என் மலர்
வேலூர்
- 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன
- மீன்களின் வரத்து அதிகரித்தது
வேலூர்:
வேலூர் மீன் மார்க் கெட்டுக்கு தமிழகத்தின் நாகப்பட்டினம், மங்களூரு, கோழிக்கோடு, கார்வார் போன்றஇடங்களில் இருந்து மீன் இறக்குமதி செய்யபடுகிறது.
வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடை பெறுகிறது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை சில்லறை விற்பனை நடக்கிறது.
இந்த நிலையில் வேலூர் மீன் மார்கெட்டில் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் மீன்களின் விலை யில் சரிவு காணப்பட்டது. அதன்படி, இன்று வஞ்சிரம் கிலோ ரூ.900 முதல் 1,200 வரையும், சின்ன வஞ்சிரம் ரூ.400 முதல் ரூ.500 வரையும் விற்றது. சீலா கிலோ ரூ.350, தேங்காய்பாறைகிலோ ரூ.450. இறால் கிலோ 350 முதல் ரூ.550 வரையும், நண்டு கிலோ ரூ.400 வரையும் விற்றது. சங்கரா ரூ.150 முதல் ரூ.300-க்கும், நெத்திலி 200-க்கும், கட்லா 120-க்கும், மத்தி ரூ.120-க்கும். மத்தி 7140, வவ்வால் ரூ.450க்கும், டேம்வவ் வால் ரூ.150க்கும், அயிலா ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் 4 லோடு மீன்களின் வரத்து அதிகரிப்பால், மீன்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ள தாக வியாபாரிகள் தெரி வித்தனர். விலை குறை வால் அசைவப்பிரியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
- 12 குற்ற வழக்குகள் உள்ளன
- குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
வேலூர்:
வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் பழனி (வயது 25). ரவுடியான இவர் கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரை தாக்கி ரூ.1,000 பறித்தார்.
இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து பழனியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தார்.
பழனி மீது வேலூர் வடக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு, ரத்தினகிரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 12 குற்ற வழக்குகள் உள்ளன.
தொடர்ந்து அவர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் அடைக்கும்படி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் குமாரவ ேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் பழனியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
- பொதுமக்கள் நீந்தி சென்ற அவலம்
- மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், கணியம்படி ஒன்றியத்துக்கு உட்பட்ட துத்திக்காடு ஊராட்சி, வெங்கலபாறை கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராம மக்களும் நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் முகப்பை அருகில் தான் ஆற்றை கடந்து தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர்.
மழைக்காலங்களில் ஆற்று நீரை கடந்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் நோயாளிகள் என அனைவரும் நஞ்சுண்டாபுரம் பஸ் நிறுத்தம் வந்து அங்கிருந்து மற்ற இடங்களுக்கு செல்கின்றனர்.
இவர்கள் நாகநதி, கணியம்பாடி மற்றும் நஞ்சுண்டாபுரம் செல்ல சுமார் 8 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வெங்கலப்பாறை கிராம மக்கள் ஆஞ்சநேயர் கோயில் முகப்பை அருகேதான் ஆற்றில் இறங்கி தண்ணீரை கடந்து சிமரத்துடன் செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை கணியம்பாடி, நஞ்சுண்டாபுரம், நாகநதி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. நாகநதி ஆற்றில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது கிராம மக்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நாகநதி ஆற்றை கடந்து சென்றனர். இதில் நஞ்சு கொண்டாபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வேலை செய்யும் பணியாளர் செல்வம் (வயது 56) நேற்று வழக்கு போல் வேலைக்கு வந்தார்.
வேலை முடிந்து மாலை 6 மணி அளவில் வீட்டுக்கு செல்ல ஆஞ்சநேயர் கோவில் முகப்பை அருகே சென்றார். ஆற்றில் இறங்க முடியாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் மழை நீர் குறையும் என அங்கேயே காத்திருந்தார். ஆற்றில் மழை வெள்ளம் குறையாததால் நேற்று இரவு 8 மணியளவில் அவர் தான் உடுத்திருந்த உடைமைகளை கழட்டி கையில் வைத்துக் கொண்டு, மார்பளவு தண்ணீரில் இறங்கி நீந்தி ஆற்றைக் கடந்து வீட்டுக்கு சென்றார்.
நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சி, மேதலபாடி கிராமத்தில் உயிரிழந்த கண்ணன் மற்றும் அவரது மனைவி ரேவதி ஆகியோர் உயிரிழந்தபோது அவரது உறவினர்கள் ஆற்று தண்ணீரில் இறங்கி உடலை தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகநதி ஆற்றை கடந்து செல்ல மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். நாகநதி ஆற்றைக் கடந்து செல்ல ஏதுவாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 343 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
- போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த சிறப்பு குறைதீர்வு முகாமில் 343 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நீண்ட நாட்கள் கிடப்பில் உள்ள வழக்குகளில் தீர்வு காண்பதற்காக வேலூர், காட்பாடி, குடியாத்தம் போலீஸ் உட்கோட்டங்களில் சிறப்பு குறைதீர்வு முகாம் நேற்று நடந்தது. வேலூர் உட்கோட்டத்துக்கான சிறப்பு குறைதீர்வு முகாம் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் நடந்தது.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பிரசன்னகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருநாவுக்கரசு, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமிற்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில்:-
வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள், வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு முகாம், போலீஸ் உயர்அதிகாரிகள் மற்றும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் வழங்கப்பட்டு நீண்டநாட்கள் தீர்வு காணப்படாமல் வழக்குகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வு காண்பதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வழக்கில் தொடர்புடைய இருதரப்பினரையும் வரவழைத்து அவர்களிடம் பேசி சுமூக தீர்வு காணப்படும். தீர்வு காணப்படாத வழக்குகளில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சிறப்பு முகாமில் ஒவ்வொரு போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்குகள் தொடர்பாக இருதரப்பினர் இடையேயும் அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டனர்.
வேலூர் உட்கோட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில் 119 வழக்குகள் விசாரணை நடத்தப்பட்டு, அதில் 80 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதேபோன்று காட்பாடி உட்கோட்டத்தில் 310 வழக்குகளில் 103 வழக்குகளும், குடியாத்தம் உட்கோட்டத்தில் 160 வழக்குகளில் 160 வழக்குகளும் என்று 3 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் 589 வழக்குகள் விசாரணை எடுத்து கொள்ளப்பட்டு 343 வழக்குகள் தீர்வு காணப்பட்டன என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 4 மணி நேரம் போராடி மீட்டனர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 19), கல்லூரி மாணவன். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரெட்டிமாங்குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார். ஏரியில் குளிக்கும்போது அஜித்குமார் திடீரென மூச்சுத்திணறி தண்ணீரில் மூழ்கினார். உடனே, அவரது நண்பர்கள் தண்ணீரில் தேடிப் பார்த்தும் அஜித்குமார் கிடைக்கவில்லை.
இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக, விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் ஏரியில் மூழ்கிய அஜித் குமாரின் சடலத்தை சுமார் 4 மணி நேரம் போராடி மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேல்பட்டி போலீசார் அஜித் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 12 மலை கிராம போக்குவரத்து துண்டிப்பு
- பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலைப்பகுதியில் பீஞ்சமந்தை, ஜார்த்தான்கொல்லை, பாலாம்பட்டு ஆகிய மலை ஊராட்சிகளில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மலை குக் கிராமங்கள் உள்ளன. இதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
பீஞ்சமந்தை மலை ஊராட்சியில் இருந்து பலாம்பட்டு மலை ஊராட்சிக்கு செல்லக்கூடிய சாலையில் தொங்குமலை பகுதியில் காட்டாற்று வெள்ளம் செல்லக்கூடிய ஆறு செல்கின்றது. இந்த ஆற்றை கடந்து தொங்குமலை, பாலாம்பட்டு, நெக்னி, தானிமரத்தூர், அரசமரத்தூர், தேக்குமரத்தூர் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செல்கின்றனர்.
