என் மலர்tooltip icon

    வேலூர்

    • காளை மாடுகள் சன்டையிட்டதால் வாக்குவாதம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அம்பானி நகரை சேர்ந்தவர் இணையதுல்லா. இவர் காளை மாடு ஒன்னறை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் இணையதுல்லா தனது காளை மாட்டை ரங்கநாதர் நகரில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று கட்டி வைத்தார்.

    அப்போது இணைய துல்லா காளை மாடும், பக்கத்து நிலத்தில் கட்டி வைத்திருந்த கோபு (வயது 51) என்பவரின் காளை மாடும் ஒன்றுடன் ஒன்று சன்டை யிட்டது.

    இது தொடர்பாக இணையதுல்லா, கோபு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது கோபு, இணையதுல்லாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து இணையதுல்லா பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபுவை கைது செய்தனர்.

    • சாலையை கடந்த போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி, கிளித்தான் பட்டறை அருகே உள்ள வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் தனுஷ் (வயது 17).

    இவர் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் கிளித்தான் பட்டறை அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    காட்பாடி எல்.ஜி.புதூரை சேர்ந்த கதிரவன் (19). என்பவர் பைக்கில் வேகமாக வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கதிரவன் ஓட்டி வந்த பைக் தனுஷ் மீது மோதியது.

    இதில் தனுஷ் மற்றும் கதிரவன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் தனுஷ் பரிதாபமாக இறந்தார்.

    சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கதிரவனும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பைக் மோதியதில் பள்ளி மாணவனும் வாலிபரும் இறந்த சம்பவம் காட்பாடியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • உணவு சரியாக வழங்கப்படுகிறதா? என மாணவர்களிடம் கேட்டறிந்தார்
    • ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு செய்த போது சந்தோஷமாக உள்ளது என்றார்

    வேலூர்:

    வேலூர்மாவட்டம், காட்பாடி அடுத்த வஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் ஜாப்ரா பேட்டை நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் செயல்ப டுத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் திடீரென ஆய்வு செய்தார்.

    மேலும் மாணவர்களுக்கு வழங்கபடும் உணவை ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். காலை உணவு சரியாக வழங்கப்படுகிறதா? நன்றாக இருக்கிறதா? என மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் கதிர்ஆனந்த் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்- அமைச்சரால் காலை உணவு திட்டம் மாநகராட்சி பள்ளி களில் தொடங்கப்பட்டு அதனை கிராமப்புற பள்ளி களிலும் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு செய்த போது சந்தோஷமாக உள்ளது. மாணவர்களிடம் கேட்கும் போதெல்லாம் மகிழ்ச்சியாக உள்ளது. காலை உணவு திட்டம் தொடங்கபட்ட பின்னர் தலைமை ஆசிரி யர்களும், மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவது தவிர்க்கபடுகிறது.

    மாணவர்கள் வருகையும் உயர்ந்துள்ளது. உதயசூ ரியனை கைகளால் மறைக்க முடியாது. முதல்வரின் திட்டங்கள் எல்லா தரப்பு மக்களிடத்திலும் மீண்டும், மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை நிலைநாட்டுகிறது.

    முதல்வர் என் கடன் பணி செய்கிடப்பதே என்ற வகையில் செயல்பட்டு வருகிறார். இந்தியாவிற்கு எடுத்துகாட்டாக இந்த திட்டம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 5-ந்தேதி கடைசி நாள்
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    கலெக்டர் குமாரவேல்பாண் டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் பழங்குடி யினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல், உயர்,நடு நிலை, தொடக்கப்பள்ளிக ளில் காலியாக உள்ள ஆசி ரியர் பணியிடங்களில் முற்றிலும் தற்காலிக நிய மிக்கப்பட உள்ளது.

    காலிப்பணியிடங் களை தற்காலிகமாக நிரப்பிடும் போது பழங் குடியினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், மற்றும் பழங்குடி யினர் இல்லாதபட்சத்தில் ஆதி திராவிடர் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கலாம்.

    பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பிடும் பணியிடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த பணிநாடுநர் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசி ரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி பெற்ற வர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்விதிட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக் க்கும் முன்னுரிமை வழங்கப்ப டும்.

    அல்லேரி, தொங்கு மலை, குடிகம் ஆகிய பகு திகளில் உள்ள தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தற் போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றபட வேண்டும்.

    முன்னுரிமை ஒரு காலிப்பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வர்கள் விண்ணப்பிக்கும் போது பின்வரும் முன் னுரிமைப்படி பரிசீலிக்க வேண்டும்.

    வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசி ரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத் தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் (இல்லையெனில்) வரைய றுக்கப்பட்ட கல்வி தகுதி களுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்ற வர்கள்.

