என் மலர்
வேலூர்
வேலூரில் கண்ணாடி துண்டுகளுடன் உணவு பரிமாறிய ஓட்டலில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த ஓட்டலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அவரது பெற்றோர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்தினர். அதன்பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற இரு வீட்டாருக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது.
இரு வீட்டினர் மற்றும் உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் உணவு சாப்பிட்டனர். அப்போது இலையில் கண்ணாடி துகள்கள் மற்றும் துண்டுகள் இருந்தன. இதனை சாப்பிட்ட 6 பேர் பாதிப்படைந்ததாக கூறப்படுகிறது.
உணவு சமைக்கும்போது சமையல் கூடத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த டியூப்லைட் உடைந்து பாத்திரத்தில் விழுந்துள்ளதை ஓட்டல் நிர்வாகத்தினர் கவனிக்காததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடத்தியவர்கள் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று காலை அந்த ஓட்டலில் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ‘திடீர்’ ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஓட்டலில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த ஓட்டலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்தனர். இதனிடையே சமையல் அறையில் இருந்த டியூப் லைட்களை ஓட்டல் நிர்வாகம் அப்புறப்படுத்தி விட்டு பிளாஸ்டிக்கால் ஆன மின் விளக்குகளை மாற்றியது.
மேலும், உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் சோதனை செய்தனர். அப்போது ஓட்டலில் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் காலாவதியானதாக இருந்தது கண்டறியப்பட்டது. அப்போது அவர்கள் உணவு மாதிரிகளையும் சேகரித்தனர், ஆய்வில் கண்டறியப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று நிர்வாகத்திடம் அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஓட்டலுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு 15 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஆய்வு செய்து, குறைகள் நிவர்த்தி செய்யாமல் இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாப்பாடு கொடுக்காமல், கவனிக்காததால் மகன்களுக்கு எழுதி கொடுத்த ரூ.1 கோடி சொத்துக்கள் மீட்டு மீண்டும் முதியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகோபால் (வயது82). இவருக்கு ரூபசுந்தரி, மலர்விழி, லலிதா ஆகிய மகள்களும், கருணாகரன், வெங்கடேசன், வேல்முருகன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
கடந்த 2008-ம் ஆண்டு ரேணுகோபாலின் மனைவி கோமளேஸ்வரி இறந்துவிட்டார்.
ரேணுகோபால் ரைஸ்மில் நடத்தி அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையே ரேணுகோபாலுக்கு வயது முதிர்வு காரணமாக, அவரது மகன்கள் உங்களை நாங்கள் அனைவரும் சேர்ந்து நல்லமுறையில் பார்த்து கொள்வோம் எனக்கூறி, ரூ.1 கோடி மதிப்பிலான ரைஸ்மில், வீடு, நிலம் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் தானசெட்டில்மெண்ட்டாக எழுதி வாங்கி கொண்டனர்.
ஆனால் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்ட பிறகு 3 மகன்களும், தந்தை ரேணுகோபாலை சரிவர கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. உணவு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் துன்புறுத்தி, வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.
இதையறிந்த 3 மகள்களும், தங்களது தந்தை ரேணுகோபாலை கவனித்து வந்துள்ளனர். இதற்கிடையே சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு துரத்தியதால், மகன்களுக்கு எழுதிக்தொடுத்த தானசெட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து மீண்டும் தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து தரும்படி வேலூர் உதவி கலெக்டர் கணேஷிடம் ரேணுகோபால் புகார் செய்தார்.
அதன்பேரில்உதவி கலெக்டர் கணேஷ், 3 மகன்களையும் அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது 3 மகன்களும் தந்தை ரேணுகோபாலிடமிருந்து சொத்தை எழுதி வாங்கி கொண்டு பராமரிக்காமல் பரிதவிக்கவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து பெற்றோர் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் பிரிவு 4(1) மற்றும் 23(1) கீழ் 3 மகன்களுக்கு எழுதிக்கொடுத்த அனைத்து சொத்துக்களையும் ரத்து செய்து மீண்டும் ரேணுகோபால் பெயருக்கே மாற்றிட உத்தரவிட்டார்.
அதற்கான ஆவணங்களை உதவி கலெக்டர் கணேஷ் ரேணுகோபாலிடம் வழங்கினார்.
