என் மலர்tooltip icon

    வேலூர்

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் மற்றும் கிராமப்புற பகுதிகளில் 8 இடங்களில் மயான கொள்ளை நடைபெற்றது.

    குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் இரண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்கள் உள்ளது, அதனால் இரண்டு கோயில்களிலும் தனித்தனியே அலங்கரிக்கப்பட்ட உற்சவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டை கவுண்டன்ய மகாநதி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 2 மயான கொள்ளை தனித்தனியாக நடைபெற்றது.

    அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து பூங்கரகம் கொண்டுவரப்பட்டது. அப்போது வேண்டுதல் நிறைவேற்ற தரையில் ஏராளமான பெண்கள் படுத்து இருந்தனர். அவர்களை மிதித்தபடி பூங்கரகம் கொண்டு செல்லப்பட்டது.

    இந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சிகளை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். மயான கொள்ளையில் முட்டை எடுக்க குவிந்த இளைஞர்கள் மயான கொள்ளை முன்னிட்டு இரண்டு மயான கொள்ளை களிலும் முட்டைகளை எடுக்க ஏராளமான இளைஞர்கள் முயன்றனர். அவர்களை தடுக்க சுற்றிலும் காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

    இருப்பினும் சில இளைஞர்கள் முட்டையை எடுக்க முயன்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் தடுத்தனர். ஊர்வலமாக வந்த அம்மன் மயானத்திற்கு வந்தவுடன் நூற்றுக்கணக்கானோர் மயானத்தில் அமைக்கப்பட்டிருந்த சாமி மீது திரண்டு சென்று முட்டைகளை எடுத்தனர்.

    இந்த மயான கொள்ளைக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், அப்பகுதி இளைஞரணியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.இதேபோல் கவுண்டன்யா மகாநதி புவனேஸ்வரி பேட்டை பகுதியில் மயான கொள்ளை குடியாத்தம் அடுத்த வடக்கு பற்றை கிராமத்தில் மயான கொள்ளை நடைபெற்றது. அதேபோல் பரதராமி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி மோட்டூர் கொத்தூர் கதிரிகுளம் தட்டிமாணப்பள்ளி ஆகிய ஊர்களிலும் மயான கொள்ளை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

    குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த மயான கொள்ளை பாதுகாப்பு ஏற்பாடுகளை குடியாத்தம் உதவி கலெக்டர் எம் வெங்கட்ராமன் தலைமையில் வருவாய் துறையினர் கண்காணித்து வந்தனர்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் இந்த மகா சிவராத்திரியை முன்னிட்டு சுண்ணாம்பு பேட்டையில் உள்ள சுடுகாட்டில் இறந்த முன்னோர்களுக்கு அவர்கள் குடும்பத்தினர் படையல் வைத்து வழிபட்டனர். குடியாத்தம் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் உள்ள சுடுகாட்டிலும் இறந்த முன்னோர்களுக்கு குடும்பத்தினர் படையல் வைத்து வழிபட்டனர்.

    • போலீசார் சோதனையில் சிக்கியது
    • குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பூங்குளம் மலைப்பகுதியில் ரகசியமாக சிலர் அடுப்புகள் அமைத்து கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாகவும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் போலீசார் சோதனைக்கு வருவதற்குள் சாராய காய்சுபவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்து தப்பி விடுவதாகவும் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது.

    இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பரண்டு ராமமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்தார்.

    இந்த தனிப்படையினர் கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கள்ளச்சாராயம் காய்ச்சினாலும் விற்றாலும் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு செல்போன் என்னை கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து பூங்குளம் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சசும் தகவல் தனிப்படையினருக்கு தெரிவிக்கப்பட்டு அடிக்கடி சாராய ஊறல்களை அளித்தனர்.

    நேற்று மாலையில் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தததை தொடர்ந்து குடியாத்தம் போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் பூங்குளம் மலைப்பகுதிக்கு சென்று அதிரடியாக சோதனை செய்தபோது 15 பேரல்கள் கள்ளச்சாராயம் ஊறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதிலிருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை உடனடியாக போலீசார் அழித்தனர் மேலும் அங்கு கள்ளச்சாராயம் காய்ச்ச அமைக்கப்பட்டிருந்த 2 அடுப்புகளையும் போலீசார் அடித்து உடைத்தனர். மேலும் லாரி டியூப் களிலிருந்த கள்ள சாராயத்தையும் பறிமுதல் செய்து அழித்தனர்

    கள்ளச்சாராய ஊறல்கள் காய்ச்சியது சம்பந்தமாக பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, செம்மட்ட சரவணன் ஆகியோர் மீது குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • போக்சோ வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற ஆசை தம்பி கடந்த ஆண்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    • வேலூர் ஜெயிலில் நெஞ்சுவலி காரணமாக கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.

    வேலூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் ஆசை தம்பி (வயது 35). போக்சோ வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற இவர் கடந்த ஆண்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    நேற்று ஜெயிலில் இருந்த ஆசை தம்பிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. தரையில் சரிந்து விழுந்த அவரை மீட்டு ஜெயில் ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆசைத்தம்பி பரிதாபமாக இறந்தார்.

    பாகாயம் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் ஜெயிலில் நெஞ்சுவலி காரணமாக கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.

    இதனை தடுக்க ஜெயிலில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • இரவு 12 மணிக்கு கூட்டு தியானம் நடந்தது
    • 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    வேலூர்:

    வேலூரில் ஈஷா யோக மையம் சார்பில் சிவராத்திரி விழா நடந்தது.வேலூர் ராணி மகாலில் நேற்று மாலை நடந்த சிவராத்திரி விழாவை ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    ஆப்கா இயக்குனர் சந்திரசேகரன் அன்னதான நிகழ்ச்சி தொடங்கி வைத்தார்.

    விழாவிற்கு வந்த பொது மக்களுக்கு இலவசமாக ருத்ர தீட்சை வழங்கப்பட்டது.

    இரவு முழுவதும் கோவை ஈஷா மையத்தில் நடந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் சிவலிங்கத்திற்கும், லிங்கபைரவிக்கும் பொதுமக்கள் மலர்களை சமர்பித்து வணங்கினர். இரவு 12 மணிக்கு கூட்டு தியானம் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை ஈஷா யோக மைய வேலூர் ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பு, தன்னார்வலர்கள் மணிவண்ணன், சரவணன், சதீஷ், விஜயகுமார், குணசீலன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மேட்டூரில் மின் சீரமைப்பு பணி நடக்கிறது
    • பொதுமக்களுக்கு மாற்று குடிநீர் ஆதாரம் மூலம் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்க ளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மேட்டூரில் மாதாந்திர மின்சாதன பராமரிப்பு பணிகளுக்கு நேற்று மின் தடை செய்யப்பட்டதாக தெரிகிறது. எனவே வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு காவிரி கூட்டு குடிநீர் நேற்று வினியோகிப்பதில் பாதிப்பு ஏற்பட்டது.

    மக்களுக்கு மாற்று குடிநீர் ஆதாரம் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டது. மின்பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் குடிநீர் வினியோகிக்கப் படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 2 வாலிபர்கள் கைது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூரை அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமி ழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் முகிலன் என்ற குணால் (வயது 23), பெயிண்டர். இவர் கடந்த 16-ந் தேதி இரவு 11 மணியளவில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பஸ்நிறுத்தம் அருகே நண்பர்கள் சரவணன், சுரேஷ் ஆகியோருடன் பேசி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அதே முகாமை சேர்ந்த பழனி என்ற அர்ஜூனன் (27), மவிஷ் (20) ஆகியோர் திடீரென முகிலனை தகாத வார்த்தைகளால் திட்டிசரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். அப்போது மவிஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகிலனின் தலையில் வெட்டினார். இதில் காயம் அடைந்த அவருக்கு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து முகிலன் விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளித் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பழனி, மவிஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    • போலீசார் விசாரணை
    • அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூரில் சோகம்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் ஒட்டர் தெரு பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி இவரின் மகள் லட்சுமி(20), இவர் ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் பணி புரிந்து வருகின்றார்.

    இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த லட்சுமி டீ போடுவதற்காக சமையலறையில் கேஸ் அடுப்பை பற்ற வைக்க முயன்றுள்ளார்.

    அப்போது, எதிர்பாராத விதமாக லட்சுமி மீது தீப்பொறி விழுந்து தீ மளமளவென பற்றியுள்ளது.

    அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால், லட்சுமி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, சக்கரவர்த்தி வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    இச்சம்பவம் அப்பகுதியில பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 1200 போலீசார் பாதுகாப்பு
    • பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலூர் பாலாற்றங்கரையில் கூடினர்

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மயா னக் கொள்ளை திருவிழா கொண்டாடப்பட்டது.

    வேலூர் விருதம் பட்டு, மோட்டூர், கழிஞ் சூர் பகுதிகளில் இருந்தும், வேலூர் தோட்டப்பாளை யம் அருகந்தம் பூண்டி, சேண்பாக்கம், ஓல்டு டவுன், எம்ஜிஆர் நகர் பகு திகளில் இருந்தும் அலங்க ரிக்கப்பட்ட தேரில் அங்கா ளம்மன் உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக புறப்பட்டு பாலாற்றங்கரையை அடைகின்றனர்.

