search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் நடைபெற உள்ள தி.மு.க. பவள விழாவை வரலாற்றில் பதிக்கும் அளவுக்கு நடத்தி காட்ட வேண்டும்
    X

    வேலூரில் நடைபெற உள்ள தி.மு.க. பவள விழாவை வரலாற்றில் பதிக்கும் அளவுக்கு நடத்தி காட்ட வேண்டும்

    • அமைச்சர் துரைமுருகன் பேச்சு
    • கட்சி ஆரம்பித்து 75 ஆண்டு காலம் ஆகிறது

    வேலூர்:

    வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு அவைத் தலைவர் முகமது சகி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., கதிர் ஆனந்த் எம்.பி., மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அமுலு விஜயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்தக் கட்சி ஆரம்பித்து 75 ஆண்டு காலம் ஆகிறது. தி.மு.க. திராவிட இயக்கம் ஆரம்பித்து 100 ஆண்டுக்கு மேல் கடந்து விட்டது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மட்டும் தான் நூறாண்டு கண்ட கட்சி.

    கம்யூனிஸ்ட் கூட கிடையாது. அண்ணா பொதுச்செயலாளர், நாவலர் பொதுச் செயலாளர் பேராசிரியர் பொதுச் செயலாளர் அடுத்து உங்கள் ஆதரவால் நான் எங்கேயோ ஒரு குக்கிராமத்தில் பிறந்து பொதுச்செயலாளர் ஆகி இருக்கிறேன்.

    வேறு எவனாவது இருந்தால் எம்ஜிஆரிடம் முதல்ல போய் சேர்ந்திருப்பார். எம்.ஜி.ஆர். என்னை அழைத்த போது என் கட்சி தி.மு.க. என் தலைவர் கலைஞர் என்று கூறினேன்.

    என் தம்பி எவ்வளவு மன வலிமை படைத்தவன் என்பது எனக்கு தெரியும் என சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். அரசியலில் சில நேரங்களில் ஏமாற்றம் வரும் சில நேரங்களில் அவமானம் வரும் சில நேரங்களில் வெறுப்பு வரும் அது பறந்து போய்விடும்.

    எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள் எல்லாம் நினைத்து பார்த்தால் நான் கூட மிக சவுகரியத்தோடு அவரோடு இருந்திருப்பேன்.

    நான் உங்களை கேட்டுக் கொள்வது ஒரு பெரும் விழாவை (தி.மு.க. பவள விழா) வரலாற்று சிறப்புமிக்க விழாவாக வரலாற்றில் பதிக்கும் அளவு நடத்திக் காட்ட வேண்டும்.

    வேலூர் தி.மு.க. வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பதிவு செய்ய நம்முடைய மாவட்ட கழகச் செயலாளர் நந்தகுமார் அந்த பெருமையை பெற வேண்டும் இன்னும் சொல்லப்போனால் நான் செய்ய வேண்டும் என்று கூட விரும்புவதில்லை .

    நான் எப்படி செய்ய வேண்டும் என்று சொன்னால் போதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தால்தான் விழாவாக தெரியும்.

    இல்லாவிட்டால் பொதுக்கூட்டமாக தெரியும் எனவே நம்முடைய மாவட்டத்துக்கு அவர் வைத்திருக்கிற பெயர் புகழ் எல்லாம் கொஞ்சம் மாற்று குறைய ஆரம்பித்து விடாமல் வைத்துக் கொள்ளுங்கள் .

    மோடி என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை.அவர் ஆட்சியை நடத்த போகிறாரா? அல்லது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடத்தப் போகிறாரா? என்பது மட்டும் தான் இப்பொழுது கேள்விக்குறி.

    விரைவில் தேர்தல் வர உள்ளது. சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் சேர்ந்து தேர்தல் வருவதாக நினைத்தே பணியாற்ற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அணைக்கட்டு பாபு உட்பட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×