    இடைநிலை ஆசிரி யர்கள் நியமனத்தில் பட் டியலினத்தவருக்கு முன் னுரிமையும் கடைபிடிக்க வேண்டும். பள்ளி அமைந் துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்ப டும்.

    விண்ணப்பதாரர்க ளிடமிருந்து எழுத்து மூல மான விண்ணப்பங்கள் நேரடியாகவே அல்லது அஞ்சல் மூலமாக உரிய கல்வித்தகுதி சான்றுகளு டன் மாவட்ட ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வருகிற 5-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • சமூக வலைதளங்களில் உள்ள அவரது பேச்சை நீக்க வேண்டும்

    வேலூர்:

    முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதாவை பொது மேடையில் அவதூறாக பேசியதாக கூறி அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார் தலைமையில் வேலூர் எஸ்.பி அலுவ லகத்தில் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் ஐ லியோனி சென்னையில் பொது மேடையில் வெறுப்பு ணர்வை தூண்டும் விதமாகவும் இரு பிரிவின ருடைய மோதல் உருவாகும் விதமாகவும் பெண்மைக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவும் பேசி உள்ளார்.

    அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதேபோல் அவருடைய யூடியூப் சேனலிலும் வெளியிடப்பட்டுள்ளது எனவே ஐ.லியோனி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் உள்ள அவரது பேச்சை நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    அவருடன் வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, பொருளாளர் மூர்த்தி, தகவல் ெதாழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலர் ராஜன் மற்றும் திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு
    • புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பொண்ணுபாண்டி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருநாவுக்கரசு, பழனி, ராமமூர்த்தி உள்ளிட்ட போலீசார் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசியதாவது:-

    மாணவர்கள் பஸ் படிக்கட்டில் செய்வதால் அதிக விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதனை தடுக்க பள்ளி நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் அரசு பஸ்களை இயக்க வேண்டும்.

    படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதை தட்டி கேட்கும் போது, டிரைவர், கண்டக்டர்களுடன் மாணவர்கள் தகராறில் ஈடுபடுகின்றனர். அது குறித்து உடனடியாக டிரைவர்கள் போலீசில் புகார் செய்ய வேண்டும்.

    மாணவர்கள் பஸ்சில் அதிகம் ஏறும் இடங்களான வேலூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், காட்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா, பாகாயம், தொரப்பாடி, ஒடுகத்தூர் உள்ளிட்ட இடங்களில் கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பள்ளிகள், பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் குறிப்பிட்ட நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக சேரும்போது செல்போன் பறிப்பு, நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கிறது.

    அதனை தடுக்க போலீசார் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் அடிக்கடி தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பஸ் உரிமையாளர்கள் பேசுகையில்:-

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மொத்தம் 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    அதில் ஒரு கேமரா கூட தற்போது வேலை செய்யவில்லை. பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோக்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை தடுக்க போலீசார் ஆட்டோக்களை முறைப்படுத்த வேண்டும்.

    ஆந்திரா மற்றும் சித்தூரில் இருந்து வரும் பஸ்கள் கிரீன் சர்கிள் வழியாக வந்து முத்து மண்டபம் அருகே உள்ள நுழைவாயில் வழியாக புதிய பஸ் நிலையத்திற்குள் செல்ல வேண்டும்.

    ஆனால் அந்த பஸ்கள் செல்லியம்மன் கோவில் வழியாக எதிர் திசையில் வந்து பஸ் நிலையத்திற்குள் நுழைகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுகிறது என குற்றம் சாட்டினர்.

    இதற்கு பதில் அளித்த போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று கூறினார்.

    • கும்கியாக மாற்ற ஆலோசனை
    • கூட்டத்தை இழந்து தனியாக சுற்றி திரிந்ததால் ஆக்ரோஷமாக காணப்பட்டது

    வேலூர்:

    ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், குடிபாலா மண்டலம், 190 ராமாபுரம் ஹரிஜன வாடா கிராமத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உள்பட 3 பேரை ஒற்றை காட்டு யானை மிதித்துக் கொன்றது.

    தகவல் அறிந்து அங்கு சென்ற ஆந்திர வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். இதனை அடுத்து யானை நேற்று முன்தினம் ஆந்திரா எல்லைப் பகுதியை கடந்து தமிழக எல்லைப் பகுதிக்குள் புகுந்தது. வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள மகிமண்டலம் வன பகுதியில் சுற்றி திரிந்தது.

