என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியாத்தம் அருகே அண்ணன் தம்பியை தாக்கிய 3 பேர் கைது
Byமாலை மலர்18 Nov 2020 10:45 AM GMT (Updated: 18 Nov 2020 10:45 AM GMT)
குடியாத்தம் அருகே அண்ணன் தம்பியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் அருகே அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 32), மெக்கானிக், இவரது தம்பி சரவணன் (29), லாரி டிரைவர். கடந்த தீபாவளியன்று இவர்கள் வீட்டிற்கு அருகே வசிக்கும் பிரபாகரன் (33) என்பவர் பட்டாசு வெடித்துள்ளார். அந்த பட்டாசுகள் சுந்தரராஜன் வீட்டில் போய் விழுந்துள்ளது, இதனால் சுந்தரராஜன் தரப்பிற்கும் பிரபாகரன் தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரபாகரன் தரப்பினர் சுந்தர்ராஜன் மற்றும் சரவணனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் சுந்தர்ராஜன் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன், அவரது தம்பி புஷ்பராஜ் (21), இவர்களின் உறவினர் ஹேமநாதன் (30) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X