என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூரில் ரூ.50 ஆயிரம் லஞ்சம்- ஆவின் பொதுமேலாளர் உள்பட 2 பேர் சஸ்பெண்டு
Byமாலை மலர்26 Dec 2020 7:12 AM GMT (Updated: 26 Dec 2020 7:12 AM GMT)
வேலூரில் மினிவேன் உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆவின் பொதுமேலாளர் உள்பட 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் ஆவின் மேலாளர் ரவி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மினிவேன் உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யபட்டார். வேலூர் ஆவினில் பொது மேலாளராக பணியாற்றிய கணேசா (வயது 56 )கூறியதன் பேரில் லஞ்சப்பணம் கேட்டதாக ரவி தெரிவித்தார்.
பொது மேலாளர் கணேசா கடந்த வாரம் வேலூரில் இருந்து திருநெல்வேலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசார் திருநெல்வேலிக்கு சென்று அங்கு ஆவின் பொது மேலாளராக பணியாற்றிய கணேசாவை கைது செய்தனர். இருவரும் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 2 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆவின் பொதுமேலாளர் கணேசா, மேலாளர் ரவி இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X