    காட்பாடி அடுத்த மகிமண்டலம் அருகே உள்ள பெரியபோடிநத்தம் கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானை அங்குள்ள சூளைமேட்டு பகுதியில் பாலகிருஷ்ணன் (வயது 60) என்ற விவசாயின் கொட்டகைக்குள் புகுந்து ஆடுகளை தும்பிக்கையால் தாக்கி வீசியது.

    இதில் ஆடுகள் மற்றும் மாடுகள் யானையை கண்டு பயத்தில் கத்தியது. சத்தம் கேட்டு வெளியே வந்த பாலகிருஷ்ணன் மனைவி வசந்தா (54) என்பவரை மிதித்து கொன்றது.

    தொடர்ந்து, வேலூர் மாவட்ட வன அலுவலர் கலாநிதி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதில் அந்த யானை தமிழக வனப்பகுதியில் இருந்து தப்பித்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராமாபுரம் ஏரி பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் பதுங்கியது.

    இரு மாநில வனக்குழுவினர் 100 பேர், ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்ட கும்கி யானைகளான ஜெயந்த், விநாயகா ஆகிய 2 யானைகள் மூலம், அட்டகாசம் செய்த ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    நேற்று மாலை 3 மணியளவில் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மழைபெய்து வந்ததால், மாலை 4.30 மணியளவில் மற்றொரு மயக்க ஊசி செலுத்தி, கும்கியானைகள் மூலம் யானை பிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து சித்தூர்மாவட்டம் பலமனேர் பகுதியில் உள்ள யானைகள் முகாமிற்கு லாரி மூலம் பிடிபட்ட யானையை கொண்டு சென்றனர். பின்னர் யானை திருப்பதி வன உயிரின பூங்காவில் விடப்பட்டது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பதி வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் யானை உடல்நிலை குறித்து டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். தனது கூட்டத்தை இழந்து தனியாக சுற்றி திரிந்ததாலே அது ஆக்ரோஷமாக காணப்பட்டது. அதனுடன் தற்போது மற்ற யானைகள் இருப்பதால் ஆக்ரோஷம் குறைந்து அமைதியாக காணப்படுகிறது.

    இருப்பினும் அதன் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அதனை கும்கி யானையாக மாற்றவும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அதிகாரிகளின் ஆலோசனைக்கு பிறகு கும்கி யானையாக மாற்ற, ஒற்றை யானைக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மண்சாலையும் மழை நீரில் அடித்து சென்றது
    • வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்திமரத்துகொல்லை மற்றும் ஆட்டுகொந்தரை மலை கிராமங்களில் 14 வயது சிறுமி தனுஷ்கா மற்றும் சங்கர் ஆகியோர் பாம்பு கடித்து இறந்தனர்.

    அல்லேரிமலைக்கு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி முதல்கட்டமாக அல்லேரி மலை பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 3.2எக்டர் நிலத்தினை 6.4 எக்டர் அளவிற்கு வருவாய் துறை மூலம் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது.

    தார்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வருவாய் துறை சார்பில் அல்லேரியில் வழங்கப்பட்ட இடம் எங்களுக்கு வேண்டாம் என கூறினர்.

    அப்போது வழங்கப்பட்டுள்ள இடம் பெரிய பாறைகள் மற்றும் ஓடைகளும் இருப்பதால் அதனை நாங்கள் எளிதில் பயன்படுத்த முடியாது. எனவே பேரணாம்பட்டு அல்லது வேலூர் சரகத்திற்குட்பட்ட எல்லையில் சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும் எனக்கூறினர்.

    இதனால் சாலை அமைப்பதற்கு வனத்துறை சார்பில் அளிக்கப்படும் தடையில்லா சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வனத்துைறக்கும் இடம் வழங்கும் பணியை விரைந்து முடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி வருவாய்துறை அதிகாரிகள், வனத்துறை யினருக்கு இடம் வழங்க வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள மலையை தேர்வு செய்து. அதன்படி வருவாய்துறை மற்றும் வனத்துறையினர் காகிதப்பட்டறை மலைப்பகுதியை ஆய்வு செய்தனர்.

    இதனை தொடர்ந்து அளவிடும் பணிகள் முடிந்து வனத்துறைக்கு இடத்தினை வழங்கினர். இதன்பின் வனத்துறை அதிகாரி மற்றும் கலெக்டர் கடந்த மாதம் நடந்தே மலைப்பகுதிக்கு சென்று சாலை அமைய உள்ள இடத்தினை ஆய்வு செய்தனர்.

