என் மலர்tooltip icon

    வேலூர்

    • தாசில்தாருடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம்
    • குறை தீர்வு கூட்டத்தில் பரபரப்பு

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. தாசில்தார் வேண்டா தலைமை தாங்கினார். துணை தாசில்தார் திருகுமரேசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசுகையில்:- கடந்த மாதம் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் சாதாரண விவசாயிகள் ஆடு, மாடு கொட்டகைகளை மற்றும் வீடு உள்ளிட்டவை கேட்டு மனு அளித்தனர். இதனை பி.டி.ஓ.க்கள் கண்டு கொள்ளவில்லை. ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு மட்டுமே அடிப்படை வசதிகள் ஆடு, மாடு கொட்டகைகளை ஒதுக்கீடு செய்கின்றன.

    இது குறித்து பி.டி.ஓ.க்கள் அடுத்த கூட்டத்தில் வந்து பதில் சொல்ல வேண்டும். இல்லையென்றால் கூட்டத்தை நடத்த விடாமல் பி.டி.ஓ. அலுவலகத்திற்கு பூட்டு போட்டு விடுவோம். பி.டி.ஓ.க்களுக்கு அழைப்பு விடுத்திருந்தும் கூட அவர்கள் ஏன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை? என கேட்டு விவசாயிகள் தாடில்தாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பி.டி.ஓ.க்கள் வந்து பதில் சொல்லும் வரை கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என வலியுறுத்தினர்.

    இதனையடுத்து பி.டி.ஓ.க்களிடம், தாசில்தார் வேண்டா செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது அவர்கள், வேலூரில் நடக்கும் கூட்டத்திற்கு சென்று விட்டதாக கூறினர். இதனை அடுத்து துணை பி.டி.ஓ.க்கள் லோகநாதன், சதீஷ்குமார் ஆகியோர் வேக வேகமாக வந்து கூட்டத்தில் பங்கேற்றனர். இதை தொடர்ந்து கூட்டம் நடந்தது. அப்போது தாசில்தார் வேண்டா பேசுகையில்:-

    கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிகாரிகள் குறித்து (அட்டனன்ஸ்) வருகை பதிவேடு பின்பற்றப்பட்டு, கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று வருகை தராத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்

    கூட்டத்தில் விவசாயிகள், தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மை துறையில் 100 சதவீதம் மானியத்துடன் இலவசமாக கொடுக்கப்படும் திட்டத்தை செயல்படுத்த பயனாளி களிடமிருந்து, அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும் அதனை முழுமையாக தடுக்க வேண்டும் என தாசில்தாரிடம் மனு வழங்கினர்.

    இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    • சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தி வருகின்றனர்
    • திருப்பத்தூர் கலெக்டர் தகவல்

    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் யாருக்கும் பன்றி காய்ச்சல் இல்லை என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பன்றி காய்ச்சல்

    வாணியம்பாடியில் ஒருவர் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப் பட்டு இறந்ததை தொடர்ந்து வாணியம்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகு திகளில் உள்ள பொதுமக்க ளுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் பன்றிக்காய்ச்சல் இல்லை.

    இந்த பரிசோதனை வாலாஜாவில் உள்ள பொது சுகாதாரத்துறை பரிசோ தனை கூடத்தில் செய்யப்பட் டது. வாணியம்பாடியில் உயிர் இழந்த நபர் கடந்த சில வாரங்களாக கல்லீரல் சுருக் கம் நோய் உள்ளிட்ட பல் வேறு நோய்களுக்கு சென் னையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    மேலும் அவர் பல்வேறு கோவில்கள், நகரங் களுக்கு சென்றது தெரியவந் தது. ஆகவே அவருக்கு பய ணத்தினால் வெளியூர்களில் வைத்து தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்புகள் அதிகம். பன்றிக்காய்ச்சல் குறித்து வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்த பொதுமக் கள் அச்சப்பட தேவை யில்லை. அங்கு சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தி வருகின்றனர்.

    நியூடவுன் பகுதி முழுவதும் பிளிச்சிங் பவுடர், கிருமிநா சினி தெளிக்க நகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பன்றிக்காய்ச்சலுக்கு வழங் கப்படும் மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு உள்ளது. தேவைப்படுபவர்க ளுக்கு மாத்திரை வினியோ கம் செய்யப்படும்.

