என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • இன்று காலை மேட்டங்காட்டு வலசில் உள்ள பால் சொசைட்டிக்கு பால் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
    • இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த முத்தூர் அருகே உள்ள மேட்டாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 90). இவர் இன்று காலை மேட்டங்காட்டு வலசில் உள்ள பால் சொசைட்டிக்கு பால் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன், துரைசாமி மீது மோதியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு துரைசாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
    • அங்கிருந்த பொதுமக்கள் பேருந்தை நடு வழியிலிருந்து தள்ளி சற்று ஓரமாக நிறுத்த உதவினர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று காலை முதலே மழை பெய்து கொண்டிருந்த நிலையில், திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த பஸ் பல்லடம் பனப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, திடீரென பிரேக் டவுன் ஆகியது. ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் பஸ் ஸ்டார்ட் ஆகவில்லை. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் பேருந்தை நடு வழியிலிருந்து தள்ளி சற்று ஓரமாக நிறுத்த உதவினர்.

    இதற்கிடையே காலை நேரமானதால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் போக்குவரத்து மிகுந்த நேரத்தில் நடுவழியில் அரசு பேருந்து நின்றதால் பல்லடத்தில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த போக்குவரத்து நெரிசலால், பல்லடம் நகரமே திக்கு முக்காடி போனது. பின்னர் ஒரு வழியாக ஓட்டுநர் அந்தப் பேருந்தை இயக்கி பனி மனைக்கு எடுத்துச் சென்றார். இந்த போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    • தமிழக-கேரள எல்லையில் கோவை நகரம் அமைந்திருப்பதால் கேரளாவுக்கு செல்லும் ெரயில்கள் அனைத்தும் கோவை வழியாகவே இயக்கப்படுகின்றன.
    • சேலம் கோட்டம் தொடங்கிய பின் வேகமெடுத்து 2012ல் முடிவடைந்தது.

    திருப்பூர்:

    தமிழக-கேரள எல்லையில் கோவை நகரம் அமைந்திருப்பதால் கேரளாவுக்கு செல்லும் ெரயில்கள் அனைத்தும் கோவை வழியாகவே இயக்கப்படுகின்றன.வடகோவை-இருகூர் இடையே இருவழிப்பாதை இல்லையென்பதை காரணம் காட்டி கேரளா செல்லும் 13 ெரயில்கள், போத்தனூர் வழியே கேரளாவுக்கு இயக்கப்பட்டு வந்தன. அதாவது 26 ெரயில் சேவைகளில் கோவை புறக்கணிக்கப்பட்டது.

    இதன் காரணமாக, 1996-1997 ெரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, 60 கோடி ரூபாய் மதிப்பில் இந்த வழித்தடத்தில் கூடுதல் ெரயில் பாதை அமைக்கப்பட்டது.சேலம் கோட்டம் தொடங்கிய பின் வேகமெடுத்து 2012ல் முடிவடைந்தது. அதன்பின்னும், கேரளா செல்லும் ெரயில்கள், கோவை சந்திப்புக்கு திருப்பப்படவில்லை.

    இந்த 13 ெரயில்களை திருப்புவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, ெரயில்வே போராட்டக்குழு தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது.அதன் விளைவாக, 13 ெரயில்களில் முக்கியமான 4 ெரயில்கள் மட்டும் திருப்பப்பட்டன. மற்ற ெரயில்களும் படிப்படியாக திருப்பப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அதன் பின் அந்த ெரயில்கள் திருப்பப்படவே இல்லை.

    இந்நிலையில் கோவையை புறக்கணிக்கும் ெரயில்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இப்போது 15 ெரயில்கள், கோவை சந்திப்புக்கு வராமல் போத்தனூர் வழியே கேரளாவுக்கு செல்கின்றன.அதாவது7 ெரயில்கள் எதிரெதிர் திசையிலான இரு வழியான சேவைகளிலும், ஒரு ெரயில் ஒரு வழிச் சேவையிலுமாக 15 ெரயில்கள் கோவையை புறக்கணித்து செல்கின்றன.

    இந்த புறக்கணிப்பு பட்டியலில், பீஹார் மாநிலம் பரவ்னிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ெரயிலும், சபரிமலை பக்தர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ெரயிலும் , கோவைக்குள் வராமல் போத்தனூர் வழியே செல்கின்றன.

