என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • அ.தி.மு.க. சார்பில் ஐவர் கால்பந்து போட்டி நடந்தது.
    • அ.தி.மு.க. செய லாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி போட்டி களை தொடங்கி வைத்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை மேற்கு ஒன் றிய அ.தி.மு.க. சார்பில் சங்கராபுரம் ஊராட்சியில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. துவக்க விழாவில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செய லாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி போட்டி களை தொடங்கி வைத்தார்.

    இரண்டு நாட்கள் பகல் மற்றும் மின்னொளியில் நடைபெற்ற இப்போட்டியில் ஐம்பது அணிகள் கலந்து கொண்டன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் காரைக்குடி கே.ஆர்.பிரதர்ஸ் தெற்கு தெரு அணியும், எஸ்.ஆர்.சதீஷ் நினைவு கீழத்தெரு அணியும் மோதின. பரப ரப்பான இப்போட்டி யில் சதீஷ் நினைவு கீழத்தெரு அணி டைபிரேக்கரில் வென்று முதலிடத்தை பெற் றது.

    தெற்குதெரு அணி இரண்டாமிடத்தையும், அப் பாஸ் மெமோரியல் காட்டுத் தலைவாசல் மூன்றாமிடத் தையும், முத்துப்பட்டினம் அணி நான்காமிடத்தையும் வென்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்கம் மற்றும் பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவிற்கு சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், சாக் கோட்டை சேர்மன் சரண்யா செந்தில்நாதன் கலந்து கொண்டு பரிசுகளை வழங் கினர்.

    இதில் ஒன்றிய கவுன்சி லர்கள் சுப்பிரமணியன், தேவிமீனாள் மகேந்திரன், காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், அம்மா பேரவை ஊரவயல் ராமு, ஒன்றிய துணை செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சி.கே.நாகராஜ், சங்கராபுரம் ஊராட்சி உறுப்பினர் ரஞ்சித்குமார், கிளை செயலாளர்கள் நம்பிராஜன், கைலாசநாதன், வீரப்பன், மனோகரன், மாரியப்பன், கபிலன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்ப அணி திவாகர் நன்றி கூறினார்.

    • 2026-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினாலும், இந்த பணி முடிய 2028-ம் ஆண்டு வரை ஆகும்.
    • மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் பா.ஜனதா அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை, விருப்பமும் இல்லை.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கான அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது மாநிலங்கள் அவையில் இந்த மசோதா நிறைவேறியது. அதே வரைவு மசோதாவை நிறைவேற்றி ஒப்புதல் வாங்கி இருந்தால் 2024 தேர்தலுக்கே இச்சட்டம் அமலுக்கு வந்திருக்கும். ஆனால் பா.ஜனதா அரசு வேண்டுமென்றே 2 தடைகளை வைத்துள்ளது.

    ஒன்று மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மற்றொன்று தொகுதிகளை மறுவரையறை செய்வது.

    எனவே இச்சட்டம் 2024 தேர்தலில் மட்டுமல்ல, 2029 தேர்தலிலும் கூட அமலுக்கு வராது. காரணம் அரசியல் சாசனத்தில் 88-வது பிரிவில் 3-வது உட்பிரிவில் 2026-ம் ஆண்டிற்கு பிறகே மக்கள்தொகை கணக்கெடுப்பு என கூறப்பட்டுள்ளது.

    2026-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினாலும், இந்த பணி முடிய 2028-ம் ஆண்டு வரை ஆகும். அதன்பிறகு அடுத்த தடையாக தொகுதியை மறுவரையறை செய்ய வேண்டும். இதற்கு பாராளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளையும் மறுவரை செய்ய வேண்டும் என்பது கடினமான பணியாகும். எனவே இச்சட்டம் நிச்சயம் அமலுக்கு வராது.

    மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் பா.ஜனதா அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை, விருப்பமும் இல்லை.

    543 தொகுதிகளிலும் மக்கள்தொகை அடிப்படையிலான மறு வரையறை செய்யப்பட்டால் தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையவும், வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்ததும் தவறு. அதனை செல்லாது என்று அறிவித்ததும் தவறு.

    இந்தியா கூட்டணியில் பிளவு என்பதே கிடையாது. நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவு ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மறுபக்கம் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. காவிரி பிரச்சினையில் இரு மாநிலத்தவரும் அவரவர் கோரிக்கையை வலியுறுத்துவர்.

