என் மலர்tooltip icon

    வேலூர்

    • தமிழ் இலக்கிய திறனறித் தேர்வு
    • வருகிற 20-ந் தேதி கடைசி நாள்

    வேலூர்:

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பி யாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்குபெறுகின்றனர்.

    அதேபோல் தமிழ்மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்தி க்கொள்ளும் வகையில் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது.

    இந்த தேர்வில் கலந்து கொள்ள 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வி த்துறை வழியாக மாதம் ரூ.1,500 வீதம் 2 வருடங்க ளுக்கு வழங்கப்படும்.

    இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தமிழ்நாடு அரசின் 10ம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்க ளிலும் மாவட்ட தலைந கரங்களில் இந்த தேர்வு நடக்கும். அதன்படி இந்த ஆண்டு தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி நடக்கிறது.

    இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அரசு பள்ளி, சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி. உள்பட பிளஸ்-1 வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் மாணவர்கள் விண்ணப்பங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து, வருகிற 20-ந் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
    • குடிநீர் உள்ளிட்ட பணிகள் பகுதி வாரியாக நடைபெறும்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

    நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    கதிர் ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி, ஒப்பந்ததாரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இதுவரை 4 முறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதுவரை வேலூர் மாநகராட்சியில் நிறைவான பணிகள் எதுவும் நடக்கவில்லை.

    பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    இனி ஒவ்வொரு மாதமும் 6-ந் தேதி மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்படும். அடுத்த கூட்டத்திற்குள் மாநகராட்சியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிகள் பகுதி வாரியாக நடைபெறும்.

    காவேரி மேலாண்மை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணை நடக்க இருந்தது. கர்நாடக அரசு அவசரமாக விசாரிக்க தேவையில்லை என கூறியதை தொடர்ந்து, வழக்கு வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைக்க ப்பட்டுள்ளது. அன்று நடக்கும் விசாரணையில் தமிழகத்தின் வாதங்களை முன்வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.4 கோடியில் பணிகள் திவிரம்
    • ``ஐ லவ் வேலூர்'' செல்பி பாயிண்ட் அமைகிறது

    வேலூர்:

    வேலூர் கண்டோ ன்மென்ட் ரெயில் நிலையம் ரூ.4 கோடியில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 7 மாதங்களில் நிறைவுபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கண்டோன்மென்ட் ரெயில் நிலையம்

    மத்திய அரசு அம்ரித் பாரத் ரெயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் புதுப்பிக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்க ப்பட்டது. தற்போது ரெயில் நிலையம் புதுப்பிக்கும் முதற்கட்ட பணிகள் தொடங்க ப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ரெயில் நிலைய அதிகாரிகள் கூறுகையில்:-

    வேலூர் கண்டோன்மெ ன்ட் ரெயில் நிலைய நுழைவுவாயில் பழைய கட்டிடம் அகற்றப்பட்டு, புதிதாக 25 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை போன்ற முகப்பு தோற்றத்துடன் கூடிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    மேலும் முதலாவது நடைமேடையில் முன்பதிவு பயணிகள் காத்திருக்கும் அறையின் அருகே இருந்து 32 மீட்டர் நீளம், 8 மீட்டர் அகலத்தில் புதிதாக மேற்கூரை அமைக்கப்ப டுகிறது. ஆண்கள், பெண்களுக்கு குளியல் அறை வசதிகளுடன் நவீன கழிப்ப றைகள் கட்டப்பட உள்ளது.

    ரெயில் நிலையத்தின் உள்பகுதி மற்றும் உயர்மட்ட நடைமேடை, படிக்கட்டுகளில் கிரானைட் கற்கள் பதிக்கப்படுகிறது. ரெயில் நிலைய கட்டிடங்களில் உள்ள மரக்கட்டைகளால் ஆன ஜன்னல்கள் அகற்றப்பட்டு, அவற்றை விட பெரிய அளவில் கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட உள்ளது.

    செல்பி பாயிண்ட்

    செல்பி பாயிண்ட் ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் ஐ லவ் வேலூர் என்ற செல்பி பாயிண்டும், ரெயில் நிலைய வளாகத்தில் புல்தோட்டமும், கார் மற்றும் இருசக்கர வாகன ங்களுக்கு தனித்தனியாக பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்த ப்படுகிறது.