    சென்னை சென்ட்ரலில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு டிசம்பர் 31 வரை 7 சேவைகளும், கோட்டயத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ( 2024 ஜனவரி 1 வரை) 7 சேவைகளுடன் இயக்கப்படும் சபரிமலை சிறப்பு ெரயிலும், கோவைக்கு வராமல் போத்தனூர் வழியே செல்கிறது. இந்த ெரயில், கோவை சந்திப்புக்கு வந்தால் பல ஆயிரம் அய்யப்ப பக்தர்கள் பலனடைவர்.

    கேரளாவிலிருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் ெரயில்கள் போத்தனூர் வழியே செல்வதால் பாதிப்பில்லை.அரிதாக பயணிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் போத்தனூரில் ஏறி இறங்கிக்கொள்வர்.

    ஆனால் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்குச் செல்லும் ெரயில்கள் போத்தனூர் வழியே செல்வதால் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 3 மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.ஏனெனில் இந்த நகரங்களுக்குதான் கோவையில் இருந்து தினமும் பல ஆயிரம் மக்கள் அடிக்கடி பயணம் செய்கின்றனர்.எனவே கேரளாவிலிருந்து சென்னை, பெங்களூரு செல்லும் ெரயில்களை மட்டுமாவது கோவை சந்திப்பு வழியாக இயக்க வேண்டும் என திருப்பூர், கோவை தொழில் அமைப்பினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்தியது.
    • வருகிற டிசம்பர் 4-ந் தேதி, மாவட்ட தலைநகரங்களில் திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டம் நடக்கும்.

    திருப்பூர்:

    தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்தியது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் என்றும் பாராமல், பீக் ஹவர் மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மின்சார நிலை கட்டணம் 430 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள் சொந்த முயற்சியில் அமைத்த மேற்கூரை சோலார் மின் கட்டமைப்புக்கு யூனிட்டுக்கு 1.54 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்தகைய கட்டண உயர்வு மற்றும் பீக்ஹவர் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய கோரி தொழில்துறையினர் போராடி வருகின்றனர்.

    தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பை உருவாக்கி மாநில அளவிலான, அறப்போராட்டங்கள் நடத்தப்படுகிறது. அதன் ஒருபகுதியாக மனிதசங்கிலி போராட்டம், வருகிற 4-ந் தேதி, மாவட்ட தலைநகரங்களில் நடக்குமென, அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் தொழில் அமைப்பு கூட்டமைப்பினர் கூறியதாவது:- மின் கட்டண உயர்வால், திருப்பூர் பனியன் தொழில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. இனியும் தொழில் நடத்த முடியாது என்பதால் பீக் ஹவர் மின் கட்டணம் உள்ளிட்ட கட்டண உயர்வுகளை திரும்ப பெறக்கோரி போராட்டம் நடத்தி வருகிறோம். அதன்படி வருகிற டிசம்பர் 4-ந் தேதி, மாவட்ட தலைநகரங்களில் திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டம் நடக்கும். அன்றைய தினம், திருப்பூர் குமரன் சிலையில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை மனித சங்கிலி நடத்தப்படும். தொழில்துறையினர் மட்டுமல்லாது, தொழிலாளர்களும் குடும்பத்துடன் இப்போராட்டத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மனித சங்கிலி போராட்டத்துக்கு பின்னரும் தமிழக அரசு அழைத்து பேசி, தீர்வு வழங்காதபட்சத்தில் 18-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ.,) அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத், கன்னடம், மலையாளம், மராத்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடக்கவுள்ளது.

    திருப்பூர்:

    உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.ஐ.டி., இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ.,) அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்தாண்டுக்கான நுழைவுத்தேர்வு வருகிற 2024 - 25 கல்வியாண்டுக்கு, ஜே.இ.இ., முதன்மை மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ் என இரண்டு தேர்வுகளாக நடைபெற உள்ளது. ஜனவரி 24 -ந்தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை, ஜே.இ.இ., முதன்மை தேர்வு நடக்கிறது.

    முதன்மை தேர்வு முடிவுகள் பிப்ரவரி 12-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத், கன்னடம், மலையாளம், மராத்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடக்கவுள்ளது.

