என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    சத்துவாச்சாரியில் முன்னாள் விமானப்படை வீரர் வீட்டில் திருட்டு

    வேலூர் சத்துவாச்சாரியில் முன்னாள் விமானப்படை வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி 2-ம் பகுதி 37-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி, முன்னாள் விமானப்படை வீரர். இவருடைய மனைவி ராணி (வயது 72). கோவிந்தசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் ராணி தனியாக வசித்து வருகிறார். கடந்த மாதம் வள்ளிமலையில் வசித்து வரும் அவருடைய மகள் பிரசவத்திற்காக ராணி அங்கு சென்றார். இந்த நிலையில் சுமார் ஒருமாதத்திற்கு பின்னர் நேற்று முன்தினம் அவர் வீட்டிற்கு வந்தார்.

    வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டில் வைத்திருந்த ஒரு பவுன் தங்க நகை, 15 கிராம் வெள்ளி, ஒரு செல்போன், டேப் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது. 

    இதுகுறித்து அவர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ராணி மற்றும் அருகேயுள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் விரல்ரேகை மாதிரியை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×