என் மலர்
சிவகங்கை
- சிற்பத்தின் அருகில் முற்கால பாண்டியர் கால விநாயகர் சிற்பமும் இடம்பெற்றுள்ளது.
- 1000 ஆண்டுகள் பழமையான இந்த விநாயகர் லலிதாசனக் கோலத்தில் பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் உள்ளது.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள திருமணப்பதி கிராமத்தில் தென்னக வரலாற்று மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் மற்றும் முனைவர் தங்கமுத்து ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு முற்கால பாண்டியர் கால விநாயகர் மற்றும் பிற்கால பாண்டியரின் கலைப்பாணியில் அமைந்த நிசும்பன்சூதனி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
இங்கு கண்டு பிடிக்கப்பட்ட நிசும்பன் சூதனி சிற்பம் 4 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட ஒரே பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் பகுதிக்கு 4 கரங்கள் வீதம் 8 கரங்களை கொண்டுள்ளது.
இந்த கரங்களில் சூலம், உடுக்கை, கத்தி, கேடயம், வில், அம்பு, மணி போன்ற ஆயுதங்களைத் தாங்கியபடி சிற்பம் கம்பீரமான தோற்றத்தில் அழகாக செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் தலையில் மகுடத்துடன் கூடிய ஜடாபாரத்துடனும், கழுத்தில் ஆபரணங்களுடனும், தோள் மாலை, தோள் வளை செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் காதில் பத்ர குண்டலத்தை அணிகலன்களாக அணிந்தபடி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இடையில் கச்சை அணிந்தபடி வலது காலை பீடத்தில் குத்த வைத்தும், இடது காலை நிசும்பன் மீது வைத்தும் உத்குதிகாசனக் கோலத்தில் சிற்பம் பிற்காலப் பாண்டியரின் கைவண்ணத்தில் வடிக்கப்பட்டுள்ளது.
இந்த சிற்பத்தின் அருகில் முற்கால பாண்டியர் கால விநாயகர் சிற்பமும் இடம்பெற்றுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த விநாயகர் லலிதாசனக் கோலத்தில் பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் உள்ளது. விநாயகருக்கு 4 கரங்கள் உள்ளன.
அதில் பின் வலது கரத்தில் மழுவும், இடது கரத்தில் பாசக்கயிரும், முன் வலது கரத்தில் உடைந்த தந்தமும், இடது கரத்தில் மோதகமும், அதை தும்பிக்கையால் எடுத்தபடியும் உள்ளது.
வயிற்றில் உதரபந்தம் செதுக்கப்பட்டுள்ளது. சிற்பம் மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது. இந்த ஊரில் ஒரே இடத்தில் இந்த சிற்பங்கள் கிடைத்துள்ளதைப் பார்க்கும்போது வரலாற்றில் திருமணப்பதி கிராமம் சிறந்து விளங்கி இருக்கலாம் என்று தெரிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மானாமதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மானாமதுரை
டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் பரமாத்மா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, ஒன்றிய செயலாளர் ஆண்டி, பொருளாளர் காசிராஜன், முனியராஜ், வெள்ளமுத்து, முத்துராமன், குமரேசன், பெலிக்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- பணியாளர்களின் கூடுதல் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறை களின் சார்பில் அனைத்துப் பகுதிகளிலும் பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் கள ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
அதன்படி சிவகங்கை ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட ஒக்கூர், ஓ.புதூர், கீழப்பூங்குடி ஆகியப்ப குதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், கண்மாய், வரத்து வாய்க்கால்களில் அகழிகள் வெட்டும் பணி மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நியாய விலைக்க டைகளின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
பொது சுகாதாரத் துறையின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களின் செயல்பாடுகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஓ.புதூர் ஊராட்சிப் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தலா ரூ.13.07 லட்சம் மதிப்பீட்டில் கருங்கா ப்பட்டி குடிகாட்டுக்கண்மாய் அகழிகள் வெட்டுதல் பணி, கொளக்கட்டைப்பட்டி கண்மாய் வரத்து வாய்க்கால் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
மாடுமுறிச்சான் கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி, ரூ.9.98 லட்சம் மதிப்பீட்டில் எல்ல முத்து ஊரணிக் கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி என மொத்தம் ரூ.120.23 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு செய்தார்.