    மேலும் கண்காணிப்பு கேமராக்கள், வண்ண, வண்ண மின்விளக்குகளால் கட்டிடம் அலங்கரிக்கப்பட உள்ளது. இந்த பணிகள் 7 மாதங்களில் முடிக்க திட்டமிட ப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரெயில் நிலைய நுழைவு வாயில் கட்டிடம் இடித்து அகற்றும் பணிகள் நடந்து வருகிறது என்று கூறினர்.

    • கிளீனர் உடல் நசுங்கி சாவு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    பீகார் மாநிலம், கான்புராவை சேர்ந்தவர் மோதிலால் குமார் (வயது 35).இவர் லாரி கிளினியராக வேலை செய்து வந்தார்.

    நேற்று மாலை சென்னையில் இருந்து லாரியில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு பீகாரை சேர்ந்த டிரைவர் ஒருவர் லாரியை பெங்களூருக்கு ஓட்டி வந்தார்.

    இந்த லாரியில் மோதிலால் குமார் கிளீனராக இருந்தார்.

    இன்று அதிகாலை 2.30 மணி அளவில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் லாரி சென்று கொண்டு இருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் லாரி மோதியது.

    இந்த விபத்தில் கிளீனியர் மோதிலால் குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இருந்த மோதிலால் குமார் பிணத்தை மீட்டு பரிசோத னைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    லாரியை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • பக்கத்து நிலத்துகாரின் பசு மாடு முட்டியதில் இறந்ததாக புகார்
    • நஷ்ட ஈடு பெற்று தர வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த பள்ளகொள்ளை கிராமத்தை சேர்ந்த வர் குமாரசாமி, விவசாயி. இவர் சொந்தமாக பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த பசுமாடு தற்போது 8 மாத சினையாக இருந்தது.

    பசுமாட்டை கடந்த 1-ந் தேதி குமாரசாமி கோட்டையூர் ஏரியில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்துவிட்டு அணைக்கட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அங்கிருந்த பள்ளத்தில் பசுமாடு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து குமாரசாமி அணைக்கட்டு போலீசில், பனந்தோப்பு பட்டியைச் சேர்ந்த பக்கத்து நிலத்துகாரின் பசு மாடு முட்டியதில் தனது பசுமாடு இறந்ததாகவும், அதற்கு நஷ்ட ஈடு பெற்று தர வேண்டும் எனவும் புகார் கொடுத்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நிவாரணம் கிடைக்கும் வரை இறந்த பசுமாட்டை அப்புறப்படுத்த உரிமையாளர் மறுப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    6 நாட்கள் ஆகியும் இறந்துபோன பசுமாட்டை அப்பு றப்ப டுத்தாமல் ஏரியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்ப டுத்துகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்கமுடியாமல் மூக்கை பிடித்த படியே கடந்து செல்கின்றனர்.

    பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இறந்து போன மாட்டை அந்த பகுதியில் இருந்து அப்பு றப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தாசில்தாருடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம்
    • குறை தீர்வு கூட்டத்தில் பரபரப்பு

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. தாசில்தார் வேண்டா தலைமை தாங்கினார். துணை தாசில்தார் திருகுமரேசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசுகையில்:- கடந்த மாதம் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் சாதாரண விவசாயிகள் ஆடு, மாடு கொட்டகைகளை மற்றும் வீடு உள்ளிட்டவை கேட்டு மனு அளித்தனர். இதனை பி.டி.ஓ.க்கள் கண்டு கொள்ளவில்லை. ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு மட்டுமே அடிப்படை வசதிகள் ஆடு, மாடு கொட்டகைகளை ஒதுக்கீடு செய்கின்றன.

    இது குறித்து பி.டி.ஓ.க்கள் அடுத்த கூட்டத்தில் வந்து பதில் சொல்ல வேண்டும். இல்லையென்றால் கூட்டத்தை நடத்த விடாமல் பி.டி.ஓ. அலுவலகத்திற்கு பூட்டு போட்டு விடுவோம். பி.டி.ஓ.க்களுக்கு அழைப்பு விடுத்திருந்தும் கூட அவர்கள் ஏன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை? என கேட்டு விவசாயிகள் தாடில்தாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பி.டி.ஓ.க்கள் வந்து பதில் சொல்லும் வரை கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என வலியுறுத்தினர்.

