க இருப்பதாகவும், அந்த வீட்டிற்கு நிர்வாகிகள் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இரவு வந்து மாநாட்டின் பணிகளை கண்காணிக்க உள்ளதாகவும் தகல் வெளியாகியுள்ளது. மேஞம், விஜய், மாநாடு திடலுக்கு உள்ளே தங்குவதற்கு ஏற்ப கேரவன்கள் கொண்டுவதரப்பட்டுள்ளது.

    தங்கும் இடத்தில் இருந்து கேரவன் மூலம் மாநாடு திடலுக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • நாளை மாலை 3 மணி அளவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
    • வரவேற்புரை முடிந்ததும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாடு பற்றிய விளக்க உரையாற்றுகிறார்.

    விக்கிரவாண்டி:

    நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடக்கிறது.

    இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு

    உள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    முதல் முறையாக மக்கள் மத்தியில் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு மக்கள் மத்தியில் நேரடியாக அவரை பார்க்கும் ஆர்வமும், அவரது பேச்சை கேட்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.

    ஆனால் அவர் இதுவரை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவது போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். இவை அனைத்தும் அரங்க நிகழ்ச்சிகளால் நடந்து இருக்கிறது.

    இப்போதுதான் முதல் முறையாக பொதுமக்கள் மத்தியில் விஜய் உரையாற்றப்போகிறார். எனவே இந்த மாநாடு மற்றும் அவரது பேச்சு பற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே தனது கட்சியின் கொள்கைகள், கட்சி கொடியின் நிறம் பற்றிய விளக்கம் மற்றும் எதிர்கால செயல்திட்டம், 2026 தேர்தல் பற்றியும் அறிவிக்கப்போவதாக கூறி உள்ளார். எனவே நாளை அவர் அறிவிக்கப்போவதுதான் கட்சியை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்து செல்லும் என்பதால் பொதுமக்களையும், பல்வேறு அரசியல் கட்சியினரையும் உற்றுநோக்க வைத்துள்ளது.

    நாளை காலையில் இருந்தே தொண்டர்கள் வந்து குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விக்கிரவாண்டியில் கடுமையான வெயில் அடிப்பதால் தாராளமாக குடி தண்ணீர் அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நாளை மாலை 3 மணி அளவில் மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    மாலை 4 மணியளவில் மாநாட்டு திடல் முன்பு தங்கியிருக்கும் வீட்டில் இருந்து விஜய் தனிப்பாதை வழியாக மாநாட்டு மேடைக்கு அழைத்து வரப்படுகிறார். அப்போது மேடையில் கட்சி பாடல் ஒலிபரப்பப்படுகிறது.

    மேடைக்கு வந்ததும் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். இதையடுத்து மாநாடு தொடங்குகிறது. வரவேற்புரை முடிந்ததும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாடு பற்றிய விளக்க உரையாற்றுகிறார்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சிறப்புரையாற்ற உள்ளார். அவரது உரை மாநாட்டு எழுச்சி உரையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சுமார் ஒரு மணி நேரம் பேசுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விஜய் பேச்சின் போது முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் தமிழக வெற்றிக் கழக முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். முக்கிய அறிவிப்புகளுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், எதிர்கால லட்சியங்கள், திட்டங்களையும் விஜய் தொண்டர்களிடம் விளக்கமாக எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விஜய்யின் பேச்சை தொண்டர்கள் முழுமையாக கேட்க வேண்டும் என்பதற்காக மாநாட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாநாட்டின் கடைசி வரிசையில் இருப்பவர்களுக்கும் அவரது பேச்சு கேட்க வேண்டும் என்பதற்காக 175 அடி அகலத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    அதேநேரம் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களும் தன்னை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காக மேடையின் முன்பு இருந்து மக்கள் கூட்டத்தின் நடுவில் 800 மீட்டர் தூரத்துக்கு பிரத்யேக நடைமேடை அமைக்கப்பட்டுஉள்ளது.

    அந்த நடைமேடையில் நடந்தபடியும் அவர் பேச ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. அப்போது அவர் மீது லேசர் ஒளிக்கற்றைகள் விழவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

    • மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பாக அழைத்து அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பெண்கள் வீட்டில் எவ்வளவு பாதுகாப்பாக இருப்பார்களோ அதைவிட இந்த மாநாட்டு திடலில் பாதுகாப்பை அளிப்போம்.

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி, முதல் மாநாட்டை அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    மாநாட்டின் பாதுகாப்பு மேலாண்மை குழு கூறுகையில்,

    * பெண்களுக்கு என்று தனியாக ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

    * மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பாக அழைத்து அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    * பார்க்கிங் வசதி செய்துள்ளோம். எவ்வளவு வாகனங்கள் வந்தாலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்க்கிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    * ஒரு லட்சம் பேருக்கு மேல் வந்தாலும் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான உணவுகள் தயார் செய்யப்படுகிறது.

    * மகளிருக்கான பாதுகாப்பிற்கு மகளிர் அணியை சேர்ந்தவர்களை வைத்தே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    * பெண்கள் வீட்டில் எவ்வளவு பாதுகாப்பாக இருப்பார்களோ அதைவிட இந்த மாநாட்டு திடலில் பாதுகாப்பை அளிப்போம் என்று தெரிவித்தனர்.

    இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் விக்கிரவாண்டியில் உள்ள அச்சுத ஆஞ்சநேயர் ஆலயத்தில் வழிபாடு செய்தார்.

    ×