    அங்கு பாலாற்றங்கரையில் மண் ணால் ஆன அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தேர்களில் வந்த அங்காளம்மன் உற்சவர்களுக்கும் சிறப்பு பூஜைகளும் வழி பாடுகளும் நடக்கிறது. தொடர்ந்து சூறையாடல் நிகழ்வு நடக்கிறது.

    இந்த ஊர்வலத்தின் போது பல்வேறு கடவுள் உருவங்கள் வேடமிட்ட படி வரும் பக்தர்கள் சூறையாடலில் கலந்து கொன்டனர். இத்திரு விழாவை காண பல்லா யிரக்கணக்கான மக்கள் பாலாற்றங்கரையில் கூடினர்.

    அங்கு பூஜையில் கலந்து கொள்வதுடன், இறந்த தங்கள் உறவினர்க ளின் கல்லறைகளிலும் வழிபாடு நடத்தினர். அதேபோல் குடியாத் தம் உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேர் ஊர்வல மும், சிறப்பு பூஜைகளுடன் மயானங்களில் மயானக் கொள்ளை விழா நடந்தது.

    இத்திருவிழாவில் அசம்பாவித சம்பவங் கள் நடப்பதையும், குற்றச் சம்பவங்கள் நடப்பதை யும் தடுக்கும் வகையில் எஸ்பி ராஜேஷ் கண்ணன் தலைமையில் வேலூரில் ஏடிஎஸ்பிக்கள் பாஸ்க ரன், குணசேகரன், சேகர் ஆகியோர் தலைமையில் 3 டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீ சார் என 700 பேர் பாது காப்புப்பணியில் ஈடுபடுத் தப்படுகின்றனர்.

    அதேபோல் பிற இடங்களில் நடைபெறும் மயானக்கொள்ளை விழா பாதுகாப்புப்பணியில் 500 பேர் என மொத்தம் 1200 போலீசார் மயானக் கொள்ளை விழா பாது காப்புப்பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்.

    • 2 பேர் கைது
    • ரூ.500 மற்றும் கத்தி பறிமுதல்

    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டை கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 51).மார்க்கெட் பகுதியில் டீ வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் நேற்று மாலை கோட்டை பின்புறம் உள்ள டவுன் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை முள்ளிபாளையத்தை சேர்ந்த உதயா (23) காகிதப்பட்டறையை சேர்ந்த ஆகாஷ்( 18 )ஆகியோர் வழிமறித்தனர். இருவரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி முனியப்பனிடமிருந்து ரூ.500-ஐ பறித்தனர்.

    இது குறித்து முனியப்பன் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த உதயா, ஆகாஷ் இருவரையும் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து ரூ.500 மற்றும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இது போன்ற சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் கோட்டை சுற்றுச்சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • வேலூர் புதிய பஸ் நிலையத்தில் மோதல்
    • தனியார் பஸ் புரோக்கர், டிரைவர் மீது புகார்

    வேலூர்:

    திருப்பத்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருபவர் விமலன்( வயது 35). இவர் கடந்த 16-ந் தேதி சென்னையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் அரசு பஸ்ஸில் பணியில் இருந்தார்.

    மதியம் பஸ் வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தது.அப்போது அவர்களுக்கு முன்னால் புறப்பட்டு செல்ல வேண்டிய தனியார் பஸ்சில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

    மேலும் அரசு பஸ்சில் ஏற வந்த பயணிகளையும் தனியார் பஸ் புரோக்கர்கள் கையை பிடித்து இழுத்து தனியார் பஸ்சுக்கு வருமாறு அழைத்தனர்.

    இதனை விமலன் தட்டிக் கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த தனியார் பஸ் புரோக்கர் மற்றும் டிரைவர் சேர்ந்து விமலனை தாக்கினர்.அங்கிருந்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

    பஸ் நிலையத்திற்கு வெளியே அரசு பஸ்சை மடக்கிய தனியார் பஸ் ஊழியர்கள் விமலனை பாட்டிலால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து விமலன் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.

    அதில் தனியார் பஸ் புரோக்கர் மற்றும் டிரைவர் கண்டக்டர் சேர்ந்து என்னை கொலை செய்ய முயன்றனர். மேலும் பணி செய்ய விடாமல் தடுத்தனர்.பயணிகள் தலையிட்டதால் நான் உயிர் பிழைத்தேன்.

