என் மலர்
வேலூர்
- ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி நூதனம்
- வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர், தொரப்பாடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆகிய இருவரின் செல்போன் வாட்ஸ்-அப் எண்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த தகவலில் `ஆன்லைனில்' பகுதி நேர வேலையில் பங்கேற்று அதிகம் சம்பாதிக்க முடியும் என கூறியுள்ளனர்.
ஆர்வம் உள்ளவர்கள் அவர்கள் அனுப்பிய இணைப்பில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறி இருந்தனர்.
அதனை உண்மை என நம்பிய 2 பேரும் தங்களது முழு விவரத்தையும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.
மேலும் அவர்களுக்காக தனி கணக்கு தொடங்கி அதில் முதலீடு செய்து அவர்கள் அளித்த வேலையை செய்து முடித்துள்ளனர்.
அவர்கள் கொடுத்த வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்ததால் அவர்கள் முதலீடு செய்த பணத்துக்கு கூடுதல் தொகையும் சேர்ந்துள்ளது.
அதன்படி சேவூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழிய தனது வங்கி கணக்கிலிருந்து கடந்த மாதம் மொத்தம் ரூ.13.64 லட்சமும், தனியார் பள்ளி ஆசிரியரும் தனது வங்கி கணக்கில் இருந்து கடந்த 30, 31- ந் தேதிகளில் ரூ.6.15 லட்சமும் அனுப்பியுள்ளனர்.
அவர்கள் கூறியபடி முதலீடு செய்த பணத்துக்கு கூடுதல் தொகை கிடைத்ததும் அதை தங்களது வங்கி கணக்கு இருவரும் மாற்ற முயன்றனர்.
ஆனால் அந்தப் பணத்தை மாற்ற முடியாததால் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் இருவரும் வேலூர் மாவட்ட சைர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- விநாயகர் சிலை மற்றும் பொம்மைகளை மர்ம கும்பல் திருடிச்சென்றனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த கல்மடுகு கிராமம் அண்ணாதெருவை சேர்ந்தவர் சந்தியா (வயது 30). இவரது கணவர் 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனை தொடர்ந்து சந்தியா தனது 2 பிள்ளை களுடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தியாவின் தாயார் இறந்து விட்டார்.
இதனால் தினமும் மாலையில் வீட்டை பூட்டிக் கொண்டு அதே கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று தந்தை வெங்கடேசனுக்கு சமையல் செய்துவிட்டு அங்கேயே தங்கிவிட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம்.
நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பெற்றோர் வீட் டிற்கு சென்றுவிட்டு, நேற்று காலை வீட்டிற்கு வந்தார். வீட்டின் முன்பக்க கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட் டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன.
அதில் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், எல்.இ.டி. டி.வி., மீன் தொட்டி, பூஜை அறையில் இருந்த விநாயகர் சிலை மற்றும் பொம்மைகளை மர்ம கும்பல் திருடிச்சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து சந்தியா குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பே ரில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உணவு எப்படி இருக்கு? என்பது குறித்து கேட்டறிந்தார்
- அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்
அணைக்கட்டு:
வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள சாத்துமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் கலெக்டர், எம்.எல்.ஏ. உள்ளிட்டோர், மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். அப்போது கலெக்டர் மாணவர்களிடம் உணவு எப்படி இருக்கு? என்பது குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த கலெக்டர், காலை உணவு திட்டத்தில் ஏதாவது குறைபாடுகள் கண்டாலோ அல்லது புகார்கள் வந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதில் ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சு மிராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- மாணவர்கள் தலைமுடியை சரியாக வெட்டி வர வேண்டும்
- கலெக்டர் பேச்சு
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டம் தொடக்க விழா இன்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தலைமை தாங்கினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கோபிநாதன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு, திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதற்கு மாண வர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஈடுபாடுடன் செயல்பட்டு இந்த பள்ளி மாநில அளவில் மிளிரும் பள்ளியாக உயர்த்த வேண்டும்.
மாணவர்கள் ஒழுக்கத்து டன் இருக்க வேண்டும். தலைமுடியை சரியாக வெட்டிகொண்டு வர வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். மாணவர்கள் இவ்வாறு ஒழுக்கமாக இருந்தால் தான் பள்ளி உயரும், நீங்களும் உயருவீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார். இதற்கு முன்னதாக மாணவர்கள் பள்ளி தூய்மை குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வி ரவி, ஜோதிலட்சுமி ராஜ்குமார், சிவகுமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோலாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை, சிலம்பாட்டம் போன்றவை நடைபெற்றது
- 10-க்கும் மேற்ப்பட்ட கிராமத்தினர் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த எடைத்தெரு கிராமத்தில் 72-ம் ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கோலா கலமாக கொண்டாட ப்பட்டது.
இதனை முன்னிட்டு நேற்று காலை கிருஷ்ணருக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு களான கோலாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை, சிலம்பாட்டம் போன்றவை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழை ப்பாளராக அணைக்கட்டு ஏம்.எல்.ஏ நந்தகுமார் கலந்துக்கொண்டு சிலம்பம் ஆடியும், கோவிலில் அருகே கட்டப்பட்டிருந்த உறி அடித்தும் விளையாடினார்.
பின்னர் வழுக்குமரம் ஏறுதல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகளை தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தார்.
விழாவில் மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், வேணுகோபால், தனஞ்செயன், திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனை ெதாடர்ந்து போடிப்பேட்டை எல்லப்பன்பட்டி, அகரம் , அகரராஜாபாளையம், மகமதுபுரம், கரடிகுடி உள்ளிட்ட 10-க்கும் மேற்ப்பட்ட கிராமத்தினர் கலந்துக்கொண்டு கிருஷ்ண ஜெயந்தி தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
- ஒடுகத்தூரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது
- போக்குவரத்து பாதிப்பு
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் ஒடுகத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
மரக்கிளை முறிந்து விழுந்தது
அப்போது, சிவன் கோவில் அருகே இருந்த புளியமரக்கிளை முறிந்து அங்கு சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதில், மின் கம்பம் இரண்டாக உடைந்து அந்தரத்தில் தொங்கியது. அப்போது, மின்சாரம் இல்லாததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
இதையடுத்து, நகர செயலாளர் பெருமாள்ராஜா, வார்டு கவுன்சிலர்கள் ஜெயந்தி வெங்கடேசன், புனிதா சவுரிராஜன், கீர்த்தனா வாசு, வி.ஏ.ஓ. அபிலேஷ் ஆகியோர் உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் மின் கம்பம் மற்றும் சாலையில் விழுந்த புளியமரக்கிளைகளை அப்புறப்படுத்தினர்.
இதனால், ஒடுகத்தூரில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்கம்பம் உடைந்ததால் அதனை சீரமைக்கும் பணியிலும் மின்வரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அதேபோல் ஒடுகத்தூர், வேலூர் சாலையோரங்களில் வீடு மற்றும் மின்கம்பங்கள் அருகே புளியமரங்கள் அதிகம் உள்ளது.
தற்போது, பருவமழை காலம் என்பதால் ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மண்டல அளவில் சிறப்பாக ஆடும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
- வீரர்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை ஈஷா கிராமோத்சவம் குழுவே கவனித்து கொள்ளும்.
'ஈஷா கிராமோத்வசம்' திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் வேலூர் வாலாஜா ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூரில் இன்று நடைபெற்றது. இதில் 'ஈஷா கிராமோத்சவம்' குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஈஷா அவுட்ரீச் சார்பில் நடத்தப்படும் 15-வது 'ஈஷா கிராமோத்சவம்' என்னும் கிராமிய விளையாட்டு திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடைபெறுகிறது. முதல்கட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில் மண்டல அளவிலான போட்டிகள் வரும் 10-ம் தேதி பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் உள்ள வன்னிவேடு பகுதியில் அமைந்திருக்கும் வாலாஜா ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டியும், பெண்களுக்கான த்ரோபால் போட்டியும் மற்றும் இருபாலருக்கான கபடி போட்டிகளும் நடைபெறவுள்ளன. வாலிபால் போட்டியில் மொத்தம் 28 அணிகளும், த்ரோபால் போட்டியில் மொத்தம் 10 அணிகளும், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவில் தலா 6 அணிகளும் பங்கேற்க உள்ளன.
