என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • வள்ளியூர் முருகன் கோவில் சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    • முருக கடவுளின் அறுபடை வீடுகளுக்கு இணையான பெருமையுடையது வள்ளியூர் முருகன் கோவில்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் முருகன் கோவில் சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    குகை கோவில்

    முருக கடவுளின் அறுபடை வீடுகளுக்கு இணையான பெருமையுடையது வள்ளியூர் முருகன் கோவில். இக்கோவில் குகைகோவிலாக அமைந்து ள்ளது. தென்மாவட்டங்க ளிலுள்ள குகைகோவில்களில் இத்திருத்தலம் சிறப்பு பெற்றதாகும்.

    இக்கோவில் சித்திரைத் திருவிழா நாளை காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகின்ற திருவிழாவில் தினமும் சுவாமி ,அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறுகிறது. தினமும் இரவு சிவதொண்டர் செல்வராஜின் பக்தி சொற்பொழிவு நடைபெறு கிறது. இரவு சுவாமி அம்பாளுடன் பூதம், கிளி, அன்னம், யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியளிக்கிறார்.

    தேரோட்டம்

    ஒவ்வொரு நாள் திருவிழாவும் வெவ்வேறு சமுதாயத்தினர் சார்பில் நடைபெறுகிறது. வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாளுடன் எழுந்தருளுகிறார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர்.

    10-ம் திருவிழா இரவு சுவாமி அம்பாளுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியளிக்கிறார். திருவிழா ஏற்பாடுகளை முருக பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • நாக அர்ஜூன் சென்ற தளவாய்புரம் காலனி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி, பானிபூரி விற்பனை செய்யும் தள்ளுவண்டியின் மீது மோதியது.
    • விபத்தில் பலத்த காயமடைந்த நாக அர்ஜூன் உயிரிழந்தார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரம், ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் நாக அர்ஜூன் (வயது 28). இவர் நேற்று மாலை ஏர்வாடிக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தளவாய்புரம் காலனி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி, பானிபூரி விற்பனை செய்யும் தள்ளுவண்டியின் மீது மோதியது. இந்த விபத்தில் நாக அர்ஜூன் படுகாயமடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றார்.

    • உலக கல்லீரல் தினத்தையொட்டி நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி இன்று நடைபெற்றது.
    • கல்லீரல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே உலக கல்லீரல் தினத்தின் நோக்கமாகும்.

    நெல்லை:

    உலக கல்லீரல் தினத்தையொட்டி நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி இன்று நடைபெற்றது. வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எம்.கே.எம். முகமது ஷாபி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் ஷபீக், உமா மகேஸ்வரன், முகமது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மருத்துவமனையின் வயிறு, குடல் நோய் நிபுணர் கந்தசாமி என்ற குமார் கூறுகையில், கல்லீரல் நோயினால் இந்தியாவின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய தகவலாகும். கல்லீரல் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். கல்லீரல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே உலக கல்லீரல் தினத்தின் நோக்கமாகும். வருடத்திற்கு ஒருமுறை கல்லீரல் பரிசோதனை மிகவும் அவசியம் என்றார்.

    நிகழ்ச்சியில் ஷிபா காலேஜ் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் சென்டர் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். தொடர்ந்து கல்லீரலை பாதிக்கும் செயலை செய்வதில்லை என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவமனை மேலாளர் சுதர்சன் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு ஆண்ட்ரூ ஜெபா, ராதாகிருஷ்ணன், வீரகுமார், ஜானகிராமன், சுரேஷ், பாலா மற்றும் பலர் செய்திருந்தனர்.

    • நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக வளர் தமிழ் மன்ற தொடக்க விழா பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நடைபெற்றது.
    • வளர்தமிழ் மன்றத்தின் நோக்கம் குறித்து தமிழ்த்துறை தலைவர் நிர்மலா உரையாற்றினார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக வளர் தமிழ் மன்ற தொடக்க விழா பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நடைபெற்றது. இளநிலை 3-ம் ஆண்டு கணிதத்துறை மாணவி தில்லை அருந்ததி வரவேற்றார். கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி.காமராஜ் நாடார் தலைமை தாங்கினார்.முதல்வர் மேஜர் து.ராஜன் முன்னிலை வகித்தார். கல்லூரிக்குழு உறுப்பினர் பண்ணை கே.செல்வகுமார் வாழ்த்தி பேசினார். வளர்தமிழ் மன்றத்தின் நோக்கம் குறித்து தமிழ்த்துறை தலைவர் நிர்மலா உரையாற்றினார். விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் ச.ஸ்ரீமதி சிறப்புரையாற்றினார். இளநிலை 2-ம் ஆண்டு தாவரவியல் துறை மாணவி மி.லிபியா ஆண்ரூஸ் மேரி நன்றி கூறினார்.