    தேசிய மருத்துவ ஆணையம் தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி இல்லை என்றும், ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்க இயலாது என உத்தரவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 8 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் முதுமக்கள் தாழி, பானை ஓடுகள், கண்ணாடி வளையல்கள், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன.
    • இன்றுடன் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைய உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

    முதற்கட்டமாக நடந்த அகழாய்வில் தமிழகத்தின் நாகரிகத்தை அறியும் வகையில் பழமையான தொல்பொருட்கள் கிடைத்தன. இதனை தொடர்ந்து 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்தது. 8 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் முதுமக்கள் தாழி, பானை ஓடுகள், கண்ணாடி வளையல்கள், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன.

    இதனை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையாக வைகை கீழடி நாகரிகம் விளங்கி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து கீழடி மற்றும் அருகில் உள்ள கொந்தகை, மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கீழடியில் 12 குழிகளும், கொந்தகையில் 2 குழிகளும் தோண்டப்பட்டு தொல்லியல் பணிகள் நடந்தது. அண்மையில் கீழடி அகழாய்வு குறித்து ஆவணம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்றுடன் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைய உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று மாலை பணிகள் முடிந்த பின் தோண்டப்பட்ட குழிகள் பாதுகாப்புடன் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கண்ணங்குடி ஒன்றிய விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
    • இது சம்பந்தமாக கோட்டாட்சியரிடம், பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை கோட்டாட்சியரிடம் கண்ணங்குடி ஒன்றிய சேர்மன் சித்தனூர் சரவணன் மெய்யப்பன் தலைமையில் பொதுமக்கள் வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

    அவற்றில் கூறியிருப்ப தாவது:-

    கண்ணங்குடி ஒன்றியத்தில் பெரும் பகுதி மழை இன்றி விவசாயம் பொய்த்துவிட்டது. அதிலும் குறிப்பாக சித்தானூர், அனுமந்தகுடி, தத்தணி, திருப்பாக்கோட்டை, மனைவி கோட்டை போன்ற ஊராட்சிகளில் முழுமை யான மழை இன்றி பயிர்கள் கருகி விட்டது.

    இதை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரி கள் நேரடியாக பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்கள். இருப்பினும் இதுவரை வறட்சி நிவாரணம் வழங்க வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மனு அளித்துவிட்டு கண்ணங்குடி ஒன்றிய தலைவர் சித்தனூர் சரவணன் மெய்யப்பன் கூறுகையில், 2022-23 ம் ஆண்டிற்கான வறட்சி நிவாரண நிதி கண்ணங்குடி ஒன்றியத்திற்கு வழங்கப்படவில்லை, மாவட்டத்தில் ஒரு சில ஒன்றியங்களோடு சேர்த்து கண்ணங்குடி ஒன்றியத்திற்கும் வறட்சி நிவாரண நிதி வழங்கப்படவில்லை. இது குறித்து ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    இதனால் தற்பொழுது கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இதற்கு பிறகும் வறட்சி நிவாரண நிதி வழங்கவில்லை என்றால் மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    • நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க வேண்டும்.
    • தேவகோட்டை நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் வலியுறுத்தினார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகராட்சியில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில், நகர் மன்ற துணைத்தலைவர் ரமேஷ், ஆணையாளர் பார்கவி முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் பேசுகை யில், நகராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்க அரசுக்கு நகர் மன்றம் வாயிலாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நகரில் டெங்கு பரவாமல் தடுக்க அதிகாரிகள் அனைவரும் தீவிர நடவடிக்கை எடுத்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    அனிதா சஞ்சய் கவுன்சிலர் :- நகரில் ஒரு பகுதி கழிவுநீர் அனைத்தும் இரவுசேரி ஊரணியில் கலப்பதால் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டு வருகிறது. உடனே அதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    தலைவர் : ஊரணியில் பல ஆண்டு காலமாக நகரில் உள்ள கழிவுநீர் செல்கிறது அதனை உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் உள்ள கழிவு நீர்கள் அனைத்தும் ஓரிடத்தில் ஒன்றிணைத்து அவற்றை மறுசுழற்சி செய்ய அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    துணைத் தலைவர் ரமேஷ் :- நகரில் உள்ள காலி இடங்களில் கருமேல மரம், மழைநீர் தேக்கம் மற்றும் குப்பைகள் இருந் தால் உரிமையாளர்களுக்கு முதலில் நகராட்சி சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்ட வேண்டும். இதனால் தொற்று நோய் பரவல் தடுக்க முடியும். 3,8,9 வார்டுகளில் குடிநீர் சரிவர வரவில்லை உடனே அதனை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    தலைவர் : காலி யிடங்களில் உள்ள உரிமை யாளர்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட வார்டுகளில் குடிநீர் சேவையை சரி செய்ய கூடுதல் போர்வல் போட நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றார்.

