என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரம்மபுரம், கோரந்தாங்கல் அம்மன் கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருட்டு
Byமாலை மலர்16 Nov 2020 12:41 PM GMT (Updated: 16 Nov 2020 12:41 PM GMT)
காட்பாடி அருகே இரு அம்மன் கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காட்பாடி:
காட்பாடி அருகே இரு அம்மன் கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் உண்டியலை 13-ந்தேதி இரவு மர்மநபர்கள் கடப்பாரையால் உடைத்து, காணிக்கை பணத்தை திருடிச் சென்றனர். உண்டியல் இருந்த சுவடே தெரியாமல் சுக்குநூறாக உடைத்துள்ளனர்.
அதேபோல் பிரம்மபுரம் ஊராட்சி கோரந்தாங்கல் பஸ் நிலையத்தில் துலுக்கானத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் உண்டியலை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு உடைத்துள்ளனர். உண்டியலின் கீழ் பாகத்தில் கடப்பாரையால் உடைத்து, அதில் இருந்த காணிக்கை பணம், சில்லரை நாணயங்களை திருடிச் சென்றனர். ஒரே இரவில் இரு அம்மன் கோவில்களின் உண்டியலை உடைத்து, காணிக்கை பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர். மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடியவர்கள் பழைய குற்றவாளிகளா அல்லது புதிய நபர்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X