என் மலர்
திருநெல்வேலி
- அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் டெல்லி சென்று நிலக்கரி இறக்குமதி செய்ய கோரிக்கை வைக்கட்டும்.
- சட்டமன்றத்தில் புதிய நிலக்கரி சுரங்கம் வராது என முதலமைச்சர் உறுதிகொடுத்தார்.
நெல்லை:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து பா.ம.க. சார்பில் கடந்த 28-ந்தேதி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கட்சி நிர்வாகிகள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.
இதைத்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக பா.ம.க.வை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பாதுகாப்பு கருதி அவர்களில் 20 பேரை பாளை மத்திய சிறையில் நேற்று இரவு அடைத்தனர். அவர்களை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான மூலமாக இன்று காலை அன்புமணி ராமதாஸ் வந்து சேர்ந்தார்.
அங்கிருந்து காரில் நெல்லை புறப்பட்டு வந்த அவர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கட்சியினரை பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெய்வேலியில் என்.எல்.சி.க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் மீது இந்திய தண்டனை சட்டம் 307, 506 உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட யாரும் எந்த தப்பும் செய்யாதவர்கள். கைது செய்யபட்டவர்கள் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் கிடையாது. கடலூரில் இருந்து அவர்களை மாற்று சிறைக்கு மாற்ற என்ன காரணம்?
என்.எல்.சி. விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன் என தெரியவில்லை. 3-வது என்.எல்.சி. சுரங்கத்திற்கு எந்தவித எதிர்ப்பும் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. புதிய சுரங்கம் அமைக்கும் இடம் பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலத்திற்குள் வருகிறது. காவிரி டெல்டா பகுதியில் எந்தவித சுரங்கமும் தொடங்கமாட்டோம் என சொல்லிய முதலமைச்சர் என்.எல்.சி விவகாரத்தில் அமைதியாக உள்ளார்.
என்.எல்.சி. விவகாரம் மண் தொடர்பான பிரச்சனை. தமிழகத்தின் வளர்ச்சிக்கான பிரச்சனை. விவசாயிகள் நண்பன் என தமிழக அரசு இனி சொல்லக்கூடாது. எங்கள் கூட்டத்தின் மீது சமூக விரோதிகள் புகுந்ததன் காரணமாக தான் அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. என்.எல்.சியில் இனியும் போராட்டம் நடத்தக்கூடாது என்பது தான் அரசு மற்றும் காவல் துறையின் நோக்கம். 64, 750 ஏக்கர் விளைநிலங்களை என்.எல்.சிக்கு தமிழக அரசு குத்தகைக்கு விட்டுள்ளது.
மத்திய அரசை இந்த விவகாரம் தொடர்பாக வலியுறுத்தி வருகிறோம். நான் தனியாக இதனை செய்ய முடியாது. என்.எல்.சிக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் எந்த விவசாயிக்கும் கிடையாது.
நெய்வேலியில் இருந்து என்.எல்.சி. வெளியேற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அனைத்து விவகாரத்திலும் பா.ஜ.க.வை எதிர்க்கும் தி.மு.க. என்.எல்.சி.க்கு மட்டும் ஏன் ஆதரவாக இருக்கிறது.
2026-ல் பா.ம.க மற்றும் அதன் நோக்கம் உள்ள கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு. அதற்கான நடவடிக்கைகள் 2024-ல் தொடங்கும்
அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் டெல்லி சென்று நிலக்கரி இறக்குமதி செய்ய கோரிக்கை வைக்கட்டும். நெய்வேலி தொடர்பான போராட்டமே மத்திய, மாநில அரசுகளை கண்டித்துதான் நடக்கிறது. தமிழகத்தில் இருக்கும் அனைவரும் என்.எல்.சிக்கு எதிராக போராட்டம் நடத்தவேண்டும்.
சட்டமன்றத்தில் புதிய நிலக்கரி சுரங்கம் வராது என முதலமைச்சர் உறுதிகொடுத்தார். ஆனால் இந்த விவகாரம் நடக்கும் நிலையில் எந்த பதிலும் இல்லை. தொடர்ந்து எங்கள் போராட்டம் கடுமையான முறையில் நடக்கும். இந்த பிரச்சனை தேர்தலுக்காக நடத்தப்பட்ட போராட்டமல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி, சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. அருள், தருமபுரி தொகுதி எம்.எல்.ஏ. வெங்டேஸ்வரன், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவகுமார், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம், செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு, நெல்லை மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
- பாதுகாப்பு கருதி அவர்களில் 20 பேரை பாளை மத்திய சிறையில் நேற்று இரவு அடைத்தனர்.
