search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மிஸ்டர் தமிழ்நாடு பாடி பில்டிங் போட்டி
    X

    அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் க.ரவி பரிசுகளை வழங்கினார்.

    மிஸ்டர் தமிழ்நாடு பாடி பில்டிங் போட்டி

    • மிஸ்டர் தமிழ்நாடு பாடி பில்டிங் போட்டியில் சென்னை வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
    • நடுவர்களாக தேசிய அளவிலான நடுவர்கள் பங்கேற்று வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.

    காரைக்குடி

    காரைக்குடி பிரபு டெண் டல் மருத்துவமனை, மாவட்ட பிஸிக் அலையன்ஸ் சங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடை பெற்றது. இதில் கன்னியா குமரி, தூத்துக்குடி, தஞ்சா வூர், செங்கல்பட்டு, சென்னை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு உள்பட 30 மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பாடி பில்டர்ஸ் கலந்து கொண்டனர்.

    போட்டிகள் மாற்றுத்தி றனாளிகள், மாஸ்டர்ஸ் உள்பட பல்வேறு எடை பிரி வுகள் என நடைபெற்றது. இதுதவிர பாடி பில்டிங், மென்ஸ் பிரிவு, கிளாசிக் பிரிவு, மாற்றுத்திறனாளி களுக்கான பாடி பில்டிங் ஆகிய பிரிவுகளாக மொத் தம் 20 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதில் பாடி பில்டிங் டைட்டில் வின்ன ராக சென்னையைச் சேர்ந்த ராகேஷ் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தையும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசையும் வென்றார். கிளாசிக் மற்றும் மென்ஸ் பிரிவு வின்னராக சென்னை யைச் சேர்ந்த ஜிம்மி பரிசு களை பெற்றார். இதேபோல் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கும் பரிசு கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், மாங்குடி, எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் முத்துதுரை, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந் தர் ரவி, பிரபு டெண்டல் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் துரைகருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போட்டிக்கான ஏற்பாடு களை சிவகங்கை மாவட்ட பாடி பில்டிங் அசோசியேசன் தலைவர் மற்றும் பிரபு டெண்டல் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பிரபு, மாநில பிஸிக் அலையன்ஸ் தலைவர் பொன்னம்பலவா ணன், துணைத்தலைவர் ராமசாமி, பொது செயலா ளர் கார்த்திகேயன் கிருஷ் ணன், கூடுதல் செயலாளர் திருப்பதி, பொருளாளர் காளிதாஸ், சட்ட ஆலோசகர் கமல்தயாளன், காரைக்குடி கிச்சன் கங்கா அம்பரீஸ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் நடுவர்களாக தேசிய அளவிலான நடுவர்கள் பங்கேற்று வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.

    Next Story
    ×