என் மலர்
சிவகங்கை
- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவை நகர்மன்ற தலைவர் வழங்கினார்.
- சிவகங்கை நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற சிவகங்கை மாவட்டம் சார்பில் வேண்டு கோள் விடுக்கிறோம்.
சிவகங்கை
சிவகங்கை தி.மு.க. நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் முதல் அமைச் சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தார் அதில் கூறியிருப்பதாவது:-
இந்திய நாட்டின் விடு தலைக்கு தமிழ்நாட்டிற்கு தனிச்சிறப்பு உண்டு. அதில் மாமன்னர் மருதுபாண்டி யர்கள் வீரம், கொடை, சாதி மதம் பாராமல் சமூக நீதி பார்வையோடு இந்திய நாட் டின் விடுதலைக்கு பாடுபட்ட வரலாற்று சிறப்புமிக்க மாமன்னர் மருது பாண்டியர் களின் நினைவை போற்றும் விதமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வெண்கல சிலையை வைப்பதற்கு ஆணை பிறப் பித்த முதல் அமைச் சருக்கு சிவகங்கை நகர்மன்றத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுபோல சிவகங்கையை ஆண்ட மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் வெண்கல சிலை வைப்பதற்கு ஆணை பிறப்பிக்க சிவகங்கை நகர்மன்றத்தால் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. (நகர்மன்ற தீர்மானம் எண்.202) மேலும் சிவகங்கை நகரில் மன்னர் மருதுபாண்டியர்களுக்கு வெண்கல சிலையை அமைப்பதற்கும், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு மன்னர் மருதுபாண்டியர் களின் பெயரை சூட்டவும், காளையார்கோவில் நினைவிடம் அருகில் மணி மண்டபம் அமைக்கவும், சிவகங்கை நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற சிவகங்கை மாவட்டம் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- திருக்கோஷ்டியூரில் தேவர் ஜெயந்தி விழா நடந்தது.
- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் நல அறக்கட்டளை திருமண மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் பசும் பொன் தேவர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் 14 ஆம் ஆண்டு சுதந்திர போராட்ட தியாகி பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா நாட்டார்கள், சமுதாய தலைவர்கள், கிராம பொது மக்கள் ஆகியோர் முன்னி லையில் தலைவர் கரு.சுப்பி ரமணியன் தேவரின் திருவு ருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து திருக்கோஷ்டியூர் நாட்டார் கள், சமுதாய தலைவர்கள், கிராம பொதுமக்கள் என பலரும் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். இவ்வி ழாவில் திரளான பொதுமக் கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் நல அறக்கட்டளை திருமண மண்டபத்தில் ஆயி ரக்கணக்கானோருக்கு அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
- சிவகங்கைக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- மானாமதுரையில் மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான செந்தில் நாதன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவிற்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்ற அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிவகங்கை மாவட்டம் சார் பில் மானாமதுரையில் மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான செந்தில் நாதன் தலைமையில் வர வேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன் னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாகராஜன், கற்பகம் இளங்கோ, மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கருணாகரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், நகர் செயலாளர் ராஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பெண்மணிபாஸ் கரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பாசறை செயலாளர் பிரபு, மண்டல தகவல் தொழில் நுட்ப அணி தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள். செல்வமணி, பழனிச்சாமி, அருள்ஸ்டிபன், சேவியர் தாஸ், ஸ்ரீ தரன், கோபி, ஜெகதீஸ்வரன், ஜெயபிர காஷ், மாவட்ட பாசறை இணை செயலாளர் பிரபு, கூட்டுறவு வங்கி தலைவர் சகாயசெல்வராஜ், சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, நாலு கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், வழக்கறிஞர் மணிமாறன், மாவட்ட தக வல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர் ராமநாதன், மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன் மற்றும் ஏராளமானோர் நிர் வாகிகள் கலந்து கொண்ட னர்.
- ஐம்பது ஆயிரம் பனைமர விதைகளை நட்டு ஊராட்சி மன்ற தலைவர் சாதனை படைத்தார்.