    இதேபோல் கவுன் சிலர்கள் ஷேக் அப்துல்லா, கோமதி பெரியகருப்பு, சுதா, நீேராஜா சுந்தரலிங்கம், வடிவேல் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். அதற்கு நகர் மன்ற தலைவர் பதலளித்தார்.

    • புனித மைக்கேல் கல்லூரி வெள்ளி விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார்.
    • ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும் என்றார்.

    காளையார் கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி உள்ளது .இந்த கல்லூரியை என்ஜினீயர் மைக்கேல் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார்.

    இந்த கல்லூரியின் வெள்ளி விழா செயலாளர் பாத்திமா மேரி தலை மையில் நடைபெற்றது. கல்லூரி சேர்மன் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் வரவேற்று பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சிறப்புரையாற்றி னார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பளார் அரவிந்த், லீமா ரோஸ்மார்டின், கல்லூரி சி.இ.ஒ. எஸ்.பிரிட்ஜெட் நிர்மலா ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஆசி ரியர் தொழில் பயிற்சி கல்லூரியாக தொடங்கப் பட்டது இந்த கல்லூரி. நாளடைவில் பொறியியல் கல்லூரி ஆக வளர்ந்துள் ளது. இதன் மூலம் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளது. இவர்கள் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாண விகளை பட்டதாரிகளாக்கி உள்ளார்கள்.

    பிற்பட்ட பகுதியில் இத்தகைய கல்லூரிகள் தொடங்குவதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இங்கு படிக்க முடியும். கல்லூரிகளும் தரமான நவீன கல்வியை அளிக்க வேண்டும்.இதனால் அவர்களது வாழ்க்கையில் இதன் மூலம் ஒளி ஏற்ற முடியும்.

    இந்த நிறுவனம் மேலும் வளர்ந்து கல்விக்கான நல்ல பணிகளை செய்திட வேண்டும் என்று வாழ்த்து கிறேன். மிகவும் சிரமமான சூழ்நிலையில் பொறியாளர் மைக்கேல் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த கல்லூரி தற்பொழுது வளர்ந்து வருவது பாராட்டுக்குரியதாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன், பி.மூர்த்தி ஆகியோர் 25 ஆண்டுகளாக கல்லூரியில் பணியாற்றிய முதல்வர், பேராசிரியர் மற்றும் அலுவலர்களுக்கும் நினைவு பரிசுகளை வழங்கி னார்கள்.

    கல்லூரி முதல்வர் கற்பகம் நன்றி கூறினார். முன்னதாக கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடை பெற்றது. வெள்ளி விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரியின் சேர்மன் டாக்டர் எம்.ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி ஒருங்கிணைப் பாளர் விஸ்வநாதன் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஜோன்ஸ்ருசோ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் முதல் முறையாக சிவகங்கையில் புனித அன்னை தெரசா ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
    • திறப்பு விழாவில் சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கலந்து கொண்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே வல்லனி என்ற இடத்தில் ரூ.4.5 கோடி மதிப்பில் தமிழ கத்தில் முதல் முறையாக மிகப்பிரமாண்டமாய் அன்னை தெரசா ஆலயம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    மதுரை உயர் மறை மாவட்ட ஆயர் மேதகு அந்தோனி பாப்புசாமி ஆலயத்தை அர்ச்சித்து புனிதப்படுத்தினார். சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயர் சூசைமாணிக்கம், 100-க்கும் மேற்பட்ட அருட் தந்தைகள் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலயத்தை எழில்மிகு வண்ணத்துடன் அன்னை தெரசா ஆலயத்தின் பங்குத்தந்தை லூர்து ராஜ் மேற்பார்வையில் கட்டப்பட்டு உள்ளது. அன்னை தெரசா விற்காக தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் ஆலயம் என்பதால் இது மத நல்லிணக்க நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் விழா கோலம் கொண்டிருந்தது.

