என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • பிரதமர் மோடி தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
    • அயோத்தியில் உள்ள கோவிலில் ராமர், லட்சுமணன், சீதா பிராட்டிக்கு அணிவிப்பதற்குத் தேவையான பட்டு ஆடைகளை பிரதமரிடம் வழங்கினோம்.

    திருச்சி:

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

    நேற்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, சுந்தர் பட்டர் தலைமையில் தங்க குடத்துடன் கூடிய பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து முக்கிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்த அவர், கம்பராமாயணத்தின் பாராயணம் கேட்டு மகிழ்ந்தார்.

    அதன் பின்னர் தீபக் (எ) ராகவ் பட்டர், ஸ்தானிகர்கள் ரங்கராஜன், கோவிந்தராஜன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியிடம், அயோத்தி ராமர் கோவிலுக்கான பட்டு வஸ்திரங்கள் கோவில் சார்பில் வழங்கினர்.

    இதுதொடர்பாக, கோவிந்தராஜன் கூறுகையில்:-

    அயோத்தியில் உள்ள கோவிலில் ராமர், லட்சுமணன், சீதா பிராட்டிக்கு அணிவிப்பதற்குத் தேவையான பட்டு ஆடைகளை பிரதமரிடம் வழங்கினோம். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட பிரதமர் அயோத்திக்குக் கொண்டு செல்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆசிர் பெற்ற பிரதமர் யானை பாகனிடம் யானை குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.
    • வாஞ்சையுடன் யானையை தடவி கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

    திருச்சி:

    ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் நரேந்திர மோடி, கோவில் யானை ஆண்டாளிடம் ஆசிர் பெற்றார். யானை நிறுத்தப்பட்டிருந்த 4 கால் மண்டபத்திற்கு வந்த பிரதமர் மோடி, ஆண்டாள் யானைக்கு பழங்கள் வழங்கினார். பின்னர் யானையிடம் ஆசிர் பெற்ற அவர், யானை பாகனிடம் யானை குறித்து விவரங்களை கேட்டறிந்தார். அப்போது யானைக்கு 44 வயதாவது குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் பாகன் எடுத்து கூறினார். மேலும் ஆண்டாள் யானை ஸ்ரீரங்கம் நவராத்திரி உற்சவத்தின் போது மவுத் ஆர்கன் வாசிக்கும் என்ற தகவலை கூறினார்.

    இதனை கேட்டு ஆச்சர்யமடைந்த பிரதமர் நரேந்திர மோடி வாசிக்க வைக்குமாறு கேட்டார். உடனே பாகன் யானை துதிக்கையில் மவுத் ஆர்கன் கொடுக்க, ஆண்டாள் வாசித்து காண்பித்தது. இதனை ரசித்த மோடி வாஞ்சையுடன் யானையை தடவி கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த ஆண்டாள் யானையானது, குட்டியாக காரமடை கோவிலில் இருக்கும் போது ரஜினிகாந்த நடித்த தம்பிக்கு எந்த ஊர் என்ற படத்தில் ரஜினிக்கு ஆசீர்வாதம் செய்யும் காட்சியில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர், கருடாழ்வார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.
    • கம்ப ராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் தமிழில் பாடப்பட்ட கம்ப ராமாயணத்தை மனமுருகி கேட்டு, பிரதமர் மோடி ரசித்தார்.

    திருச்சி:

    ஆன்மிக சுற்றுப்பயணமாக 3 நாள் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் "கேலோ இந்தியா" போட்டியை தொடங்கி வைத்தார்.

    இன்று திருச்சி சென்ற பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர், கருடாழ்வார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.

    கம்ப ராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் தமிழில் பாடப்பட்ட கம்ப ராமாயணத்தை மனமுருகி கேட்டு, பிரதமர் மோடி ரசித்தார்.

    இதையடுத்து ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டார். ஹெலிபேட் தளத்தில் பிரதமர் மோடியை, அண்ணாமலை உள்பட பலர் வழியனுப்பி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து ராமேஸ்வரம் பேய்க்கரும்பு அருகே 2 மணிக்கு வந்து இறங்குகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக செல்லும் பிரதமர் மோடி 2.10 மணிக்கு ராமகிருஷ்ணா மடத்திற்கு வருகிறார்.