- 100 நாள் பணியாளர்களையும் சுற்றுவட்டார கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல் லல் ஒன்றியம் இளங்குடி கிரா மத்தில் ஊராட்சி மன்ற தலை வராக இருந்து வருப வர் நேசம் ஜோசப். இவர் பொறுப் பேற்ற காலம் முதல் தரிசு நில பகுதிகள், அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகிய பகுதிகளில் நெல்லி தோட்டம், முந்திரி தோட்டம், காய்கறி தோட்டம், மூலிகை தோட்டம் மற்றும் பிற பழ வகைகளை சேர்ந்த மரக் கன்றுகளை நடவு செய்து அரசுக்கு வருவாய் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகி றார்.
பருவ மழை காலங்களில் இப்பகுதிகளில் அதிக மழை பொழிவை கொண்டு குறுங் காடுகள் அமைத்தல், அடர்ந்த வனம் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். கிராமத்தில் அனைவருக்கும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்துதல், பிளாஸ் டிக் பயன்பாடு இல்லா ஊராட்சியாக மாற்றுதல், பால் உற்பத்தி மற்றும் விற் பனை, நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறந்த ஊராட் சியாக மாற்றியுள்ளார்.
தற்போது கிராம விரிவாக்கத் திட்டத்தின் கீழ் 50,000 பனை விதைகளை இப்பகுதிகளில் நடவு செய்ய முடிவெடுத்து அதற்கான விதைகள் சேகரிக்கும் பணி யில் தீவிரமாக ஈடுபட் டார். அந்த விதைகளை ஊராட்சிக் குட்பட்ட நீர்நிலை மற்றும் வனப்பகுதிகளில் உள்ள சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் 30 ஆயிரம் பனை விதைக ளையும், இளங்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து நாச்சியா புரம் வரையிலும், அதேபோல் இளங்குடியில் இருந்து கரு குடி கிராமம் வரையிலான இவ்விரண்டு இடத்திற்கும் 2 கிலோ மீட்டர் அளவிற்கு சம அளவு தூரம் கொண்ட சாலையின் இரு ஓரங்களிலும் சுமார் 20,000 பனை விதை களையும் நடவு செய்ய முடி வெடுத்தார்.
மேலும் மரம் வளர்த்தல் குறித்த அவசியத்தையும், அதற்கான விழிப்புணர்வை யும் இளைய சமுதாயமான மாணவ மாணவியருக்கு ஏற்படுத்த வேண்டுமென்று ஊராட்சி மன்ற தலைவர் அதற்கான நடவடிக்கையில் இறங்கினார். அதன் அடிப்ப டையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்லூரியில் நிறும செயலறியல் துறையில் பயிலும் மாண வர்களை வரவழைத்து அவர் களின் முன்னிலையில் பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்ச்சியை அழகப்பா கல்லூரி துணைவேந்தர் முனைவர் ஜி.ரவி தொடங்கி வைத் தார்.
முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் உருவாக்கிய பழ தோட்டங்களுக்கு துணை வேந்தர் நேரடியாக சென்று அவற்றை பார்வையிட்டு அவரின் முயற்சியை வெகு வாக பாராட்டினார். நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் நிறும செயலறியல் துறைத் தலைவர் வேதிராஜன், பேராசிரியர்கள் அலமேலு, நடராஜன், சுரேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் மூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்து, வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், காரைக்குடி ரோட்டரி சங்க நிர்வாகிகள், கிராம பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
72 மணி நேரத்தில் 50,000 பனை நடவு செய்து ஒரு சாத னையாளராக திகழும் ஊராட்சி மன்ற தலைவரை யும், 100 நாள் பணியாளர்களை யும் சுற்றுவட்டார கிராம மக்க ளும், சமூக ஆர்வலர்க ளும் வெகுவாக பாராட்டி வரு கின்றனர்.
