search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காணிக்கை பணம் திருட்டு"

    • உண்டியலை 4 கி.மீ. தூரத்தில் வீசி சென்ற கும்பல்
    • எவ்வளவு பணம் இருந்தது என தெரியவில்லை

    வேலூர்:

    வேலூர் அடுத்த சித்தேரியில் அமிர்தி செல்லும் மெயின் ரோட்டில் புகழ்பெற்ற மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பூஜைகள் முடிந்து கோவில் பூசாரி கோவில் நடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை வழக்கம் போல் கோவிலை திறப்பதற்காக பூசாரி வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க இரும்பு கோட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கோவில் வளாகத்திற்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த உண்டியல் காணாமல் போனது தெரியவந்தது.

    இதுகுறித்து பூசாரி கோவில் தர்மகத்தா ரவிக்கு தகவல் தெரிவித்தார். கோவிலில் உண்டியல் காணாமல் போனது குறித்து அப்பகுதி மக்களிடையே தகவல் பரவியது. ஏராளமான பொதுமக்கள் கோவில் முன்பாக குவிந்தனர்.

    உண்டியல் காணாமல் போனது குறித்து கோவில் தர்மகர்த்தா ரவி பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி உண்டியலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காணாமல் போன உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறு களம்பூர் ரெயில்வே தண்டவாளம் அருகே வீசி சென்றது தெரிந்தது.

    போலீசார் உண்டியலை மீட்டு வழக்கு பதிவு செய்து கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என தெரியவில்லை. நாளை ஆடி மாதம் பிறக்க உள்ள நிலையில் அம்மன் கோவில் உண்டியல் கொள்ளைய டிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    ×