search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் மோதி பள்ளி மாணவன், வாலிபர் பலி
    X

    பைக் மோதி பள்ளி மாணவன், வாலிபர் பலி

    • சாலையை கடந்த போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி, கிளித்தான் பட்டறை அருகே உள்ள வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் தனுஷ் (வயது 17).

    இவர் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் கிளித்தான் பட்டறை அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    காட்பாடி எல்.ஜி.புதூரை சேர்ந்த கதிரவன் (19). என்பவர் பைக்கில் வேகமாக வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கதிரவன் ஓட்டி வந்த பைக் தனுஷ் மீது மோதியது.

    இதில் தனுஷ் மற்றும் கதிரவன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் தனுஷ் பரிதாபமாக இறந்தார்.

    சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கதிரவனும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பைக் மோதியதில் பள்ளி மாணவனும் வாலிபரும் இறந்த சம்பவம் காட்பாடியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×