காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு

உணவு எப்படி இருக்கு? என்பது குறித்து கேட்டறிந்தார் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்
காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு
Published on

அணைக்கட்டு:

வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள சாத்துமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் கலெக்டர், எம்.எல்.ஏ. உள்ளிட்டோர், மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். அப்போது கலெக்டர் மாணவர்களிடம் உணவு எப்படி இருக்கு? என்பது குறித்து கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த கலெக்டர், காலை உணவு திட்டத்தில் ஏதாவது குறைபாடுகள் கண்டாலோ அல்லது புகார்கள் வந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதில் ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சு மிராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com