    என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயான கொள்ளை திருவிழாவை முனனிட்டு நடவடிக்கை
    • பழைய பாலாற்று பாலம் வழியாக மட்டுமே வேலூர்-காட்பாடி இடையிலான போக்குவரத்து நடைபெறும்

    வேலூர்:

    வேலூரில் மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி நாளை பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை புதிய பாலாறு பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. பழைய பாலாறு பாலம் வழியாக வாகனங்கள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் மயானக் கொள்ளை திருவிழா நாளை (19-ம் தேதி) கொண்டா டப்படவுள்ளது. இதில், வேலூர் பாலாற்றங்கரை மயானப் பகுதியில் நடைபெறும் விழாவில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரள்வார்கள்.

    பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்ப டவுள்ளனர். விழாவை யொட்டி, வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், விருதம்பட்டு மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக பாலாற்றங்கரைக்கு எடுத்து செல்வார்கள். ஊர்வ லத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பல்வேறு சாமி வேடமிட்டு வருவார்கள்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள பாலாற்றங்கரை பகுதியில் உள்ள மயானப்பகுதியை சீர் செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றன. அங்கு பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும், பாதுகாப்பு பணிகள் தொடர்பாக வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பழனி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    மயானக்கொள்ளை விழா நடைபெறும் நாளில் (19-ம் தேதி) பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை புதிய பாலாற்று பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

    பழைய பாலாற்று பாலம் வழியாக மட்டுமே வேலூர்-காட்பாடி இடையிலான போக்குவரத்து நடைபெறும். மேலும், ஊர்வலம் தடையில்லாமல் நடைபெறுவதற்காக மின் நிறுத்தம் செய்யப்படும். 2 போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் தற்காலிகமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சாமி ஊர்வலத்தில் டி.ஜே ஒலிபரப்புக்கு அனுமதியில்லை. அதேபோல், எந்த இடத்தி லும் மயானக்கொள்ளை தொடர்பான டிஜிட்டல் பேனர்கள் வைக்க அனுமதியில்லை.

    பொதுமக்கள் வசதிக்காக பாலாற்றில் 100 போகஸ் விளக்குகள் பொருத்தப்பட்டு 2 கண்காணிப்பு கோபுரங்க ளில் இருந்தபடி கண்கா ணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

    பொதுமக்களுக்காக 2 இடங்களில் தண்ணீர் தொட்டி வைக்கப்படும். புதிய பஸ் நிலையத்துக்கு கிரீன் சர்க்கிள், செல்லியம்மன் கோவில் நுழைவு பாதை வழியாக வந்து செல்ல வேண்டும். காட்பாடி வழியாக வந்து செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு
    • மாவட்டத் தலைநகரம் 65 கி.மீ.தூரம் உள்ளதாக புகார்

    குடியாத்தம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சக்திவேல், கே.சாமிநாதன், பி.காத்தவராயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.சரவணன், எஸ்.சிலம்பரசன், பி.குணசேகரன் ஆகியோர் குடியாத்தம் உதவி கலெக்டர் எம் வெங்கட்ராமன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தைச் சேர்ந்த அகரம்சேரி, கொல்லமங்கலம், கூத்தம்பாக்கம், பள்ளிக்குப் நம், சின்னச்சேரி ஆகிய ஊராட்சிகளை திருப்பத்தூர் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு மாதனூரில் கருத்து கேட்பு கூட்டம் நடந்ததாக தகவல் வந்துள்ளது.

    இந்த கூட்டம் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் நடைபெற்றதா எனத் தெரியவில்லை.அப்பகுதி மக்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் யாருக்கும் எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்த கூட்டம் நடந்துள்ளது. இது எந்த பலனையும் அளிக்காது.

    இந்த ஊராட்சிகளை திருப்பத்தூர் மாவட்டத்துடன் இணைப்பதால் மாவட்டத் தலைநகருக்கு 65 கி.மீ.தூரம் உள்ளது. இது இந்த ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு பொருளாதார இழப்பு, பயண நேரம் என கடும் சிரமத்தை ஏற்படுத்தும்.

    வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் செல்ல வாணியம்பாடிக்கும், தலுகா அலுவலகம் செல்ல ஆம்பூருக்கும் செல்ல வேண்டும். மேற்படி அலுவலகங்கள் அனைத்தும் தற்போது குடியாத்தத்திலேயே உள்ளது.

    உடனடியாக குடியாத்தம் செல்ல தடையாக இருப்பது பாலாறு மட்டுமே. எனவே மாவட்ட நிர்வாகம் நீண்ட கால கோரிக்கையாக உள்ள அகரம்சேரி பாலாற்றின் குறுக்கே பாலப்பணியை உடனே தொடங்க கேட்டு கொள்கிறோம்.

    5 ஊராட்சிகளை மையப் படுத்தி அகரம்சேரியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட உடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும் அதுவரையில் மாதனூர் மருத்துவமனையை பயன் படுத்தி கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    ×