    பொதுமக்களும் வெளியே வரும்போது முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், ஒரே இடத்தில் அதிகம் பேர் கூடு வதை தவிர்த்தல் உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

    • மாவட்ட வன அலுவலர் தகவல்
    • அழகான நீர்வீழ்ச்சி உள்ளது

    வேலூர்:

    வேலூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமிர்தி வன உயிரின பூங்கா உள்ளது. ஜவ்வாது மலைத் தொடரில் சிறிய விலங்குகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்தப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், குள்ளநரி, குரங்குகள், சிவப்புத் தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப் பாம்புகள் உள்ளன.

    அடர்ந்து வளர்ந்த மரங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களை ரசிக்கலாம். அழகான நீர்வீழ்ச்சியும் உள்ளது.

    மழைக்கா லங்களில் மட்டுமே நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். மலை யேற்றத்திலிருந்து, நீர்வீழ்ச்சியைக் காணலாம். நீர்வீழ்ச்சியில் குளிக்க தற்போது போது அனுமதியில்லை. புதை மணல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

    செவ்வாய்க்கிழமை மட்டும், அமிர்தி பூங்காவுக்கு விடுமுறை. அன்று ஒரு நாள், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படு கின்றன.

    ஞாயிறு உட்பட மற்ற அனைத்து நாட்களும், பூங்காவில் பொழுதைக் கழிக்கலாம்.

    இந்த பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.10, சிறுவர்களுக்கு ரூ.5, பைக்குகளுக்கு ரூ.25, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.50 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அமிர்தி சிறுவன உயிரின பூங்காவில் நுழைவு கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமும், சிறியவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.50, தங்கும் அறைக்கு பெரியோர்களுக்கு ரூ.250 குழந்தைகளுக்கு ரூ.100 என கட்டணம் உயர்த்தப்ப ட்டுள்ளது.

    மேலும் இந்த கட்டண முறை இன்று முதல் அமலுக்கு வந்ததாக மாவட்ட வன அலுவலர் கலாநிதி தெரிவித்தார்.

    • கலெக்டர் தகவல்
    • ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த ஆணை

    வேலூர்:

    கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்த்து வேலை வாய்ப்பு வழங்கப்படும் அல்லது தொழில் முனைவோராக உருவாக்கப்படும்.

    பயிற்சியில் சேருபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் பயிற்சி காலம் முடியும் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கைத்தறிகளை இயக்குவதற்கு தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் www.loomworld.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க லாம் அல்லது வருகிற 14-ந் தேதி குடியாத்தம் ஸ்ரீபாலாஜி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெறும் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

    இந்த தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
    • புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்க பள்ளிகளில் இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது கம்மவா ர்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் கலெக்டர் காலை உணவை பார்வை யிட்டு ஆய்வு செய்ததோடு, மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

    மேலும் மாணவர்களிடம் உணவு எப்படி இருக்கு? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த கலெக்டர், காலை உணவு திட்டத்தில் ஏதாவது குறைபாடுகள் கண்டாலோ அல்லது புகார்கள் வந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    • பிரியா உண்மையிலேயே அவர்களது மகள் தான் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அவரிடம் ஒப்படைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
    • தன்னை பெற்றோருடன் சேர்த்த அதிகாரிகள் அனைவருக்கும் கை கூப்பி நன்றி தெரிவித்தபடி பிரியா பெற்றோருடன் சொந்த ஊருக்கு சென்றார்.

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. மரம் வெட்டும் தொழிலாளி.

    இவருடைய மனைவி சின்னபாப்பா. தம்பதிக்கு 5 மகன், 5 மகள் உள்ளனர். இவர்கள் வீட்டில் கடைக்குட்டி மகள் பிரியா.

    கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருடன் வெளியே சென்றபோது பிரியா திடீரென காணாமல் போனார். மகளை பல்வேறு இடங்களில் அவரது பெற்றோர் தேடினர். அவர்களிடம் பிரியாவின் போட்டோ எதுவும் இல்லை. மேலும் போலீசிடம் புகார் கொடுக்கக்கூடிய விவரமும் தெரியவில்லை. அதனால் உள்ளுக்குள் அழுது துடித்தனர்.

    தினந்தோறும் மகளை எண்ணி அவர்கள் தவித்தனர்.

    இதற்கிடையே 6 வயது சிறுமியாக இருந்த பிரியாவை மீட்ட பெண் ஒருவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்தார்.

    அந்த காப்பகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது உரிமம் இன்றி இயங்கியது தெரிய வந்தது.