    இதனையடுத்து பி.டி.ஓ.க்களிடம், தாசில்தார் வேண்டா செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது அவர்கள், வேலூரில் நடக்கும் கூட்டத்திற்கு சென்று விட்டதாக கூறினர். இதனை அடுத்து துணை பி.டி.ஓ.க்கள் லோகநாதன், சதீஷ்குமார் ஆகியோர் வேக வேகமாக வந்து கூட்டத்தில் பங்கேற்றனர். இதை தொடர்ந்து கூட்டம் நடந்தது. அப்போது தாசில்தார் வேண்டா பேசுகையில்:-

    கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிகாரிகள் குறித்து (அட்டனன்ஸ்) வருகை பதிவேடு பின்பற்றப்பட்டு, கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று வருகை தராத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்

    கூட்டத்தில் விவசாயிகள், தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மை துறையில் 100 சதவீதம் மானியத்துடன் இலவசமாக கொடுக்கப்படும் திட்டத்தை செயல்படுத்த பயனாளி களிடமிருந்து, அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும் அதனை முழுமையாக தடுக்க வேண்டும் என தாசில்தாரிடம் மனு வழங்கினர்.

    இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    • சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தி வருகின்றனர்
    • திருப்பத்தூர் கலெக்டர் தகவல்

    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் யாருக்கும் பன்றி காய்ச்சல் இல்லை என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பன்றி காய்ச்சல்

    வாணியம்பாடியில் ஒருவர் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப் பட்டு இறந்ததை தொடர்ந்து வாணியம்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகு திகளில் உள்ள பொதுமக்க ளுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் பன்றிக்காய்ச்சல் இல்லை.

    இந்த பரிசோதனை வாலாஜாவில் உள்ள பொது சுகாதாரத்துறை பரிசோ தனை கூடத்தில் செய்யப்பட் டது. வாணியம்பாடியில் உயிர் இழந்த நபர் கடந்த சில வாரங்களாக கல்லீரல் சுருக் கம் நோய் உள்ளிட்ட பல் வேறு நோய்களுக்கு சென் னையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    மேலும் அவர் பல்வேறு கோவில்கள், நகரங் களுக்கு சென்றது தெரியவந் தது. ஆகவே அவருக்கு பய ணத்தினால் வெளியூர்களில் வைத்து தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்புகள் அதிகம். பன்றிக்காய்ச்சல் குறித்து வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்த பொதுமக் கள் அச்சப்பட தேவை யில்லை. அங்கு சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தி வருகின்றனர்.

    நியூடவுன் பகுதி முழுவதும் பிளிச்சிங் பவுடர், கிருமிநா சினி தெளிக்க நகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பன்றிக்காய்ச்சலுக்கு வழங் கப்படும் மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு உள்ளது. தேவைப்படுபவர்க ளுக்கு மாத்திரை வினியோ கம் செய்யப்படும்.

    பொதுமக்களும் வெளியே வரும்போது முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், ஒரே இடத்தில் அதிகம் பேர் கூடு வதை தவிர்த்தல் உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

    • மாவட்ட வன அலுவலர் தகவல்
    • அழகான நீர்வீழ்ச்சி உள்ளது

    வேலூர்:

    வேலூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமிர்தி வன உயிரின பூங்கா உள்ளது. ஜவ்வாது மலைத் தொடரில் சிறிய விலங்குகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்தப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், குள்ளநரி, குரங்குகள், சிவப்புத் தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப் பாம்புகள் உள்ளன.

    அடர்ந்து வளர்ந்த மரங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களை ரசிக்கலாம். அழகான நீர்வீழ்ச்சியும் உள்ளது.

    மழைக்கா லங்களில் மட்டுமே நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். மலை யேற்றத்திலிருந்து, நீர்வீழ்ச்சியைக் காணலாம். நீர்வீழ்ச்சியில் குளிக்க தற்போது போது அனுமதியில்லை. புதை மணல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

    செவ்வாய்க்கிழமை மட்டும், அமிர்தி பூங்காவுக்கு விடுமுறை. அன்று ஒரு நாள், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படு கின்றன.

    ஞாயிறு உட்பட மற்ற அனைத்து நாட்களும், பூங்காவில் பொழுதைக் கழிக்கலாம்.

    இந்த பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.10, சிறுவர்களுக்கு ரூ.5, பைக்குகளுக்கு ரூ.25, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.50 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அமிர்தி சிறுவன உயிரின பூங்காவில் நுழைவு கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமும், சிறியவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.50, தங்கும் அறைக்கு பெரியோர்களுக்கு ரூ.250 குழந்தைகளுக்கு ரூ.100 என கட்டணம் உயர்த்தப்ப ட்டுள்ளது.