    இதற்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வெழுத தகுதியான மாணவர்கள் https://jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில் வருகிற 30-ந்தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்கள், சந்தேகங்கள் இருப்பின் அதனை 011 - 40759000 அல்லது 011 - 69227700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

    • சென்ற மாத கணக்கீட்டு தேதியை இம்மாத தேதியாக எடுத்துக்கொண்டு அந்த தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் பணத்தை மின் வாரியத்திற்கு செலுத்துமாறு அறிவிக்கப்படுகிறது.
    • தவறும் பட்சத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மின் விநியோகம் துண்டிப்பு செய்யப்படும்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தாராபுரம் கோட்டத்தில் வடக்கு குண்டடம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட கொக்கம்பாளையம் மின் பகிர்மானத்திற்கு நிர்வாகக் காரணத்தினால் 11/2023 நவம்பர் மாத மின் கணக்கீட்டு பணிகள் மேற்கொள்ள இயலவில்லை.

    ஆகவே மின்நுகர்வோர் 9/2023 செப்டம்பர் மாதம் கட்டிய மின்கட்டணத்தொகையையே நவம்பர் மாதத்திற்கு செலுத்த வேண்டும். மின் பயனீட்டாளர்கள் சென்ற மாத கணக்கீட்டு தேதியை இம்மாத தேதியாக எடுத்துக்கொண்டு அந்த தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் பணத்தை மின் வாரியத்திற்கு செலுத்துமாறு அறிவிக்கப்படுகிறது.தவறும் பட்சத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மின் விநியோகம் துண்டிப்பு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டத்தில் ஓய்வூதியர்களின் குறைகளும், கோரிக்கைகளும் கேட்டறியப்பட உள்ளது.
    • கோவை மண்டல அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம் டிசம்பர் மாதத்தில் காணொலிக்காட்சி மூலம் நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மண்டல அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம் டிசம்பர் மாதத்தில் காணொலிக்காட்சி மூலம் நடைபெற உள்ளது.

    கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த கூட்டத்தில் ஓய்வூதியர்களின் குறைகளும், கோரிக்கைகளும் கேட்டறியப்பட உள்ளது. எனவே புகார்கள், கோரிக்கைகள், தொடர்பான மனுக்களை அஞ்சலக கண்காணிப்பாளர், என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மனு உறையின் மீது ஓய்வூதியர்கள் குறைகேட்பு நாள் மனு என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும். சட்டம் சார்ந்த குறைகள், வாரிசுகள் தொடர்பான குறைகள் இந்த கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படாது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

    • திருப்பூரை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஐ.டி.துறையில் வேலை செய்து வருகிறார்.
    • பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதன் மூலமாக கிடைக்கும் லாபத்தொகையை காட்டியுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஐ.டி.துறையில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்து எளிய முறையில் பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பிய அந்த இளம்பெண் குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்ட டெலகிராம் செயலிக்குள் சென்று பார்த்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாலோ செய்தால் உங்களுக்கு கமிஷனாக பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி அவ்வாறே அந்த இளம்பெண் செய்துள்ளார்.

    இவ்வாறு செய்ததன் மூலம் அவருக்கு கொஞ்சம் பணம் கிடைத்துள்ளது. பின்னர் அவருக்கு பண ஆசை மேலும் அதிகரித்தது. அதன்பிறகு ஒவ்வொரு போட்டியாக வைத்து அதில் வெற்றி பெற்றால் உங்களுக்கு கிடைக்கும் பணத்தொகை இவ்வளவு என்று அதிகப்படியான பணத்தை காட்டி இளம்பெண்ணுக்கு ஆசையை தூண்டியுள்ளனர். மேலும் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதன் மூலமாக கிடைக்கும் லாபத்தொகையை காட்டியுள்ளனர். இதனால் அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணம் அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட, ஒரு கட்டத்தில் வங்கியில் கடன் வாங்கி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார். இவ்வாறு ரூ.17 லட்சத்து 76 ஆயிரத்து 800-ஐ அந்த இளம்பெண் முதலீடு செய்தார். அதற்காக கிரிப்டோ கரன்சி தொகையும் கணக்கில் வந்துள்ளது. ஆனால் லாபத்தொகை, முதலீடு தொகை உள்ளிட்ட எந்த பணத்தையும் இளம்பெண்ணால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவருக்கு தெரியவந்தது, பணத்தாசையில் ஏமாறப்பட்டோம் என்று.