    இதையடுத்து குழந்தைகள் நலகுழுவினர் பிரியாவை மீட்டு வேலூர் அல்லாபுரத்தில் உள்ள பிற்காப்பு இல்லத்தில் தங்க வைத்தனர். அங்கு வளர்ந்த அவர் 10-ம் வகுப்பு வரை படித்தார்.

    பெற்றோரை விட்டு பிரிந்த பிரியாவுக்கு அவரது பெற்றோரின் பெயர் நன்றாக தெரிந்தது. இதனால் தனக்கு பெற்றோர் இருப்பதாக அடிக்கடி காப்பகத்தில் உள்ள அதிகாரியிடம் தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரது சொந்த ஊரும் அவருக்கு நினைவுக்கு வந்தது. இது குறித்து காப்பக மேலாளரிடம் கூறினார்.

    இதையடுத்து அதிகாரிகள் பிரியாவின் சொந்த ஊருக்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து தகவல் தெரிவித்தனர். அதனை கேட்டு அவர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர். மகளை உடனடியாக பார்க்க வேண்டும் என ஓடோடி வந்தனர்.

    பிரியா உண்மையிலேயே அவர்களது மகள் தான் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அவரிடம் ஒப்படைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

    இதனைத் தொடர்ந்து பிரியாவின் பெற்றோர்களான ஏழுமலை, சின்னபாப்பா மற்றும் பிரியாவிற்கு கடந்த 2021-ம் ஆண்டு டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது.

    அதன்முடிவில் பிரியாவின் தந்தை ஏழுமலை என்று தெரிய வந்தது.

    இது குறித்து முறையாக வேலூர் கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோர்ட்டு உத்தரவின் பேரில் பிரியாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர்.

    நேற்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் முன்னிலையில் பிரியா பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    அப்போது பெற்றோர் பிரியாவை கட்டி அணைத்து அழைத்துச் சென்றனர். அவர்கள் அனைவரது முகத்திலும் ஆனந்த கண்ணீருடன் மகிழ்ச்சியை காண முடிந்தது.

    தன்னை பெற்றோருடன் சேர்த்த அதிகாரிகள் அனைவருக்கும் கை கூப்பி நன்றி தெரிவித்தபடி பிரியா பெற்றோருடன் சொந்த ஊருக்கு சென்றார்.

    வீட்டுக்கு சென்றதும் பிரியாவை அவரது உறவினர்கள் திரண்டு வரவேற்று அழைத்து சென்றனர். இது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.

    9 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் சேர்ந்த பிரியா கூறியதாவது :-

    6 வயதில் நான் எப்படி மாயமானேன் என்பது எனக்கு நினைவு இல்லை.

    அப்போது எனது பெற்றோர், ஊர் விவரங்களை சொல்லவும் எனக்கு தெரியவில்லை. ஆனால் அது என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. சோளிங்கரில் உள்ள தனியார் காப்பகத்தில் வளர்ந்தேன். அங்கிருந்தவர்கள் என்னை படிக்க வைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டேன். அப்போது எனக்கு ஓரளவு விவரம் தெரியவந்தது.

    அங்கிருந்த அதிகாரிகளிடம் எனக்கும் குடும்பம் இருக்கிறது. எனது பெற்றோர் பெயர் தெரியும் ஊர் தெரியும் என கூறினேன்.

    அவர்கள் அது பற்றி விவரங்களை கேட்டனர். நானும் கூறினேன்.

    இதை தொடர்ந்து எனது பெற்றோர் குறித்த விவரங்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அவர்களை தேட ஆரம்பித்தனர்.

    காப்பகத்தில் மற்ற குழந்தைகளை பார்க்க அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் வருவார்கள்.

    அதனை பார்க்கும்போது நமக்கும் குடும்பம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே கடவுளே என்னை எப்படியாவது என் பெற்றோரிடம் சேர்த்துவிடு என அழுது புலம்புவேன்.

    அவர்கள் நினைவில் வாடினேன். நான் தினந்தோறும் வேண்டாத தெய்வம் இல்லை.

    என்னை எப்படியாவது என்னை பெற்றோருடன் சேர்த்து விடுங்கள் என தினந்தோறும் அதிகாரிகளும் கூறிக்கொண்டே இருப்பேன்.

    அதிகாரிகளும் தீவிரமாக தேட தொடங்கினர். ஒரு வழியாக எனது பெற்றோரை கண்டு பிடித்தனர்.

    டி.என்.ஏ. பரிசோதனைக்கு பிறகு நான் பெற்றோருடன் சேர்ந்துள்ளேன். நான் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறேன்.

