search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயான கொள்ளை விழாவில் சாமி வேடம் அணிந்து பக்தர்கள் ஊர்வலம்
    X

    மகா சிவராத்திரியையொட்டி ஜலகண்டேஸ்வரர் பழங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ள காட்சி.

    மயான கொள்ளை விழாவில் சாமி வேடம் அணிந்து பக்தர்கள் ஊர்வலம்

    • 1200 போலீசார் பாதுகாப்பு
    • பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலூர் பாலாற்றங்கரையில் கூடினர்

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மயா னக் கொள்ளை திருவிழா கொண்டாடப்பட்டது.

    வேலூர் விருதம் பட்டு, மோட்டூர், கழிஞ் சூர் பகுதிகளில் இருந்தும், வேலூர் தோட்டப்பாளை யம் அருகந்தம் பூண்டி, சேண்பாக்கம், ஓல்டு டவுன், எம்ஜிஆர் நகர் பகு திகளில் இருந்தும் அலங்க ரிக்கப்பட்ட தேரில் அங்கா ளம்மன் உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக புறப்பட்டு பாலாற்றங்கரையை அடைகின்றனர்.

    அங்கு பாலாற்றங்கரையில் மண் ணால் ஆன அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தேர்களில் வந்த அங்காளம்மன் உற்சவர்களுக்கும் சிறப்பு பூஜைகளும் வழி பாடுகளும் நடக்கிறது. தொடர்ந்து சூறையாடல் நிகழ்வு நடக்கிறது.

    இந்த ஊர்வலத்தின் போது பல்வேறு கடவுள் உருவங்கள் வேடமிட்ட படி வரும் பக்தர்கள் சூறையாடலில் கலந்து கொன்டனர். இத்திரு விழாவை காண பல்லா யிரக்கணக்கான மக்கள் பாலாற்றங்கரையில் கூடினர்.

    அங்கு பூஜையில் கலந்து கொள்வதுடன், இறந்த தங்கள் உறவினர்க ளின் கல்லறைகளிலும் வழிபாடு நடத்தினர். அதேபோல் குடியாத் தம் உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேர் ஊர்வல மும், சிறப்பு பூஜைகளுடன் மயானங்களில் மயானக் கொள்ளை விழா நடந்தது.

    இத்திருவிழாவில் அசம்பாவித சம்பவங் கள் நடப்பதையும், குற்றச் சம்பவங்கள் நடப்பதை யும் தடுக்கும் வகையில் எஸ்பி ராஜேஷ் கண்ணன் தலைமையில் வேலூரில் ஏடிஎஸ்பிக்கள் பாஸ்க ரன், குணசேகரன், சேகர் ஆகியோர் தலைமையில் 3 டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீ சார் என 700 பேர் பாது காப்புப்பணியில் ஈடுபடுத் தப்படுகின்றனர்.

    அதேபோல் பிற இடங்களில் நடைபெறும் மயானக்கொள்ளை விழா பாதுகாப்புப்பணியில் 500 பேர் என மொத்தம் 1200 போலீசார் மயானக் கொள்ளை விழா பாது காப்புப்பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×