    இதைத்தொடர்ந்து அந்த பெண் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவுப்படி திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி கூறும்போது, ஐ.டி., பொறியியல் பட்டதாரிகள் தான் இதுபோன்ற மோசடிகளில் அதிகம் சிக்குகிறார்கள். முதலில் கொஞ்சம் பணத்தை சம்பாதிப்பது போல் அனுப்பி வைக்கிறார்கள். அதன்பிறகு ஒவ்வொரு டாஸ்க் வைத்து பணத்தை அதிகம் முதலீடு செய்ய தூண்டுகிறார்கள். அதிக பணத்தை முதலீடு செய்த பின்னர் லாப தொகையும், முதலீடு தொகையும் கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். இதுபோன்ற மோசடி ஆசாமிகளின் இணையதள முகவரிக்குள் சென்றாலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தொழில்நுட்ப மாறுபாடுகளை செய்துள்ளனர். சமீபத்தில் திருப்பூரில் இதுபோன்ற மோசடிகளில் படித்த இளைஞர்கள் தான் அதிகம் சிக்கி வருகிறார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மோசடி ஆசாமிகள் விரிக்கும் வலையில் சிக்கிவிடுகிறார்கள்' என்றார்.திருப்பூர், நவ.23-

    திருப்பூரை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஐ.டி.துறையில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்து எளிய முறையில் பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பிய அந்த இளம்பெண் குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்ட டெலகிராம் செயலிக்குள் சென்று பார்த்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாலோ செய்தால் உங்களுக்கு கமிஷனாக பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி அவ்வாறே அந்த இளம்பெண் செய்துள்ளார்.

    இவ்வாறு செய்ததன் மூலம் அவருக்கு கொஞ்சம் பணம் கிடைத்துள்ளது. பின்னர் அவருக்கு பண ஆசை மேலும் அதிகரித்தது. அதன்பிறகு ஒவ்வொரு போட்டியாக வைத்து அதில் வெற்றி பெற்றால் உங்களுக்கு கிடைக்கும் பணத்தொகை இவ்வளவு என்று அதிகப்படியான பணத்தை காட்டி இளம்பெண்ணுக்கு ஆசையை தூண்டியுள்ளனர். மேலும் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதன் மூலமாக கிடைக்கும் லாபத்தொகையை காட்டியுள்ளனர். இதனால் அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணம் அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட, ஒரு கட்டத்தில் வங்கியில் கடன் வாங்கி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார். இவ்வாறு ரூ.17 லட்சத்து 76 ஆயிரத்து 800-ஐ அந்த இளம்பெண் முதலீடு செய்தார். அதற்காக கிரிப்டோ கரன்சி தொகையும் கணக்கில் வந்துள்ளது. ஆனால் லாபத்தொகை, முதலீடு தொகை உள்ளிட்ட எந்த பணத்தையும் இளம்பெண்ணால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவருக்கு தெரியவந்தது, பணத்தாசையில் ஏமாறப்பட்டோம் என்று.

    இதைத்தொடர்ந்து அந்த பெண் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவுப்படி திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி கூறும்போது, ஐ.டி., பொறியியல் பட்டதாரிகள் தான் இதுபோன்ற மோசடிகளில் அதிகம் சிக்குகிறார்கள். முதலில் கொஞ்சம் பணத்தை சம்பாதிப்பது போல் அனுப்பி வைக்கிறார்கள். அதன்பிறகு ஒவ்வொரு டாஸ்க் வைத்து பணத்தை அதிகம் முதலீடு செய்ய தூண்டுகிறார்கள். அதிக பணத்தை முதலீடு செய்த பின்னர் லாப தொகையும், முதலீடு தொகையும் கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். இதுபோன்ற மோசடி ஆசாமிகளின் இணையதள முகவரிக்குள் சென்றாலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தொழில்நுட்ப மாறுபாடுகளை செய்துள்ளனர். சமீபத்தில் திருப்பூரில் இதுபோன்ற மோசடிகளில் படித்த இளைஞர்கள் தான் அதிகம் சிக்கி வருகிறார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மோசடி ஆசாமிகள் விரிக்கும் வலையில் சிக்கிவிடுகிறார்கள்' என்றார்.

    • அய்யப்ப சாமி படத்துடன் கூடிய கருப்பு நிற டீ-சர்ட்டுகள் தயாரிக்கும் பணி திருப்பூரில் அதிகரித்து வருகிறது.
    • திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் இந்த பனியன்களை தயாரித்து வருகிறது என்றனர்.