    மேலும் இந்த கட்டண முறை இன்று முதல் அமலுக்கு வந்ததாக மாவட்ட வன அலுவலர் கலாநிதி தெரிவித்தார்.

    • கலெக்டர் தகவல்
    • ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த ஆணை

    வேலூர்:

    கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்த்து வேலை வாய்ப்பு வழங்கப்படும் அல்லது தொழில் முனைவோராக உருவாக்கப்படும்.

    பயிற்சியில் சேருபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் பயிற்சி காலம் முடியும் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கைத்தறிகளை இயக்குவதற்கு தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் www.loomworld.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க லாம் அல்லது வருகிற 14-ந் தேதி குடியாத்தம் ஸ்ரீபாலாஜி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெறும் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

    இந்த தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
    • புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்க பள்ளிகளில் இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது கம்மவா ர்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் கலெக்டர் காலை உணவை பார்வை யிட்டு ஆய்வு செய்ததோடு, மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

    மேலும் மாணவர்களிடம் உணவு எப்படி இருக்கு? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த கலெக்டர், காலை உணவு திட்டத்தில் ஏதாவது குறைபாடுகள் கண்டாலோ அல்லது புகார்கள் வந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    • பிரியா உண்மையிலேயே அவர்களது மகள் தான் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அவரிடம் ஒப்படைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
    • தன்னை பெற்றோருடன் சேர்த்த அதிகாரிகள் அனைவருக்கும் கை கூப்பி நன்றி தெரிவித்தபடி பிரியா பெற்றோருடன் சொந்த ஊருக்கு சென்றார்.

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. மரம் வெட்டும் தொழிலாளி.

    இவருடைய மனைவி சின்னபாப்பா. தம்பதிக்கு 5 மகன், 5 மகள் உள்ளனர். இவர்கள் வீட்டில் கடைக்குட்டி மகள் பிரியா.

    கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருடன் வெளியே சென்றபோது பிரியா திடீரென காணாமல் போனார். மகளை பல்வேறு இடங்களில் அவரது பெற்றோர் தேடினர். அவர்களிடம் பிரியாவின் போட்டோ எதுவும் இல்லை. மேலும் போலீசிடம் புகார் கொடுக்கக்கூடிய விவரமும் தெரியவில்லை. அதனால் உள்ளுக்குள் அழுது துடித்தனர்.

    தினந்தோறும் மகளை எண்ணி அவர்கள் தவித்தனர்.

    இதற்கிடையே 6 வயது சிறுமியாக இருந்த பிரியாவை மீட்ட பெண் ஒருவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்தார்.

    அந்த காப்பகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது உரிமம் இன்றி இயங்கியது தெரிய வந்தது.

    இதையடுத்து குழந்தைகள் நலகுழுவினர் பிரியாவை மீட்டு வேலூர் அல்லாபுரத்தில் உள்ள பிற்காப்பு இல்லத்தில் தங்க வைத்தனர். அங்கு வளர்ந்த அவர் 10-ம் வகுப்பு வரை படித்தார்.

    பெற்றோரை விட்டு பிரிந்த பிரியாவுக்கு அவரது பெற்றோரின் பெயர் நன்றாக தெரிந்தது. இதனால் தனக்கு பெற்றோர் இருப்பதாக அடிக்கடி காப்பகத்தில் உள்ள அதிகாரியிடம் தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரது சொந்த ஊரும் அவருக்கு நினைவுக்கு வந்தது. இது குறித்து காப்பக மேலாளரிடம் கூறினார்.

    இதையடுத்து அதிகாரிகள் பிரியாவின் சொந்த ஊருக்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து தகவல் தெரிவித்தனர். அதனை கேட்டு அவர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர். மகளை உடனடியாக பார்க்க வேண்டும் என ஓடோடி வந்தனர்.

    பிரியா உண்மையிலேயே அவர்களது மகள் தான் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அவரிடம் ஒப்படைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

    இதனைத் தொடர்ந்து பிரியாவின் பெற்றோர்களான ஏழுமலை, சின்னபாப்பா மற்றும் பிரியாவிற்கு கடந்த 2021-ம் ஆண்டு டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது.

