என் மலர்
சிவகங்கை
- காளையார் கோவில் தெப்பத்திருவிழா நடந்தது.
- வைகாசி விசாக தெப்பத் திருவிழா இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் சொர்ண காளீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோயிலில் கடந்த 26 -ந் தேதி வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப் பட்ட தேரில் ஸ்வர்ணவல்லிஅம்மன் சமேத சொர்ண காளீஸ்வரர் எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தெப்பத் திருவிழா இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ கண்காணிப் பாளர் பால சரவணன், மற்றும் ஸ்தானிகர் காளீஸ்வர குழுக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
- சிவகங்கை மாவட்டத்தில் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.
- விவசாய கிணறுகளுக்கு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் உள்ள பிரதான கால்வாய்களில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள், வைகை ஆற்றில் கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்ேபாது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் நீர்வள ஆதாரங்களை மேம்ப டுத்தவும், நிலத்தடி நீர்மட்ட த்தை மேம்ப டுத்தவும் பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், கட்டிக்குளம், மிளகனூர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கும் பொருட்டு வைகை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டும் பணி மதிப்பீட்டு தொகை ரூ.3060.00 லட்சங்கள் மதிப்பீட்டில் தமிழக அரசால் கட்டிக்குளம், மிளகனூர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கும் பொருட்டு வைகை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்ட மாநில நிதியின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டு பணி நடைபெற்று வருகின்றது.
இந்த அணைக்கட்டு கட்டுவதால் கட்டிக்குளம், முத்தனேந்தல், மிளகனூர், துத்திக்குளம், கிருங்காக்கோட்டை, கீழமேல்குடி, கால்பிரிவு மற்றும் மானாமதுரை ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு, இதன் மூலம் 6316.10 ஏக்கர் பயன்பெறும். மேலும், இந்த அணைக்கட்டு கட்டப்படுவதால் பதினெட்டான்கோட்டை, வாகுடி மற்றும் செம்பராயனேந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள குடிநீர் மற்றும் விவசாய கிணறுகளுக்கு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீர்வளத்துறை சார்பில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, நீர்வளத்துறை (சருகனியாறு கோட்டம்) செயற்பொறி யாளர் ஏ.வி.பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், உதவிப்பொறியாளர்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், பூமிநாதன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
- எம்.ஆர்.எஸ்.பி பவானி அன் கோ திறப்பு விழா நடந்தது.
- நான்காவது கிளையை காரைக்குடி செக்காலை ரோட்டில் தொடங்கியது.
காரைக்குடி
மதுரையில் ரெடிமேட் கதவுகள், பிளைவுட்ஸ், கண்ணாடிகள், லாமி னேட்ஸ், ஹார்டுவேர் பொருட்களின் புகழ்பெற்ற விற்பனை நிறுவனமான எம்.ஆர்.எஸ்.பி பவானி அன் கோ நிறுவனம் மதுரை, கோவை, சிவகாசி ஆகிய ஊர்களைத் தொடர்ந்து தனது நான்காவது கிளையை காரைக்குடி செக்காலை ரோட்டில் தொடங்கியது.
இதனை நிர்வாக இயக்குநர்கள் எம்.ஆர்.எஸ்.பிரபாகரன், எம்.ஆர்.எஸ்.பி.பவானி ஆகியோர் தலைமையேற்று திறந்து வைத்தனர். எம்.ஆர்.எஸ்.பி.சிவராஜ் மணிமாலா மற்றும் எம்.ஆர்.எஸ்.பி.வசந்தராஜ் கீர்த்திகா தம்பதியினர் வரவேற்றனர்.
மதுரை பி.எஸ்.எம்.என் மாரியப்ப நாடார் அன் கோ உரிமையாளர் கணேசன் பொற்செல்வி தம்பதியர் மற்றும் மதுரை எஸ்.வி.எஸ் வெற்றிவேல் நாடார், கோந்து கடை உரிமை யாளர் மோகன் செல்வி தம்பதியர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.