மேற்கண்ட திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களின் கூடுதல் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜினு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொ றியாளர் வெண்ணிலா, உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், மாவட்ட வழங்கல் அலுவலர் நஜிமுன்னிசா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாதன், ஜெகநாத சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்ேகற்றார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அரண்மனை சிறுவயலில் அ.தி.மு.க. இளைஞர்-இளம் பெண்கள் பாசறை, மகளிரணி மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேலும் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தையும் நிர்வாகிகள் பெற்று கொண்டனர். இதில் இளைஞர்-இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், அமல்ராஜ், விவசாய ஒன்றிய செயலாளர் முருகேசன், சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் ஜின்னா, இளைஞரணி ஒன்றிய செயலாளர் ராஜா, மகளிரணி ஆனந்தவல்லி, சுரேஷ், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடியில் பதனீரை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
- பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றார்.
காரைக்குடி
காரைக்குடியில் கடந்த மாதம் முதல் பல்வேறு இடங்களில் பதநீர் விற்பனை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அதிகாலை பதநீர் இறக்கப்பட்டு வேன் மூலமாக காரைக்குடிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
உடலிற்கு நலம் பயக்கும் பதநீரை மக்கள் ஆர்வமாக வாங்கி பருகி வருகின்றனர்.அதே வேளையில் இந்த பதநீரில் ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுவ தாகவும் இனிப்பு சுவைக்காக சீனி மற்றும் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்தன.
இதையடுத்து சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமைமையில் உணவு பாதுகாப்பு அலு வலர்கள் முத்துக்குமார், சாக்கோட்டை பிளாக் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் பதநீர் விற்பனையை ஆய்வு செய்தனர். பல்வேறு இடங்களிலும் சோதனைக்காக மாதிரி களை எடுத்துச் சென்றனர்.
மேலும் பதநீர் விற்பனையாளர்களிடம் பதநீர் இறக்கவும் விற்பனை செய்யவும் முறையான அனுமதி பெறவேண்டும் எனவும், அதிகாலை இறக்கப்படும் பதநீரை பகல் ஒரு மணிக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
காரைக்குடி 100 அடி சாலையில் விற்பனை செய்து வந்த பதநீரில் இனிப்புக்காக சர்க்கரை சேர்த்து விற்பனை செய்வதை அறிந்து சுமார் 50 லிட்டர் அளவிலான பதநீரை சாக்கடையில் கொட்டிச் சென்றனர்.
இதுகுறித்து அலுவலர் டாக்டர் பிரபாவதி கூறுகையில், பதநீரில் ரசாயன பொருட்களை கலந்தால் அதனை அருந்துவோருக்கு கண் எரிச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும் உணவு முறைகேடு சம்பந்தமாக பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றார்.
- தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரெயில் சிவகங்கை, மானாமதுரையில் நின்று செல்ல வேண்டும்.
- பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி என 2 ரெயில் நிலையங்கள் உள்ளது. இந்த 2 ரெயில் நிலையங்களும் 100 ஆண்டு களுக்கு முன்பே உள்ளது.
ஆங்கிலேயர்கள் இலங்கை செல்ல தனுஷ்கோடி வரை ரெயில் பாதை அமைத்து ரெயில் போக்குவரத்து நடைபெற்ற போது காரைக்குடி, மானா மதுரை ரெயில் நிலை யங்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் இருந்து வந்தது. ஆனால் அகல ரெயில் பாதைபணி முடிந்த பின் குறைந்த அளவு ரெயில் வசதியே உள்ளது.
தற்போது ராமேசுவரம்- சென்னை மார்க்கத்தில் தினசரி 2 ரெயில்கள் மட்டுமே உள்ளது. வாரந்திர ரெயில்களும் தற்போது ராமேசுவரம் வரை செல்லா ததால் அடிக்கடி ரத்து செய்யபடுகிறது. இதனால் சிவகங்கை மாவட்ட பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தற்போது பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை ரெயில் மானாமதுரை, சிவகங்கை ரெயில் நிலையங்களை புறக்கணித்து ரெயில் நேர அட்டவணை தயார் செய்யபட்டு அந்த சிறப்பு ரெயில் நிற்காமல் காரைக்குடியை அடுத்த அருப்புக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்கிறது.
மிகப்பெரிய ரெயில் நிலையமாக உள்ள மானா மதுரையிலும், மாவட்ட தலைநகரமாக உள்ள சிவகங்கையிலும் நிற்காமல் செல்வதால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வரு கின்றனர்.
