என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவண்ணாமலையில் திமுக பிரமுகரை வெட்டி சாய்த்த கும்பல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை காந்தி நகர் பை-பாஸ் சாலை 3-வது தெருவை சேர்ந்தவர் பங்க்பாபு (வயது 49). முன்னாள் தி.மு.க.கவுன்சிலர்.ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
இவரது மனைவி ஆனந்தி (40). இவர்களுக்கு ராதாகிருஷ்ணன் (22) என்ற மகனும், உமாமகேஸ்வரி (17) என்ற மகளும் உள்ளனர்.
பங்க்பாபுவும், அவரது நண்பர் பழனி (45), என்பவரும் நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
இவர்களை 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர். அவர்களின் கூட்டாளிகள் 2 பேர் டீ கடைக்கு பங்க் பாபு வருவதை எதிர்பார்த்து நின்றனர்.
டீக்கடைக்கு வந்த பங்க் பாபுவை கடையில் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் 2 பேரும் திடீரென அரிவாளால் சராமாரியாக வெட்டினர். மேலும் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 பேரும் சேர்ந்து 4 பேர் கும்பல் பங்க் பாபுவை சரமாரியாக வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனை தடுக்க முயன்ற பழனிக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது.
பட்ட பகலில் பொதுமக்கள் மத்தியில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொலையாளிகள் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்களுக்கும் 20 வயதிற்குள் தான்இருக்கும். அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை கார்கானா தெருவை சேர்ந்த முன்னாள் நகர அ.தி.மு.க. செயலாளர் கனகராஜ் என்பவருக்கும், பங்க் பாபுவுக்கும் இடையே தொழில் ரீதியாக பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் தகராறு இருந்து வந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு பங்க்பாபு உள்பட 3 பேர் சேர்ந்து கனகராஜை அருணாசலேஸ்வரர் கோவில் திருமஞ்சன கோபுரம் அருகில் வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் கனகராஜ் உறவினர்கள் கூலிப்படையை வைத்து பங்க்பாபுவை கொலை செய்தார்களா? அல்லது வேறு பிரச்சனை காரணமாக பங்கு பாபு கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பங்க் பாபு கொலை செய்யப்பட்ட காட்சிகள் அப்பகுதியில் உள்ள கடைகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
அதனை போலீசார் பார்வையிட்டு கொலையில் ஈடுபட்ட வாலிபர்கள் யார்? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்