இது தொடர்பாக உதவி கலெக்டர் கணேஷ் கூறியதாவது:-
சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்ட பின்னர், பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோர்கள், எந்தநேரமும் தனது அலுவலகத்தை அணுகி புகார் அளிக்கலாம்.
மேலும் நேரில் வரமுடியாதவர்கள் பதிவு தபால் மூலமாகவும் புகார்களை அனுப்பலாம். புகார் மீது உரிய விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்று வேலூர் மாவட்டத்தில் இதுவரை 35 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 2 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.
அதேநேரம், சொத்தை மீட்டு ஒப்படைக்கப்பட்ட பெற்றோருக்கு அவர்களின் பிள்ளைகளாலும், மற்றவர்களாலும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு அளிக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகோபால் (வயது82). இவருக்கு ரூபசுந்தரி, மலர்விழி, லலிதா ஆகிய மகள்களும், கருணாகரன், வெங்கடேசன், வேல்முருகன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
கடந்த 2008-ம் ஆண்டு ரேணுகோபாலின் மனைவி கோமளேஸ்வரி இறந்துவிட்டார்.
ரேணுகோபால் ரைஸ்மில் நடத்தி அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையே ரேணுகோபாலுக்கு வயது முதிர்வு காரணமாக, அவரது மகன்கள் உங்களை நாங்கள் அனைவரும் சேர்ந்து நல்லமுறையில் பார்த்து கொள்வோம் எனக்கூறி, ரூ.1 கோடி மதிப்பிலான ரைஸ்மில், வீடு, நிலம் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் தானசெட்டில்மெண்ட்டாக எழுதி வாங்கி கொண்டனர்.
ஆனால் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்ட பிறகு 3 மகன்களும், தந்தை ரேணுகோபாலை சரிவர கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. உணவு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் துன்புறுத்தி, வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.
இதையறிந்த 3 மகள்களும், தங்களது தந்தை ரேணுகோபாலை கவனித்து வந்துள்ளனர். இதற்கிடையே சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு துரத்தியதால், மகன்களுக்கு எழுதிக்தொடுத்த தானசெட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து மீண்டும் தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து தரும்படி வேலூர் உதவி கலெக்டர் கணேஷிடம் ரேணுகோபால் புகார் செய்தார்.
அதன்பேரில்உதவி கலெக்டர் கணேஷ், 3 மகன்களையும் அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது 3 மகன்களும் தந்தை ரேணுகோபாலிடமிருந்து சொத்தை எழுதி வாங்கி கொண்டு பராமரிக்காமல் பரிதவிக்கவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து பெற்றோர் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் பிரிவு 4(1) மற்றும் 23(1) கீழ் 3 மகன்களுக்கு எழுதிக்கொடுத்த அனைத்து சொத்துக்களையும் ரத்து செய்து மீண்டும் ரேணுகோபால் பெயருக்கே மாற்றிட உத்தரவிட்டார்.
அதற்கான ஆவணங்களை உதவி கலெக்டர் கணேஷ் ரேணுகோபாலிடம் வழங்கினார்.
இது தொடர்பாக உதவி கலெக்டர் கணேஷ் கூறியதாவது:-
சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்ட பின்னர், பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோர்கள், எந்தநேரமும் தனது அலுவலகத்தை அணுகி புகார் அளிக்கலாம்.
மேலும் நேரில் வரமுடியாதவர்கள் பதிவு தபால் மூலமாகவும் புகார்களை அனுப்பலாம். புகார் மீது உரிய விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்று வேலூர் மாவட்டத்தில் இதுவரை 35 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 2 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.