    • பெரிய தொழில் அதிபர்கள், வி.ஐ.பி.க்கள் சிலர் இந்த சங்குகளை வைத்து பூஜை செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்புவதாக கூறப்படுகிறது.
    • கைதானவர்களை, வனத்துறையினர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி வனசரகம் ஏர்வாடியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 63).

    இவரது வீட்டில் அரிய வகை வலம்புரி சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மதுரையில் உள்ள தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின கட்டுப்பாட்டு பிரிவு உதவி வன பாதுகாவலர் மனாசிர் ஹலிமாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அரிய வகை பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்கள் பட்டியலில் இவை இருப்பதால் இவற்றை பதுக்கி வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.

    இதையடுத்து உதவி வன பாதுகாவலர் உத்தரவின்படி வனசரக அலுவலர்கள் சசிகுமார், நவீன்குமார், யோகேஸ்வரன் (திருக்குறுங்குடி) மற்றும் வனத்துறை ஊழியர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் சண்முகம் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் வீட்டில் 2 வலம்புரி சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சண்முகம் மற்றும் அவருடன் இருந்த சூரியன் (75), தென்காசியை சேர்ந்த பிரவின் (38), ராஜன் (44), சரவணன் (38), நெல்லையை சேர்ந்த வீரபெருமாள் (47), ஏர்வாடியை சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

    பெரிய தொழில் அதிபர்கள், வி.ஐ.பி.க்கள் சிலர் இந்த சங்குகளை வைத்து பூஜை செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்புவதாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்து இந்த கும்பல் வலம்புரி சங்குகளை விற்பனை செய்வதற்காக சிலரிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசி விற்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

    பின்னர் கைதானவர்களை, வனத்துறையினர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பாதிக்கப்பட்டவர்களுடன் மக்கள் கண்காணிப்பு வழக்கறிஞர்கள் அம்பை போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.
    • பல் பிடுங்கப்பட்ட சம்பவம் நடந்த அறைகளை காட்டி சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்து விளக்கினர்.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவர் மீது நெல்லை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 10-ந்தேதி விசாரணை நடத்தினார். நேற்று அவர் அம்பை தாலுகா அலுவலகத்தில் தனது 2-ம் கட்ட விசாரணையை தொடங்கினார்.

    நேற்று காலை 10 மணிக்கு விசாரணை தொடங்கிய நிலையில் பாதிக்கப்பட்ட சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி, விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார், அவரது தாயார் ராஜேஸ்வரி மற்றும் 16, 17 வயதுள்ள 2 சிறுவர்கள் ஆகிய 5 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனர் வக்கீல் மகாராஜன் தலைமையில் சிவந்திபுரத்தை சேர்ந்த சகோதரர்கள் செல்லப்பா, மாரியப்பன், இசக்கிமுத்து, உள்பட 11 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    அவர்களிடம் அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். நள்ளிரவு 12.15 மணி வரை விசாரணை நடத்தினார். மேலும் 3 பேரும் விளக்கம் அளிக்க வந்திருந்த நிலையில் அவர்களிடம் இன்று காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு 2-வது நாளாக அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணையை தொடங்கினார். அப்போது வேதநாராயணன், மாரியப்பன், சுபாஷ் ஆகிய 3 பேர் ஆஜராகினர்.

    இதற்கிடையே மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் அம்பை தாலுகா அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ்.-ஐ நேரில் சந்தித்து பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை தகவல்களை அபிடவிட்டாக தாக்கல் செய்தார்.

    இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்களுடன் சென்று அம்பாசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிப்பதாக தெரிவித்தார்.

    பின்னர் பாதிக்கப்பட்டவர்களுடன் மக்கள் கண்காணிப்பு வழக்கறிஞர்கள் அம்பை போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பல் பிடுங்கப்பட்ட சம்பவம் நடந்த அறைகளை காட்டி சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்து அவர்கள் விளக்கினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • வியாபாரிகள் நலன் கருதி சந்திப்பு பஸ் நிலையத்தை திறக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
    • சந்திப்பு பகுதியில் உள்ள கடைகள் ஆர்ப்பாட்டம் முடியும் வரை அடைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ. 79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தின் ஒரு பகுதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி பணிகள் நிறைவு பெற்ற பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கருப்பு கொடி போராட்டம்