    பின்னர் 2.45 மணிக்கு ராமநாத சுவாமி கோவிலுக்கு செல்லும் மோடி, புனித தீர்த்தங்களில் நீராடி, பின் சாமி தரிசனம் செய்கிறார்.

    * 3.30 முதல் 6.00 மணி வரை நடைபெறும் ராமாயண கதாபாத்திர நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்.

    * 6.00 முதல் 6.30 மணி வரை கோவிலின் முக்கிய நிர்வாகிகளை பிரதமர் சந்திக்கிறார்.

    * 7.25 மணிக்கு ராமகிருஷ்ண மடம் செல்லும் பிரதமர் அங்கு இரவு தங்குகிறார்.

    • கம்பராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் கம்பராமாயண பாராயணத்தை கேட்கிறார்.
    • ஸ்ரீரங்கம் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருச்சி

    திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலின் தெற்கு கோபுர வாயில் வழியாக நுழைந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    கருடாழ்வார், மூலவர் சன்னதிகளில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். மேலும் தாயார், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்டராமர், ராமானுஜர் சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்கிறார்.

    கம்பராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் கம்பராமாயண பாராயணத்தை கேட்கிறார்.

    ஸ்ரீரங்கம் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ஸ்ரீரங்கத்தில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    திருச்சி:

    3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் 'கேலோ இந்தியா' போட்டியை தொடங்கி வைத்தார்.

    நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் மோடி இன்று திருச்சி செல்வதற்காக சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். இதையடுத்து அவர் ஹெலிகாப்டரில் பயணித்து பஞ்சகரை சாலையை அடைந்தார்.

    இந்நிலையில், ஸ்ரீரங்கத்தில் காலை 10.50 மணிக்கு சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் மோடி அங்கு ரோடு ஷோ நடத்தினார்.

    காரில் நின்றபடி பயணம் செய்த அவர் அங்கிருந்தவர்களை நோக்கி கையசத்தார். பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ஸ்ரீரங்கம் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருச்சி:

    3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் 'கேலோ இந்தியா' போட்டியை தொடங்கி வைத்தார்.

    நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் மோடி இன்று திருச்சி செல்வதற்காக சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி திருச்சி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தார். திருச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வரவேற்றார். இதைத்தொடர்ந்து ஹெலிகாப்டரில் பயணித்து பஞ்சகரை சாலையை அடைகிறார்.

    10.50 மணிக்கு சாலை மார்க்கமாக செல்லும் பிரதமர் மோடி 11.00 - 12.30 வரை சாமி தரிசனம் செய்கிறார். பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீரங்கம் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • தடுப்புச் சுவர் மீது கார் மோதிய விபத்தில் அதில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    தஞ்சை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு காரில் 11 பேர் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற கார் நேற்று இரவு தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சென்றுகொண்டிருந்தது. மனோரா என்ற பகுதியில் சென்றபோது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதனால் சாலையோர தடுப்பு சுவர் மீது கார் வேகமாக மோதி விபத்தில் சிக்கியது.

    இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கார் டிரைவர் உறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிரந்தர தொழிலாளராக நிர்வாகம் பணியமர்த்த தொடர்ந்து போராடி வருகின்றனர்.
    • வேலை நிறுத்த போராட்டத்தால் பெல் நிறுவனத்தில் பல பிரிவுகளில் வேலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம். இங்கு நேரடியாக பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெல் வட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் தொழிற்சாலையின் பல்வேறு பணிகளுக்கு சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சுமார் 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்களுக்கு மாதம் சுமார் ரூ 24 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியாமல் இத்தகைய தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்களை நிரந்தர தொழிலாளராக நிர்வாகம் பணியமர்த்த தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் பெல் நிர்வாகத்தை கண்டித்து டிசம்பர் மாதம் 13-ந் தேதி சொசைட்டி தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் இதுவரை பெல் நிர்வாகம் அழைத்து பேசவில்லை. இந்நிலையில் அனைத்து சொசைட்டி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் செய்யப் போவதாக தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று அறிவித்தனர்.

