search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதுபாண்டியர்கள் 222-வது குருபூஜை; அரசியல் கட்சியினர் மரியாதை
    X

    மருதுபாண்டியர்கள் 222-வது குருபூஜை; அரசியல் கட்சியினர் மரியாதை

    • மருதுபாண்டியர்கள் 222-வது குருபூஜை; அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.

    காளையார்கோவில்

    ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த மாமன்னர்கள் மருது சகோத ரர்களின் 222-வது குருபூஜை விழா அவர்களது நினைவிடம் அமைந்துள்ள காளையார்கோ விலில் கொண்டாடப்பட்டது.

    மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் காலை 8 மணிக்கு சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மருதுபாண்டியர் பேரவை சார்பில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து வழிபாடு நடத்தினர். நினைவிடத்தில் பால் அபிசேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பு கள், பொதுமக்கள் திரளாக வந்து மருதுபாண்டி யர்கள் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    மருதுபாண்டியர்கள் நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அரவிந்த் தலை மையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிவகங்கை, இளையான்குடி, திருப்புவனம், கல்லல், காளை யார் கோவில் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சோ தனைச் சாவடி களில் சி.சி.டி.வி. கேமராவுடன் அமைக்கப் பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மருதுபாண்டியர்கள் நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக காளையார் கோவில் சருகனிவழியாக தேவ கோட்டை தொண்டி செல்லும் அனைத்து பேருந்துகளும் பரமக்குடியி லிருந்து இளையான்குடி காளையார் கோவில்,கல்லல் வழியாக திருச்சி, தஞ்சாவூர் செல்லும் அனைத்து பேருந்து களும் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. எவ்வித முன்அறிவிப்பின்றி பேருந்து கள் ரத்துசெய்யப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமப் பட்டார்கள். இன்று முகூர்த்த நாளாக இருந்ததால் பொது மக்கள் மிகவும் பாதிப்பிற் குள்ளானார்கள். மருது பாண்டியர்கள் நினைவி டத்தில் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் சமுதாய அமைப்பு நிர்வாகிகள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

    Next Story
    ×