என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
டீ வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
வேலூர்:
வேலூர் சைதாப்பேட்டை கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 51).மார்க்கெட் பகுதியில் டீ வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் நேற்று மாலை கோட்டை பின்புறம் உள்ள டவுன் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை முள்ளிபாளையத்தை சேர்ந்த உதயா (23) காகிதப்பட்டறையை சேர்ந்த ஆகாஷ்( 18 )ஆகியோர் வழிமறித்தனர். இருவரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி முனியப்பனிடமிருந்து ரூ.500-ஐ பறித்தனர்.
இது குறித்து முனியப்பன் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த உதயா, ஆகாஷ் இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.500 மற்றும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இது போன்ற சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் கோட்டை சுற்றுச்சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்