    பஸ் நிலையம் திறக்கப்படாததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சந்திப்பு பகுதி வியாபாரிகள் பல்வேறு விதத்தில் பஸ் நிலையத்தை திறக்க கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழ்நாடு வணிகள் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை வடக்கு மாவட்டம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தலைவர் செல்வ ராஜ் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் எம்.ஆர். சுப்பிரமணியன், தமிழ்நாடு நுகர்பொருள் விநியோ கஸ்தர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் வெங்கடேஷ், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட செயலாளர் நயன்சிங், மாவட்ட கூடுதல் செயலாளர் விநாயகம், மாவட்ட பொருளாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோஷம்

    தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி சந்திப்பு பஸ் நிலையத்தை திறக்க வேண்டும் அல்லது அதுவரை அனைத்து பஸ்களும் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    இதில் சந்திப்பு வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர், ராஜா பில்டிங் வியாபாரிகள் நலச்சங்கம், த.மு. கட்டிட வியாபாரிகள் சங்கம், சிந்துபூந்துறை வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடியுடன் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடைகளில் கருப்பு கொடி

    ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சந்திப்பு பகுதியில் உள்ள கடைகள் இன்று ஆர்ப்பாட்டம் முடியும் வரை அடைக்க ப்பட்டிருந்தது. மேலும் கோரிக்கைகளை வலிறுத்தி சந்திப்பு பகுதி களில் உள்ள கடைகளில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், மாவட்ட இணைச்செயலாளர் சாலமோன், மாவட்ட துணைத்தலைவர்கள் ஸ்டீபன் பிரேம்குமார், அருள் இளங்கோ, முகம்மது அலி, மாவட்ட துணைச்செயலாளர் மீரான், தொகுதி செயலாளர் சேக்பரித், கருப்பசாமி, மாவட்ட செய்தி தொடர்பா ளர் பகவதிராஜன்,

    ராஜா பில்டிங் வியாபாரி கள் நலச்சங்க தலைவர் எர்னஸ்ட் பர்னாந்து, சிந்துபூந்துறை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஆஞ்சீஸ், நெல்லை மாநகர் சந்திப்பு வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் சங்கர நாராயணன், த.மு. கட்டிட வியாபாரிகள் சங்கத்தலை வர் ரவீந்திரன், நெல்லை மாநகர் சந்திப்பு வியா பாரிகள் சங்கசெயலாளர் ஜெயச்சந்திரன், புதிய பஸ்நிலைய வியாபாரிகள் நலச்சங்க பொருளாளர் ஆனந்தமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    கையில் கருப்புகொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள்.

    கையில் கருப்புகொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள்.


    கடைகளின் முகப்பில் கருப்பு கொடி கட்டப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

    கடைகளின் முகப்பில் கருப்பு கொடி கட்டப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.


     


     


    • கோவில் கொடை விழாவுக்காக ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆகும்.
    • ரம்ஜான் பண்டிகையில் செம்மறி ஆடுகள் தேவை அதிகம் இருக்கும்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளை யத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று ஆடு, கோழி, மாடு விற்பனை செய்யக்கூடிய சந்தை நடந்து வருகிறது.

    இங்கு நெல்லை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியா பாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து ஆடு, மாடுகளை விற்பனை செய்தும், வாங்கியும் செல்வார்கள்.

    இதனால் இந்த சந்தையில் விற்பனை மும்முரமாக நடைபெறும். வியாபாரிகள் கூட்டம் அலைமோதும். மேலும் சித்திரை, ஆடி, ஆவணி மாதங்களில் கோவில் கொடை விழாவுக்காக ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆகும். இதேபோல் ரம்ஜான், பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெறும்.

    சந்தையில் குவிந்த ஆடுகள்

    இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை வருகிற சனிக்கிழமை கொண்டாடப் படுகிறது. இதையொட்டி மேலப்பாளையம் கால்நடை சந்தையில் இன்று காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், அருப்பு க்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆயிரக்க ணக்கான ஆடுகளை சந்தைக்கு கொண்டு வந்து குவித்தனர்.

    ரம்ஜான் பண்டிகையில் செம்மறி ஆடுகள் தேவை அதிகம் இருக்கும் என்பதால், இன்று கூடுதல் செம்மறி ஆடுகள் சந்தைக்கு வந்திருந்தன. பாவூர்சத்திரம், ஆலங்குளம், ரெட்டியார்பட்டி, கடையம், அடைக்க லப்பட்டினம் பகுதியில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடுகள் மற்றும் குட்டிகளை விற்பனைக்கு கொண்டு வந்து குவித்தனர்.

    செம்புகிடா

    ஆட்டுக்குட்டிகள் தலா ரூ.6 ஆயிரம் முதல் விற்பனையானது. சில குறிப்பிட்ட இன ஆடுகள் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. அதே நேரத்தில் செம்புகிடா ஒன்று அதிகபட்சமாக ரூ.32 ஆயிரத்துக்கு விலைபோனது. ஆனாலும் விலையை பற்றி வியாபாரிகள் யோசிக்காமல் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.