    அதன் பிறகும் பெல் நிறுவன நிர்வாகம் அழைத்து பேசாததால் இன்று முதல் பெல் நிறுவன மெயின் கேட் முன்பு போராட்டத்தை தொடங்கினர்.

    போராட்டத்தில் பாதுகாவல் பணி, மருத்துவ பணியில் சில தொழிலார்களை தவிர மீதி அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் பெல் நிறுவனத்தில் பல பிரிவுகளில் வேலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நவராத்திரி மண்டபத்தில் சில நிமிடங்கள் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தி சன்னதிக்குள் சென்று வழிபடுகிறார்.
    • ரங்கநாதரை தரிசித்த பின் பிற்பகல் 2 மணிக்கு ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் செல்கிறார்.

    திருச்சி:

    கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டுப் போட்டி தொடக்க விழா மற்றும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகிறார்.

    பின்னர் சென்னையில் நாளை மாலை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.

    அதன் பின்னர் கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு சென்று இரவு தங்குகிறார்.

    அதன் பின்னர் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு காலை 10:20 மணிக்கு வந்தடைகிறார்.

    அதைத்தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக காலை 10:45 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார்.

    பின்னர் பிரதமர் மூலவர் ரங்கநாதரை தரிசிக்கிறார். அதன் தொடர்ச்சியாக அங்குள்ள அர்ச்சுன மண்டபத்திலிருந்து தங்க விமானத்தை பார்வையிடுகிறார். முன்னதாக ரங்கா ரங்கா கோபுர வாசலில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் பேட்டரி கார் மூலம் பிரதமர் தாயார் சன்னதி செல்கிறார். மேலும் நவராத்திரி மண்டபத்தில் சில நிமிடங்கள் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தி சன்னதிக்குள் சென்று வழிபடுகிறார். தொடர்ந்து கம்ப ராமாயணம் அரங்கேறிய மண்டபத்தை பார்வையிடுகிறார்.

    ரங்கநாதரை தரிசித்த பின் பிற்பகல் 2 மணிக்கு ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் செல்கிறார். அங்கு அக்னி தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்களில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருவதை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பற்றி போலீசார் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வீடாக சென்று குடும்ப உறுப்பினர்களின் விபரம், அவர்களுடைய ஆதார் கார்டு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்தனர்.

    புதிதாக தங்கள் வீடுகளுக்கு வருபவர்களின் விவரங்களை தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. பிரதமர் வருகையை ஒட்டி திருச்சி மாநகர எல்லைக்குள் நேற்று முதல் வருகிற 20-ம் தேதி வரை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை போலீசார் தங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே பிரதமர் மோடி திருச்சி வருகைய ஒட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.) டி.ஐ.ஜி. லவ் குமார் தலைமையில் திருச்சி விமான நிலையத்தில் நேற்று மாலை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, மத்திய தொழிற் பாதுகாப்பு படை துணை கமிஷனர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கு இடையே இன்று காலை ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள பஞ்சகரை பகுதியில் ஹெலி காப்டர் தளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. சாலைகள் சுத்தம் செய்யப்பட்டு முதல் மண்டி கிடந்த பகுதிகள் ஜேசிபி எந்திரம் மூலமாக சமன் செய்யப்பட்டது.

    பிரதமர் வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
    • பிரதமர் வருகையின் எதிரொலியாக திருச்சியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.

    திருச்சி:

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் விரதத்தை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கினார்.

    நாசிக்கின் புனித காலாராம் கோவிலில் விரதத்தை தொடங்கிய அவர் இந்தியாவில் உள்ள ராமர் தொடர்புடைய கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

    மகாராஷ்டிராவில் கோதாவரி நதிக்கரையில் உள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். பிறகு பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோவிலுக்கு சென்று வழிபட்டார். ஆந்திராவின் லேபஷி பகுதியில் உள்ள வீரபத்ரர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். நேற்று கேரளா சென்ற பிரதமர் மோடி குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.