மலைகளில் இருந்து மழைநீர் சிறு ஓடைகள் மூலம் ஆறாக உருவெடுத்து அமிர்தி வழியாக சென்று நாகநதி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றை கடந்து செல்வதற்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தற்போது அந்த வழியாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை பீஞ்சமந்தை, பாலாம்பட்டு, தொங்குமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கனமழையின் காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு தொங்கும் மலையில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது.
இதனால் நேற்று முதல் 12 கிராம மக்களின் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டடுள்ளது. இதனால் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து, கடும் அவதி அடைந்துள்ளனர். நேற்று இரவு முதல் அந்த பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-
தரைப்பாலத்தின் 2 பக்கமும் தடுப்புச் சுவர்கள் இன்றி ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. குழந்தைகளுடன் அந்த வழியாக செல்லும் போது மிகவும் அச்சத்துடன் பாலத்தை கடக்கிறோம்.
இரவு நேரத்தில் அந்த வழியாக பயணிக்கும்போது, தடுப்பு சுவர் இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மழைக்காலத்தில் தொடர்ந்து மழை பெய்யும் போது சுமார் 6 மாதம் காலம் தரை பாலத்தை மழைநீர் மூழ்கடித்துவிடும்.
அப்போது எங்களின் அன்றாட வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கும்.
தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் ஆற்றில் மழை நீர் ெசல்கிறது. இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
எனவே தரைப்பாலத்தின் உயரத்தை அதிகரிப்பதோடு, தரைபாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர்கள் அமைத்து மலைவாழ் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வேலூரில் நாளை தொடக்கம்
- வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்
வேலூர்:
வேலூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் கேலோ இந்தியா பெண்கள் லீக் போட்டிகள் வேலூர் தந்தை பெரியார் பூங்காவில் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 5 மற்றும் 3 பேர் கொண்ட அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதிக்கு பின்னர் பிறந்த பெண்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
இதில் பங்கேற்கும் பெண்கள் அசல் ஆதார் அட்டை, பிறந்தநாள் சான்றிதழை கொண்டு வர வேண்டும். போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை, பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த தகவலை வேலூர் மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
- தந்தை குடித்துவிட்டு குடும்ப செலவிற்கு பணம் தருவதில்லை.
- நான் சமோசா விற்பனை செய்து குடும்பத்தை பார்த்து வருகிறேன்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த முல்லை நகரை சேர்ந்தவர் ஜாபர் கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி பரானா திருமணம் ஆகி சுமார் 18 ஆண்டுகள் ஆகின்றன.
இவர்களுக்கு 5 ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஜாபர் குடித்துவிட்டு மனைவி பரானாவிடம் தினந்தோறும் தகராறு செய்து வந்தார். இதனால் நேற்று மனம் உடைந்து பரானா மருந்து குடித்தார். அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை தொடர்ந்து ஜாபர் குடித்துவிட்டு மகன்களை அடித்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட ஜாபருடைய 2-வது மகன் நபில் (வயது 13) என்பவர் அவனது சிறிய சைக்கிளில் போலீஸ் நிலையம் சென்றான். போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதியிடம் தனது தந்தை தினமும் குடித்துவிட்டு ரகளை செய்வதாக புகார் தெரிவித்தான்.
தந்தை குடித்துவிட்டு குடும்ப செலவிற்கு பணம் தருவதில்லை. என்னுடைய அண்ணன் கபில் (15) சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார்.
நான் இங்கு சமோசா விற்பனை செய்து குடும்பத்தை பார்த்து வருகிறேன். என்னுடைய 3 தம்பிகளை பள்ளியில் படிக்க வைத்து வருகிறேன்.
தந்தை தினம்தோறும் குடித்துவிட்டு அம்மாவிடம் தகராறில் ஈடுபட்டு அடிப்பதால் மனவேதனை அடைந்த என்னுடைய அம்மா நேற்று தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்துவிட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
என் தந்தையை தயவுசெய்து கைது செய்து ஜெயிலில் அடையுங்கள் என கூறினான். புகாரின் பேரில் ஜாபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து அறிவுரை கூறி பேலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தகவல்
- 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நீண்ட நாட்கள் கிடப்பில் உள்ள வழக்குகளில் தீர்வு காண்பதற்காக வேலூர், காட்பாடி, குடியாத்தம் சப் டிவிஷன்களில் சிறப்பு குறை தீர்வு முகம் இன்று நடந்தது.
வேலூர் கோட்டை சுற்றுசாலையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் நடந்த குறைதீர்வு முகாமை வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தொடங்கி வைத்தார்.
வழக்கு சம்பந்தப்பட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் முகாமில் கலந்து கொண்டனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறுகையில் அந்தந்த சப் டிவிஷனில் உள்ள டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் நீண்ட நாள் தீர்வு காணப்படாத வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு சம்பந்தப்பட்ட 2 தரப்பை சேர்ந்தவர்களையும் வரவழைத்து விசாரணை நடத்தி காணப்படுகிறது. தீர்வு காணப்படாத வழக்குகளில் மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவதி
- அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மகிமண்டலம் பகுதியில் சென்னையில் இருந்து சேலம் வரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
சாலை அமைக்கும் பணிக்காக மகிமண்டலம் ஏரியிலிருந்து டிப்பர் லாரிகள் மூலம் மண் ஏற்றி வந்து சாலை அமைக்கும் பணிக்காக கொட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இரவு மண் ஏற்றி வந்த லாரி மண்ணை கொட்டி விட்டு லாரியின் பின்புறம் இருக்கும் தொட்டியை கீழே இறக்காமல் அப்படியே டிரைவர் லாரியை இயக்கி உள்ளார்.
அப்போது சாலையில் இருந்த மின் கம்பிகள் அந்த லாரியின் தொட்டியில் சிக்கியது. இதில் 22 மின்சார கம்பங்கள் இழுத்து வரப்பட்டு உடைந்து கீழே சாய்ந்ததால் மகிமண்டபம், பெரிய போடி நத்தம், புதூர் கிராமம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் அந்த கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இரவில் மூழ்கியது.
இதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மண் ஏற்றி வந்த 3 டிப்பர் லாரிகளை சிறை பிடித்துள்ளனர்.
மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளான அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் குறித்து மின்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தகவல் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறினர்.
மேலும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். உடனே அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 32). இவர் ஆயுதப் படை பிரிவில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
வேலூர் காகிதப்பட்டறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் 42 இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு ஜெயபால் வேலூரில் இருந்து சத்துவாச்சாரி நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சதீஷ் காகிதப்பட்டறையில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
காகிதப்பட்டறை ரோட்டில் வந்தபோது எதிர்பாராத விதமாக சதீஷ் பைக்கும், ஜெயபால் பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் ஜெயபால் படுகாயமும், சதீஷ் லேசான காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயபாலை மீட்டு பூட்டுதாக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
லேசான காயமடைந்த சதீஷ் ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் மன உளைச்சலில் காணப்பட்டார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த செதுவாலை பகுதியைச் சேர்ந்தவர் சுபான் ( வயது 19). இவர் வேலூர் பைபாஸ் சாலையில் உள்ள லாரி உடைக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவரது தாயார் வெளிநாட்டிற்கு சென்று வீட்டு வேலை செய்து வருகிறார். அதேபோல் இவருடைய அண்ணனும் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சுபான் தன்னுடைய தாத்தாவுடன் செதுவாலையில் தங்கி உள்ளார்.
இந்த நிலையில் தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் சுபான் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு சுபான் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது தாத்தா வீட்டின் கதவை தட்டினார்.
நீண்ட நேரமாகியும், கதவு திறக்காததால் உடனடியாக அருகில் இருந்தவர்களை அழைத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சுபான் தூக்கில் தொங்கியவாறு துடிதுடித்துக்கொண்டு இருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சுபான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






