search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poster Department"

    • கூட்டத்தில் ஓய்வூதியர்களின் குறைகளும், கோரிக்கைகளும் கேட்டறியப்பட உள்ளது.
    • கோவை மண்டல அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம் டிசம்பர் மாதத்தில் காணொலிக்காட்சி மூலம் நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மண்டல அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம் டிசம்பர் மாதத்தில் காணொலிக்காட்சி மூலம் நடைபெற உள்ளது.

    கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த கூட்டத்தில் ஓய்வூதியர்களின் குறைகளும், கோரிக்கைகளும் கேட்டறியப்பட உள்ளது. எனவே புகார்கள், கோரிக்கைகள், தொடர்பான மனுக்களை அஞ்சலக கண்காணிப்பாளர், என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மனு உறையின் மீது ஓய்வூதியர்கள் குறைகேட்பு நாள் மனு என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும். சட்டம் சார்ந்த குறைகள், வாரிசுகள் தொடர்பான குறைகள் இந்த கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படாது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

    ×