என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    போளூர் அருகே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    போளூர்:

    போளூர் அருகே வசூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), லாரி டிரைவர். இவரது மனைவி சத்யா, சென்னையில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களது 2 மகள்கள் வசூரில் பாட்டியின் பராமரிப்பில் படித்து வருகின்றனர். மணிகண்டன் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் மாலை தூக்குப்போட்டு கொண்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார்.

    இதுகுறித்து மணிகண்டனின் மாமியார் சின்னப்பொன்னு போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    போளூர் அருகே தூக்குப்போட்டு லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் அருகே வசூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), லாரி டிரைவர். இவரது மனைவி சத்யா, சென்னையில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களது 2 மகள்கள் வசூரில் பாட்டியின் பராமரிப்பில் படித்து வருகின்றனர். மணிகண்டன் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் மாலை தூக்குப்போட்டு கொண்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார்.

    இதுகுறித்து மணிகண்டனின் மாமியார் சின்னப்பொன்னு போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருவண்ணாமலை அருகே கடந்தசில நாட்களாக பெய்து வரும் மழையால் ஏரியின் மதகு உடைந்து 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
    கலசபாக்கம்:

    திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்பாலனந்தல் கிராமத்தில் உள்ள தென்னாந்தல் ஏரி மதகு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்தசில நாட்களாக பெய்து வரும் மழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று மாலை திடீரென ஏரியின் மதகு வழியில் உடைப்பு ஏற்பட்டு, ஏரியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற தொடங்கியது. இதனால் ஏரி அருகே உள்ள பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அரசு அதிகாரிகள் விரைந்து வந்து, ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதைத் தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வந்தவாசி அருகே உறவினர் வீட்டுக்கு வந்திருந்த மாணவி ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பலியானார். 3 பேர் உயிருடன்மீட்கப்பட்டனர்.
    வந்தவாசி:

    சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் நீலமேகம். இவரது மகள் சினேகா (வயது 16). பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சேத்துப்பட்டு கிராமத்தில் உள்ள தனது சித்தப்பா வெங்கடேசன் வீட்டிற்கு வந்திருந்தார்.

    இந்த நிலையில், தனது உறவினர்களான, ரவீந்திரநாத் மகன் கிரீஷ் (5), மகள் நிகிதா (2½), வெங்கடேசன் மகள் மதுஸ்ரீ (14) ஆகியோருடன் அருகில் உள்ள ஏரியில் குளிக்கச்சென்றுள்ளார். தற்போது பெய்த பலத்த மழைகாரணமாக ஏரியில் தண்ணீர் அதிகமாக உள்ளது. 4 பேரும் தண்ணீரில் இறங்கி குளித்துள்ளனர்.

    அப்போது சினேகா ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாகவும், மண் எடுத்த பள்ளத்தில் நீரில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. இதை பார்த்த மற்ற 3 பேரும் சினேகா மூழ்கிய பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் அவர்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் 4 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சிறிது நேரத்தில் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சினேகா இறந்துவிட்டது தெரியவந்தது. மதுஸ்ரீ, நிகிதா, கிரீஷ் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தாசில்தார் திருநாவுக்கரசு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து வந்தவாசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். உறவினர் வீட்டுக்கு வந்த பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா போலீசார் சமுத்திரம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சாராயம் விற்றதாக அதேப் பகுதியை சேர்ந்த செல்வி (வயது 45), தேனிமலையை சேர்ந்த பரந்தாமன் (42) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 120 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தானியங்கி தெர்மல் ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டு உள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வேலை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தானியங்கி தெர்மல் ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. அலுவலகத்திற்கு பல்வேறு வேலை காரணமாக வரும் அலுவலர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் இந்த கருவியின் முன்பு தான் நடந்து செல்ல வேண்டும். அப்போது இக்கருவி தானாகவே அதன் முன்பு நடந்து செல்வபவர்கள் உடல்வெப்பநிலையை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டு அதிக உடல் வெப்பநிலை உள்ளவர்கள் அதன் முன்பு சென்றால் அலாரம் அடிக்கும் வகையிலும் இந்த கருவி உள்ளது.

    கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
    வாணாபுரத்தில் டிராக்டர் திருடியவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
    வாணாபுரம்:

    வாணாபுரத்தை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் தனது விவசாய நிலத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி டிராக்டர் மூலம் விவசாயப் பணி செய்து முடித்த பிறகு டிராக்டரை நிலத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டு சென்றார். அடுத்தநாள் காலையில் நிலத்திற்கு வந்தபோது அங்கு நிறுத்தியிருந்த டிராக்டரை காணவில்லை. இது குறித்து அவர் வாணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வேலையாபாக்கம் கலர்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவருடைய மகன் முருகன் (38) என்பவர் டிராக்டரை திருடிச்சென்று அவரது வீட்டின் பின்பகுதியில் நிறுத்தியிருப்பது தெரிந்தது. அதைத்தொடர்ந்து முருகனை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையை சேர்ந்த சக்திவேல் (37). இவர் அந்தப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்து முருகனிடம் விற்றதாக தெரிகிறது. அதன்பேரில் போலீசார் சக்திவேலை கைது செய்து அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    கண்ணமங்கலம் அருகே ராமசாணிக்குப்பம் கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிரம்பாமல் உள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    கண்ணமங்கலம்:

    ஆரணி தாலுகா ராமசாணிக்குப்பம் கிராமத்தில் ஏரி உள்ளது. வண்ணாங்குளம் ஏரி நிரம்பி அதில் இருந்து வெளியேறும் உபரிநீர் ராமசாணிக்குப்பம் ஏரிக்கு கால்வாய் வழியாக வரும். இந்த நீர்வரத்து கால்வாயை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது.

    அதேபோன்று காளசமுத்திரம் ஏரி உபரி நீர் மற்றும் கொளத்தூர் நல்ல தண்ணீர் குளத்திலிருந்து வரும் உபரி நீர் ஆகியவையும் வண்ணாங்குளம் ஏரிக்கு வரும். அந்த கால்வாய்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் காரணமாக நீர்வரத்து கால்வாய் காணாமல் போனதாகவும், அதனால் ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

    தற்போது பெய்த புயல் மழைகாரணமாக அனைத்து ஏரி, குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்து, நிரம்பி உள்ள நிலையில் ராமசாணிக்குப்பம் ஏரி மட்டும் நிரம்பாமல் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த 30 வருடங்களாக இந்த ஏரி நிரம்பாத நிலை தொடர்கிறது.

    எனவே ராமசாணிக்குப்பம் மற்றும் வண்ணாங்குளம் ஏரிகள் நிரம்ப, குடிமராமத்து திட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவண்ணாமலையில் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை காந்தி நகர் பை-பாஸ் சாலை 3-வது தெருவை சேர்ந்தவர் பங்க்பாபு (வயது 49). முன்னாள் தி.மு.க.கவுன்சிலர்.ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

    இவரது மனைவி ஆனந்தி (40). இவர்களுக்கு ராதாகிருஷ்ணன் (22) என்ற மகனும், உமாமகேஸ்வரி (17) என்ற மகளும் உள்ளனர்.

    பங்க்பாபுவும், அவரது நண்பர் பழனி (45), என்பவரும் நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    இவர்களை 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர். அவர்களின் கூட்டாளிகள் 2 பேர் டீ கடைக்கு பங்க் பாபு வருவதை எதிர்பார்த்து நின்றனர்.

    டீக்கடைக்கு வந்த பங்க் பாபுவை கடையில் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் 2 பேரும் திடீரென அரிவாளால் சராமாரியாக வெட்டினர். மேலும் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 பேரும் சேர்ந்து 4 பேர் கும்பல் பங்க் பாபுவை சரமாரியாக வெட்டினர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனை தடுக்க முயன்ற பழனிக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது.