செங்கோட்டை அதி விரைவு ரெயிலை நிறுத்தா மல் தென்னக ரெயில்வே புறக்கணிப்பதாக பயணி கள் கூறுகின்றனர். தற்போது வரும் ஜுன் முதல் தேதியில் இருந்து வாரத்தில் 3 நாட்கள் செல்ல உள்ளது.
தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை அதிவிரைவு ரெயிலாக இயக்கப்பட உள்ளது. 2 டயர் ஏசி 2, 3 டயர் ஏசி 5, படுக்கை வசதி கொண்ட பெட்டி 5. பொதுப்பெட்டிகள் 3,2 சுமைகள் ஏற்றும் வசதி கொண்ட பெட்டி என மொத்தம் 17 பெட்டிகள் கொண்ட ரெயிலாக இயக் கப்பட உள்ளது.
வாரந்தோறும் திங்கள், புதன் மற்றும் வெள்ளி கிழமை இயக்கப்பட உள்ள இந்த ரெயில் ஜுன் 1-ந் தேதி இரவு 9 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு செங் கோட்டையை சென்ற டையும். மறுமார்க்கமாக வண்டி எண்.20684 செங்கோட்டையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு தாம்பரத்தை சென்றடைகிறது.
விழுப்புரம், மயிலா டுதுறை உள்ளிட்ட 16 இடங்களில் நின்று செல் லும் என்றும், சிவகங்கை மாவட்டத்தில் காரைக் குடியில் மட்டும் நின்று செல்லும் என அறிவிக் கப்பட்டுள்ளது.
மானாமதுரை ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் இல்லாத கமுதி, பார்த்திபனூர், அபிராமம், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் ரெயில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தென் னக ரெயில்வே நிர்வாகம் இந்த அதிவிரைவு ரெயிலை தலைநகரான சிவகங்கை மற்றும் மானாமதுரையில் நிறுத்தாமல் புறக்க ணித்துள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சிவகங்கை, மானாமதுரை யை இந்த ரெயில் புறக்கணிப்பதால் சிவகங்கை எம்.பி., சிவகங்கை, மானாமதுரை எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக ரெயில்வே பொது மேலாளரை சந்தித்து சிறப்பு ரெயிலை சிவகங்கை மற்றும் மானாமதுரையில் நிறுத்தி செல்ல வலியுறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இளையான்குடி அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகில் உள்ள ஆத்திவயல் ஆதிருடையவர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் அருகே யாகசாலை அமைத்து அதில் புனித நீர் கடங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன. யாகத்தின் நிறைவில் பூர்ணாகுதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் மங்கள இசை முழங்க புனிதநீர் கடங்களை சுமந்து கோவிலைச் சுற்றி வலம் வந்தனர். அதன் பின்னர் ஆதிருடையவர் அய்யனார் சுவாமி மூலவர் விமானக் கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலுக்குள் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். விமானக் கலசத்திற்கு தீபாரதனை கட்டப்பட்டதும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
அதன் பின்னர் அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இதில் இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுப.தமிழரசன் மற்றும் ஆத்திவயல், புக்குளி, மொச்சியேந்தல், சிறுபுக்குளி சுமாதரப்பு மற்றும் இதன் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். மதியம் கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
- 3 நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
- பயணிகள் நிழற்குடைகளை மானாமதுரை எம்.எல்.ஏ.தமிழரசி தொடங்கி வைத்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் ராஜகம்பீரம் மற்றும் மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள பைபாஸ் ரோடு, மானாமதுரை பிருந்தாவனம்-பரமக்குடி ரோடு ஆகிய 3 இடங்களில் புதிதாக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. ராஜகம்பீரம் பகுதியில் மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர் பயன்படுத்தும் வகையில் சாய்வு தளத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. 3 இடங்களில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை மானாமதுரை எம்.எல்.ஏ.தமிழரசி தொடங்கி வைத்தார். பின்னர் பெண் முதியோர்களுக்கு சேலைகள் வழங்கினார்.