    என்னுடன் பிறந்தவர்களில் 7 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. இன்னும் 2 அண்ணன்கள் மட்டுமே திருமணமாகாமல் உள்ளனர். வீட்டில் உள்ள நல்ல காரியங்களில் கூட பங்கேற்க முடியாமல் போய்விட்டது.

    எனது பெற்றோரும் என்னை பல ஆண்டுகள் தேடியுள்ளனர். கடவுள் அனுக்கிரகத்தால் மீண்டும் சேர்ந்து விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊழல் நடந்ததாக முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தார்.
    • பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தார்.

    பல்கலைக்கழகத்தில் சுமார் ரூ.112 கோடிக்கு நிதி நிர்வாக முறைகேடுகள், நடந்ததாகவும் பல்கலைக்கழகத்திற்கு கொள்முதல் செய்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படுத்த தன்மை சட்டத்தை மீறி பல்கலைக்கழகத்திற்கு பண இழப்பு ஏற்படுத்தியது, மற்றும் பல்கலைகழக தேர்வு முறைகேடு உள்ளிட்டவைகள் குறித்து புகார் அளிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் இன்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் விசாரணை நடத்தினார்.

    மேலும், மனுதாரரான முன்னாள் பேராசிரியர் இளங்கோவனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில், பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • நகை, ரூ.45 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளயைடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள கருங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது47). விவசாயி. இவரது தனது குடும்பத்துடன் கடந்த 25-ந் தேதி திருப்பதிக்கு சென்றார். இதனை பயன் படுத்திய மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தாலி செயின், தாலி, தங்க காசு உள்ளிட்ட 5½ பவுன் நகையையும், ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் திருப்பதிக்கு சென்றவர்கள் திரும்பி வராத நிலையில் ஆதிமூலத்தின் வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்த தகவலை அக்கம்பக்கத்தினர் ஆதிமூலத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் தகவலறிந்த அவர் நேற்று ஊருக்கு திரும்பிவந்து சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளயைடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    • அமைச்சர் துரைமுருகன் பேச்சு
    • கட்சி ஆரம்பித்து 75 ஆண்டு காலம் ஆகிறது

    வேலூர்:

    வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு அவைத் தலைவர் முகமது சகி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., கதிர் ஆனந்த் எம்.பி., மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அமுலு விஜயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்தக் கட்சி ஆரம்பித்து 75 ஆண்டு காலம் ஆகிறது. தி.மு.க. திராவிட இயக்கம் ஆரம்பித்து 100 ஆண்டுக்கு மேல் கடந்து விட்டது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மட்டும் தான் நூறாண்டு கண்ட கட்சி.

    கம்யூனிஸ்ட் கூட கிடையாது. அண்ணா பொதுச்செயலாளர், நாவலர் பொதுச் செயலாளர் பேராசிரியர் பொதுச் செயலாளர் அடுத்து உங்கள் ஆதரவால் நான் எங்கேயோ ஒரு குக்கிராமத்தில் பிறந்து பொதுச்செயலாளர் ஆகி இருக்கிறேன்.

    வேறு எவனாவது இருந்தால் எம்ஜிஆரிடம் முதல்ல போய் சேர்ந்திருப்பார். எம்.ஜி.ஆர். என்னை அழைத்த போது என் கட்சி தி.மு.க. என் தலைவர் கலைஞர் என்று கூறினேன்.

    என் தம்பி எவ்வளவு மன வலிமை படைத்தவன் என்பது எனக்கு தெரியும் என சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். அரசியலில் சில நேரங்களில் ஏமாற்றம் வரும் சில நேரங்களில் அவமானம் வரும் சில நேரங்களில் வெறுப்பு வரும் அது பறந்து போய்விடும்.

    எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள் எல்லாம் நினைத்து பார்த்தால் நான் கூட மிக சவுகரியத்தோடு அவரோடு இருந்திருப்பேன்.

    நான் உங்களை கேட்டுக் கொள்வது ஒரு பெரும் விழாவை (தி.மு.க. பவள விழா) வரலாற்று சிறப்புமிக்க விழாவாக வரலாற்றில் பதிக்கும் அளவு நடத்திக் காட்ட வேண்டும்.

    வேலூர் தி.மு.க. வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பதிவு செய்ய நம்முடைய மாவட்ட கழகச் செயலாளர் நந்தகுமார் அந்த பெருமையை பெற வேண்டும் இன்னும் சொல்லப்போனால் நான் செய்ய வேண்டும் என்று கூட விரும்புவதில்லை .

