search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் தீக்குளித்து தற்கொலை
    X

    பெண் தீக்குளித்து தற்கொலை

    • கணவருடன் அடிக்கடி தகராறு
    • போலீசார் விசாரணை

    வேலூர்,

    காட்பாடி அடுத்த மேல்பாடி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ரஞ்சனி. இவரது கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரஞ்சனி கடந்த 27-ந்தேதி தனக்குத்தானே மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சனி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குடியாத்தம் மேல்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×