இதில் காரைக்குடி கட்டுமான பொறியா ளர்கள் சங்க நிர்வாகிகள், பில்டர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள், ஆர்க்கி டெக்சர் வல்லு நர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதிேயார்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
- முன்னதாக பனங்குடி ஜோசப் வரவேற்று பேசி னார்.
காளையார்கோவில்
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பனைவெல்லம் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு கூட்டுறவு சங்க தலைவர் முத்துக்குமார் ஏற்பாட்டில் கல்லல் சாந்தி ராணி முதியோர் இல்லத்தில் கல்லல் கிழக்கு ஒன்றிய செயலாளர் நா. நெடுஞ்செழி யன் தலைமை யில் முதியோர்களுக்கு கேக் மற்றும் பிரியாணி, வழங்கப்பட்டது. கல்லல் ஊராட்சி மன்ற தலைவரும், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவருமான சுப. வடிவேலு முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராமச்சந்திரன் நீதிபதி, சந்திரசேகரன், மார்க்கண்டேயன், முகமது கனி, ஊராட்சி மன்ற தலைவர் உடையப்பா செல்வம், சேதுபதி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்ட பனைவெல்லம் கூட்டுறவு சங்க தலைவர் முத்துக்குமார், துணைத் தலைவர் மாரி, முன்னாள் தலைவர் குழந்தைவேலு உட்பட நிர்வாகிகள் செய்திருந்தார் கள். முன்னதாக பனங்குடி ஜோசப் வரவேற்று பேசி னார். காளையார்கோவில் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சொக்கு ரமேஷ் நன்றி கூறினார்.
- சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி விளையாட்டு விழா நடந்தது.
- குதிரையேற்ற பயிற்சியாளர் வினய் தேசிய கொடியை ஏந்தியபடி குதிரையில் வலம்வந்தார்
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விசாலை யன்கோட்டை யில் உள்ள கலாம் கவி கிராமத்தில் அமைந்துள்ள சேது பாஸ்கர வேளா ண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 8-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி யின் தாளாளர் சேது குமணன் தலைமை தாங்கினார்.முதல்வர் கருணாநிதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டா லின், அழகப்பா பல்கலை கழக உடற்கல்வி கல்லூரி யின் பொறுப்பு முதல்வர் முரளி ராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் சதீஷ்கு மார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய கொடி மற்றும் ஒலிம்பிக் கொடி ஏற்ற ப்பட்ட பின்பு கல்லுரியின் குதிரை யேற்ற பயிற்சி யாளர் வினய் தேசிய கொடியை ஏந்தியபடி குதிரையில் வலம்வந்தார்.தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைக்க, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற சேது பாஸ்கரா வேளான் கல்லூரி மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியபடி மைதானத்தை சுற்றி வந்தனர். கல்லூரி யின் உதவி உடற்கல்வி இயக்குனர் சங்கீதா ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தி னர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டா லின், மாணவர்களின் தன்னம் பிக்கையை தூண்டும் வகையில் விளையாட்டு துறையில் சாதித்த பல்வேறு சாதனையாளர்க ளின் வாழ்க்கை நிகழ்வு களை கூறினார். விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரி யர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்க ளுக்கு சிறப்பு விருந்தினர்கள், கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் பரிசு களை வழங்கினர்.
- தி.மு.க. அரசின் சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
- ஏற்பாடு களை ஒன்றிய நகர இளை ஞரணி அமைப்பாளர்கள் செய்திருந்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வடக்கு ஒன்றியம் மற்றும் நெற்குப்பை பேரூர் இளை ஞர் அணி சார்பாக திராவிட மாடல் அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் வேலங்குடி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நடை பெற்றது.
இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் விரமதி மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சாமி கண்ணு, நெற்குப்பை நகரச் செயலாளர் கே.பி.எஸ். பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட கவுன்சிலர் ஏ.டி.என்.ரவி, ஒன்றிய கவுன்சிலர் கே.ஆர்.ராமசாமி, வாழ்த்துரை வழங்கினார்கள். தி.மு.க. அரசு புரிந்த பல்வேறு சாதனைகளை கழக பேச்சாளர் கரூர் முரளி பங்கேற்று சிறப்புரை யாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தமிழ் நம்பி, ஒன்றிய வழக்கறிஞர் அணி நாகூர் கனி, கூட்டுறவு சங்க தலைவர் செல்வம், மகி பாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், கழக நிர்வாகிகளான கஸ்தூரி சின்னையா, மாரி யப்பன், ரஞ்சித், சோம சுந்தரம், திருநாவுக்கரசு, குமார், கருணாநிதி, விக்னேஸ்வரன், கணேசன், மணிக்குமார், முருகேசன், பாஸ்கர், ராமநாதன் மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர், நகர கழக கிளைக்கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
நெற்குப்பை நகர இளைஞரணி அமைப் பாளர் பாண்டியன் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஒன்றிய நகர இளை ஞரணி அமைப்பாளர்கள் செய்திருந்தனர்.
- ரூ.1.04 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கு மாறு உத்தரவிட்டார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில், அரசின் பல்வேறு துறைக ளின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகை யில் பல்வேறு மேம் பாட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
அவ்வாறாக மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் நிலைகள் குறித்து, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் கள ஆய்வுகள் மேற்கொண்டு, பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
அதன்படி எஸ்.புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆஷாஅஜீத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்வேறு துறை களின் சார்பில் அந்த பகுதி களில் நடைபெற்றுவரும். ரூ1.04கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். மரம் நடுதல், மண் வரப்பு கட்டுதல், பள்ளி சுற்றுச்சுவர் கட்டும்பணி, அங்கன்வாடி கட்டிடம், கலையரங்கம் கட்டும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கு மாறு உத்தரவிட்டார். தொடர்ந்து 8 மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ55.25 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.
இந்த ஆய்வுகளின் போது எஸ்.புதூர் ஒன்றியக்குழு தலைவர் விஜயா, உதவிசெயற் பொறியாளர் முருகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் ராஜேஸ்வரன், சத்யன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- அரசு விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
- மாணவ-மாணவிகள் அரசின் இந்த சலுகைகளைப் பெற்று, பயனடையலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசால் சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ- மாணவிகளுக்கு என 21 மாணவர் பள்ளி விடுதிகளும், 14 மாணவி பள்ளி விடுதிகளும், 5 மாணவர்கள் கல்லூரி , பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளும், 5 மாணவிகள் கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளும் என மொத்தம் 45 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிக்கும் மாணவ- மாணவிகள் சேர தகுதியு டையவர்கள் ஆவார்கள்.
அனைத்து விடுதி மாணவர், மாணவிகளுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 4 இணைச்சீருடைகளும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவி களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்களும் வழங்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பி டத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். இந்ததொலைவு விதி மாணவிகளுக்கு பொ ருந்தாது.
தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்ப ங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பா ளினிகளிடம் இருந்தோ அல்லது கலெக்டர் அலுவ லகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளைப் பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளி னியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.6.2023-க்குள்ளும், கல்லூரி விடுதிகளைப் பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினி யிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.7.2023-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இந்த சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.
ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தை களுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் அரசின் இந்த சலுகைகளைப் பெற்று, பயனடையலாம்.
- சிற்பத்தின் அருகில் முற்கால பாண்டியர் கால விநாயகர் சிற்பமும் இடம்பெற்றுள்ளது.
- 1000 ஆண்டுகள் பழமையான இந்த விநாயகர் லலிதாசனக் கோலத்தில் பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் உள்ளது.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள திருமணப்பதி கிராமத்தில் தென்னக வரலாற்று மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் மற்றும் முனைவர் தங்கமுத்து ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு முற்கால பாண்டியர் கால விநாயகர் மற்றும் பிற்கால பாண்டியரின் கலைப்பாணியில் அமைந்த நிசும்பன்சூதனி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
இங்கு கண்டு பிடிக்கப்பட்ட நிசும்பன் சூதனி சிற்பம் 4 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட ஒரே பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் பகுதிக்கு 4 கரங்கள் வீதம் 8 கரங்களை கொண்டுள்ளது.