    பட்ட பகலில் பொதுமக்கள் மத்தியில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கொலையாளிகள் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

    கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்களுக்கும் 20 வயதிற்குள் தான்இருக்கும். அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை கார்கானா தெருவை சேர்ந்த முன்னாள் நகர அ.தி.மு.க. செயலாளர் கனகராஜ் என்பவருக்கும், பங்க் பாபுவுக்கும் இடையே தொழில் ரீதியாக பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் தகராறு இருந்து வந்தது.

    கடந்த 2017-ம் ஆண்டு பங்க்பாபு உள்பட 3 பேர் சேர்ந்து கனகராஜை அருணாசலேஸ்வரர் கோவில் திருமஞ்சன கோபுரம் அருகில் வெட்டி கொலை செய்தனர்.

    இந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் கனகராஜ் உறவினர்கள் கூலிப்படையை வைத்து பங்க்பாபுவை கொலை செய்தார்களா? அல்லது வேறு பிரச்சனை காரணமாக பங்கு பாபு கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பங்க் பாபு கொலை செய்யப்பட்ட காட்சிகள் அப்பகுதியில் உள்ள கடைகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    அதனை போலீசார் பார்வையிட்டு கொலையில் ஈடுபட்ட வாலிபர்கள் யார்? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு பெற்றது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் விழா நாட்களில் மாடவீதியில் நடைபெறும் தேரோட்டம், சாமி வீதி உலா ஆகியவை ரத்து செய்யப்பட்டு கோவிலின் 5-ம் பிரகாரத்திலேயே நடைபெற்றது. கடந்த 29-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. அன்று அதிகாலையில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் 30-ந் தேதி சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், 1-ந் தேதி பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நேற்று முன்தினம் சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடந்தது. நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெற்றப்பட்டது.

    இதையொட்டி நேற்று இரவு கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சண்டிகேஸ்வரர் உலா நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    தண்டராம்பட்டு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் சாத்தனூர் அணையை கலெக்டர் சந்தீப்நந்தூரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தனூர் அணை அமைந்துள்ளது. 119 அடி உயரமுள்ள இந்த அணையில் தற்போது 90 அடிக்கு நீர் நிரம்பி உள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதேபோன்று ஜனவரி மாதமும் சாத்தனூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். சாத்தனூர் அணை மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    சாத்தனூர் அணையை புதிதாக பொறுப்பேற்றுள்ள திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அணைக்கு எந்த வகையில் தண்ணீர் வருகிறது, அணையை இன்னும் மேம்படுத்த செய்ய வேண்டிய பணிகள், பாசன வசதி பெறும் இடங்கள், குடிநீர் ஆதாரம் பெறும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அதைத்தொடர்ந்து தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் கீழ்ராவந்தவாடி கிராமத்தில 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள், வரகூர் கிராமத்தில் நடைபெற்று வரும் மாதிரிப்பள்ளி பணி, கீழ்சிறுபாக்கம் கிராமத்தில் நடைபெறும் நீர் தேக்கத் தொட்டி பணிகளையும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, உதவி திட்ட இயக்குனர் அரவிந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜலு, சம்பத், செயற்பொறியாளர் தணிகாசலம், தாசில்தார் மலர்க்கொடி, சாத்தனூர் அணை உதவி பொறியாளர் செல்வராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.
    ஆரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஆரணி:

    வந்தவாசி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமணன் (வயது 35). மரக்கடையில் கம்ப்யூட்டர் டிசைனராக வேலைசெய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ராணிப்பேட்டை மாவட்டம் மோசூரில் உள்ள மனைவி நந்தினியை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாமரைப்பாக்கத்தில் இருந்து ஆரணி நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அப்பந்தாங்கல் கூட்ரோடு அருகே வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் ரமணன், தாமரைபாக்கம் கிராமத்தை சேர்ந்த ஞானசேகரன் (25), முனுசாமி (45), அஸ்வின் (20) ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். அவர்கள் 4 பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து ரமணன், ஞானசேகரன் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
    விபத்து குறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×