    திறப்பு விழா நிகழ்ச்சியை முன்னிட்டு அந்த தேவாலயம் வண்ண மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திறப்பு விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியிலிருந்து ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

    திறப்பு விழாவில் சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கலந்து கொண்டார்.

    • திருப்பத்தூர் அருகே காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    • குடிநீர் அடிப்படை வசதிகளை நிைறவேற்றி தர வலியுறுத்தினர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காட்டம்பூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிந்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த பல மாதங்களாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளான தெரு விளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூறி இப்பகுதி கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளி டமும், மக்கள் பிரதி நிதிகளிடமும் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    இதை கண்டித்தும், அடிப்படை வசதிகளை நிைற வேற்றி தர வலியுறுத்தி யும் காட்டம்பூர் கிராம பெண்கள் மதுரை - திருப் பத்தூர் தேசிய இணைப்பு நெடுஞ் சாலை யில் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோஷ்டியூர் போலீசார் சம்பவ இடத் திற்கு வந்து பேச்சு வார்த்ைத நடத்தினர். ஆனால் பலன் இல்லை.

    இதனை தொடர்ந்து திருப்பத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், மண்டல வட்டாட்சியர் செல்லமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் பிரகாசம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி கூறினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து காட்டம்பூர் கிராம மக்கள் கூறுகையில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வரவில்லை. பல மாதங்களாக தெரு விளக்கு வசதியும், சாலை வசதியும் இல்லாமல் உள்ளது. எங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள ஆடு- மாடு மேய்ச்சல் திடலில் தற்சமயம் போர் வெல் (ஆழ்குழாய் கிணறு) அமைக்கப் பட்டுள்ளது. அதனால் எங்களுக்கும் எங்கள் கிராமத்திற்கும் எந்த ஒரு பயன்பாடு இல்லை. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளது.

    பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகியிடம் எடுத்துரைத்தும் அதற்கான எந்த ஒரு மேல் நடவடிக் கையும் எடுக்கப் படாத காரணத்தினால் எங்கள் அடிப்படை தேவைகளை அரசின் உயர்மட்ட அதிகாரி கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் மறியல் போ ராட்டத்தில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர்.

    • மானாமதுரையில் சார்பதிவாளர் நியமிக்கப்படாததால் பத்திரப்பதிவுகள் செய்ய தாமதமாகிறது.
    • பொதுமக்கள் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நாள்தோறும் சுமார் 40 ஆவணங்கள் வரை பதிவுகள் நடைபெற்றன.

    இங்கு சார் பதிவாளராக பணி செய்த ஆதிலெட்சுமி கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்று சென்று விட்டார். இதன்பிறகு இதுவரை மானாமதுரை சார்பதிவாளர் பணியிடத்துக்கு நிரந்தரப்பதிவாளர் நியமிக்கப்படாமல் பணியிடம் காலியாக உள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் பணிபுரியும் சார்பதிவாளர்கள், பொறுப்பு அதிகாரியாக மானாமதுரைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் சொத்து ஆவ ணங்கள் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து மானா மதுரைச் சேர்ந்த பத்திர எழுத்தர்கள், பொதுமக்கள் கூறுகையில், மானா மதுரையில் சார் பதிவாளர் பணியிடம் கடந்த ஜூன் மாதம் முதல் காலியாக உள்ளது. இதனால் பதிவுக்கு தாமதம் ஏற்பட்டு, பொதுமக்கள் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது.

    இங்கு நாள்தோறும் 40 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 20 ஆவணங்கள் கூடப்பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட பதிவுத் துறை நிர்வாகம் மானாம்துரைக்கு நிரந்த சார்பதிவாளரை நியமித்து பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றனர்.

    • அழகப்பா கல்வி குழும தலைவர் டாக்டர் ராமநாதன் வைரவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
    • சமுதாயத்துக்குப் பயனளிக்கும் நோக்கத்தில் இருக்கிறேன் என்று கூறினார்.

    காரைக்குடி

    அமெரிக்காவில் தலை மைத்துவ மற்றும் தொழில் நுட்ப மாநாட்டின் போது விருது வழங்கும் விழா நடந்தது. இதில் பல்வேறு முன்னணி தொழில் முனை வோர், முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

    தொழில்முனைவோரும், கல்வியாளரும், காரைக்குடி அழகப்பா கல்வி குழும தலைவருமான டாக்டர்.ராமநாதன் வைரவனுக்கு கல்வி, கலை மற்றும் புரவலர் ஆகியவற்றில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனை யாளர் விருது வழங்கப் பட்டது.