இந்த கரங்களில் சூலம், உடுக்கை, கத்தி, கேடயம், வில், அம்பு, மணி போன்ற ஆயுதங்களைத் தாங்கியபடி சிற்பம் கம்பீரமான தோற்றத்தில் அழகாக செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் தலையில் மகுடத்துடன் கூடிய ஜடாபாரத்துடனும், கழுத்தில் ஆபரணங்களுடனும், தோள் மாலை, தோள் வளை செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் காதில் பத்ர குண்டலத்தை அணிகலன்களாக அணிந்தபடி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இடையில் கச்சை அணிந்தபடி வலது காலை பீடத்தில் குத்த வைத்தும், இடது காலை நிசும்பன் மீது வைத்தும் உத்குதிகாசனக் கோலத்தில் சிற்பம் பிற்காலப் பாண்டியரின் கைவண்ணத்தில் வடிக்கப்பட்டுள்ளது.
இந்த சிற்பத்தின் அருகில் முற்கால பாண்டியர் கால விநாயகர் சிற்பமும் இடம்பெற்றுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த விநாயகர் லலிதாசனக் கோலத்தில் பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் உள்ளது. விநாயகருக்கு 4 கரங்கள் உள்ளன.
அதில் பின் வலது கரத்தில் மழுவும், இடது கரத்தில் பாசக்கயிரும், முன் வலது கரத்தில் உடைந்த தந்தமும், இடது கரத்தில் மோதகமும், அதை தும்பிக்கையால் எடுத்தபடியும் உள்ளது.
வயிற்றில் உதரபந்தம் செதுக்கப்பட்டுள்ளது. சிற்பம் மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது. இந்த ஊரில் ஒரே இடத்தில் இந்த சிற்பங்கள் கிடைத்துள்ளதைப் பார்க்கும்போது வரலாற்றில் திருமணப்பதி கிராமம் சிறந்து விளங்கி இருக்கலாம் என்று தெரிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மானாமதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மானாமதுரை
டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் பரமாத்மா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, ஒன்றிய செயலாளர் ஆண்டி, பொருளாளர் காசிராஜன், முனியராஜ், வெள்ளமுத்து, முத்துராமன், குமரேசன், பெலிக்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- பணியாளர்களின் கூடுதல் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறை களின் சார்பில் அனைத்துப் பகுதிகளிலும் பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் கள ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
அதன்படி சிவகங்கை ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட ஒக்கூர், ஓ.புதூர், கீழப்பூங்குடி ஆகியப்ப குதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், கண்மாய், வரத்து வாய்க்கால்களில் அகழிகள் வெட்டும் பணி மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நியாய விலைக்க டைகளின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
பொது சுகாதாரத் துறையின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களின் செயல்பாடுகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஓ.புதூர் ஊராட்சிப் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தலா ரூ.13.07 லட்சம் மதிப்பீட்டில் கருங்கா ப்பட்டி குடிகாட்டுக்கண்மாய் அகழிகள் வெட்டுதல் பணி, கொளக்கட்டைப்பட்டி கண்மாய் வரத்து வாய்க்கால் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
மாடுமுறிச்சான் கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி, ரூ.9.98 லட்சம் மதிப்பீட்டில் எல்ல முத்து ஊரணிக் கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி என மொத்தம் ரூ.120.23 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு செய்தார்.
மேற்கண்ட திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களின் கூடுதல் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜினு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொ றியாளர் வெண்ணிலா, உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், மாவட்ட வழங்கல் அலுவலர் நஜிமுன்னிசா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாதன், ஜெகநாத சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்ேகற்றார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அரண்மனை சிறுவயலில் அ.தி.மு.க. இளைஞர்-இளம் பெண்கள் பாசறை, மகளிரணி மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேலும் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தையும் நிர்வாகிகள் பெற்று கொண்டனர். இதில் இளைஞர்-இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், அமல்ராஜ், விவசாய ஒன்றிய செயலாளர் முருகேசன், சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் ஜின்னா, இளைஞரணி ஒன்றிய செயலாளர் ராஜா, மகளிரணி ஆனந்தவல்லி, சுரேஷ், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