    இன்று ஒரே நாளில் 4 ஆயிரம் டோக்கன்கள் மாநகராட்சி சார்பில் வாக னங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு டோக்கனுக்கு ரூ.50 வீதம் ரூ.2 லட்சம் மாநகராட்சிக்கு வசூலானது. சந்தையை ஒட்டியுள்ள நேதாஜி சாலை, மேலப்பாளையம் சக்திநகர் பகுதியிலும் குவிந்த வியாபாரிகளால் கோழி விற்பனையும் களை கட்டியது.

    • ஆர்ப்பாட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் இசக்கி தலைமை தாங்கினார்.
    • தொழிற்சாலை சட்டதிருத்தம் என்ற பெயரில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்ற கூடாது.

    நெல்லை:

    நெல்லை அரசு போக்குவரத்துக கழகத்தின் சி.ஐ.டி.யு. ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வண்ணார்பேட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் இசக்கி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் தொடக்க உரையாற்றினார்.

    அவுட்சோர்சிங் முறையில் டிரைவர்கள் நியமனம் செய்வதை கைவிட வேண்டும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், தொழிற்சாலை சட்டதிருத்தம் என்ற பெயரில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்ற கூடாது என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் விரைவு போக்குவரத்து கழக மாநில துணை பொதுச்செயலாளர் சுதர்சிங், மத்திய சங்க உதவி செயலாளர் அருள் மற்றும் நிர்வாகிகள் பொன்ராஜ், வெங்கடாசலம், பெருமாள், மோகன், சரவணகுமார் உள்பட பலர் கண்டன உரையாற்றினர். டி.என்.எஸ்.டி.சி. பொதுச்செயலாளர் ஜோதி நிறைவுரையாற்றினார்.

    • இண்டர்நெட் கேபிளுக்காக சாலை ஓரத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றது.
    • 10 நாட்களாக சீலாத்திகுளம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது.

    வள்ளியூர்:

    ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட சீலாத்திகுளம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 3 இடங்களில் குடிநீர் குழாய் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சமூகரெங்கபுரத்தில் இருந்து சீலாத்திகுளம் செல்ல கூடிய சாலை ஓரத்தில் இண்டர்நெட் கேபிளுக்கு குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது தாமிரபரணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது.

    இதுகுறித்து தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் தற்போது வரை குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யவில்லை. இதனால் 10 நாட்களாக சீலாத்திகுளம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. கோடைகாலம் தொடங்கி விட்டதால் குடிநீர் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விரைவில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வழங்கவில்லை என்றால் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்த போவதாக தெற்கு ஒன்றிய செயலாளர் காமராஜ் அறிவித்துள்ளார்.

    • விழாவுக்கு கல்லூரியின் தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமை தாங்கி பேசினார்.
    • சிறப்பு விருந்தினராக டாக்டர் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் கலந்து கொண்டார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் 52-வது விளையாட்டு விழா பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமை தாங்கி பேசினார். செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார் பேசினார். முதல்வர் ராஜன் வரவேற்றார். கல்லூரி விளையாட்டு துறை இயக்குனர் ஜே.ஜெய்சன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    விழாவில் நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் இயக்குனர்கள், கல்லூரிக்குழு மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் காமராஜ், ரகுநாதன், லிங்க செல்வன், கோல்டன் செல்வராஜ், பண்ணை செல்வகுமார், நவ்வலடி பள்ளி தலைமை ஆசிரியர் கருணாகரன் ராஜராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுயநிதிப்பிரிவு வணிகவியல் துறை பேராசியர் மரிய கிரிஸ்டின் நிர்மலா நன்றி கூறினார்.

    • குணசேகரனுக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • வெங்கடேஷ், அன்பு ஆகிய 2 பேரும் குணசேகரனை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் மருதம்நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 37). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 14-ந்தேதி இரவு வேலை முடிந்து மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

    அரிவாள்வெட்டு

    அப்போது அந்த வழியாக வந்த 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த குணசேகரனுக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

    3 பேர் கைது

    இந்நிலையில் உதவி கமிஷனர் சதீஷ்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதில் தொடர்புடைய கருங்குளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முருகையா மகன் வெங்கடேஷ்(வயது 26), முத்தையா மகன் அன்பு(22), ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேரூர் உச்சிமாகாளி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.

    சம்பவத்தன்று வெங்கடேஷ், அன்பு ஆகிய 2 பேரும் மதுபோதையில் குணசேகரனை ஓட ஓட விரட்டி வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவைகுண்டத்திற்கு தப்பி சென்றதாகவும், அப்போது இசக்கிமுத்து அவருக்கு உதவியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×