என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க.வினர் மனு"

    • சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • சமூக வலைதளங்களில் உள்ள அவரது பேச்சை நீக்க வேண்டும்

    வேலூர்:

    முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதாவை பொது மேடையில் அவதூறாக பேசியதாக கூறி அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார் தலைமையில் வேலூர் எஸ்.பி அலுவ லகத்தில் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் ஐ லியோனி சென்னையில் பொது மேடையில் வெறுப்பு ணர்வை தூண்டும் விதமாகவும் இரு பிரிவின ருடைய மோதல் உருவாகும் விதமாகவும் பெண்மைக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவும் பேசி உள்ளார்.

    அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதேபோல் அவருடைய யூடியூப் சேனலிலும் வெளியிடப்பட்டுள்ளது எனவே ஐ.லியோனி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் உள்ள அவரது பேச்சை நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    அவருடன் வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, பொருளாளர் மூர்த்தி, தகவல் ெதாழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலர் ராஜன் மற்றும் திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    ×