- அரசின் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
- விவசாயிகள் முழுமையாக அறிந்து பயன் பெற்று தங்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான் குடி ஆகிய பகுதிகளில் வேளாண்துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் பொறியியல் துறைகளின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காக்கின்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மானியத்துடன் கூடிய வேளாண் இடு பொருட்கள் மற்றும் உயிர் உரங்கள், நிலத்தின் தன்மை கேற்றவாறு பயிரிடுவதற்கு உரிய வழிகாட்டுதல்கள், சோலார் மின்வசதி, ஆழ்துளை கிணறு ஏற்படுத் துதல் மற்றும் காய்கறி, பழ விதைகள் உள்ளிட்ட பல் வேறு வசதிகளை அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டு அவர்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் கடைகோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் முழு மையாக அறிந்து பயன் பெற்று தங்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) முரேஷ்குமார், வேளாண்மை உதவி இயக்குநர்கள் ரவிசங்கர், தங்கபாண்டியன், உதவி செயற்பொறியாளர் வேளாண் பொறியியல் துறை இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.
காளையார் கோவில்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையில் பங்கேற்பதற்காக இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் வழியாக சென்றார்.
இந்த நிலையில் மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான பெரிய கருப்பன் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மாவட்ட எல்லையான திருப்பு வனத்தில் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். காலை 8.35 மணி அளவில் திருப்புவனம் பகுதிக்கு முதல்-அமைச்சர் வந்தார். அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சருக்கு பட்டாடை கொடுத்து அமைச்சர் பெரியகருப்பன் வரவேற்றார்.
தொடர்ந்து நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், மாவட்ட தி.மு.க அவை தலைவர் கணேசன், மாவட்ட துணை செயலா ளர்கள் த.சேங்கை மாறன் ஜோன்ஸ் ரூசோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில் குமார், துணை அமைப்பாளர் பொற்கோ, நகர செயலா ளர்கள் குணசேகரன், துரை ஆனந்த், பொன்னுச்சாமி, பெரி.பாலா, நகர் மன்ற தலைவர் முத்து துரை, முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, மதியரசன், ஒன்றிய செயலா ளர்கள் வசந்தி சேங்கை மாறன், கடம்பசாமி, நிர்வாகிகள் மோகன்ராஜ், பழனி, அண்ணாமலை, சேகர் உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்-அமைச்சரை வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.
- மானாமதுரையில் கழிவுநீர் கால்வாய் தூய்மை பணி தொடக்கப்பட்டது.
- மழை தண்ணீர், கழிவு நீர் தடையின்றி செல்வது கண்காணிக்கப்படும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கால்வாய்களில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றி சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. 27-வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். சுற்றுப்புற தூய்மை குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம், தி.மு.க. நகர செயலாளர் பொன்னுச்சாமி, நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து மாரியப்பன்கென்னடி கூறியதாவது:-
மானாமதுரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் கால்வாய்களில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளால் மழை நேரங்களில் கால்வாய் வழியாக மழைநீர் செல்ல முடியாத நிலை இருந்து வருவதாக புகார் வந்தது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் கால்வாய்களில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளை வெளியேற்ற ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கால்வாய்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றிய பின்னர் கால்வாய்கள் வழியாக மழை தண்ணீர், கழிவு நீர் தடையின்றி செல்வது கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டப்பணிகள் தனிக்குழு கூட்டம் நடந்தது.
- அந்தந்த துறை களின் சார்பில் மேற் கொள்ளப் பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் மாவட்ட அளவிலான தனிக்குழு கூட்டம் சார்பு நீதிபதி பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருவாய் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் அந்தந்த துறை களின் சார்பில் மேற் கொள்ளப் பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கடந்த மாதம் குழந்தைகள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவில் காணாமல் போன பெண்கள் மற்றும் குழந்தை கள் உள்பட 62 பேர் கண்டறியப்பட்டு, உரியவர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளது. மாவட்ட சமூகநல அலுவலக ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் பெண்கள் குடும்ப வன்மு றை குடும்ப பிரச்சினைகள் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 24 குடும்ப பிரச்சினை களுக்கு தீர்வு காணப்பட்டது.