    டாக்டர் வைரவன், வள்ளல் டாக்டர் ஆர்.எம் அழகப்ப செட்டியாரின் பேரன் ஆவார். சுகாதாரத் துறையில் நாற்பது ஆண்டு களுக்கும் மேலாக புகழ்பெற்ற தொழில்களை திறம்பட நடத்திக்கொண்டு வருகிறார். பன்னாட்டு நிறுவனங்களில் நிர்வாகப் பதவிகளை வகித்தவர்.

    காரைக்குடியில் உள்ள டாக்டர் அழகப்ப செட்டி யார் கல்வி அறக்கட்டளை மற்றும் சென்னையில் உள்ள அசோகா அறக் கட்ட ளை ஆகியவற்றின் தலைவர் செயலாளராக, டாக்டர் வைரவனின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை, கல்வி மற்றும் புரவலராக சாதனை களை புரிந்துள்ளதை, பல்வேறு கல்வி நிலைகளில் பயின்ற 8000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மேம்பாடுகளில் அறிந்து கொள்ளலாம்.

    விருது வழங்கும் விழா வில் டாக்டர் ராம நாதன் வைரவன் பேசுகை யில், 47 ஆண்டுகளில், காரைக் குடியின் மாற்றத்தில் என் தாத்தா டாக்டர் அழகப்ப செட்டியார் ஒரு அழியாத தடம் பதித்தார்.அவர் தனது 1000 ஏக்கர் காடுகளை பல கல்வி நிறுவனங்களை உரு வாக்க நன்கொடையாக வழங்கினார். இது 3 மில்லி யனுக்கும் அதிகமான மாண வர்கள் உருவாக்க வழி வகுத்தது. மேலும் பெண்கள் கல்லூரியை நிறுவ தனது பங்களாவைக் நன்கொடை யாக அளித்து ஒரு சாதாரண கூட அறையில் வசித்து வந்தார். தொழில் முனை வோர்கள், சமுதாயத்திற்குத் திரும்ப கொடுக்கும் அர்ப் பணிப்பு உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். காரைக்குடியில் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆயுர்வேத கல்லூரியை உருவாக்கி, கல்வித் துறையை மேலும் மேம்படுத்தி. சமு தாயத்துக்குப் பயனளிக்கும் நோக்கத்தில் இருக்கிறேன் என்று கூறினார்.

    • டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய தலைவர்உறுதி கூறினார்.
    • துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டைச்சாமி நன்றியுரை வழங்கினார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை ஒன்றிய குழு சாதாரண கூட்டம் தலைவர் பிர்லாகணேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராஜாத்தி நடராஜன். ஆணையாளர் பாலகிருஷ் ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் புவனேசுவரன் அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் ஒன்றிய தலைவர் பேசுகையில், பொது நிதியிலிருந்து ரூ.4.87 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் 37 ஊராட்சிகளில் நடைபெற்று வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டுமெனஅதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

    பல்வேறு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டைச்சாமி நன்றியுரை வழங்கினார்.

    • 5 கிலோ எடை கொண்ட ருத்ராட்ச மாலை அணிந்து வடநாட்டு சாமியார் ஆசி வழங்கினார்.
    • பெயர் சொல்ல மறுத்து அவர் ஆங்கிலத்தில் பேசினார்.

    மானாமதுரை

    இமாச்சல பிரதேசம் கேதார்நாத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு செல்ல சாமியார் ஒருவர் மானாமதுரைஅருகே உள்ள கீழடி 4 வழிச்சாலையில் நடைபயணமாக வந்தார்.

    அவர் கழுத்தில் 5 கிலோ எடை கொண்ட ருத்ராட்ச மாலை அணிந்து உடல் முழுவதும் திருநீறு பூசியும், இடையில் சிறிய துண்டும் அணிந்து கையில் திரிசூலம், உடுக்கை உள்ளிட்டவற்றுடன் காணப்பட்டார்.

    ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள் அவரை வணங்கி ஆசி பெற்றனர். கேதார்நாத்தில் இருந்து நடைபயணம் மேற்கொண்ட இவர் தினமும் காலை 4 மணியில் இருந்து 12 மணி வரை நடப்பது அதன்பின் ஓய்வு எடுப்பதுமாக தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    பெயர் சொல்ல மறுத்து அவர் ஆங்கிலத்தில் பேசினார். மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்தி விட்டு திருச்சி செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    ×