search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையத்தில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 3 வாலிபர்கள் கைது
    X

    மேலப்பாளையத்தில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 3 வாலிபர்கள் கைது

    • குணசேகரனுக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • வெங்கடேஷ், அன்பு ஆகிய 2 பேரும் குணசேகரனை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் மருதம்நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 37). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 14-ந்தேதி இரவு வேலை முடிந்து மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

    அரிவாள்வெட்டு

    அப்போது அந்த வழியாக வந்த 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த குணசேகரனுக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

    3 பேர் கைது

    இந்நிலையில் உதவி கமிஷனர் சதீஷ்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதில் தொடர்புடைய கருங்குளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முருகையா மகன் வெங்கடேஷ்(வயது 26), முத்தையா மகன் அன்பு(22), ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேரூர் உச்சிமாகாளி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.

    சம்பவத்தன்று வெங்கடேஷ், அன்பு ஆகிய 2 பேரும் மதுபோதையில் குணசேகரனை ஓட ஓட விரட்டி வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவைகுண்டத்திற்கு தப்பி சென்றதாகவும், அப்போது இசக்கிமுத்து அவருக்கு உதவியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×