    திருப்பூர்:

    சபரிமலைக்கு செல்ல அய்யப்ப பக்தர்கள் விரதம் தொடங்கியுள்ளதால், அவர்கள் அணியும் வகையில் அய்யப்ப சாமி படத்துடன் கூடிய கருப்பு நிற டீ-சர்ட்டுகள் தயாரிக்கும் பணி திருப்பூரில் அதிகரித்து வருகிறது.

    அய்யப்ப பக்தர்கள் கருப்பு வேட்டி, கருப்பு சட்டை, துண்டு அணிவது வழக்கம். கருப்பு நிற சட்டைகளை விட டீ-சர்ட் தற்போது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலத்தில் இதுபோன்ற டீ-சர்ட் விற்பனைக்கு அதிக கிராக்கி உள்ளது. அய்யப்ப சாமி படம், புலி வாகனத்தில் அய்யப்ப சாமி அமர்ந்து இருப்பது போன்ற படங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட டீ-சர்ட்கள் பக்தர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

    தமிழகத்தில் சுவாமியே சரணம் அய்யப்பா என்ற வாசகமும், அய்யப்ப சாமி படம் அச்சிடப்பட்ட டீ-சர்ட் அதிகம் விற்பனையாகிறது. மற்ற மாநிலங்களில் அய்யப்பசாமி படம் பிரிண்ட் செய்யப்பட்ட டீ-சர்ட்டுகள் சில்லறை விற்பனைக்காக திருப்பூரில் இருந்து அதிகம் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த பனியன் வியாபாரிகள் கூறும்போது, சீசன் பனியன் ஆடைகள் விற்பனை நன்றாக இருக்கும். சபரிமலை அய்யப்ப சீசன் தொடங்கியுள்ளதால் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கருப்புநிற டீ-சர்ட் விற்பனை அதிகரித்துள்ளது. ரூ.100 முதல் இதுபோன்ற டீ-சர்ட் விற்பனையாகிறது. இளம்பக்தர்கள் அதிகம் வாங்குகிறார்கள். அய்யப்ப சாமி படம் ஒளிரும் மையால் அச்சிட்டு டீ-சர்ட் தயாரிக்கப்படுகிறது. திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் இந்த பனியன்களை தயாரித்து வருகிறது என்றனர்.

    • ஜவுளித்தொழில் என குறிப்பிடும்போது கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, ஆயத்த ஆடை மற்றும் நூற்பாலைகளையும் சேர்த்தே குறிப்பிடுகிறது.
    • உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உடனுக்குடன் விற்பனை செய்வதற்கான வழிவகைகளை செய்து வருகிறது.

    திருப்பூர்:

    உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜவுளிப்பொருட்களை விற்பனையாக்கும் திட்டங்களில் கவனம் ெசலுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சைமா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறியிருப்பதாவது:-

    நமது நாட்டில் ஜவுளித்தொழில் என குறிப்பிடும்போது கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, ஆயத்த ஆடை மற்றும் நூற்பாலைகளையும் சேர்த்தே குறிப்பிடுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்றின் காலத்தில் இருந்து தற்போது வரை ஜவுளித்தொழில் பின்னடைவை சந்தித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் கடன், மானியம், வட்டி தள்ளுபடி என பல சலுகைகளை அறிவித்து ஜவுளி தொழிலை காப்பாற்ற நினைக்கிறார்கள். ஆனால் நமக்கு போட்டியாக உள்ள பிற நாடுகளில் ஜவுளித்தொழிலில் பிரச்சினை இல்லை. காரணம், அந்த அரசு உற்பத்தி உயர்வை மட்டுமே கணக்கிடாமல், உற்பத்தி ஆன பொருட்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உடனுக்குடன் விற்பனை செய்வதற்கான வழிவகைகளை செய்து வருகிறது.