அதேநேரம், சொத்தை மீட்டு ஒப்படைக்கப்பட்ட பெற்றோருக்கு அவர்களின் பிள்ளைகளாலும், மற்றவர்களாலும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு அளிக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூரில் உள்ள ஓட்டலில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் கண்ணாடி துண்டுகள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியை அவரது குடும்பத்தினர் சத்துவாச்சாரி மாவட்ட அறிவியல் மையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடத்தினர். அதில் இரு வீட்டாரும் கலந்து கொண்டனர். காலையில் நிச்சயதார்த்தம் முடிந்ததும் அந்த ஓட்டலில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் இரு வீட்டினர் மற்றும் உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் உணவு சாப்பிட்டனர். அப்போது ஒருவரது இலையில் கண்ணாடி துகள்கள் மற்றும் துண்டுகள் இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஓட்டல் நிர்வாகத்தினரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்கள் முறையான பதிலை தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே உணவு சாப்பிட்ட 6 பேருக்கு வயிறு, தொண்டை பகுதியில் எரிச்சல் மற்றும் வலி இருந்ததால் அவர்கள் வேலூரில் உள்ளள தனியார் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக சென்றனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிலரும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெண் வீட்டார் கூறுகையில், ஓட்டலில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிடும் போது இலையில் கண்ணாடி துண்டுகள் காணப்பட்டது. அந்த கண்ணாடி துண்டுகள் அனைத்தும் டியூப் லைட்டில் இருந்து உடைந்த பாகங்கள். ஓட்டல் சமையல் அறையில் இருந்த டியூப்லைட் உடைந்து உணவில் விழுந்துள்ளது. இதனை ஓட்டல் ஊழியர்கள் கவனிக்கவில்லை. அவர்கள் அலட்சியமாக பதில் தெரிவித்தனர் என்றனர்.
பின்னர் நிச்சயதார்த்தம் நடத்திய குடும்பத்தினர் சார்பில் ஓட்டல் நிர்வாகம் மீது வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
குடியாத்தம் அருகே அண்ணன் தம்பியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் அருகே அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 32), மெக்கானிக், இவரது தம்பி சரவணன் (29), லாரி டிரைவர். கடந்த தீபாவளியன்று இவர்கள் வீட்டிற்கு அருகே வசிக்கும் பிரபாகரன் (33) என்பவர் பட்டாசு வெடித்துள்ளார். அந்த பட்டாசுகள் சுந்தரராஜன் வீட்டில் போய் விழுந்துள்ளது, இதனால் சுந்தரராஜன் தரப்பிற்கும் பிரபாகரன் தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரபாகரன் தரப்பினர் சுந்தர்ராஜன் மற்றும் சரவணனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் சுந்தர்ராஜன் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன், அவரது தம்பி புஷ்பராஜ் (21), இவர்களின் உறவினர் ஹேமநாதன் (30) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குடியாத்தம் அருகே தாய் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து மிரட்டி நர்சை 6 ஆண்டுகளாக சித்ரவதை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் (25 வயது) இளம்பெண். இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் 38 வயது வாலிபர் கூலிவேலை செய்து வருகிறார்.
அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணின் தாயார் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அதை இளம்பெண்ணிடம் காட்டி, இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவேன் என மிரட்டி இளம்பெண்ணை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
6 ஆண்டுகளாக தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் அடிக்கடி மிரட்டி பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து அவர் இளம்பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் மிரட்டி வந்துள்ளார். இதனால் பயந்துபோன இளம்பெண் இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாரிடம் புகார் அளித்தார்.
அவரது உத்தரவின்பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
இளம்பெண்ணின் குடும்பத்தினர் இரும்பு கம்பியால் தாக்கியதாகவும், இதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றதாகவும், குடியாத்தம் டவுன் போலீசில் வாலிபர் புகார் அளித்தார்.
அதேபோன்று தங்களை கத்தியால் வெட்டியதாக இளம்பெண்ணின் குடும்பத்தினர் வாலிபர் மீது புகார் அளித்தனர்.
இந்த புகார்களின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் (25 வயது) இளம்பெண். இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் 38 வயது வாலிபர் கூலிவேலை செய்து வருகிறார்.
அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணின் தாயார் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அதை இளம்பெண்ணிடம் காட்டி, இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவேன் என மிரட்டி இளம்பெண்ணை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
6 ஆண்டுகளாக தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் அடிக்கடி மிரட்டி பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து அவர் இளம்பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் மிரட்டி வந்துள்ளார். இதனால் பயந்துபோன இளம்பெண் இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாரிடம் புகார் அளித்தார்.
அவரது உத்தரவின்பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
இளம்பெண்ணின் குடும்பத்தினர் இரும்பு கம்பியால் தாக்கியதாகவும், இதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றதாகவும், குடியாத்தம் டவுன் போலீசில் வாலிபர் புகார் அளித்தார்.
அதேபோன்று தங்களை கத்தியால் வெட்டியதாக இளம்பெண்ணின் குடும்பத்தினர் வாலிபர் மீது புகார் அளித்தனர்.
இந்த புகார்களின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு விழிப்புணர்வு முகாமை வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.