    அதன்முடிவில் பிரியாவின் தந்தை ஏழுமலை என்று தெரிய வந்தது.

    இது குறித்து முறையாக வேலூர் கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோர்ட்டு உத்தரவின் பேரில் பிரியாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர்.

    நேற்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் முன்னிலையில் பிரியா பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    அப்போது பெற்றோர் பிரியாவை கட்டி அணைத்து அழைத்துச் சென்றனர். அவர்கள் அனைவரது முகத்திலும் ஆனந்த கண்ணீருடன் மகிழ்ச்சியை காண முடிந்தது.

    தன்னை பெற்றோருடன் சேர்த்த அதிகாரிகள் அனைவருக்கும் கை கூப்பி நன்றி தெரிவித்தபடி பிரியா பெற்றோருடன் சொந்த ஊருக்கு சென்றார்.

    வீட்டுக்கு சென்றதும் பிரியாவை அவரது உறவினர்கள் திரண்டு வரவேற்று அழைத்து சென்றனர். இது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.

    9 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் சேர்ந்த பிரியா கூறியதாவது :-

    6 வயதில் நான் எப்படி மாயமானேன் என்பது எனக்கு நினைவு இல்லை.

    அப்போது எனது பெற்றோர், ஊர் விவரங்களை சொல்லவும் எனக்கு தெரியவில்லை. ஆனால் அது என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. சோளிங்கரில் உள்ள தனியார் காப்பகத்தில் வளர்ந்தேன். அங்கிருந்தவர்கள் என்னை படிக்க வைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டேன். அப்போது எனக்கு ஓரளவு விவரம் தெரியவந்தது.

    அங்கிருந்த அதிகாரிகளிடம் எனக்கும் குடும்பம் இருக்கிறது. எனது பெற்றோர் பெயர் தெரியும் ஊர் தெரியும் என கூறினேன்.

    அவர்கள் அது பற்றி விவரங்களை கேட்டனர். நானும் கூறினேன்.

    இதை தொடர்ந்து எனது பெற்றோர் குறித்த விவரங்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அவர்களை தேட ஆரம்பித்தனர்.

    காப்பகத்தில் மற்ற குழந்தைகளை பார்க்க அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் வருவார்கள்.

    அதனை பார்க்கும்போது நமக்கும் குடும்பம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே கடவுளே என்னை எப்படியாவது என் பெற்றோரிடம் சேர்த்துவிடு என அழுது புலம்புவேன்.

    அவர்கள் நினைவில் வாடினேன். நான் தினந்தோறும் வேண்டாத தெய்வம் இல்லை.

    என்னை எப்படியாவது என்னை பெற்றோருடன் சேர்த்து விடுங்கள் என தினந்தோறும் அதிகாரிகளும் கூறிக்கொண்டே இருப்பேன்.

    அதிகாரிகளும் தீவிரமாக தேட தொடங்கினர். ஒரு வழியாக எனது பெற்றோரை கண்டு பிடித்தனர்.

    டி.என்.ஏ. பரிசோதனைக்கு பிறகு நான் பெற்றோருடன் சேர்ந்துள்ளேன். நான் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறேன்.

    என்னுடன் பிறந்தவர்களில் 7 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. இன்னும் 2 அண்ணன்கள் மட்டுமே திருமணமாகாமல் உள்ளனர். வீட்டில் உள்ள நல்ல காரியங்களில் கூட பங்கேற்க முடியாமல் போய்விட்டது.

    எனது பெற்றோரும் என்னை பல ஆண்டுகள் தேடியுள்ளனர். கடவுள் அனுக்கிரகத்தால் மீண்டும் சேர்ந்து விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊழல் நடந்ததாக முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தார்.
    • பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தார்.

    பல்கலைக்கழகத்தில் சுமார் ரூ.112 கோடிக்கு நிதி நிர்வாக முறைகேடுகள், நடந்ததாகவும் பல்கலைக்கழகத்திற்கு கொள்முதல் செய்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படுத்த தன்மை சட்டத்தை மீறி பல்கலைக்கழகத்திற்கு பண இழப்பு ஏற்படுத்தியது, மற்றும் பல்கலைகழக தேர்வு முறைகேடு உள்ளிட்டவைகள் குறித்து புகார் அளிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் இன்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் விசாரணை நடத்தினார்.

    மேலும், மனுதாரரான முன்னாள் பேராசிரியர் இளங்கோவனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில், பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ×