என் மலர்tooltip icon

    வேலூர்

    • போலீசார் விசாரணை
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மர்ம கும்பல் பைக்குகளை திருடி செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது. இது குறித்து அதிக அளவில் போலீஸ் நிலையத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் கீழ்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பவர் தனது பைக்கை கந்தனேரியில் உள்ள மணல் குவாரி அருகே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளிகொண்டா பகுதியில் இதேபோல் அடிக்கடி பைக் திருட்டு நடப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

    திருட்டை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அடிப்படை வசதிகள் செய்யக்கோரி நடத்தினர்
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி, தொரப்பாடி, 49-வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார்.

    இதில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து சாலைகளையும், கழிவுநீர் கால்வாய்களையும் சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு அதே பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கி வீடு கட்டித்தர வேண்டும். 445 ஏக்கரில் உள்ள ஏரியை தூர்வாரி சுற்றுக்கால்வாய்களை உயர்த்தி மதகுகளை உயர்படுத்தி ஏறி வடிகால் செல்லும் கால்வாய்களை சீர்படுத்த வேண்டும்.

    பொதுக் கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.குடிநீர் வசதி மற்றும் வீதிகள் தோறும் பொதுமக்கள் பயன்படுத்த போதுமான குடிநீர் பொதுக் குழாய்களை அமைத்து தர வேண்டும்.

    பொதுமக்களும் இளைஞர்களும் பயன்படுத்தும் வகையில் சமுதாயக்கூடம், நூலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும். பூங்காவை சீர்படுத்தி முதியவர்கள், மாணவர்கள், சிறுவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தொரப்பாடி ரெயில்வே கேட் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை சீரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    • வரதட்சணை கொடுமையால் விரக்தி
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பெருமாங் குப்பம், கொள்ளை மேடு பகுதியை சேர்ந்தவர் பிரதாப்.இவரது மனைவி காயத்ரி (வயது 21). இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு, ஜூன் மாதம் 6-ந் தேதி திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் பிரதாப் தனது மனைவி காயத்ரியிடம் அவர் வீட்டுக்கு சென்று வரதட்சணையாக நகை, பணம், பைக் வாங்கி வருமாறு தகராறு செய்து வந்தார்.

    குடும்ப சூழ்நிலை காரணமாக காயத்திரியின் பெற்றோரால் நகை பணத்தை கொடுக்க முடியவில்லை.

    இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதனால் விரக்தி அடைந்த காயத்ரி நேற்று வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயத்ரி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய பஸ் நிலையம் முதல் பாகாயம் வரை எச்சரிக்கை பலகை
    • தடுப்பு சுவர்களை சீரமைக்க உத்தரவு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் பழுதடைந்த சாலைகளால் ஏற்படும் விபத்துகள், முக்கிய சாலைகளில் வாகன நிறுத்தம் இல்லாத இடங்களில் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிப்பது, சாலைகளின் பக்கவாட்டில் உள்ள கால்வாய்களில் ஏற்பட்டுள்ள சேதாரங்களை சீரமைப்பது, உடைந்த நுழைவு வாயில் மூடிகளை மாற்றுவது, இடிந்த நிலையில் உள்ள சென்டர் மீடியன்கள் மற்றும் இரும்பு தடுப்பான்களை சீர்செய்வது, கழிவுநீர் வெளியேறுவதால் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

    தேசிய நெடுஞ்சா லைகளில் உள்ள அகலம் குறைவான அணுகு சாலைகளை அகலப்படுத்த வேண்டும்.

    போக்குவரத்து பணிமனை அமைந்துள்ள ரங்காபுரம் பகுதியில் உள்ள அணுகுசாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்துல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிக அளவில் எதிர் திசையில் வருவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே அந்த இடத்தில் புதிய அணுகு சாலையை அமைக்க வேண்டும்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் முதல் சங்கரன்பாளையம் வழியாக பாகாயம் செல்லும் சாலையில் முக்கிய சந்திப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் விபத்து நடைபெறும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் ஒளி எதிரொளிப்பான்கள் அமைக்க வேண்டும்.

    அபராதம்

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளால் போக்கவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, அவற்றை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

    காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி செல்வதை தவிர்க்கும் பொருட்டு காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி உள்ள பகுதிகளுக்கு செல்லும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

    பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களை ஒட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சந்திரபாபு நாயுடு கைதால் போராட்டம்
    • 160 பஸ்கள் வேலூரில் நிறுத்தி வைக்கப்பட்டன

    வேலூர்:

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர்.

    மேலும் வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஆந்திரா முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு முழு பந்த் நடந்தது.

    மாநிலம் முழுவதிலும் லாரிகள் ஊர்களின் எல்லையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதிலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    ஆந்திராவில் முழு கடையடைப்பு காரணமாக ஆந்திர, மாநில எல்லையான திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட எல்லைகளில் இன்று காலை வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டன.

    தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக திருப்பதி, காளஹஸ்தி, உள்பட ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் 160 பஸ்கள் வேலூரில் நிறுத்தி வைக்கப்பட்டன.

    இதேபோல திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    ஆந்திராவில் மதியம் 12 மணிக்குமேல் இயல்பு நிலை திரும்பியது. இதனையடுத்து வேலூர் - திருப்பதி பஸ் போக்குவரத்து 6 மணி நேரத்துக்கு பிறகு தொடங்கியது.

    இதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட ஆந்திர பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

    திருப்பதியில் இருந்து தமிழத்துக்கு 12 மணிக்கு பிறகு பஸ்கள் ஓட தொடங்கின. இதனால் தவித்த பக்தர்கள் நிம்மதி பெருமூச்சுடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

    • அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது
    • கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த அகரம் அரசு கலைக் கல்லூரியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    வேலூர், குடியாத்தம், பள்ளிகொண்டா, ஆம்பூர், ஒடுகத்தூர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மாணவர்கள் வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று வழக்கம் போல் 3 மணி அளவில் கல்லூரி விடப்பட்டது. ஒடுகத்தூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ்சில் கல்லூரி மாணவர்கள் சில பேர் ஏறினர். சில பேர் ஓடும் பஸ்சில் தான் ஏறுவோம் என்று அடம்பிடித்து நின்றனர்.

    இதனால் நீங்கள் பஸ்சில் ஏறினால் தான் நான் பஸ்சை எடுப்பேன் என்று டிரைவர் அடம்பிடித்து நிறுத்தினார். இதனால் அரை மணி நேரம் பஸ் எடுக்காமல் பயணிகள் அவதிப்பட்டனர்.

    மேலும் கல்லூரி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தி அரை மணி நேரத்திற்கு பின்பு அனைத்து மாணவர்களும் பஸ்சில் ஏறிய பின்பு பஸ் புறப்பட்டு சென்றது.

    நாள்தோறும் இவ்வாறாக அடம்பிடிக்கும் கல்லூரி மாணவர்கள் மீது பெற்றோர்களும், கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்தினர்.

    • மேய்ச்சலுக்காக விட்டிருந்த போது விபரீதம்
    • 2 மணி நேரம் போராடி மீட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 35), இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அதேபோல், சொந்தமாக மாடுகளை பராமரித்து வருகிறார்.

    இந்நிலையில், வழக்கம்போல் பசுவை நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டு இருந்தார். அப்போது, அருகே இருந்த சுமார் 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் பசு மாடு தவறி விழுந்தது.

    உடனே இதுகுறித்து அந்த பகுதி மக்கள் ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மகேஷ்வரன் தலைமையிலான வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.

    • அதிகாரி தகவல்
    • விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வருகிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 31 பள்ளிகளைச் சேர்ந்த 6,418 மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம் கோட்டம்) வேலூர் மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு போக்குவரத்துக் கழகத்தின் வேலூர் மண்டலத்தின் வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 620 அரசு, தனியார் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக், அரசு ஐ.டி.ஐ. ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் பெறுவதற்கான விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

    இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் 2-ம் கட்டமாக 31 பள்ளிகளுக்கு பூர்த்தி செய்யப்பட்ட 6,418 பஸ் பாஸ் பெறப்பட்டு, சம்ப ந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கி, மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • வழக்கு தொடுத்து எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்துள்ளது

    வேலூர்:

    காட்பாடி அடுத்த வீரபத்திரபுரம் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தை சேர்ந்த 42 பேரின் வீட்டுமனை பட்டா ஜாப்ரா பேட்டையில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு தற்காலிக பட்டா வழங்கிய நபர் தற்போது அந்த இடத்தை கொடுக்க மறுக்கிறார்.

    இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்துள்ளது.

    எனவே எங்களுக்கு சொந்தமான வீட்டுமனை பட்டாவை அளந்து கொடுக்க வேண்டும் என மனுவில் கூறி இருந்தனர்.

    • புதர் மண்டி பராமரிப்பின்றி கட்டி டங்கள் பழுதடைந்து பயனற்று கிடக்கிறது
    • வணிக வளாகம் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்படும்

    வேலூர்:

    கண்ணமங்கலம் கூட்ரோட்டில், கீழ்ப்பள்ளி ப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணமங்கலம் காவல் நிலையம் எதிரே உள்ள அரசு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் இடத்தில் பயணிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது.

    தற்போது புதர் மண்டி பராமரிப்பின்றி கட்டி டங்கள் பழுதடைந்து பயனற்று கிடக்கிறது.

    வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தை இணைக்கும் சாலையாக உள்ள, இந்த கண்ணமங்கலம் கூட்ரோட்டில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    3 வழிதடங்களை இனைக்கும் இந்த இடத்தில் பயணிகளின் நலன் கருதி, பழைய கட்டிடங்களை இடித்து விட்டு, புதிதாக பயணிகள் தங்கும் விடுதி கட்டிடம் கட்ட வேண்டு மென பொதுமக்கள் கலெக்டர் மற்றும் ஆற்காடு எம்.எல்.ஏ. ஆகியோரிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

    அதன்படி பழுதடைந்த பயணிகள் தங்கும் விடுதி கட்டிடத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது கலெக்டர் கூறுகையில்:-

    பழுதடைந்த கட்டிடங்களை சீரமைப்ப தோடு, வணிக வளாகம் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

    ஆய்வின்போது ஒன்றிய குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், மாவட்ட கவுன்சிலர் தேவி சிவா, ஊராட்சி மன்ற தலை வர்கள் சிவகுமார், விஜய பாஸ்கர், கண்ண மங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், தாசில்தார் செந்தில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • முதல் - அமைச்சர் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்
    • பந்தல், மேடை அமைக்கும் பணிகள் நடந்தது

    வேலூர்:

    வேலூர் பள்ளி கொண்டா சுங்க சாவடி அருகே வருகிற 17-ந்தேதி தி.மு.க. 75-வது ஆண்டு பவளவிழாவுடன் கூடிய முப்பெரும் விழா பிரமாண்டமாக நடக்கிறது.

    இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க.வினர் கலந்து கொள்கின்றனர். முதல் - அமைச்சர் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் பந்தக்கால் நட்டு ேமடை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து பந்தல், மேடை அமைக்கும் பணிகள் நடந்தது.

    இதில் அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், அணை க்கட்டு ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், அணைக்கட்டு மத்திய ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஹரிபிரசாத் உட்பட பல்வேறு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • நந்தகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்புத்தூர் ஊராட்சி, புதூர் கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமையான கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதனை முன்னிட்டு நேற்று காலை கிருஷ்ணருக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    மேலும் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுகளான கோலாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை, சிலம்பாட்டம் போன்றவை நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழை ப்பாளராக அணைக்கட்டு ஏம்.எல்.ஏ நந்தகுமார் கலந்துக்கொண்டு சிலம்பம் ஆடியும், கோவிலில் அருகே கட்டப்பட்டிருந்த உறி அடித்தும் விளையாடினார்.

    பின்னர் கிருஷ்ணர் ஊஞ்சல் உற்சவத்தை தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தார்.

    இதனை தொடர்ந்து நடந்த சாமி திருவீதி உலாவில் புதூர், சோழவரம், பாப்பாந்தோப்பு, காட்டுப்புத்தூர், பென்னாத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்ப்பட்ட கிரா மத்தினர் கலந்துக்கொண்டு கிருஷ்ண ஜெயந்தி தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    விழாவில் கணியம்பாடி ஒன்றியகுழு துணை தலைவர் கஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சசிகலாகோபி, பென்னாத்தூர் பேரூராட்சி செயலாளர் அருள்நாதன், பேரூராட்சி தலைவர் பவானிசசிகுமார், பேரூராட்சி துணை தலைவர் ஜீவசத்தியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×