என் மலர்
திருவாரூர்
- இருதய நோய் 45 நபர்களுக்கு கண்டறியப்பட்டு அவர்கள் மேல் சிகிச்சைக்காக தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
- மருத்துவர் பாபு மற்றும் தலைவர் ரமேஷ் , செயலாளர் ராஜதுரை, பொருளாளர் அகிலன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
திருத்துறைப்பூண்டி:
டெல்டா ரோட்டரி சங்கம், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மணி பல்நோக்கு மருத்துவமனை இணைந்து திருத்துறைப்பூண்டி பகுதியில் இருதய நோய் கண்டறியும் முகாம் நடத்தியது.
இதில் 450 நபர்கள் கலந்து கொண்டனர். அதில் இருதய நோய் 45 நபர்களுக்கு கண்டறியப்பட்டு அவர்கள் மேல் சிகிச்சைக்காக தனல ட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் அழைத்து செல்லப்ப ட்டனர்.
இந்த முகாமிற்கு டெல்டா ரோட்டரி சங்கத்தின் மருத்துவ சேர்மன் மணி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவர் பாபு மற்றும் தலைவர் ரமேஷ் , செயலாளர் ராஜதுரை, பொருளாளர் அகிலன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மண்டலம் 25 உதவி ஆளுநர் சிவக்குமார் முகாமை தொடங்கி வைத்தார். டெல்டா ரோட்டரி சங்கத்தின் சாசன தலைவர் கணேசன் மற்றும் முன்னாள் தலைவர்கள் தலைவர் தேர்வு மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது எப்படி சிக்னல்கள் கொடுப்பது, தலையில் ஹெல்மெட் அணிவது மற்றும் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.
- பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார்.
திருவாரூர்:
மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ. பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு முகாம் என்.எஸ்.எஸ். சார்பில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ஜெ. கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் மற்றும் தாளாளர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன் கலந்து கொண்டார். பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்க டேசன் வரவேற்புரை ஆற்றினார்.
இதில் மன்னார்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பண்ணன்கலந்து கொண்டு சாலை விதிகளை எப்படி கடைபிடிப்பது, சாலையில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது எப்படி சிக்னல்கள் கொடுப்பது, தலையில் ஹெல்மெட் அணிவது மற்றும் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.
ஆர்.என்.ஆர். டிரான்ஸ்போர்ட் மாதவன், சாலை ஆலோசகர் ராஜேஷ், மேலாண்மை கல்லூரி இயக்குனர் முனைவர் செல்வராஜ், என் .எஸ். எஸ். திட்ட அலுவலர் சந்துரு மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர். முடிவில் துணை முதல்வர் முனைவர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.
- பள்ளி மாணவர்களுக்கு கழிவறை பயன்பாட்டின் அவசியம் குறித்து பேசப்பட்டது.
- நோயற்ற சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என அனைவரும் சுகாதார உறுதிமொழி எடுத்துத் கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொறுக்கை ஊராட்சி, பாலம் தொண்டு நிறுவனம் இணைந்து உலக கழிவறை தின விழிப்புணர்வு பேரணி உறுதிமொழி நிகழ்ச்சியை கொறுக்கையில் நடத்தியது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
பள்ளி மாணவர்களுக்கு கழிவறை பயன்பாட்டின் அவசியம் குறித்து பேசப்பட்டது. அப்போது கழிவறை என்பது ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டும், அனைவரும் அதை பயன்படுத்துவதுடன் தூய்மையாக வைத்திருக்க வேண்டும், கழிவறையை வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்தகூடாது, நோயற்ற சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என அனைவரும் சுகாதார உறுதிமொழி எடுத்துத் கொண்டனர்,
பின்னர் விழிப்புணர்வு கோஷங்களுடன் பேரணி நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் தமிழ் இலக்கியா, தலைமையாசிரியர்செல்வம், சுகாதாதார ஊக்குனர்கள் லதா, மல்லிகா,முன்னாள் வேலை திட்ட ஒருங்கிணை ப்பாளர் பிரபாகரன், அரசு பிற்பட்டோர் மாணவர் விடுதி ஆலோசனை குழு உறுப்பினர் வைரவ மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இதுவரை ரூ.3.78 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சிக்கு கூட்டுறவு இணை பதிவாளர் சித்ரா தலைமை தாங்கினார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 69 ஆவது கூட்டுறவு வார விழா நடைபெற்றது.
கூட்டுறவு இணை பதிவாளர் சித்ரா தலைமை தாங்கி பேசும்போது,
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ. 288 கோடியும், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ரூ.6.60 லட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இதுவரை ரூ.3. 78 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் விவசாயிகள் மாற்றுத்திறனாளி தொழில் தொடங்க உள்ளிட்ட 17.81 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது என்றார்.
சரக துணை சார்பதிவாளர் ராமசுப்பு முன்னிலை வகித்தார்.கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் செந்தில்நாதன் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாரி முத்து எம்.எல்.ஏ, கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் தொகைகளை வழங்கி னார். இதில் முத்துப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர் மனோகரன், கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா செந்தில்நாதன், சரக துணை பதிவாளர் பிரபா, கள மேலாளர்கள் சசிகலா மற்றும் கார்த்தி முன்னோடி விவசாயிகள் ஜெயராமன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் வங்கி செயலாளர் வி.கமலராஜன் நன்றி கூறினார்.
- ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சா.சின்னையன் திறந்து வைத்தார்.
- ஊராட்சி மன்ற துணைத் தலைவர் துரைராஜ், ஒப்பந்ததாரர் செந்தில் நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
நுணாக்காடு ஊராட்சி தென்பாதி கிராமத்தில் மாரிமுத்து எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக மயான கொட்டகை கட்டப்பட்டது.
இதனை ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சா.சின்னையன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் துரைராஜ், ஒப்பந்ததாரர் செந்தில் நாதன் , ஊராட்சி செயலர்இளங்கோவன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்கோ விந்தராஜ் , சாமூண்டீஸ்வரி உலகநாதன், சத்யா செல்வம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- இதுவரை 50,327 பேருக்கு ரூ.286.27 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
- ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்.
திருவாரூர்:
திருவாரூர்மாவட்டம், திருவாரூர் நகராட்சிக்கு ட்பட்ட தெற்கு வீதியில் நடைபெற்ற 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு 1262 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி னார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாகை நாடாளு மன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமை ச்சர் தெரிவித்ததாவது, அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவானது ஆண்டு தோறும் நவம்பர்-14ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்பட்டு தொட ர்ந்து ஏழு நாட்கள் நடத்தப்ப ட்டு வருகிறது.இந்தியாவிலேயே முதன் முதலாக கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது தமிழகத்தில் தான். திருவாரூர் மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கி ஏதுவுமில்லை.
டெல்டா மாவட்டங்களில் கும்பகோ ணம் மற்றும் தஞ்சாவூர் என இரண்டு மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. மானியக்கோரியின் போது திருவாரூக்கு மத்திய கூட்டுறவுவங்கி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரி க்கையின் அடிப்படையில் விரைவில் திருவாரூர் மாவட்டத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கி திறப்ப தற்கு உண்டான உரிய நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும்.
முதலமைச்சர் சில கட்டமைப்புகளுடன் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் முழு நேர நியாய விலைக்கடைகளும், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பகுதி நேர நியாய விலைக டைகளும், கழிப்பறை வசதியுடன் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்கள். 2022-2023ஆம் நிதியாண்டில் இதுவரை 50327 நபர்களுக்கு ரூ.286.27 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக பண்ணை சாராக் கடன்கள், சிறு வணிகக் கடன்கள், மாற்றுத்திறனாளி களுக்கான கடன்கள், டாம்கோ மற்றும் டாப்செ ட்கோ உள்ளிட்ட கடன்கள் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து, சுய உதவிக்குழு கடன், பயிர்க்கடன் என மொத்தம் 1262 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பி லான கடனுதவிகளும், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களும், பேச்சுப்போ ட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் அமைச்சர்அர.சக்கரபாணி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திருவாரூர் கூட்டுறவு சங்க ங்களின் மண்டல இணை பதிவாளர் சித்ரா, தஞ்சாவூர் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் ப.உமா மகேஸ்வரி, திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- அப்பகுதியில் பாம்பு போன்ற விஷபூச்சிகள் சுற்றி வருகின்றன.
- பேரூராட்சி சார்பில் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை பேரூராட்சியில் 9-வது வார்டு கல்கேணிதெருவில் கல்கேணி குளம் அமைந்துள்ளது.
இந்த குளம் அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயன்பெற்று வந்தது.
இந்நிலையில், தற்போது பெய்துவரும் தொடர்மழை காரணமாக கல்கேணி குளம் நிரம்பி குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.
இதனால், அப்பகுதியில் பாம்பு போன்ற விஷபூச்சிகள் சுற்றி வருகின்றன.
இதனால், அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அச்சமடைந்துள்ளனர்.
இதனையடுத்து பேரூராட்சி சார்பில் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.
தகவலறிந்த, பேரூராட்சி செயல் அலுவலர் காலசாமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நீர் நிரம்பிய குளத்தையும், நீர் சூழ்ந்துள்ள குடியிருப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், நீரை வெளியேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் தற்சமயம் மக்கள் நடந்து செல்லும் வகையில் மணல் மூட்டைகள் அமைத்து தரப்படும் என்றார்.
ஆய்வின்போது, பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், கவுன்சிலர்கள் சரிபா பேகம், மெட்ரோ மாலிக், சிவஅய்யப்பன், பாலு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- நல்ல பாம்பு குட்டி ஒன்று ஆசிரியையின் மொபட்டில் புகுந்ததை கண்டு அதிர்ச்சி.
- நல்ல பாம்பு குட்டியை பிடித்து வெளியே கொண்டு வந்து காட்டு பகுதியில் விட்டனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் ஆசரியர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்வது வழக்கம்.
இந்நிலையில், வழக்கம்போல் ஆசிரியை ஒருவர் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அவ்வழியாக வந்த சிலர் நல்ல பாம்பு குட்டி ஒன்று ஆசிரியையின் மொபட்டில் புகுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சலிட்டனர்.
