என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியாத்தம் அருகே தாய் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து மிரட்டி நர்சு பலாத்காரம்- வாலிபர் கைது
Byமாலை மலர்18 Nov 2020 8:29 AM GMT (Updated: 18 Nov 2020 8:29 AM GMT)
குடியாத்தம் அருகே தாய் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து மிரட்டி நர்சை 6 ஆண்டுகளாக சித்ரவதை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் (25 வயது) இளம்பெண். இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் 38 வயது வாலிபர் கூலிவேலை செய்து வருகிறார்.
அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணின் தாயார் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அதை இளம்பெண்ணிடம் காட்டி, இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவேன் என மிரட்டி இளம்பெண்ணை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
6 ஆண்டுகளாக தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் அடிக்கடி மிரட்டி பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து அவர் இளம்பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் மிரட்டி வந்துள்ளார். இதனால் பயந்துபோன இளம்பெண் இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாரிடம் புகார் அளித்தார்.
அவரது உத்தரவின்பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
இளம்பெண்ணின் குடும்பத்தினர் இரும்பு கம்பியால் தாக்கியதாகவும், இதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றதாகவும், குடியாத்தம் டவுன் போலீசில் வாலிபர் புகார் அளித்தார்.
அதேபோன்று தங்களை கத்தியால் வெட்டியதாக இளம்பெண்ணின் குடும்பத்தினர் வாலிபர் மீது புகார் அளித்தனர்.
இந்த புகார்களின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் (25 வயது) இளம்பெண். இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் 38 வயது வாலிபர் கூலிவேலை செய்து வருகிறார்.
அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணின் தாயார் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அதை இளம்பெண்ணிடம் காட்டி, இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவேன் என மிரட்டி இளம்பெண்ணை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
6 ஆண்டுகளாக தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் அடிக்கடி மிரட்டி பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து அவர் இளம்பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் மிரட்டி வந்துள்ளார். இதனால் பயந்துபோன இளம்பெண் இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாரிடம் புகார் அளித்தார்.
அவரது உத்தரவின்பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
இளம்பெண்ணின் குடும்பத்தினர் இரும்பு கம்பியால் தாக்கியதாகவும், இதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றதாகவும், குடியாத்தம் டவுன் போலீசில் வாலிபர் புகார் அளித்தார்.
அதேபோன்று தங்களை கத்தியால் வெட்டியதாக இளம்பெண்ணின் குடும்பத்தினர் வாலிபர் மீது புகார் அளித்தனர்.
இந்த புகார்களின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X