நெல்லை:
என்.எல்.சி. நிறுவனத்தின் 2-ம் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக சுற்றுவட்டார பகுதிகளான கத்தாழை, கரிவெட்டி, சுப்பையா நகர், வளையமாதேவி உள்ளிட்ட இடங்களில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி, அதற்கான இடத்தை என்எல்சி நிறுவனம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கையகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், என்.எல்.சி நிறுவனத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தி வரும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இப்பணியை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும், என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 28-ந்தேதி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கட்சி நிர்வாகிகள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து பெரும்பாலானோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பாதுகாப்பு கருதி அவர்களில் 20 பேரை பாளை மத்திய சிறையில் நேற்று இரவு அடைத்தனர்.
தகவல் அறிந்து அவர்களை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான மூலமாக இன்று காலை அன்புமணி ராமதாஸ் வந்து சேர்ந்தார். அங்கிருந்து காரில் நெல்லை புறப்பட்டு வந்த அவர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கட்சியினரை பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.
- பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் ஜனநாயகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
- ஒடுக்கப்பட்ட சிறுபான்மை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மிகவும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
நெல்லை:
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று மேலப்பாளையத்தில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மணிப்பூரில் கிறிஸ்தவ பழங்குடியின மக்களுக்கு எதிராக 3 மாதங்களாக கலவரம் நீடித்து வரும் நிலையில், சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் கலவரத்தால் மிகப்பெரும் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் ஜனநாயகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட சிறுபான்மை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மிகவும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
மணிப்பூர், அரியானா கலவரங்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு நடவடிக்கைகளை தடுக்கத் தவறிய பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும்.
பாராளுமன்றத்தில் காட்டு வளங்களை தனியாருக்குத் தாரை வார்க்கும் வகையில் வனப்பாதுகாப்பு திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் வகையில் பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் பெறாமலே காடுகளில் திட்டங்களை நிறைவேற்றும் வகையில் இச்சட்ட மசோதாவின் சரத்துகள் அமைந்துள்ளதால் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
நெய்வேலியில் என்.எல்.சியின் 2-வது சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தி கனரக வாகனங்களை கொண்டு பயிர்களை சேதப்படுத்தி அத்துமீறும் என்.எல்.சி. நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் நடவடிக்கையில், பாரபட்சம் பாராமல் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த நாட்களுக்கு எல்லாம் மகுடமாக இருப்பது ஆடிப்பெருக்கு நாள் ஆகும்.
- தாமிரபரணி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.
நெல்லை:
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த நாட்களுக்கு எல்லாம் மகுடமாக இருப்பது ஆடிப்பெருக்கு நாள் ஆகும். ஆடிப்பெருக்கு என்றால் ஆடி மாதம் 18-ந்தேதியை குறிக்கும்.
இந்த நாளில் பெண்கள் தங்களது கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி ஆற்றங்கரை யோரம் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். பெண் குழந்தைகளுக்கு கழுத்திலும், ஆண்களுக்கு கையிலும் மஞ்சள் கயிறு கட்டி விடுவார்கள்.
திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர். இதன் மூலமாக அவர்களுக்கு அடுத்த ஆடி மாதத்திற்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.
இந்நிலையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளான இன்று நெல்லை டவுன் குறுக்குத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தாமிரபரணி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். இதைத் தொடர்ந்து பெண்கள் நதிக்கரைகளில் தாலி பிரித்து கோர்த்தனர். இளம் வயது பெண்கள், சுமங்கலி பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நெல்லை மாநகராட்சியின் அவசர கூட்டம் இன்று நடைபெற்றது.
- கவுன்சிலர்கள் ரவீந்தர், உலகநாதன் உள்ளிட்டோர் நெல்லை கண்ணன் சாலை என பெயரிட்டதற்கு வாழ்த்தி பேசுவதற்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறினர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி யின் அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சரவணன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை கண்ணன் பெயர்
கூட்டத்தை திருக்குறள் வாசித்து மேயர் சரவணன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை டவுன் ஆர்ச் முதல் குறுக்குத்துறை சாலை வரையிலான இணைப்பு சாலைக்கு தமிழ் அறிஞர் நெல்லை கண்ணனின் பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கூட்டம் இந்த தீர்மானத்துடன் முடிவடைவதாக மேயர் சரவணன் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது கவுன்சிலர்கள் ரவீந்தர், உலகநாதன் உள்ளிட்டோர் நெல்லை கண்ணன் சாலை என பெயரிட்டதற்கு வாழ்த்தி பேசுவதற்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் அதற்குள் கூட்டம் முடிக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த 27-ந்தேதி நடைபெற்ற நெல்லை மாநகராட்சி கூட்டத்திலேயே இந்த தீர்மானம் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு சில மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அனைத்து மாமன்ற உறுப்பினர்களிடமும் விவாதம் நடத்தி கருத்து கேட்டு தீர்மானத்தை நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்களின் ஒட்டுமொத்த ஆதரவின் கீழ் சாலைக்கு நெல்லை கண்ணனின் பெயர் சூட்டப்பட்டது.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் உலகநாதன், ரவீந்தர், கிட்டு, கோகுல வாணி, பவுல்ராஜ், அனுராதா சங்கரபாண்டியன், முத்துலட்சுமி சண்முகையா பாண்டியன், சந்திரசேகர், முத்து சுப்பிரமணியன், சுந்தர், நித்திய பாலையா, வில்சன் மணித்துரை உள்பட பலர் பங்கேற்றனர்.