    கடந்த 4 மாதங்களாக நடந்துவரும் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது மண் சாலைகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டதால் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

    பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் விழுந்து, காயங்களுடன் செல்வது தொடர்கதையாக நடக்கிறது. எனவே மலை கிராம மக்களின் நலன் கருதி மண் சாலையையாவது சீரமைத்து தர வேண்டும் என மலை வாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த தாமுவை தாயார் திட்டியதாக கூறப்படுகிறது.
    • மாணவன் உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த பெரிய பாலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார் முன்னாள் ராணுவ வீரர் இவரது மனைவி கீதா, மகன் தாமு (வயது 14). அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

    வசந்த் குமார் உயிரிழந்த நிலையில் தனது தாயுடன் வசித்து வந்தார். தாமு எந்நேரமும் செல்போன் மூலம் பிரீ பயர் கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் அவரது தாயார் தொடர்ந்து அவரை எச்சரித்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த தாமுவை தாயார் திட்டியதாக கூறப்படுகிறது.

    கோபித்துக் கொண்ட மாணவன் தாமு மொட்டை மாடிக்கு சென்றார். இரவு ஒரு மணி ஆகியும் மகன் வராததால் தாய் கீதா மாடிக்கு சென்று பார்த்தார்.

    அங்கு பிளேடால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் தாமு இறந்து கிடந்தான். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார்.

    வேலூர் தாலுகா போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திாக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மாணவன் உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவன் தாமு பொதுவாக யாரிடமும் பேசாமலும், பழகாமலும் பெரும்பாலான நேரம் தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் நன்றாக படிக்கக் கூடியவராகவும் இருந்துள்ளார்.

    அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    • கணவருடன் அடிக்கடி தகராறு
    • போலீசார் விசாரணை

    வேலூர்,

    காட்பாடி அடுத்த மேல்பாடி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ரஞ்சனி. இவரது கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரஞ்சனி கடந்த 27-ந்தேதி தனக்குத்தானே மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சனி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குடியாத்தம் மேல்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஷம் குடித்து மயங்கி கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்,

    காட்பாடி அடுத்த கன்னிகாபுரம் விநாயகர் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 17).

    இந்த நிலையில் ராஜேஸ்வரி அடிக்கடி செல்போன் பார்த்து வந்தார்.

    இதனால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் ராஜேஸ்வரி மன உளைச்சலில் காணப்பட்டார்.

    கடந்த 28-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து ராஜேஸ்வரி மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட பெற்றோர் மயங்கி கிடந்த மகளை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மேல்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை
    • கால்வாயில் தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது


    வேலூர்,

    வேலூர் மக்கான் சிக்னல் அருகேயிருந்து புதிய பஸ் நிலையம் செல்லக்கூடிய சாலையின் இருபுறமும் கடைகளும், வணிக வளாகங்களும் அதிகமிருக்கின்றன.

    அருகிலேயே பழைய பஸ் நிலையம், சி.எம்.சி. மருத்துவமனை ஆகியவை இருப்பதாலும், இந்தப் பகுதி பரபரப்பாகவே காணப்படும்.

    அப்படிப்பட்ட சாலையையொட்டி நடை பாதை அமைக்கப்பட வில்லை. சாலையோ ரமிருக்கும் கழிவுநீர்க் கால்வாயும் தூர்வாரப்பட வில்லை.

    இதனால், கால்வாய் நிரம்பி, சாலையோரம் ஆங்காங்கே கழிவுநீர்க் குட்டைகளாக காட்சியளி க்கின்றன. கடை வைத்தி ருக்கும் வியாபாரிகள் பலரும் சாலைக்கும், கடைக்கும் இடைப்பட்ட கழிவுநீர்க் குட்டைகளை கடப்பதற்காக பெரிய பலகைகளைப் போட்டு வைத்திருக்கின்றனர்.

    சாலையோரம் ஆபத்தான முறையில் கழிவுநீர்க் கால்வாய் சிதில மடைந்து, கண்டு கொள்ளா மல் விடப்பட்டிருக்கிறது.

    அந்தப் பள்ளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொபட்டில் வந்த முதியவர் விழுந்தார். கால்வாய்க்குள் விழுந்த முதியவர் ஹெல்மட் அணிந்தி ருந்ததால், அவருக்கு பெரியளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை.

    ஹெல்மட் அணியாமல் இருந்திருந்தால், அவர் படுகாயமடைந்திருப்பார்.

    மழைக்காலம் நெருங்குவதால், நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.

    எனவே, மாநகராட்சி நிர்வாகம், இதுவரை மெத்தனமாக இருந்தது போதும். இனியாவது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கால்வாயைச் சீரமைத்து, நடைபாதை அமைத்து, பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து முதியவர் விழுந்த கால்வாயில் தடுப்பு சுவர் அமைக்கபடுகிறது. இதற்கான பணிகள் இன்று தொடங்கியது.

    ×