இப்போட்டிகள் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும். கிராமப்புற அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம். இதை பார்வையிட வரும் பொதுமக்களுக்காக பிற்பகல் வேளையில் பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
மண்டல அளவில் சிறப்பாக ஆடும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள். வீரர்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை ஈஷா கிராமோத்சவம் குழுவே கவனித்து கொள்ளும்.
இறுதிப்போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு செப்டம்பர் 23-ம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி கெளரவிப்பார்கள். இத்திருவிழாவில் ஒட்டுமொத்தமாக ரூ.55 லட்சம் வரை பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ் இலக்கிய திறனறித் தேர்வு
- வருகிற 20-ந் தேதி கடைசி நாள்
வேலூர்:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பி யாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்குபெறுகின்றனர்.
அதேபோல் தமிழ்மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்தி க்கொள்ளும் வகையில் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வில் கலந்து கொள்ள 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வி த்துறை வழியாக மாதம் ரூ.1,500 வீதம் 2 வருடங்க ளுக்கு வழங்கப்படும்.
இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழ்நாடு அரசின் 10ம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்க ளிலும் மாவட்ட தலைந கரங்களில் இந்த தேர்வு நடக்கும். அதன்படி இந்த ஆண்டு தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி நடக்கிறது.
இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அரசு பள்ளி, சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி. உள்பட பிளஸ்-1 வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் மாணவர்கள் விண்ணப்பங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து, வருகிற 20-ந் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
- குடிநீர் உள்ளிட்ட பணிகள் பகுதி வாரியாக நடைபெறும்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கதிர் ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி, ஒப்பந்ததாரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இதுவரை 4 முறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதுவரை வேலூர் மாநகராட்சியில் நிறைவான பணிகள் எதுவும் நடக்கவில்லை.
பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இனி ஒவ்வொரு மாதமும் 6-ந் தேதி மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்படும். அடுத்த கூட்டத்திற்குள் மாநகராட்சியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிகள் பகுதி வாரியாக நடைபெறும்.
காவேரி மேலாண்மை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணை நடக்க இருந்தது. கர்நாடக அரசு அவசரமாக விசாரிக்க தேவையில்லை என கூறியதை தொடர்ந்து, வழக்கு வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைக்க ப்பட்டுள்ளது. அன்று நடக்கும் விசாரணையில் தமிழகத்தின் வாதங்களை முன்வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.4 கோடியில் பணிகள் திவிரம்
- ``ஐ லவ் வேலூர்'' செல்பி பாயிண்ட் அமைகிறது
வேலூர்:
வேலூர் கண்டோ ன்மென்ட் ரெயில் நிலையம் ரூ.4 கோடியில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 7 மாதங்களில் நிறைவுபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்டோன்மென்ட் ரெயில் நிலையம்
மத்திய அரசு அம்ரித் பாரத் ரெயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் புதுப்பிக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்க ப்பட்டது. தற்போது ரெயில் நிலையம் புதுப்பிக்கும் முதற்கட்ட பணிகள் தொடங்க ப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரெயில் நிலைய அதிகாரிகள் கூறுகையில்:-
வேலூர் கண்டோன்மெ ன்ட் ரெயில் நிலைய நுழைவுவாயில் பழைய கட்டிடம் அகற்றப்பட்டு, புதிதாக 25 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை போன்ற முகப்பு தோற்றத்துடன் கூடிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
மேலும் முதலாவது நடைமேடையில் முன்பதிவு பயணிகள் காத்திருக்கும் அறையின் அருகே இருந்து 32 மீட்டர் நீளம், 8 மீட்டர் அகலத்தில் புதிதாக மேற்கூரை அமைக்கப்ப டுகிறது. ஆண்கள், பெண்களுக்கு குளியல் அறை வசதிகளுடன் நவீன கழிப்ப றைகள் கட்டப்பட உள்ளது.
