என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- 4 பேர் காயம்
Byமாலை மலர்3 Dec 2020 6:41 AM GMT (Updated: 3 Dec 2020 6:41 AM GMT)
ஆரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆரணி:
வந்தவாசி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமணன் (வயது 35). மரக்கடையில் கம்ப்யூட்டர் டிசைனராக வேலைசெய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ராணிப்பேட்டை மாவட்டம் மோசூரில் உள்ள மனைவி நந்தினியை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாமரைப்பாக்கத்தில் இருந்து ஆரணி நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அப்பந்தாங்கல் கூட்ரோடு அருகே வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் ரமணன், தாமரைபாக்கம் கிராமத்தை சேர்ந்த ஞானசேகரன் (25), முனுசாமி (45), அஸ்வின் (20) ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். அவர்கள் 4 பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து ரமணன், ஞானசேகரன் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X