- பானுப்பிரியாவிற்கும், அவரது கணவர் தர்மராஜா விற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
- நேற்று வீட்டில் இருந்த பானுப்பிரியா மகளுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங் களில் தேடியும் பானுப்பிரியா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் பானுப்பிரியா (வயது 23). இவரது கணவர் தர்மராஜா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலை யில் பானுப்பிரியாவிற்கும், அவரது கணவர் தர்மராஜா விற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து பானுப்பிரியா கணவரை விட்டு பிரிந்து சுப்பிரமணி யபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் மகளுடன் கடந்த 8 மாதமாக வசித்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த பானுப் பிரியா மகளுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங் களில் தேடியும் பானுப்பிரியா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி பானுப்பிரியாவின் தாயார் சமுத்திரக்கனி (46) களக்காடு போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜு, களக்காடு இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி மாயமான பானுப் பிரியா மற்றும் அவரது மகளை தேடி வருகின்றனர்.
- எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு அந்நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- கல்லூரியின் 56 மாணவர்கள் மற்றும் 5 பேராசிரியர்கள் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன் மீதான ரெட் ஹாட் லினக்ஸ் சான்றிதழ் பயிற்சி பெற்றுள்ளனர்.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு அந்நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 100 சதவீத வேலைவாய்ப்பு உத்தரவாதம் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமான ரெட் ஹாட் நிறுவனத்துடன் பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் ரெட் ஹாட் அகாடமியின் செயலில் உறுப்பினராகவும் உள்ளது.
இதன் தொடர்ச்சியாக கல்லூரியின் 56 மாணவர்கள் மற்றும் 5 பேராசிரியர்கள் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன் மீதான ரெட் ஹாட் லினக்ஸ் சான்றிதழ் பயிற்சி பெற்றுள்ளனர்.
இதில் 8 மாணவர்கள் மற்றும் பேராசிரியர் பிரிஸ்கில்லா, ஏஞ்சல் ராணி ஆகியோர் ரெட் ஹாட் லினக்ஸ் நிறுவனத்தில் நன்கு பயிற்சி பெற்று சர்வதேச சான்றிதழை வெற்றிகரமாக பெற்றுள்ளனர். இந்த சர்வதேச சான்றிதழானது மாணவர்களின் வேலைவாய்ப்புகள் மற்றும் அவர்களின் பிரகாசமான எதிர்காலத்தை பெற உதவுகிறது. இதனால், மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
இதற்காக பாடுபட்ட பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லுரி முதல்வர் வேல்முருகன், இயக்குநர்கள் ஜான்கென்னடி, முகமது சாதிக், லூர்தஸ் பூபாலராயன், கணினி துறை தலைவர் அரவிந்த் சுவாமிநாதன் மற்றும் பேராசிரியர், மாணவர்களை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.
- மருகால்குறிச்சியை சேர்ந்தவர் சரவணன் (வயது 55). இவர் போலீஸ்காரராக பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளார்.
- தாக்குதல் தொடர்பாக டி.எஸ்.பி.ராஜூ, இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மருகால்குறிச்சியை சேர்ந்தவர் சரவணன் (வயது 55). இவர் போலீஸ்காரராக பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளார். நேற்று இவர் அங்குள்ள கல்மண்டபத்தில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த ராமையா மகன் குபேந்திரா, அவரது சகோதரர் வானுமாமலை, உறவினர் ஆனந்த் உள்பட 4 பேர், சரவணனிடம் இங்கு எப்படி படுக்கலாம் எனக் கேட்டு தகராறு செய்தனர்.
