search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. சார்பில் ஐவர் கால்பந்து போட்டி
    X

    அ.தி.மு.க. செயலாளர் செந்திநாதன் எம்.எல்.ஏ. போட்டிகளை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    அ.தி.மு.க. சார்பில் ஐவர் கால்பந்து போட்டி

    • அ.தி.மு.க. சார்பில் ஐவர் கால்பந்து போட்டி நடந்தது.
    • அ.தி.மு.க. செய லாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி போட்டி களை தொடங்கி வைத்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை மேற்கு ஒன் றிய அ.தி.மு.க. சார்பில் சங்கராபுரம் ஊராட்சியில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. துவக்க விழாவில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செய லாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி போட்டி களை தொடங்கி வைத்தார்.

    இரண்டு நாட்கள் பகல் மற்றும் மின்னொளியில் நடைபெற்ற இப்போட்டியில் ஐம்பது அணிகள் கலந்து கொண்டன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் காரைக்குடி கே.ஆர்.பிரதர்ஸ் தெற்கு தெரு அணியும், எஸ்.ஆர்.சதீஷ் நினைவு கீழத்தெரு அணியும் மோதின. பரப ரப்பான இப்போட்டி யில் சதீஷ் நினைவு கீழத்தெரு அணி டைபிரேக்கரில் வென்று முதலிடத்தை பெற் றது.

    தெற்குதெரு அணி இரண்டாமிடத்தையும், அப் பாஸ் மெமோரியல் காட்டுத் தலைவாசல் மூன்றாமிடத் தையும், முத்துப்பட்டினம் அணி நான்காமிடத்தையும் வென்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்கம் மற்றும் பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவிற்கு சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், சாக் கோட்டை சேர்மன் சரண்யா செந்தில்நாதன் கலந்து கொண்டு பரிசுகளை வழங் கினர்.

    இதில் ஒன்றிய கவுன்சி லர்கள் சுப்பிரமணியன், தேவிமீனாள் மகேந்திரன், காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், அம்மா பேரவை ஊரவயல் ராமு, ஒன்றிய துணை செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சி.கே.நாகராஜ், சங்கராபுரம் ஊராட்சி உறுப்பினர் ரஞ்சித்குமார், கிளை செயலாளர்கள் நம்பிராஜன், கைலாசநாதன், வீரப்பன், மனோகரன், மாரியப்பன், கபிலன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்ப அணி திவாகர் நன்றி கூறினார்.

    Next Story
    ×