வேலூர்:
வேலூர் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு வேலூர் கோட்ட கண்காணிப்பாளர் கோமல்குமார் தலைமை தாங்கினார். வேலூர் தலைமை தபால் அதிகாரி இந்திரகுமாரன், பள்ளி கல்வித்துறை துணை ஆய்வாளர் மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில், தபால்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு காப்பீடு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாம் வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.
முகாமில், அஞ்சல் அதிகாரிகள் ராஜகோபாலன், ஆனந்தன், அஞ்சல் ஆய்வாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அஞ்சல் தொடர்பு அலுவலர் செல்வகுமார் நன்றி கூறினார்.
வேலூர் அருகே வாலிபர் சாவில் சந்தேகம் இருப்பதாகக்கூறி உடலை வாங்கமறுத்து, அடுக்கம்பாறை மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அடுக்கம்பாறை:
வேலூர் அடுக்கம்பாறையை அடுத்த ஆற்காட்டான் குடிசை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவருடைய மகன் ரஞ்சித் (வயது 26). இவர் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரஞ்சித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரஞ்சித்துக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக தகராறு நடந்துள்ளது. இந்த நிலையில் ரஞ்சித் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுதொடர்பாக ரஞ்சித்தின் உறவினர்கள் வேலூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர். அதில் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.
நேற்று காலை 11 மணி அளவில் ரஞ்சித்தின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். ரஞ்சித் சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை ரஞ்சித்தின் உடலை வாங்க மாட்டோம் என கூறி அவர்கள் வேலூர்- திருவண்ணாமலை சாலையில் மறியல் செய்தனர்.
தகவலறிந்த வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கும் வழியில்லாதபடி வாகனங்கள் வரிசையாக நின்றது. இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டிலை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டார். இதில், 12 லட்சத்து 34 ஆயிரத்து 864 வாக்காளர்கள் உள்ளனர்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் வேலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6 லட்சத்து 109 ஆண்கள், 6 லட்சத்து 34 ஆயிரத்து 639 பெண்கள், 116 மூன்றாம் பாலினத்தவர்கள் என்று மொத்தம் 12 ஆயிரத்து 34 ஆயிரத்து 864 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைவிட 34 ஆயிரத்து 530 பெண்கள் அதிகமாக உள்ளனர். குடியாத்தம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 81 ஆயிரத்து 399 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் 605 வாக்குச்சாவடி மையங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள், வேலூர் மாநகராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் உள்பட 616 மையங்களில் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இந்த பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என்று பார்வையிட்டு பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
616 மையங்களிலும் பெயர் சேர்க்க (படிவம்-6), பெயர் நீக்கம் செய்ய (படிவம்-7), பெயர் திருத்தம் செய்ய (படிவம்-8), சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய (படிவம்-8 ஏ) விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தில் பொதுமக்கள் சமீபத்தில் எடுக்கப்பட்ட வண்ண புகைப்படத்தை ஒட்டி சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காதவர்கள் மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்க கூடாது. 18 வயது நிரம்பிய மாணவர்கள் www.nvsp.in என்ற தேசிய இணையதளத்தின் மூலமாகவோ, செல்போனில் voter Helpline App பதிவிறக்கம் செய்து எளிய முறையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.
நகல் வாக்காளர் அடையாள அட்டை பெற தாசில்தார் அலுவலகத்தில் 001 சி படிவம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வருகிற 21,22-ந் தேதிகள் மற்றும் அடுத்த மாதம் 12,13-ந் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் வேலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6 லட்சத்து 109 ஆண்கள், 6 லட்சத்து 34 ஆயிரத்து 639 பெண்கள், 116 மூன்றாம் பாலினத்தவர்கள் என்று மொத்தம் 12 ஆயிரத்து 34 ஆயிரத்து 864 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைவிட 34 ஆயிரத்து 530 பெண்கள் அதிகமாக உள்ளனர். குடியாத்தம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 81 ஆயிரத்து 399 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் 605 வாக்குச்சாவடி மையங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள், வேலூர் மாநகராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் உள்பட 616 மையங்களில் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இந்த பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என்று பார்வையிட்டு பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
616 மையங்களிலும் பெயர் சேர்க்க (படிவம்-6), பெயர் நீக்கம் செய்ய (படிவம்-7), பெயர் திருத்தம் செய்ய (படிவம்-8), சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய (படிவம்-8 ஏ) விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தில் பொதுமக்கள் சமீபத்தில் எடுக்கப்பட்ட வண்ண புகைப்படத்தை ஒட்டி சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காதவர்கள் மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்க கூடாது. 18 வயது நிரம்பிய மாணவர்கள் www.nvsp.in என்ற தேசிய இணையதளத்தின் மூலமாகவோ, செல்போனில் voter Helpline App பதிவிறக்கம் செய்து எளிய முறையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.