இதில் ஆத்திரம் அடைந்த குபேந்திரா உள்பட 4 பேரும் சேர்ந்து, சரவணனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. நாங்குநேரி டி.எஸ்.பி.ராஜூ, இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி குபேந்திரா உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
- தெற்குகள்ளிகுளத்தில் பரிசுத்த அதிசய பனிமாதா காட்சி கொடுத்து தம்பாதம் பதித்த மலை கெபி அமைந்துள்ளது
- தெற்குகள்ளிகுளத்தை சேர்ந்த சென்னை தொழிலதிபர் சாமிநாதன் மலை கெபிக்கு மின்தூக்கி அமைக்கும் பணியை தன்சொந்த செலவில் செய்து கொடுக்க முன்வந்தார்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் பரிசுத்த அதிசய பனிமாதா காட்சி கொடுத்து தம்பாதம் பதித்த மலை கெபி அமைந்துள்ளது. இந்த மலைக்கு செல்ல பாறையை செதுக்கி படிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படிகள் வழியாக ஏறிச்சென்று மாதா காட்சி கொடுத்த கெபியையும், பாதம் பதித்த இடத்தையும் தரிசிக்க சிறுவர்கள் மற்றும் முதியவர்களால் இயல வில்லை. எனவே மாதா காட்சி கொடுத்த மலைக்கு செல்ல மின்தூக்கி (லிப்ட்) அமைக்கவேண்டும் என கோரிக்கை முதிய வர்கள் மத்தியில் நெடுங்காலமாக இருந்து வந்தது.
இந்நிலையில் தெற்குகள்ளிகுளத்தை சேர்ந்த சென்னை தொழிலதிபர் சாமிநாதன் மலை கெபிக்கு மின்தூக்கி அமைக்கும் பணியை தன்சொந்த செலவில் செய்து கொடுக்க முன்வந்தார். இதனை அடுத்து மலைக்கெபிக்கு மின்தூக்கி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மலையடிவாரத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அதிசய பனிமாதா கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமை தாங்கினார். பங்குதந்தை ஜெரால்டு எஸ்.ரவி ஜெபம் செய்து அர்ச்சித்தார். தொழிலதிபர் சாமிநாதன் அடிக்கல்நாட்டி மின்தூக்கி அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மும்பை களிகை சங்க தலைவர் மைக்கிள் பிரகாசம், செயலாளர் அந்தோணி சீலன், முன்னாள் செயலாளர் லாசர், சுரேஷ், கள்ளிகுளம் புனித பேரரசு, கவுதம், ஆன்றோ, சென்னை களிகை சங்க தலைவர் ஜெயசீலன், செயலாளர் தங்கதுரை, பொருளாளர் ஜூலியஸ், ஜார்ஜ் செல்வன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, பெஸ்கி, ரூபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கைது செய்யப்பட்ட சதீஷ், ராகுல் ஆகியோர் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- களக்காடு, திருக்குறுங்குடி, பணகுடி பகுதிகளை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை வனத்துறை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில், திருக்குறுங்குடி வனசரகர் யோகேஷ்வரன் தலைமையில் வனத்துறை தனிப்படையினர் பரிவரிசூரியன் பீட், கரும்பாறை சரகம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த சதீஷ்(வயது 42), ராகுல்(23) ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். உடனே அவர்கள் 2 பேரிடமும் வனத்துறையினர் விசாரித்தனர். அதில் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பழத்தில் மறைத்து வீசியது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 3 நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ், ராகுல் ஆகியோர் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக களக்காடு, திருக்குறுங்குடி, பணகுடி பகுதிகளை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை வனத்துறை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே அந்த கும்பலுக்கு நாட்டு வெடிகுண்டுகள் எப்படி கிடைத்தது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வனசரகர் யோகேஷ்வரன் கூறுகையில், 'வன உயிரினங்களை வேட்டையாடுவது, கறிகளை விற்பனை செய்வது, அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைவது, வனத்தில் தீ வைப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது வன பாதுகாப்பு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய கும்பல் குறித்து தகவல் கிடைத்தால் பொதுமக்கள் களக்காடு துணை இயக்குனர் அலுவலகத்திலோ, திருக்குறுங்குடி வனசரகர் அலுவலகத்திலோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும்' என்றார்.
- போலீசார் அழகுமுத்து, முருகேஷ், கிரி ஆகியோரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முகேசின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து சின்னகுட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த கீழ வீரராகவபுரத்தை சேர்ந்தவர் முகேஷ்(வயது 30). இவர் உணவு பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி சுபிதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். இவரது ஊரில் உள்ள கோவில் விழா ஒன்றுக்காக பொருட்கள் வாங்குவதற்காக முகேஷ் தனது தந்தையுடன் நேற்று மாலை வண்ணார்பேட்டைக்கு வந்து விட்டு இரவில் வீடு திரும்பியுள்ளார்.
