search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister inaugurated"

    • ரூ.3.4 கோடி மதிப்பீட்டில் 9 புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
    • அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 15 மருத்துவ கட்டடப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.3.4 கோடி மதிப்பீட்டில் 9 புதிய மருத்துவ கட்டடங்களை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார்கிரியப்பனவர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது அமைச்சர் மா.சுப்பிரணியன் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற பொது சுகாதார ஆய்வுக்கூடம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.30 லட்சத்தில் கேத்தணூர் துணை சுகாதார நிலையம், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வடமலைபாளையம் துணை சுகாதார நிலையம், ரூ.30 லட்சத்தில் கெங்க நாயக்கன்பாளையம் துணை சுகாதார நிலையம், ரூ.30 லட்சத்தில் எலவந்தி துணை சுகாதார நிலையம்,தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வரப்பாளையம் துணை சுகாதார நிலையம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கணியூர் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பெருமாநல்லூர் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.22.75 லட்சம் மதிப்பில் செம்மிபாளையம் செவிலியர் குடியிருப்பு கட்டிடம் என ரூ.3.4 கோடி மதிப்பில் 9 புதிய மருத்தவ கட்டடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் 17 துணை சுகாதாரநிலைய கட்டிடங்களும், ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் 3 ஆரம்ப சுகாதார நிலையங்களும், ரூ.25.50 லட்சம் மதிப்பீட்டில் 2 அரசு மருத்துவ மனைகளில் பல்வேறு பிரிவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ரூ.83.73 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 15 மருத்துவ கட்டடப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் திருப்பூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொடர் சிகிச்சையாக 33,78,651 நபர்கள் பயன்பெற்று வருகின்றனர். 454 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 23,575 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் ரூ.5,39,84,627 மதிப்பீட்டில் 4,820 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 119 சிறப்பு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 81,198 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.

    கோயமுத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டிஊராட்சியில் இருதய நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு இதயம் காப்போம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் இருதய பாதுகாப்பு மருந்துகளான ஆஸ்பிரின்-2, க்ளோபிடோக்ரல் – 4, அட்ரோவாஸ்டாட்டின் 8 என 14 மாத்திரைகள்வழங்கப்படும்.திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டம் 139 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் 15 துணை சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு 154 நபர்கள் பயன்பெற்றுள்னர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகத்தினையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை செல்வ விநாயகம், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஷ்குமார், மண்டலத்தலைவர்கள் கோவிந்தசாமி , இல.பத்மநாபன் கோவிந்தராஜ், உமா மகேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    பாகலூரில் மண்டல அளவிலான பெண்கள் கபடி போட்டிகளை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தொடங்கி வைத்தார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில், சேலம் மண்டல அளவிலான பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பாகலூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிகளை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, கபடி வீராங்கனையருக்கு சீருடைகளை வழங்கி போட்டியினை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, பாகலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை புத்திலிதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், சேலம், சங்ககிரி, கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி ஆகிய கல்வி மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில், மூத்தோர், மேல் மூத்தோர் ஆகிய பிரிவுகளில் 10 அணிகளை சேர்ந்த 120 மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளை தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

    மேலும் இந்த நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயராம் மற்றும் முனிராஜ், ரவிக்குமார், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிகள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.
    ஓசூர் அருகே பெக்கிலி கிராமத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி திறந்து வைத்தார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வெங்கடேசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெக்கிலி கிராமத்தில், ரூ.11 லட்சம் மதிப்பில் புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். 

    இந்நிகழ்ச்சிக்கு, சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரபாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    மேலும் இதில், சூளகிரி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஏ.வி.எம்.மது என்ற ஹேம்நாத், மாவட்ட பிரதிநிதி சிட்டிஜெகதீசன், ஓசூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் வாசுதேவன், செல்வராஜ், தாஜுத்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×