அதுபோல் மாவட்ட சிறப்பு ஆய்வுக்குழு உறுப்பி னர்கள் குழந்தை தொழி லாளர்கள் கொத்தடிமை கள் குறித்து தொழிற் சாலைகள், வணிக நிறுவ னங்கள், ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளுதல் மற்றும் பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் கண்ட றியப் பட்டு அவர்களை பள்ளி சேர்த்து தொடர்ந்து படிக்க செய்தல் போன்ற பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப் பட்டது.
- மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
- முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காளையார்கோவில்
மருதுபாண்டியர்களின் 222-வது குருபூஜையை முன்னிட்டு காளையார் கோவிலில் உள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்ல மண்டி நடராஜன், கொள்கை பரப்பு செய லாளர் மருது அழகுராஜ், வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன், சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன், கே வி. சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் யோக.கிருஷ்ண குமார் வே.ஆரோக்கியசாமி, சிவகங்கை நகர்கழக செயலாளர் துரைஆனந்த் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ். மாங்குடி எம்.எல்.ஏ. மாவட்ட காங்கிரஸ் தலை வர் சஞ்சய் காந்தி, பொதுக் குழு உறுப்பினர் ஜெய சிம்மன், கணேசன், சன்னாசி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல். ஏ. ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சிவாஜி மற்றும் கட்சியினர் மரியாதை செலுத்தினர். நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
இதேபோல் ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சார்லஸ் , பா.ஜ.க. மேப்பல் சக்தி, மாவட்டத்தலைவர் பில்லப்பன், வழக்கறிஞர் சொக்கலிங்கம், மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
- மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
- மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் கட்சியினர் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை
மருதுபாண்டியர்கள் குருபூஜையை முன்னிட்டு காளையார் கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் கட்சியினர் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் சிவகங்கை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், நகர் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர்தாஸ், பழனிச்சாமி, சிவாஜி, கோபி, அருள்ஸ்டிபன், செல்வமணி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ்குமார், காளையார் கோவில் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ், ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சரவணன்.
தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ்செல்வன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர்ராமநாதன், மற்றும் மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் நவநீதன்.
மாவட்ட பாசறை இணை செயலாளர் பிரபு அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் கண்ணப்பன் மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை உள்ளிட்ட ஏராள மான அ.தி.முக. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மருதுபாண்டியர்கள் 222-வது குருபூஜை; அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
- பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.
காளையார்கோவில்
ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த மாமன்னர்கள் மருது சகோத ரர்களின் 222-வது குருபூஜை விழா அவர்களது நினைவிடம் அமைந்துள்ள காளையார்கோ விலில் கொண்டாடப்பட்டது.
மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் காலை 8 மணிக்கு சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மருதுபாண்டியர் பேரவை சார்பில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து வழிபாடு நடத்தினர். நினைவிடத்தில் பால் அபிசேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பு கள், பொதுமக்கள் திரளாக வந்து மருதுபாண்டி யர்கள் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மருதுபாண்டியர்கள் நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அரவிந்த் தலை மையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிவகங்கை, இளையான்குடி, திருப்புவனம், கல்லல், காளை யார் கோவில் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சோ தனைச் சாவடி களில் சி.சி.டி.வி. கேமராவுடன் அமைக்கப் பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மருதுபாண்டியர்கள் நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக காளையார் கோவில் சருகனிவழியாக தேவ கோட்டை தொண்டி செல்லும் அனைத்து பேருந்துகளும் பரமக்குடியி லிருந்து இளையான்குடி காளையார் கோவில்,கல்லல் வழியாக திருச்சி, தஞ்சாவூர் செல்லும் அனைத்து பேருந்து களும் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. எவ்வித முன்அறிவிப்பின்றி பேருந்து கள் ரத்துசெய்யப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமப் பட்டார்கள். இன்று முகூர்த்த நாளாக இருந்ததால் பொது மக்கள் மிகவும் பாதிப்பிற் குள்ளானார்கள். மருது பாண்டியர்கள் நினைவி டத்தில் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் சமுதாய அமைப்பு நிர்வாகிகள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
- மருது பாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.
- நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நாளை (27-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மாமன்னர் மருது பாண்டியர் களின் 222-வது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் வகை யில் நாளை 27-ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில் சிவ கங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படு கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