மதுரையில் இருந்து ராஜகம்பீரம் வழியாக மானாமதுரை வரை பஸ் விடவேண்டும். புதிதாகஅமைக்கப்பட்ட பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழரசி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். விழாவில் மானாமதுரை நகராட்சிஆணையாளர் கண்ணன், ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜிப்ரகுமான், நகராட்சி கவுன்சிலர் இந்துமதி திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பத்தூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தளக்காவூரில் புனித ஜெபமாலை மாதா ஆலய சப்பர திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி ஒய்.எம்.சி.ஏ கத்தோலிக்க இளைஞர் மன்றத்தால் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 காளைகள் பங்கேற்றன. 20 நிமிடங்களுக்குள் காளையை அடக்க வேண்டும் என்று விழா குழுவினரால் நேரநிர்ணயம் செய்யப்பட்டது.
இதில் 9 பேர் கொண்ட 15 குழுவினர் களம் இறங்கினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதை பார்பதற்காக சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். விழாவில் காரைக்குடி வருவாய்த் துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் காயமடைந்த வீரர்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் முதலுதவி வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- சிவகங்கையில் அ.தி.மு.க.வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- தி.மு.க ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலா ளரும், எம்.எல்.ஏ. வுமான செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செய லாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நேர்மையாக செயல்படும் அரசு ஊழி யர்கள் அரசு அலுவல கத்திலேயே படுகொலை செய்யப்படுகின்றனர்.
தி.மு.க ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர். மக்களின் ஆதரவோடு, ஜெயலலிதாவின் ஆசிர்வாதத்தோடு, எடப்பாடியாரின் ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என்றார்.
ஆர்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செய லாளர்கள் கருணாகரன், செல்வ மணி, ஸ்டிபன் அருள்சாமி, சேவிவியர்தாஸ், பழனிச்சாமி, சிவாஜி, சோனை ரவி, கோபி, ஜெக தீஸ்வரன், பாரதிராஜன், மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செய லாளர் தமிழ்செல்வன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், மகளிரணி வெண்ணிலா சசிகுமார், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், இணை செயலா ளர் மோசஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சொர்ண காளீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தெப்ப உற்சவம் 2-ந்தேதி நடக்கிறது.
- ஸ்தானிகர் காளீஸ்வர குருக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்து வரு கிறார்கள்.
காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மாமன்னர் மருதுபாண்டி யர்களால் கட்டப்பட்ட சொர்ண காளீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வைகாசி விசாக திருவிழா கடந்த 24 நாட்கள் தொடங்கி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.
நேற்று சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சொர்ண காளீஸ்வரருக்கும், அம்ம னுக்கும் நடந்த திருமணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வருகிற 1-ந்தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் (2-ந்தேதி) வைகாசி விசாகத்தை முன்னி ட்டு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. அன்று இரவு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி வீதி உலா நடை பெறும்.
விழாவை முன்னிட்டு தினசரி கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
விழா ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்திரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ காளையார் கோவில் சரக கண்காணிப் பாளர் பாலசரவணன், ஸ்தானிகர் காளீஸ்வர குருக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்து வரு கிறார்கள்.
- சிவகங்கை அருகே தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
- ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சக்தி தாசன் நன்றி கூறினார்.
காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் நாகனி செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காட்டுப்புலி சவுந்தர்ராஜன் வரவேற்று பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ. தலைமை கழக பேச்சாளர் வி.பி. ராஜன் சிறப்புரை ஆற்றினார்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் வனிதா கண்ணதாசன், சாந்தா கருப்பசாமி, அஜித்குமார், இலக்கிய அணி அரசு, முத்து, தொண்டரணி பிரபு, முருகேசன் குழந்தைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டார்கள். ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ்அரசு நன்றி கூறினார்.
கொல்லங்குடி
காளையார்கோயில் வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் கொல்லங்குடியில் அவைத்தலைவர் சுப. தமிழரசன் தலைமையில் ஒன்றிய செயலாளர் ஆர்.எம். கென்னடி முன்னி லையில் அரசின் அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், தலைமைக்கழக பேச்சாளர் வி.பி.ராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் நிர்வாகிகள் முத்தூர் கருப்பையா, கண்ணாத்தாள், தென்னரசு, செல்லப் பாண்டி, சுப.கண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி சுசீந்திரன் சந்திரன், நேரு, சதீஷ்குமார், அசோக், ஜெயராஜ், மிலிட்டரி பிரபு, ஆகாஷ், சீனிவாசன், பாலமுருகன், முருகன், முக்கையா, முருகன், நைனா, நாட்டரசன்கோட்டை பேருர் செயலாளர் ஜெயரா மன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சக்தி தாசன் நன்றி கூறினார்.






