என் மலர்
வேலூர்
வேலூர்:
வேலூர் மாங்காய் மண்டி அருகே காங்கிரஸ் கட்சியின் 136-ம் ஆண்டு நிறுவன நாள் மற்றும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஏர்கலப்பை விவசாயிகள் சங்கம் மாநாடு நடந்தது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார்.
தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்லபிரசாத், தேசிய செயலாளர் மெய்யப்பன், ஜெயக்குமார் எம்.பி, முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் செங்கம் குமார் ஆகியோர் பேசினார்.
இந்த மாநாடு ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் கிடையாது. 3 அல்லது 2 மாதத்தில் தேர்தல் வருகிறது. இதில் தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டு தலையெழுத்தை மாற்ற நாம் பாடுபட வேண்டும்.
2019-ல் பா.ஜ.க., அ.தி.மு.க.வை எதிர்த்து நாம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம்.
ராகுல்காந்தியை பிரதம வேட்பாளராக அறிவித்திருந்தால் நாம் வெற்றி பெற்றிருப்போம். கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விட அதிக அளவு வெற்றியை நாம் தற்போது அடைய வேண்டும். நமது நோக்கம் எடப்பாடியை வீழ்த்தி அவர் அடிமையாக வைத்திருக்கும் பா.ஜ.க.வையும் தோற்கடிக்க வேண்டும்.
புவியல் அமைப்புபடி தமிழத்தை போன்ற அமைப்பை கொண்ட தென்கொரியா பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளது. இது ஏன் தமிழகத்தால் முடியாது.
நம் ஆட்சியில் இல்லாததாலும், மன்மோகன் சிங் இல்லாததாலும் சீர்செய்யமுடியாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் கீழே விழுந்துள்ளது. இதை நாம் கூறவில்லை ரிசர்வ் பேங்க் ஆளுனரே கூறுகிறார்.
தனியார் துறையை வளர்ச்சி அடைய செய்து இந்தியாவில் ஒவ்வொரு பொதுத் துறையையும் அழித்து வருகிறார்கள் தேசத்தை சீர்குலைக்கிறார்கள்.
பா.ஜ.க மதவிசயத்தில் மட்டுமே மக்களை பிரிக்கவில்லை. பொருளாதார ரீதியிலும் மக்களை வீழ்த்த முயற்சி செய்கிறார்கள். இதனால் தான் மோடியை தோற்கடிக்க வேண்டும்.
வேளாண் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்து எவ்வளவு பெரிய துரோகம் செய்துள்ளது. அதை எதிர்த்து கேட்காமல் ஆதரித்ததால் அவர்கள் சுயமரியாதையை இழந்துவிட்டார்கள்.
தி.மு.க. அண்மையில் தமிழக கவர்னரிடம் அ.தி.மு.க. மீதான உரிய ஆதாரத்துடன் ஒப்படைக்கப்பட்ட ஊழல் பட்டியல் மீது விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும்.
ஏர்கலப்பை ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை உணவு வழங்குவதையே செய்கிறது. அதனால் தான் காங்கிரஸ் ஏர்கலப்பையை கையில் எடுத்துள்ளது. ஆனால் பா.ஜ.க. முருகனிடம் உள்ள அவரின் ஆயுதமானை வேலை கையில் எடுத்துள்ளது. பா.ஜ.க. முருகனிடம் மட்டும் இருக்க வேண்டிய ஆயுதமான வேலை எடுத்துவர காரணம் என்ன? அதன் பொருள் என்ன? யாரை மிரட்ட அதை எடுத்து வருகிறீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் 136-ம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் ஏர்கலப்பை விவசாயிகள் சங்கமம் நேற்று மாலை வேலூர் மாங்காய் மண்டி அருகே நடந்தது.
மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சி தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்லபிரசாத், முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, தமிழ்நாடு பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் செங்கம்குமார், வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டீக்காராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கொரோனா விதியை மீறியது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது போன்ற காரணங்களுக்காக கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் உள்பட 1000 பேர் மீது வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது வேலூர் காங்கிரசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
வேலூர் ஆவின் மேலாளர் ரவி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மினிவேன் உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யபட்டார். வேலூர் ஆவினில் பொது மேலாளராக பணியாற்றிய கணேசா (வயது 56 )கூறியதன் பேரில் லஞ்சப்பணம் கேட்டதாக ரவி தெரிவித்தார்.
பொது மேலாளர் கணேசா கடந்த வாரம் வேலூரில் இருந்து திருநெல்வேலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசார் திருநெல்வேலிக்கு சென்று அங்கு ஆவின் பொது மேலாளராக பணியாற்றிய கணேசாவை கைது செய்தனர். இருவரும் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 2 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆவின் பொதுமேலாளர் கணேசா, மேலாளர் ரவி இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு தேவாலயங்களில் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது. பலர் புத்தாடைகள் அணிந்து ஆலயங்களுக்கு சென்றிருந்தனர்.
விழாவை முன்னிட்டு பலர் தங்கள் வீடுகளில் குடில்கள் அமைத்து, வண்ண ஸ்டார்களை தொங்கவிட்டிருந்தனர். வேலூர் மாநகரில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
வேலூர் சார்பனா மேட்டில் உள்ள ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் பங்கு தந்தை எட்வர்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
அதேபோன்று வேலூர் விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் ஆலய அதிபர் ஜோ.லூர்துசாமி, மறை மாவட்ட நிர்வாகி ஜான்ராபர்ட் ஆகியோர் தலைமையில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. ஏசு பிறந்ததை குறிக்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை ஏசு சொரூபத்தை ஆயர் காட்டினார். பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள குடிலில் சொரூபம் வைக்கப்பட்டது. இதில் ஆயர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் பிஷப் சர்மாநித்தியானந்தம், தலைமை ஆயர் பர்னபாஸ்அப்சலோம் ஆகியோர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆலய வளாகத்தில் குழந்தைகள் பலர் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சீயோன் பெந்தெகொஸ்தே சபையிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது.
இதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பல ஆலயங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெவ்வேறு நேரங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது.
அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்தவர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டனர்.