    இந்திய அரசு மற்றும் தமிழக அரசும் ஆடை உற்பத்திக்கான உதவிகளை, சலுகைகளை மாற்றி யோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசின் உதவிகளையும், உறுதிமொழிகளையும் பெற்று புதிய, புதிய ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் பெருகி வருகிறது. மேலும் ஏற்கனவே உள்ள உற்பத்தியாளர்களும் உற்பத்தியை பெருக்குவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தி வருகிறார்கள்.உற்பத்தி பெருக்கத்தில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நுகர்வோர்களிடம் கொண்டு சேர்ப்பதில் புதுமையான வழிமுறைகளை கண்டுபிடிக்க தவறி வருகிறோம். பிற போட்டி நாடுகளில் திட்டங்களை கூர்ந்து ஆராய வேண்டும். உற்பத்தி பெருக்கத்தை முன்னிலைப்படுத்தும் நேரத்தில் உற்பத்தியாகும் பொருட்களை உடனுக்குடன் விற்பனையாகும் வகையில் நுகர்வோரை சென்றடைய வணிக நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் புதிய வணிக வாய்ப்புகளை கண்டறியும் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வீடு இல்லாதவா்களுக்கு வீடு வழங்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
    • வீடு கேட்டு விண்ணப்பித்துள்ள பின்னலாடை தொழிலாளா்கள் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் விண்ணப்பித்துள்ள தொழிலாளா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யூ.சி .வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொதுச்செயலாளா் பி.ஆா்.நடராஜன், பனியன் சங்க பொதுச்செயலாளா் என்.சேகா் உள்ளிட்டோா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சோ்ந்த தொழிலாளா்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா். இந்த தொழிலாளா்கள் வாங்கும் ஊதியத்தில் ஒருபகுதி வீட்டு வாடகைக்கே செலவாகிறது. வீடு இல்லாதவா்களுக்கு வீடு வழங்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. திருப்பூா் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடு வழங்கக் கோரி ஏஐடியூசி., சங்க உறுப்பினா்கள் 1,400 போ் மனு அளித்துள்ளனா். இதில் 800 மனு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள மனுக்களின் எண்ணிக்கை குறித்த விவரம் தெரியவில்லை. எனவே மீதம் உள்ளவா்களுக்கும் கடிதம் வழங்குவதுடன், விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் தனித்தனியாக ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். மேலும் வீடு கேட்டு விண்ணப்பித்துள்ள பின்னலாடை தொழிலாளா்கள் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.3.4 கோடி மதிப்பீட்டில் 9 புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
    • அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 15 மருத்துவ கட்டடப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.3.4 கோடி மதிப்பீட்டில் 9 புதிய மருத்துவ கட்டடங்களை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார்கிரியப்பனவர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது அமைச்சர் மா.சுப்பிரணியன் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற பொது சுகாதார ஆய்வுக்கூடம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.30 லட்சத்தில் கேத்தணூர் துணை சுகாதார நிலையம், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வடமலைபாளையம் துணை சுகாதார நிலையம், ரூ.30 லட்சத்தில் கெங்க நாயக்கன்பாளையம் துணை சுகாதார நிலையம், ரூ.30 லட்சத்தில் எலவந்தி துணை சுகாதார நிலையம்,தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வரப்பாளையம் துணை சுகாதார நிலையம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கணியூர் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பெருமாநல்லூர் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.22.75 லட்சம் மதிப்பில் செம்மிபாளையம் செவிலியர் குடியிருப்பு கட்டிடம் என ரூ.3.4 கோடி மதிப்பில் 9 புதிய மருத்தவ கட்டடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் 17 துணை சுகாதாரநிலைய கட்டிடங்களும், ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் 3 ஆரம்ப சுகாதார நிலையங்களும், ரூ.25.50 லட்சம் மதிப்பீட்டில் 2 அரசு மருத்துவ மனைகளில் பல்வேறு பிரிவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ரூ.83.73 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 15 மருத்துவ கட்டடப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் திருப்பூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொடர் சிகிச்சையாக 33,78,651 நபர்கள் பயன்பெற்று வருகின்றனர். 454 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 23,575 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் ரூ.5,39,84,627 மதிப்பீட்டில் 4,820 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 119 சிறப்பு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 81,198 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.

    கோயமுத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டிஊராட்சியில் இருதய நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு இதயம் காப்போம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் இருதய பாதுகாப்பு மருந்துகளான ஆஸ்பிரின்-2, க்ளோபிடோக்ரல் – 4, அட்ரோவாஸ்டாட்டின் 8 என 14 மாத்திரைகள்வழங்கப்படும்.திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டம் 139 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் 15 துணை சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு 154 நபர்கள் பயன்பெற்றுள்னர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகத்தினையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை செல்வ விநாயகம், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஷ்குமார், மண்டலத்தலைவர்கள் கோவிந்தசாமி , இல.பத்மநாபன் கோவிந்தராஜ், உமா மகேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    ×