search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
    X

    குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

    • 12 குற்ற வழக்குகள் உள்ளன
    • குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் பழனி (வயது 25). ரவுடியான இவர் கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரை தாக்கி ரூ.1,000 பறித்தார்.

    இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து பழனியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தார்.

    பழனி மீது வேலூர் வடக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு, ரத்தினகிரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 12 குற்ற வழக்குகள் உள்ளன.

    தொடர்ந்து அவர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் அடைக்கும்படி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் குமாரவ ேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் பழனியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    Next Story
    ×