search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரிடர் கால விழிப்புணர்வு பயிற்சி
    X

    பேரிடர் கால விழிப்புணர்வு பயிற்சி

    • பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவி செய்வது.
    • பல்வேறு வகையான செய்முறை பயிற்சிகள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு.

    நன்னிலம்:

    நன்னிலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் நிலைய அலுவலர் (பொ) ஜெகதீசன் தலைமையில் மாப்பிள்ளைக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ,-மாணவிகளுக்கு பேரிடர் கால விழிப்புணர்வுப் பயிற்சி நடைபெற்றது.

    பேரிடர் காலத்தில் இள வயதினரான மாணவ-மாணவிகள் தங்களையும், தங்களது பெற்றோ ர்களையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் அருகில் உள்ள மக்களுக்கு எவ்வாறு தங்களால் இயன்ற உதவியைச் செய்வது. தங்களையும் பாதுகாத்துக் கொண்டு பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவி செய்வது போன்ற பல்வேறு வகையான செய்முறைப் பயிற்சிகள் மூலம் மாணவர்களளுக்கு விழிப்புணர்வு ஏற்படு த்தப்பட்டது.

    தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் உள்ள உபகரணங்களை பேரிடர் காலங்களில் எவ்வாறு உபயோகப்படுத்துவது. தீயணைப்புத் துறை, காவல்துறை, வருவாய் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளுக்கு எவ்வாறு தகவல் தெரிவிப்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வுப் பயிற்சிகள் நடத்தப்பட்டது.

    மாப்பிள்ளைக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பேரிடர்கால விழிப்புணர்வுப் பயிற்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், மேலாண்மைக் குழு உறுப்பி னர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் மருதவாணன் தலைமையில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×