என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலர் மண்டபத்தில் நடந்தது"

    • 343 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
    • போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த சிறப்பு குறைதீர்வு முகாமில் 343 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நீண்ட நாட்கள் கிடப்பில் உள்ள வழக்குகளில் தீர்வு காண்பதற்காக வேலூர், காட்பாடி, குடியாத்தம் போலீஸ் உட்கோட்டங்களில் சிறப்பு குறைதீர்வு முகாம் நேற்று நடந்தது. வேலூர் உட்கோட்டத்துக்கான சிறப்பு குறைதீர்வு முகாம் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் நடந்தது.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பிரசன்னகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருநாவுக்கரசு, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமிற்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகையில்:-

    வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள், வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு முகாம், போலீஸ் உயர்அதிகாரிகள் மற்றும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் வழங்கப்பட்டு நீண்டநாட்கள் தீர்வு காணப்படாமல் வழக்குகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வு காண்பதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வழக்கில் தொடர்புடைய இருதரப்பினரையும் வரவழைத்து அவர்களிடம் பேசி சுமூக தீர்வு காணப்படும். தீர்வு காணப்படாத வழக்குகளில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சிறப்பு முகாமில் ஒவ்வொரு போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்குகள் தொடர்பாக இருதரப்பினர் இடையேயும் அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டனர்.

    வேலூர் உட்கோட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில் 119 வழக்குகள் விசாரணை நடத்தப்பட்டு, அதில் 80 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதேபோன்று காட்பாடி உட்கோட்டத்தில் 310 வழக்குகளில் 103 வழக்குகளும், குடியாத்தம் உட்கோட்டத்தில் 160 வழக்குகளில் 160 வழக்குகளும் என்று 3 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் 589 வழக்குகள் விசாரணை எடுத்து கொள்ளப்பட்டு 343 வழக்குகள் தீர்வு காணப்பட்டன என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×