உடனே, அப்பகுதி பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திரை சீலன், அருள் ஜோதி, பாலாஜி அமுதன் ஆகியோர் நீண்ட நேரம் போராடி மொபட்டில் இருந்த நல்ல பாம்பு குட்டியை பிடித்து வெளியே கொண்டு வந்து காட்டு பகுதியில் விட்டனர். இதனால், பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் கூறும்போது:-
பள்ளியின் அருகில் கருவை காடுகள் மண்டியிருப்பதால் அங்கிருந்து அடிக்கடி பாம்புகள், விஷபூச்சிகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகள் வருகிறது. எனவே, கருவை மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- மன்னார்குடி சாலை ரெயில்வே கேட் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
- பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியில் மாற்றுத்தி றனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் தலைமையாசிரியர் அமுதரசு தலைமை தாங்கி னார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மங்கள் அன்பழகன் பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணி பள்ளியிலிருந்து புறப்பட்டு மன்னார்குடி சாலை ரெயில்வே கேட்டு சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
பேரணியில் மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பது, தொடர்ந்து கற்றலில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் ஆசிரியர் பயிற்றுநர் ஸ்ரீதரன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல்,ஆலங்காடு அரசு உயர்நிலைப்ப ள்ளியிலும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா, ஆசிரியர் பயிற்றுநர் ஸ்ரீதரன் மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஆதிரெங்கம் ஊராட்சியில் பிரதான மங்கள வாய்க்கால் அமைந்துள்ளது.
- பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் ஆகாய தாமரை செடிகள் புதர்போல் மண்டி கிடக்கிறது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த ஆதிரெங்கம் ஊராட்சியில் பிரதான மங்கள வாய்க்கால் அமைந்துள்ளது.
முள்ளியாற்றில் பிரிந்து கட்டிமேடு முதல் ஆதிரெங்கம் வரை 7-கிமீ தூரம் கொண்ட இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் ஆகாய தாமரை செடிகள் புதர்போல் மண்டி கிடக்கிறது.
தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக தண்ணீர் வடிய வழியின்றி வாய்க்காலின் கரைகளை தாண்டி செல்லும் நிலை உள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரனிடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து, செடிகளை எந்திரம் கொண்டு அகற்றும் பணி ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
பணியின் போது ஒன்றியக்குழு உறுப்பினர் சரஸ்வதி ராமகிருஷ்ணன்,துணைத்தலைவர் பொற்செல்வி செல்லபாண்டியன், ஊராட்சி செயலாளர் இளந்திரையன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவி செய்வது.
- பல்வேறு வகையான செய்முறை பயிற்சிகள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு.
நன்னிலம்:
நன்னிலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் நிலைய அலுவலர் (பொ) ஜெகதீசன் தலைமையில் மாப்பிள்ளைக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ,-மாணவிகளுக்கு பேரிடர் கால விழிப்புணர்வுப் பயிற்சி நடைபெற்றது.
பேரிடர் காலத்தில் இள வயதினரான மாணவ-மாணவிகள் தங்களையும், தங்களது பெற்றோ ர்களையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் அருகில் உள்ள மக்களுக்கு எவ்வாறு தங்களால் இயன்ற உதவியைச் செய்வது. தங்களையும் பாதுகாத்துக் கொண்டு பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவி செய்வது போன்ற பல்வேறு வகையான செய்முறைப் பயிற்சிகள் மூலம் மாணவர்களளுக்கு விழிப்புணர்வு ஏற்படு த்தப்பட்டது.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் உள்ள உபகரணங்களை பேரிடர் காலங்களில் எவ்வாறு உபயோகப்படுத்துவது. தீயணைப்புத் துறை, காவல்துறை, வருவாய் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளுக்கு எவ்வாறு தகவல் தெரிவிப்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வுப் பயிற்சிகள் நடத்தப்பட்டது.
மாப்பிள்ளைக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பேரிடர்கால விழிப்புணர்வுப் பயிற்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், மேலாண்மைக் குழு உறுப்பி னர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் மருதவாணன் தலைமையில் கலந்து கொண்டனர்.
- தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்கள் முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும்.
- 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
திருவாரூர்:
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டம் ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. இதில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் 19ஆம் தேதி (சனிக்கிழமை) திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு உண்டான தகுதிகள் பின்வருமாறு:-
ஓட்டுநருக்கு உண்டான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 162.5 சென்டிமீட்டர் குறையாமல் இருக்க வேண்டும்.
இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 15,235 (மொத்த ஊதியம்) வழங்கப்படும். தேர்வு முறையானது எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் சம்பந்த தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு, அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.
மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள் பி.எஸ்.சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம், டி.எம்.எல்.டி, (பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்.சி. விலங்கியல், தாவரவியல் பயோ வேதியியல், மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி இதில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மாதம் ஊதியம் ரூ.15,435 (மொத்த ஊதியம்) நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, மனிதவளத் துறையின் நேர்முகத் தேர்வு.
இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும் பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.
மேலும் விவரங்களுக்கு 044- 28888060/75/77 அல்லது 7397701801 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