நகல் வாக்காளர் அடையாள அட்டை பெற தாசில்தார் அலுவலகத்தில் 001 சி படிவம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வருகிற 21,22-ந் தேதிகள் மற்றும் அடுத்த மாதம் 12,13-ந் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
கொசப்பேட்டையில் மருந்துக்கடை ஊழியர் வீட்டில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டை லால்சிங்குமரன் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 43). இவர் கண்ணமங்கலத்தில் உள்ள மருந்துக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 12-ந் தேதி இரவு திருநாவுக்கரசு மற்றும் அவருடைய மனைவி மஞ்சுளா, குழந்தை மற்றும் உறவினர்கள் வீட்டில் படுத்து தூங்கினார்கள். நள்ளிரவு வீடு புகுந்த மர்மநபர் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது மயக்க ஸ்பிரே அடித்தனர். பின்னர் பீரோவை உடைத்து 7 பவுன் நகையை திருடி சென்றார். 13-ந் தேதி காலை கண்விழித்த திருநாவுக்கரசு மற்றும் குடும்பத்தினர் நகை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், ஒரு கண்காணிப்பு கேமராவில் சலவன்பேட்டையை சேர்ந்த முரளி மகன் ராகுல் (19) உருவம் பதிவாகியிருந்தது. அதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், திருநாவுக்கரசு வீடு புகுந்து நகையை திருடியது ராகுல் என்று தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, 7 பவுன் நகையை மீட்டனர்.
காட்பாடி அருகே இரு அம்மன் கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காட்பாடி:
காட்பாடி அருகே இரு அம்மன் கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் உண்டியலை 13-ந்தேதி இரவு மர்மநபர்கள் கடப்பாரையால் உடைத்து, காணிக்கை பணத்தை திருடிச் சென்றனர். உண்டியல் இருந்த சுவடே தெரியாமல் சுக்குநூறாக உடைத்துள்ளனர்.
அதேபோல் பிரம்மபுரம் ஊராட்சி கோரந்தாங்கல் பஸ் நிலையத்தில் துலுக்கானத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் உண்டியலை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு உடைத்துள்ளனர். உண்டியலின் கீழ் பாகத்தில் கடப்பாரையால் உடைத்து, அதில் இருந்த காணிக்கை பணம், சில்லரை நாணயங்களை திருடிச் சென்றனர். ஒரே இரவில் இரு அம்மன் கோவில்களின் உண்டியலை உடைத்து, காணிக்கை பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர். மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடியவர்கள் பழைய குற்றவாளிகளா அல்லது புதிய நபர்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி, மகள் பிரிந்து சென்றதால் மதுவில் எலிமருந்தை கலந்து குடித்து கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்:
வேலூர் காகிதப்பட்டறை மலையடிவார பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கம் (வயது 35). இவர் சத்துவாச்சாரியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். இவருடைய மனைவி திலகா. இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார். பொன்னுரங்கம் அடிக்கடி மதுஅருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் விரக்தி அடைந்த திலகா தனது மகளுடன் சலவன்பேட்டையில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னுரங்கம் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவி, மகளை தன்னுடன் வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அதற்கு அவர்கள் வர மறுத்துள்ளனர். அதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு மதுவில் எலிமருந்தை கலந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து வேலூர் சத்துவாச்சாரி போலீசில் பொன்னுரங்கம் தாயார் அமுதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர் அருகே மின்னல் தாக்கியதில் மேய்ச்சலுக்கு சென்ற 22 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
அடுக்கம்பாறை:
அடுக்கம்பாறையை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமம், திப்பைமேடு பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது 40). இவர், ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல பிச்சாண்டி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். ஆற்காட்டான் குடிசை செல்லும் சாலையில் உள்ள தனியார் காவலர் பயிற்சி பள்ளி அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் பிச்சாண்டி வளர்த்து வந்த 22 ஆடுகள் பரிதாபமாக செத்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் ரீனா, கால்நடை மருத்துவர் மற்றும் வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