தொடர்ந்து இரவு 9 மணிக்கு உணவு டெலிவரி செய்ய செல்வதாக கூறிவிட்டு முகேஷ் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் நள்ளிரவு நேரம் வரையிலும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சுபிதா அவரது செல்போனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் போன் சுவிட்ச்-ஆப் என்று வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுபிதா தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, குருந்துடையார்புரம் பகுதியில் அவர்கள் முகேசை தேடி பார்த்துள்ளனர். அப்போது ரெயில்வே தண்டவாளம் முன்பாக சாலையில் மோட்டார் சைக்கிள் கிடந்தது. மேலும் அங்குள்ள முட்புதரில் முகேஷ் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து சுபிதா கதறி அழுதார்.
இதுகுறித்து பாளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. உடனடியாக உதவி கமிஷனர் பிரதீப் மற்றும் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, முகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் முகேசுக்கும், கீழவீரராகவபுரத்தில் அதே தெருவில் வசிக்கும் சின்னகுட்டி என்பவருக்கும் இடையே கோவில் பிரச்சனையில் அடிதடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வரும் நிலையில், ஒரு வழக்கில் சின்னகுட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த முன்விரோதத்தில் ஆத்திரம் அடைந்த சின்னகுட்டி, தனது சகோதரரின் மகனான அழகு முத்து(24) என்பவரிடம் எப்படியாவது முகேசை தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அழகு முத்து தனது நெருங்கிய நண்பரான முருகேஷ்(24) மற்றும் அவரது நண்பர் கிரி(20) மற்றும் சிலருடன் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அழகுமுத்து, முருகேஷ், கிரி ஆகியோரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே முகேசின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து சின்னகுட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் வீட்டில் ஆட்கள் யாரும் இல்லை. இதனால் அவரது வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடினர். வீட்டையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். உடனே போலீசார் அங்கு சென்று முகேசின் உறவினர்களை சமாதானப்படுத்தினர். இதனையொட்டி அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
- பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளி மேலாண்மை குழு நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் மாநகராட்சி கல்வி குழு தலைவர் பவுல்ராஜ் தலை மையில் நடைபெற்றது.
- குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ல் கூறியுள்ள படி அனைத்து பள்ளி களிலும் கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளி வேளாண்மை குழு மற்றும் அதன் செயல்பாடு களை பற்றி புரிதல் ஏற்படுத்தப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளி மேலாண்மை குழு நகர்புற உள்ளாட்சி பிரதிநிதி களுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் மாநகராட்சி கல்வி குழு தலைவர் பவுல்ராஜ் தலை மையில் நடைபெற்றது.
இதில் குழந்தை களுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ல் கூறியுள்ள படி அனைத்து பள்ளி களிலும் கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளி வேளாண்மை குழு மற்றும் அதன் செயல்பாடு களை பற்றியும், சட்டம் வலியுறுத்தும் குழந்தை களின் உரிமைகள் பற்றியும், மாநகர நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் துறை பிரதிநிதிகளுக்கு எடுத்து கூறும் வகையிலும் பள்ளி வளர்ச்சி குழந்தை களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு குறித்து புரிதல் ஏற்படுத்தப்பட்டது.
மேலும் பள்ளியில் கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழுவில் நகர்புற ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பும், கட மையும் உணர்ந்து செயல்பட வலியுறுத்தவும், பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில் பள்ளி வளர்ச்சி முன்னே ற்றம் மற்றும் பாதுகாப்பில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்கை மேம்படுத்தும் வகை யில் மாநகராட்சி கவுன்சி லர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடை பெற்றது.
இக்கருத்தரங்கில் நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் துணைமேயர் கே.ஆர்.ராஜு,நிதிக்குழு தலைவர் சுதா மூர்த்தி, மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேஸ்வரி , கதீஜா இக்லாம் பாசிலா, ரேவதி மற்றும் கவுன்சிலர்கள் கோகுலவாணி சுரேஷ், உலகநாதன், ரவீந்தர், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், கந்தன் ,இந்திரா மணி, சுந்தர், நித்ய பாலையா மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு , உதவி திட்ட அலுவலர் சிவராஜ் , நகர் வட்டார மேற்பார்வையாளர் செண்பகாதேவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, ஆசிரியர் பயிற்று நர்கள் சுப்பிரமணியன், செல்வகுமார், மகளிர் திட்ட தொடர்பாளர் ரேவதி, பயிற்சியாளர் கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.