    இதற்கிடையே, தமிழ்நாட்டிலும் 3 நாட்கள் தங்கி இருந்து வழிபாடுகள் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் நாளை மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நேரு ஸ்டேடியத்தில் 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார். 


    அதன்பின், நாளை மறுதினம் காலை பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் செல்கிறார். கவர்னர் மாளிகையில் இருந்து விமான நிலையம் சென்று அங்கிருந்து திருச்சி செல்லும் அவர், கார் மூலம் ஸ்ரீரங்கம் சென்றடைகிறார்.

    அயோத்தியில் ராமர் கோவில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு சாமி தரிசனம் செய்கிறார். அங்கும் கோவிலை சுத்தப்படுத்துகிறார். அங்கு சாமி தரிசனம் செய்து முடித்து ராமேசுவரம் புறப்படுகிறார். பிற்பகலில் ராமேசுவரம் செல்லும் பிரதமர் மோடி புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையில் பங்கேற்கிறார். அதன்பின் கோவிலை சுத்தப்படுத்தும் பணியை செய்கிறார். அன்று இரவு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தங்குகிறார்.

    மறுநாள் (21-ம் தேதி) காலை ராமேசுவரம் அக்னி தீர்த்தம் கடலில் புனித நீராடுகிறார். பிறகு மீண்டும் ராமேசுவரம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார். அதன்பிறகு கார் மூலம் அரிச்சல்முனைக்கு சென்று, கோதண்டராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்து, பூஜையிலும் பங்கேற்கிறார். பின்னர் கடலில் புனித தீர்த்தங்களைச் சேகரிக்கும் அவர், புனிதநீர் கலசங்களுடன் டெல்லி புறப்படுகிறார்.

    பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், பிரதமர் மோடி வருகை எதிரொலியாக திருச்சியில் இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை என 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது.
    • ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி அருகே உள்ள ஆவாரங்காடு பொன்னர் சங்கர் திடலில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

    ஆவாரங்காடு, கலிங்கபட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய 4 கிராம மக்களின் சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் 4 கிராமங்களின் கோவில் காளைகளும் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் முதலில் வாடிவாசல் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தட்சிணா மூர்த்தி கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஒரே நேரத்தில் 4 கோவில் காளைகளும் மொத்தமாக அவிழ்த்து விடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது.

    இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயம், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் வழங்கப்பட்டது.


    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப் பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

    போட்டியில 650 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் தட்சிணா மூர்த்தி மேற்பார்வையில் வருவாய்துறையினர். பொதுப்பணித்துறையினர், கால்நடை மருத்து வக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்தனர். இதே போல் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நம்முடைய வாழ்க்கையில் கோவில்கள் மையமாக அமைந்துள்ளது.
    • தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

    திருச்சி:

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் இணை ஆணையர் மாரியப்பன், சுந்தர் பட்டர் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து கவர்னர் ரெங்கநாதர் சந்நிதி, தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.

    அதன் பின்னர் தாயார் சன்னதி அருகே உள்ள ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார்.


    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நம்முடைய வாழ்க்கையில் கோவில்கள் மையமாக அமைந்துள்ளது. ஒரு கிராமம் உருவாவதற்கு முன்பாக அங்கு கோவில்கள் அமைக்கப்படும். அதனை மையப்படுத்தியே அந்த கிராமங்களின் வளர்ச்சி இருக்கும்.

    அந்த வகையில் ஒரு ஈர்ப்பு விசையாக கோவில்கள் உள்ளது. காலணியாதிக்க காலத்தில் அது மழுங்கடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நாடு ராமர் மயமாகி வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காரணம் ராம பிரான் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார். கோவில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோவில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும்பங்கு உண்டு.

    தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோவில் மட்டுமல்ல பொது இடங்களிலும், தனியார் இடங்களில் தூய்மை பேண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து கவர்னர் ஆர்,என்.ரவி கார் மூலமாக மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றார்.

    ×