    நான் எப்படி செய்ய வேண்டும் என்று சொன்னால் போதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தால்தான் விழாவாக தெரியும்.

    இல்லாவிட்டால் பொதுக்கூட்டமாக தெரியும் எனவே நம்முடைய மாவட்டத்துக்கு அவர் வைத்திருக்கிற பெயர் புகழ் எல்லாம் கொஞ்சம் மாற்று குறைய ஆரம்பித்து விடாமல் வைத்துக் கொள்ளுங்கள் .

    மோடி என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை.அவர் ஆட்சியை நடத்த போகிறாரா? அல்லது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடத்தப் போகிறாரா? என்பது மட்டும் தான் இப்பொழுது கேள்விக்குறி.

    விரைவில் தேர்தல் வர உள்ளது. சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் சேர்ந்து தேர்தல் வருவதாக நினைத்தே பணியாற்ற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அணைக்கட்டு பாபு உட்பட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்

    • அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
    • வருகிற 17-ந் தேதி நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் வருகிற 17-ந் தேதி வேலூரில் தி.மு.க பவள விழாவுடன் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

    பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வழிகாட்டுதலின்படி வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை வெற்றிபெற செய்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் டிசம்பர் 17-ந் தேதி சேலம் மாநகரில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகளை சேர்ந்த இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் அமைவிடம் வாக்காளர் எண்ணிக்கை ஆகிய அம்சங்களில் உள்ள குறைபாடுகளை களைந்திட நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்திய ஜனநாயக முற்போக்கு கூட்டணியை உருவாக்கி திறன் பட செயலாற்றி வரும் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தும் அவரது அரசியல் நகர்வுக்கு வேலூர் மாவட்ட தி.மு.க துணை நிற்கும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    • பெண்கள், குடியிருப்பு வாசிகள் அச்சம்
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள பூங்காக்கள் மற்றும் தெரு ஓரங்களில் குடிமகன்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சத்துவாச்சாரி பகுதிகளில் குடிமகன்கள் ஆக்கிரமிப்பு இல்லாத பூங்காக்களே இல்ல என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இதைவிட தெருக்களில் உள்ள மரங்களின் அடிவாரத்தில் பகல் நேரத்தில் கூட அமர்ந்தவாறு குடிக்கின்றனர்.

    இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள் அச்சமடை கின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போடப்பட்டுள்ள நடைபா தைகளிலுயும் அமர்ந்து மது குடிக்கின்றனர்.

    குடிமகன்களுக்கு பயந்து குடியிருப்பு வாசிகளும் அவர்களை எச்சரிக்கை செய்ய பயப்படுகின்றனர்.

    இதே நிலை வேலூர் காட்பாடியில் உள்ள அனைத்து இடங்களிலும் நீடிப்பதாக கூறுகின்றனர். போலீசார் முறையான ரோந்து பணியில் ஈடுபட்டால் மட்டுமே அசம்பாவிதங்களை தடுக்க முடியும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • கலெக்டர், எம்.எல்.ஏ. விற்பனையை தொடங்கி வைத்தனர்
    • 16 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, பள்ளிகொண்டாவில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள உழவர் சந்தையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

    இதனையொட்டி, பள்ளிகொண்டாவில் நடைபெற்ற உழவர் சந்தையில் தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார், சப்-கலெக்டர் கவிதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    மேலும், உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்ய உழவர் அடையாள அட்டைகள், எடை எந்திரங்கள் அனைத்து இலவசமாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

    பள்ளிகொண்டா உழவர் சந்தையில் தற்போது 16 கடைகள் அமைக்க ப்பட்டுள்ளன. புதிய உழவர் சந்தை மூலம் பள்ளி கொண்டா, வெட்டு வானம், பிராமணமங்கலம், கந்தனேரி, வேப்பங்கால், ஐதர்புரம், பசுமாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காய்கறி, பழங்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் பயன்பெறுவர்.

    வெளிச்சந்தையை விட குறைவான விலையில் காய்கறிகளை பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் கலைச்செல்வி, தாசில்தார் வேண்டா, பி.டி.ஓ.க்கள் சுதாகரன், சாந்தி, பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் சுபப்பிரியா, செயல் அலுவலர் உமாராணி, அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் வெங்க டேசன், பள்ளிகொண்டா நகர செயலாளர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

    ×