ரெயில் நிலையத்தின் உள்பகுதி மற்றும் உயர்மட்ட நடைமேடை, படிக்கட்டுகளில் கிரானைட் கற்கள் பதிக்கப்படுகிறது. ரெயில் நிலைய கட்டிடங்களில் உள்ள மரக்கட்டைகளால் ஆன ஜன்னல்கள் அகற்றப்பட்டு, அவற்றை விட பெரிய அளவில் கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட உள்ளது.
செல்பி பாயிண்ட்
செல்பி பாயிண்ட் ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் ஐ லவ் வேலூர் என்ற செல்பி பாயிண்டும், ரெயில் நிலைய வளாகத்தில் புல்தோட்டமும், கார் மற்றும் இருசக்கர வாகன ங்களுக்கு தனித்தனியாக பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்த ப்படுகிறது.
மேலும் கண்காணிப்பு கேமராக்கள், வண்ண, வண்ண மின்விளக்குகளால் கட்டிடம் அலங்கரிக்கப்பட உள்ளது. இந்த பணிகள் 7 மாதங்களில் முடிக்க திட்டமிட ப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரெயில் நிலைய நுழைவு வாயில் கட்டிடம் இடித்து அகற்றும் பணிகள் நடந்து வருகிறது என்று கூறினர்.
- கிளீனர் உடல் நசுங்கி சாவு
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
பீகார் மாநிலம், கான்புராவை சேர்ந்தவர் மோதிலால் குமார் (வயது 35).இவர் லாரி கிளினியராக வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை சென்னையில் இருந்து லாரியில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு பீகாரை சேர்ந்த டிரைவர் ஒருவர் லாரியை பெங்களூருக்கு ஓட்டி வந்தார்.
இந்த லாரியில் மோதிலால் குமார் கிளீனராக இருந்தார்.
இன்று அதிகாலை 2.30 மணி அளவில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் லாரி சென்று கொண்டு இருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் லாரி மோதியது.
இந்த விபத்தில் கிளீனியர் மோதிலால் குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இருந்த மோதிலால் குமார் பிணத்தை மீட்டு பரிசோத னைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
லாரியை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
- பக்கத்து நிலத்துகாரின் பசு மாடு முட்டியதில் இறந்ததாக புகார்
- நஷ்ட ஈடு பெற்று தர வலியுறுத்தல்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த பள்ளகொள்ளை கிராமத்தை சேர்ந்த வர் குமாரசாமி, விவசாயி. இவர் சொந்தமாக பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த பசுமாடு தற்போது 8 மாத சினையாக இருந்தது.
பசுமாட்டை கடந்த 1-ந் தேதி குமாரசாமி கோட்டையூர் ஏரியில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்துவிட்டு அணைக்கட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அங்கிருந்த பள்ளத்தில் பசுமாடு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து குமாரசாமி அணைக்கட்டு போலீசில், பனந்தோப்பு பட்டியைச் சேர்ந்த பக்கத்து நிலத்துகாரின் பசு மாடு முட்டியதில் தனது பசுமாடு இறந்ததாகவும், அதற்கு நஷ்ட ஈடு பெற்று தர வேண்டும் எனவும் புகார் கொடுத்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நிவாரணம் கிடைக்கும் வரை இறந்த பசுமாட்டை அப்புறப்படுத்த உரிமையாளர் மறுப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
6 நாட்கள் ஆகியும் இறந்துபோன பசுமாட்டை அப்பு றப்ப டுத்தாமல் ஏரியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்ப டுத்துகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்கமுடியாமல் மூக்கை பிடித்த படியே கடந்து செல்கின்றனர்.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இறந்து போன மாட்டை அந்த பகுதியில் இருந்து அப்பு றப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






